Total Pageviews

Monday, April 22, 2013

சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது தங்கள் பிள்ளைகளிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள்



வாழ்வில் நாம் எதிர்நோக்கும் முக்கியப்பிரச்சினைகளுக்கு குடும்ப நலவிரும்பிகள் என்பவர்களை வைத்து ஒரு கலந்தாய்வு  செய்வதை விட சம்மந்தப்பட்ட நாமே நம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் எல்லாக் குழப்பமும் தீரும். காரணம் நலவிரும்பிகள் என நாம் நம்பிக்கொண்டிருப்பவர்களில் பலர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலித்தனமானவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து ஆலோசனை செய்வதை விட நாமே நமது பிரச்சனைக்ள்  பற்றி. கலந்து ஆலோசனை செய்யலாம்.

எதுவானலும் அதிக எதிர்பார்ப்புகளை குறைத்து, நாம் மதி கொண்டு முயற்ச்சி செய்தாலும் ஆண்டவன் நமக்கு விதித்து நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டாக்கி கொண்டால் குழப்பம், ஏமாற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கலாம்..



சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது பெற்றோர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதனால் குடும்பத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படும்.

பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி சதி செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட  குடும்ப உறுப்பினர் என்னுவர்.

பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினருக்கு அதாவது மகனுக்கோ அல்லது மகளூக்கோ  விற்க்கக்கூடாது.

வாழ் நாளில் மகனோ அல்லது மகளோ குடும்ப  செலவுக்காகவோ, அல்லது ஏதேனும் சொத்துகள் வாங்கவோ, அல்லது வீடு கட்டவோ சிறிய தொகை கொடுத்து  உதவியிருப்பார்  அதற்க்காக  பெற்றோர்கள் தமது குடும்பச்சொத்துத்தில் பெரும் பகுதியை அவருக்கு கொடுத்துவிடுகின்றனர்.

பெற்றோர்கள் தனது மகள் வழி பேத்தியை தனது மகனுக்கு மணம் முடிக்க என்னுவர் மகன் மறுபதனால் சொத்தில் ஓரு பகுதியை வழங்குவதாக தன்னிச்சையாக மகளிடம் உறுதி  மொழியளிப்பர். இவ்வாறு  செய்யக்கூடாது.

பின் நாளில் நம் குடும்பத்தில் சொத்து  பிரச்சனைகள் வரமலிருக்க, குடும்பத்தில் உள்ள உறுப்பினர் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து அனைவரிடமும் தனித்தனியாகவும்  மொத்தமாகவும் எல்லாப்பிரச்சனைகள் பற்றி கலந்து ஆலோசனை  செய்த பிறகே  தனது குடும்பச்சொத்துக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.



ஓருவர் நல்ல  அரசாங்க வேலையில் இருப்பார், ஒருவர் சுய தொழில் புரிபவராக இருப்பார், ஒருவர் தனியார்  நிறுவனத்தில் ப்ணிபுரிவார், ஓருவர் படிக்காதவராயிருப்பார், சகோதரியின் கணவர் வசதி படைத்தவரர்யிருப்பார் அல்லது வசதி குறைந்தவராய் இருப்ப்பார். இவ்வாறு இருப்பதனால் தேவைக்கு ஏற்றவாறு சொத்துக்களை பகிர்ந்தளிக்க குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரிடமும் கலந்து ஆலோசனை  செய்வதனால் ஓருவருக்கு  அதிகமாக கொடுத்தாலும், ஒருவருக்கு குறைவான அள்வு சொத்துக்கள்  கிடைத்தாலும் சம்மத்துடன் பெறுவதனால்  பின்  நாளீல்  பிரச்சனை இன்றி நலமாக வாழ்வர்.

s.sivakumar

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...