Total Pageviews

Friday, April 19, 2013

எந்தப் பறவையும் பிச்சை எடுப்பதில்லை

பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

உணவு தானியங்களை விளைவிக்க வேண்டிய மனிதனே, இலவசங்களால் திக்குமுக்காடிப் போய், விதைப்பதை (உழைப்பதை) மறந்துவரும் காலகட்டத்தில் பறவைகளாவது விதைப்பதாவது? என்று என் நண்பர் ஒருவர் கேட்டார்.

எல்லா உயிரினங்களையும் படைத்த இறைநிலை, அவைகளுக்கான அனைத்து வசதிகளையும், வாழ்வாதாரங்களையும் உண்டாக்கிய பின்பேதான் படைத்துள்ளது.

“எந்தப் பறவையும் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை” என்ற இந்தச் சொற்கள் பைபிளில் உள்ளவை. இதன்பொருளை நாம் விரிவாய் காண்போம்.

பறவைகளை முட்டையிடும் மிருகம் என்று தான் உலகம் முழுதும் கூறுகின்றனர். இவற்றுக்கு ஐந்தறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவையுணர்வு, முகரும் திறமை, பார்க்கும் திறன், கேட்கும் சக்தி ஆகியனதான் இந்த ஐந்தறிவு. ஆனால், மிருகங்களுக்கு நான்கு கால்கள் உள்ள நிலையில், பறவைகட்கு முன் கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.


பரிணாம வளர்ச்சியில், உணவு தேடுதல், பாதுகாப்பு, இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னங்கால்கள் மறைந்து இறக்கைகள் உண்டாக்கப்பட்டன. இருகால்களிலும், ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, மற்றொரு காலை மடக்கி, இறகுகளுக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் கொண்டவை இப்பறவையினம்.

சுமார் 10,000 வகையான பறவைகள் இந்தப் பூமியில் உள்ளன. ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் உயிர் வாழ்கின்றன. சுமார் 2” முதல் 9′ என்ற அளவு வரையிலான பறவைகள் உள்ளன. பறப்பதால் தான் பறவை என்ற பெயர் பெற்றன.


ஆனால், பறக்காத ஒரு பறவையும் உள்ளது. நியூசிலாந்தில் மோ (Moa) என்ற பெயருள்ள பறவைக்கு இறக்கைகள் இல்லை; பறக்க முடியாது. இறக்கைகள் உள்ள பெங்குயின் போன்றபறவைகளும் பறப்பதில்லை. இந்தப் பெங்குயின் இனத்தில் பெண் பறவை முட்டையிட, ஆண் பறவை அடைகாக்கும் விசித்திரம் நிகழ்கிறது.

பறவைகளில் புத்திசாலிப்பறவை கிளிகள். நாம் சொல்வதை கவனமாகக் கேட்டு, அதேபோல் சொல்லும் திறமை உள்ளவை. தற்போது கோவை அருகில் சோமனூரில் மைனா ஒன்று மிக அருமையாகப் பேசுவதாய் நாளிதழில் செய்தி வந்துள்ளது. புறாக்கள் முன்பு செய்திகளை எடுத்துச் சென்றன எனப் படித்துள்ளது நினைவுக்கு வரும். நிலத்தில் நடந்தால் பாதை உண்டாகும்; தெரியும். ஆனால், வானத்தில் பறந்தால், வழியே தெரியாதே.

சரியான திசையில் பறந்து, இலக்கை அடையும் திறமையுள்ளவைதான் புறாக்கள். பல தலைமுறைகளாக இப்பறவையினங்கள் தமது வாழ்க்கை முறையை, அப்படியே தம் சந்ததியினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் கொடுத்துவருகின்றன. இதை ஆங்கிலத்தில் “Cultural Transmission of Knowledge”என்று கூறுகின்றனர்.

இவைகளின் மொழி சப்தம். சிறிது இழுத்து சப்தம் போட்டால், அது பாட்டு. உணவுக்காகவும், முட்டையிடுவதற்காகவும் சில பறவைகள் தம் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. வருடம் ஒன்றுக்கு சுமார் 64,000 கி.மீ. தூரம் பறந்துசெல்லும் கடல் பறவைகள், நிறுத்தாமல் சுமார் 2500 கி.மீ. தூரம் பறந்து செல்லும் நிலப்பறைவகள், சுமார் 4000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் கடற்கரைப் பறவைகள் எனப் பல உள்ளன.

கழுத்தை 1800 பின்புறம் திருப்பி முகத்தை முதுகுப்பக்கம் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை பறவைகள். வௌவால் உட்பட பல பறவைகள் தலைகீழாகத் தொங்கும் சாதுர்யம் மிக்கவை. மனிதன் தோன்றிய காலம் முதலே மனிதனுக்கு பறவை இனத்துடனான உறவு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

முயற்சி திருவினையாக்கும்

“Early Bird Catch the Worm”,அதிகாலை எழுந்து பணிகளைத் துவக்கினால் வெற்றி நம்மைத் தேடிவரும். நேர நிர்வாகம் பறவைகளின் சிறப்புத்தன்மை. ஒவ்வொரு நாளையும் பிரித்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” - குறள் 527

தனக்குக் கிடைத்த உணவை மறைத்து வைத்துத்தானே உண்ணாமல், தன் சுற்றத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்ணும். செல்வம் பெற்றவர்களும் இத்தகைய பண்புடையவர்களாகத் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தனர். நாளைக்கு வேண்டும் என மறைக்காததால் பறவைகள் கவலையில்லாமல் வாழ்கின்றன.

பிச்சை எடுப்பதில்லை

எந்தப் பறவையும் உடல் ஊனம், மனநிலை சரியில்லை, இயற்கை பொய்த்துவிட்டது எனப் பிச்சை எடுப்பதில்லை. உடல் ஊனமுற்ற சில பறவைகள் கூடத் தம் உணவைத்தேடி பல இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

சிறுகுஞ்சுகள் தமக்குத் தேவையான உணவைத் தேடிச்செல்லும் வரை, தாய்ப்பறவை, தன் அலகினுள் அவற்றுக்கு உணவை எடுத்துவந்து அன்புடன் அக்கறையாய் கொடுக்கிறது.



No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...