Total Pageviews

Friday, April 19, 2013

மனம் போல் வாழ்வு


மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்” என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும். நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும். அதே நேரத்தில் நமது மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்து காணப்பட்டால் நமது செயல்பாடுகளும் கெட்டதாகவே உருவெடுக்கும் என்பதை தெளிவாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் – சமீபகாலமாக “மனம்போல் வாழ்வு” என்னும் அமுத வாக்கை சில இளம் வயதினர் குறிப்பாக “டீன்ஏஜ்” பருவத்தினர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். “மனதில் நினைத்ததையெல்லாம் உடனே செயல்படுத்த வேண்டும்” என்று எண்ணி களம் இறங்குகிறார்கள். 

மனதில் நினைத்த செயல்களை நடைமுறைப்படுத்தும்போது அவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அதேவேளையில் தாங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறவில்லையென்றால் சோகத்தில் தள்ளாடுகிறார்கள். இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோல அவர்கள் உணருகிறார்கள். அந்தச் செயல் நிகழாவிட்டால் தங்களுக்குப் பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்குக்கூட அவர்கள் தானாக முன்வந்து விடுகிறார்கள்.

“நாம் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்” என்றஎண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த எண்ணம் நிறைவேறுவதற்குச் சுற்றுச்சூழல் (Environment) தடையாகவும் இருக்கலாம் என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த (ஆகஸ்ட்) மாதம் நடந்த இரண்டு நிகழ்வுகள் இன்றைய மாணவ – மாணவிகளின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

“எனக்கு தலைவலிதான் பெரிய நோயாக இருக்கிறது” என்று ஒரு நோயாளி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர் “உங்களுக்கு ‘பிளட் பிரஷர்’ இருக்கிறது. அதுதான் தலைவலிக்கு காரணம்” என்றார். இங்கு நோயாளி தனக்கு தலைவலித்தவுடன் தனது நோய் “தலைவலி” என்று முடிவுக்கு வந்துவிட்டார். தனக்கு தோன்றிய “அறிகுறி”(Symptom)யைப்பார்த்து அதுதான் தனது நோய் எனத் தவறாக முடிவு செய்தார். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த நோயாளியின் உண்மையான நோய் “பிளட் பிரஷர்” என்று முடிவுக்கு வந்தார் டாக்டர்.

நோயைக் கண்டுபிடிக்க நோயாளியும் முயற்சி செய்தார். டாக்டரும் முயற்சி செய்தார். உடல் பிரச்சனைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்த டாக்டரின் பார்வை இங்கு வித்தியாசமானது. ‘தலைவலி’ என்னும் அறிகுறிக்கு அடிப்படை காரணமாக அமைந்த ‘பிளட் பிரஷர்’ நோயைச் சரிசெய்துவிட்டால் நிரந்தரமாக தலைவலியைப் போக்க முடியும்.

இதைப்போலத்தான் உண்மையான பிரச்சனையை ஒழுங்காகப் புரிந்துகொண்டால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.

பிளஸ் – 2 படிக்கும் மாணவிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பது வகுப்பு ஆசிரியையின் நம்பிக்கை. படிக்கும்போது கவனம் சிதறினால் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை உணர்ந்த அனுபவமிக்க ஆசிரியைகள் மாணவிகளைப் படிப்பில் கவனம் செலுத்தசொல் கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கைதான். ஆனால் அதற்காக ஒரு மாணவி விஷம் குடித்து தனது உயிரை போக்கிக்கொள்ள முயன்றது எந்த விதத்தில் நியாயம்? ஆகும். கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியைதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுப்பதும், அதற்கு மற்றவர்கள் உதவியாக அமைவதும் புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே அவமானம் அல்லவா!.

“மனம்போல நான் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்” என்று இப்போது டீன் ஏஜ் பருவத்தினரில் சிலர் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். தனது மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எவரையும் அவர்கள் மதிப்பதில்லை. பத்து மாதம் சுமந்துபெற்றதனது தாயையும், வாழ்நாள் எல்லாம் சிறப்பாக வாழ பயன்படும் கல்வியை வழங்கிய தந்தையையும்கூட இவர்கள் சிலநேரங்களில் மனம் வருந்தச் செய்துவிடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் தனது பெற்றோரையும் நண்பர்களையும், உறவினர்களையும் இவர்கள் ஒதுக்கவும் தயாராக இருக்கிறார்கள். “ஏன்?” என்று தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

பெற்றோரும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வேண்டுமென்றால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்சாமி” போட்டு அத்தனையையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசிரியர் தொழில் ஈடுபடுவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பெற்றோருக்கு ஒரு மாணவி ஒரே பிள்ளையாக இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு 40 பிள்ளைகள் இருப்பதாகவே அர்த்தம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும். சாதி, மதம், பணம் – ஆகிய ஏற்றத்தாழ்வுகள் பாராமல் எல்லோரையும்  வழிநடத்த வேண்டிய பொறுப்பு (Responsibility) ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மற்றமாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் மாணவ – மாணவிகளை நல்ல ஆசிரியர்கள் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை மாணவ – மாணவிகள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தது தவறான செயலாகும். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் உள்ளது. அதனை விட்டுவிட்டு இப்படி விபரீத முடிவை எடுப்பதற்குக் காரணம் “என் மனம்போல் வாழ்வேன் என்று இளம் வயதிலேயே தீர்மானிப்பதுதான்.

“தான் நினைத்தது நடக்கவில்லை யென்றால் எந்த முடிவும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்பதை மற்றவர்களுக்கு உணர்;த்துவதற்காகத்த்தான் இப்படி செயல்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

இன்னொரு சம்பவம்…

எந்தவொரு செயலையும் எப்படியாவது எதிர்ப்பேன். நான் தவறு செய்தாலும் அதை நியாயம் என்று மற்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வதுதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது.

பொதுவாக எதிர்பாராதவைகள் நிகழும்போது வெறுப்பு, அவமானம், எரிச்சல், கோபம் போன்றவைகள் உள்ளத்தில் உருவாகும். இந்த உணர்ச்சிகளையெல்லாம் சிலர் முறையாக வௌல்ப்படுத்தத் தெரியாமல் உள்ளத்திற்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஒரு பிரஷர் குக்கரில் தேவைக்கு அதிகமான அழுத்தம் தோன்றும்போது அதனை வௌல்ப்படுத்த வால்வு பயன்படுகிறது. இதைப்போலவே அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள் உருவாகும்போது அதனை வௌல்ப்படுத்துவதற்கு நல்ல நண்பர்களையும், தோழிகளையும் தேர்ந்தெடுத்து பழக வேண்டும். அதனைத் தவிர்த்துவிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டால் இதுபோன்றதற்கொலை முயற்சிகள் தானாகத் தோன்றிவிடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் இதுபோன்றஎதிர்மறை உணர்வுகளுக்குத் தகுந்த வடிகால்களைத் தேடிக்கொள்வது அவசியம்.

“கட்டுப்பாடு இல்லாத -ழல் வேண்டும். மனம்போல வாழ வேண்டும்” என எண்ணுவது தவறல்ல. ஆனால் படிக்கின்றகாலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் நம்மை நெறிப்படுத்த உதவும் “விதிகள்” என எண்ணவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மை வீழ்த்தும்”சதிகள்” என எண்ணினால் வேதனைதான் வௌல்ப்படும்.

ஒரு பூந்தோட்டம் செழிப்பாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு முறையாக நிலம் கொத்தி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, வே அமைத்து கண்காணிக்க வேண்டியது தோட்டக்காரரின் பொறுப்பு அல்லவா! பூந்தோட்டக் காவல் காரர்களாக செயல்படும் ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் கடமைகளை ஆற்றலாம். ஆனால் – அந்தக் கண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகளை நெறிப்படுத்தவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் செயல் என்பதை மாணவ – மாணவிகள் உணர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.நல்ல மனம் கொண்டவர்களுக்கு நாளும் சிறப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...