Total Pageviews

Thursday, July 11, 2013

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !





சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



Monday, June 24, 2013

வேலை செய்யும் நிறுவனத்தில் நம் வளர்ச்சிக்கு கடைபிடிக்க வேண்டிய நல்ல 10 பண்புகள்



1) எல்லோரிடத்திலும் எப்போதும், எந்த சூழலிலும் அன்பான அணுகு முறையை கையாளுவது.

2) திட்டமிட்ட அயராத உழைப்பு.

3) அனைவரையும் சமமாக பாவித்து, அவர்களும் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுதல்

4) எளிதில் கவலைப்படாத உறுதியான மனம்.

5) நல்லவற்றைச் செய்வதற்க்கு அன்சாத துணிவு

6) எந்த நிலையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் பிடிவாதக்குணம்.

7) எவரையும் புண்ப்டித்தாத மென்மையாத் தன்மை

8) ஒப்பற்ற ஒழக்கம்

9) குன்றாத உற்ச்சாகம்

10) மாறாத விசுவாசம்



Wednesday, May 29, 2013

மனக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை தத்துவம்


 


பிறரை தண்டனைக்குள்ளாக்காதீர்கள் !

நீங்களும் தண்டிக்கப்படமாட்டீர்க்ள் !.

பிறரை மன்னியுங்கள்!

நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள் !

உன்னிடத்தில் / உங்களிடத்தில் உதவி கேட்கின்ற எவருக்கும் உங்களிடம் உள்ளதைக் கொடுங்கள்!.

உன்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்பவனிடம் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்!.

ஏனெனில்,எதுஎடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே அதாவது இந்த பூஉலகில் இருந்தேஎடுக்க ப்பட்டது. எது இன்று உன்னுடையதாக இருக்கின்றதோ, அது நாளை வேறொருவருடையதாகின்றது. எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது கொடுக்கப்பட்டதோ அதுவும் இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. இந்த உண்மை தெரியாமல்,  இது என்னுடையது,   இது அவனுடையது என்பது அறியாமையே !

வாழ்க்கை என்றல் என்ன?

வாழ்க்கை நம் கையில் ஒப்படைக்கப்படிருக்கிறதா?  அல்லது அது விதிப்படி நடக்குமா?

நீங்கள் போகும் பாதையில் ஒரு கல் கிடக்கிறது நீங்கள் அதை காலால் உதைத்தால் உங்களுக்கு அடிபட்டு துன்பம் வந்துவிடும் அந்த கல்லை எடுத்து ஒரு சிற்பம் செய்தீர்களானால் அந்த சிற்பத்தின் அழகு உங்கள்ளுக்கு மட்டுமல்லாமல் அதை காண்கிற அனைவருக்கும் இன்பத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கையும் அந்த கல் போன்றதே நீங்கள் அதனுடன் தொடர்புகொல்லாதவரை அது விதிப்படியே நடக்கும் நீங்கள் வாழ்க்கை என்னும் கல்லின் மீது மேற்கொள்ளும் வினையின் தன்மையை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மாறுபடும் நீங்கள் மேற்கொள்ளும் வினையின் தன்மை நன்மையாக இருக்குமாயின் உங்களுக்கு நன்மை ஏற்படும் தீமையாக இருக்குமாயின் தீமை ஏற்படும்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் மாசற்றவராக எதிலும்  எங்கேயும்  நிறைந்து  இருக்கிறார். யார் ஒருவர் நல்ல ஓழுகத்துடனும், பிறருக்கு கனவிலும் துன்பம் இழைகாதிருப்பவரும், தூய நெறி, நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவரும், தான,  தர்ம, வழிகளைப்பின்பற்றுபவருமே  கடவுளாகிறார். உங்களை சுற்றியுள்ள உலகை கூர்ந்து கவனியுங்கள் பூமியில் பிறக்கிற எந்த ஒரு சிசுவும் மாசற்றுத்தான் பிறக்கிறது அதற்க்கு ஏதும் செய்ய தெரியாது பொய்சொல்ல தெரியாது தவறு என்பதே அந்த சிசுவிடம் இருக்காது ஏனெனில் கடவுள் மாசற்றவர் அவருடைய படைப்பும் அவ்வாறே இருக்கும்,

பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

கொலை, களவு, செய்யாதிருப்பாயாக.

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

உன் தாயையும் தகப்பனையும் கணம் பண்ணுவாயாக.

உன்னிடத்தில் உள்ளவற்றை பாவப்பட்டவருக்கு கொடுப்பாயாக்!

நீங்கள் பிறரிடத்தில் என்ன  எதிர் பார்க்கின்றீகளோ  அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

பிற உயர்களிடத்தில் அன்பாய் இரு.

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் மாடுகள் போல் இயந்திரதனமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.

நமது கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்பமான வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவருடைய இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம்.

நம் மனதிலிருந்து தான் தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது.

நம் மனம் எப்பொழுது தான் தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால் நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.



Monday, May 27, 2013

பிரச்னைகள்




பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா?

 பொது வேலைக்கு சென்ற இடத்தில் பிரச்னையா? 

அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். 

அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக வீட்டுக்குள் நுழையுங்கள். 

இரவு நல்லபடி கழியும். 

அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

மதுவை ஒழித்து, மக்களைக் காப்போம்



மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து, சீரழித்து, சின்னாபின்னமாக்குகின்ற மது என்ற கொடிய அரக்கனை, எமனை, விஷத்தை, தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்.


தமிழ்நாட்டின் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில்  உள்ள திருமணமான ஆண்களில் பெரும்பாலானவர்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். குடும்பங்களின் மீது பற்றின்றி, தன் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்த சிந்தனை இன்றி, வேலைக்குச் செல்வது – கிடைக்கும் பணத்தில் குடிப்பது – ஒன்றையே கடமையாகக் கொண்டுள்ளனர். 

கூலி வேலையில்லாத நாள்களில், "நேற்று கொடுத்த கூலியைக் கொடு’ என்று மனைவியிடம் தகராறு செய்து, கொடுக்காவிட்டால் அடித்து உதைத்து வாங்கிச் செல்கின்றனர்.

பெண்களின் நிலையைக் கூறிடவே மனம் துடிக்கிறது. வருகின்ற சொற்ப 
வருமானத்தில் தினத் தண்டல், வாரத் தண்டல், மகளிர் குழுக் கடன், குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வயிற்றுப் பசிக்கு என்று செலவுகளை மிகுந்த துயரத்தோடு அங்குமிங்கும் கடன் வாங்கிச் சமாளிக்கிறார்கள். குடிகாரக் கணவனை மாற்றவும் முடியாமல் திருத்தவும் முடியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அடி – உதைகளைத் தாங்கிக்கொண்டு குடிகாரக் கணவனோடு வாழ்கிறார்கள்.


பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் கதை இதுவென்றால், "நாளைய தமிழகம்’ என்று வர்ணிக்கப்படும் இளைஞர்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். ஹான்ஸ், பான்பராக், மாவா போன்ற போதைப் பொருள்களையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர்.

இவர்களைப் பார்த்து இவர்களுடைய தம்பிமார்களான பள்ளிக்கூட மாணவர்களும் பீர், சிகரெட் ஆகியவற்றைப் பழகிக்கொண்டுவருகிறார்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்தாலும், மரணம் ஏற்படுத்தும் விபத்துகள் மட்டுமே பதிவாகின்றன. அதிலும் குடிபோதை விஷயம் முக்கியப்படுத்தப்படுவதில்லை. எனவே இதன் தீமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. குடிகாரர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், தாங்கள் பணி புரியும் இடத்திலும் பஸ், ரயில் போன்ற பொது இடங்களிலும்கூட வம்புச் சண்டை இழுத்து பொது அமைதியைக் குலைக்கிறார்கள்.



குடிகாரர்கள் புற்றுநோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களுக்கும் ஆளாகிவருகின்றனர். சாராய வருமானத்தைவிட அதிக அளவு பொது சுகாதாரத்துக்குச் செலவிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

குடும்பங்களின் வருமானம் குறைந்து வறிய நிலை நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற நினைக்கும் முதல்வரின் கனவுக்கு இது பெருத்த இடையூறாகவே அமையும் என்பதால் மதுவை ஒழிக்கும் முயற்சியில் முதல்வர்  உடனே இறங்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஏழைகளிடத்தில் பாசமும், சட்டத்தை மீறுகிறவர்களிடத்தில் கண்டிப்பும் காட்டும் பண்புள்ளவர். எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் கடத்துவதையும் காவல்துறை உதவியுடன் தடுத்து தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே மதுவை எதிர்ப்பவர்களின் வேண்டுகோள்.

நன்றி-தினமணி



Sunday, May 12, 2013

சிந்தனைத் துளிகளில் சில





செல்வத்தை வைத்துச் சென்ற
தகப்பனை விடத் தொழில் கற்ப்பித்துச் சென்ற
தகப்பனே தன் மக்களூக்கு மிகுந்த பாதுகாப்பு
அளித்தவன்.

 

உழைத்து சம்பாதித்த பொருளுக்கு
எப்போதுமே மதிப்பு மிகுதி.


அமைதி இல்லாத இடத்தில் இன்பம் இருக்க
முடியாது.

முன்று முறை முகத்தில் அடித்தால்
புத்தருக்கும் கோபம் வந்தே தீரும்.


முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய்!
முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய்!
உனக்கு எல்லா வழிகளிலும் நன்மை வந்து சேரும்!.


பிறரை பாரட்டுங்கள்  - பாரட்டு கிடைக்கும்
பிறரை  மதியுங்கள்    - மதிப்பு கிடைக்கும்
பிறருக்கு அன்பு செலுத்துங்கள் - அன்பு தேடி வரும்
இவை ஒரு வழிப்பாதைகள் அல்ல இரு வழி பாதைகள்

அன்பினில் வணிகத்திற்க்கு இடமில்லை.
வணிகத்தில் அன்பிற்க்கு  இடமில்லை.



Saturday, May 11, 2013

டீ , காபிக்கு பேப்பர் கப்'களை பயன்படுத்த வேண்டாம்!


ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

Thanks to Mr.Jeyakumar, Bangalore





எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...