Total Pageviews

Tuesday, August 14, 2018

மதுரையில் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள்!




Old Age Homes Madurai Christian Seva Sangam Trust
kennet garden,

Alagapan nagar,
Paandiyan nagar

Madurai
Cell :098430 52242

Sri kaamakodi Mahalingam old Age Home
58, Hanumar Koil Padithurai Rd, 

Simmakal, 
Madurai, Tamil Nadu 625001
போன: 0452 262 0920.

Arulmigu Subramaniyaswamy Thirukovil old Age Home
Sannithi Street, 

Thiruparankundram, 
Madurai, Tamil Nadu 625005
போன: 099424 75476.

INBA ILLAM
முகவரி: 42, G.S.T. Road, Pasumalai, Madurai, Tamil Nadu 625004
போன: 0452 237 1311

ARAVIND OLD AGED HOME
246, Vasuki Nagar, 2nd street, 

Valluvar Colony , PNT Nagar Main Road
098941 18005.

ஆகாஷ் வயது கவனிப்பு இல்லம்
முதியோர் இல்லம்
2/428, Kadachanenthal to Othakadai Road,
 Kottagaimedu Main Rd
0452 242 4730

Rajaji Home For The Aged
முதியோர் இல்லம்
098421 33954

மதுரா கன்ன முதுமை வீட்டில் முதியோர் இல்லம்
6-3/23,moovendhar nagar,1ststreet,
viswanathapuram
098422 34035

Mahatma Old Age Home
முதியோர் கவனிப்பு
0452 267 9676

Monday, July 30, 2018

ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்!

  மீப காலமாகவே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, அது தொடர்பான மோசடி களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  ஆன்லைன் பரிவர்த்தனையின்போது, விஷயம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்கு விஷயம் தெரிந்தவர்கள்கூட மோசடியில் சிக்கிக்கொள்ளும் நிலைமையே தற்போது உருவாகியிக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான எட்டு யோசனைகள் இங்கே...
பாதுகாப்பினை அதிகப்படுத்துங்கள்

 உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் பாதுகாப்பு அம்சங்களை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள்மூலமாக மோசடிகள் நடப்பதைத் தடுக்க சிறந்த வழி உங்கள் கணினியின் அடிப்படைச் செயல் பாடுகள், இணையதள பிரவுசர்கள் மற்றும் செக்யூரிட்டி சாஃப்ட்வேர்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்யுங்கள்.

சிறந்த ஆப்களைப் பயன்படுத்துங்கள்

ஆன்லைன் மற்றும் பேங்கிங் மோசடிகளைத் தடுக்கும் வகையிலான சிறந்த ஆப்களைப் பயன் படுத்துங்கள். இத்தகைய ஆப்கள், உங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை அனுமதிக்கவோ அல்லது அனுமதிக்காமல் தடுக்கவோ செய்யக் கூடியவை. மேலும், குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைத் தடுத்துவிடும்.

ஆன்லைன் வர்த்தகம், ஏ.டி.எம்-கள், பி.ஓ.எஸ் டெர்மினல்கள் அல்லது வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, அதற்குரிய பயன்பாட்டு சேனல்களைக் கட்டுப்படுத்தும்.

இணையதளத்தைக் ஆராயுங்கள்

பிரபலமில்லாத இணைய தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிருங்கள். நீங்கள் ஷாப்பிங் செய்யும் இணையதளம், ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது தானா என்பதை அறிய, அந்த நிறுவனத்தின் பெயரை இணைய தளத்தில் ‘டைப்’ செய்து, அந்த நிறுவனத்தின் பெயர் வருகிறதா எனப் பாருங்கள்.

பொது வைஃபை... உஷாராக இருங்கள்

ரயில் நிலையங்கள், மால்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங் களில் உள்ள பொதுவான வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் உங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன்களில் உள்ளே நுழையவும் முடியும். எனவே, ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம் செலுத்தப் போகிறீர்கள் என்றால், பாதுகாப் பான தனிப்பட்ட இணையதள இணைப்பு மூலமாகச்  செய்யுங்கள்.
கண்காணிப்பு முக்கியம்

கிரெடிட் கார்டை கடை யிலோ,  உணவு விடுதியிலோ பயன்படுத்துகிறீர்கள் என்றால், கார்டிலுள்ள விவரங்களை மற்றவர்கள் அறிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி, கார்டில் உள்ள விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்கள் கண்முன்பே ஸ்வைப் செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டுப் பரிவர்த்தனை வேண்டாம்

வெளிநாட்டில் இருக்கும்போது மட்டுமே சர்வதேசப் பரிவர்த் தனைக்கான செயல்பாட்டை அனுமதியுங்கள். வெளிநாட்டுப் பரிவர்த்தனையில், அந்த கார்டு நமக்கு உரியதுதானா என்பதை உறுதி செய்யும் அடையாளச் சரிபார்ப்புத் தேவையில்லை என்பதால், மோசடிப் பேர்வழிகள் உங்கள் கார்டைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எளிதில் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்கள் பெயர், கார்டு எண், காலாவதி தேதி மற்றும் சி.வி.வி எண் போன்ற கார்டு விவரங் களை ஹேக்கர்கள் பெற்று விட்டால், உங்கள் கார்டை அவர் கள் எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, உங்கள் கார்டில் உள்ள சர்வதேசப் பரிவர்த்தனைக் கான செயல்பாட்டை  அனுமதிக்காதீர் கள். நெட்பேங்கிங் மூலம் இந்தச் செயல்பாட்டைத் தடுக்க முடியும்.

பிரைவசி பாலிசியைப் படியுங்கள்

பிரைவசி பாலிசியைக் (privacy policy) கவனமாகப் படியுங்கள். எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முன்னரும் அந்த இணையதளத்தின் பிரைவசி பாலிசியைக் கவனமாகப் படியுங்கள். தாங்கள் சேகரிக்கும் தனிநபர்களின் தகவல்களை அந்தத் தளம் எவ்வாறு பாதுகாக் கிறது என்பது குறித்து அதன் கொள்கைகளில் சொல்லப் பட்டிருக்கும்.

தேவை, வலுவான பாஸ்வேர்ட்

வலுவான பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது அதனை கேப்பிட்டல் மற்றும் ஸ்மால் ஆகிய இருவகை எழுத்துகள், எண்கள், சிறப்பு எழுத்துகள் போன்றவற்றின் கலவையாக உருவாக்குங்கள்.

- பா.முகிலன்

Thanks to Nanayavikatan

விரல்களில் ஏற்பட்ட புண் - விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!



சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில்
புண் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.

🙌இதற்கு கண்கண்ட மருந்து🙌

ஆவாரம்_இலை:👌
👍👍👍👍👍👍

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

Saturday, July 28, 2018

பெண்ணே!! கவனமாக இருப்பாயா...?


பெண்ணே!! பாவப்பட்ட பெண்ணே!!

கழிப்பறையில் கவனம்...!


குளியறையில் கவனம்...!
 

படுக்கையறையில் கவனம்...!

பள்ளியறையில் கவனம்...!


அலுவலகறையில் கவனம்...!
 

கோவில் கருவறையில் கவனம்...!
 

பேருந்து பயணத்தில் கவனம்...!
 

இரயில் பயணத்தில் கவனம்...!
 

பாலூட்டும் அறையில் கவனம்...!
 

மருத்துவறையிலும் கவனம்...!
 

ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...!
 

நீ பெண் என்று தெரிந்து கொண்டால்
 

தாயின் கருவறையிலும் கவனமாக இரு,
 

பெண்ணே நீ கடந்து போகும்
 

பாதையை கவனிப்பாயா...?
 

சில
 

காம வெறிநாய்களின் கண்களை
 

கண்காணித்து கொண்டு இருப்பாயா...?
 

பெண்ணின் கவனத்திற்க்கான பதிவு இல்லை...!
 

ஆணின் அவமானத்திற்க்கான பதிவு...!
 

அப்பான்னு நினைச்சேன்
 

அசிங்கமாய் தொட்டான்....!
 

சகோதரன்னு பழகினேன்
 

சங்கட படுத்தினான்......
 

மாமான்னு பேசினேன்
 

மட்டமாய் நடந்தான்......!
 

உறவுகள் அனைத்தும்
 

உறவாடவே அழைக்கின்றன.....!
 

பாதுகாப்பை தேடி
 

பள்ளிக்கு சென்றேன்.....!
 

ஆசிரியனும் அரவணைத்து
 

மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்.....!
 

நட்பு கரமொன்று நண்பனாய்
 

தலைகோதி தூங்கென்றான்.....!
 

மரத்த மனம் மருண்டு சுருண்டு
 

தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான்
 

அவனும் ஆண்தானே .....!
 

கதறி அழுது கடவுளிடம் சென்றேன்
 

ஆறுதலாய் தொட்டு தடவி
 

ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..!
 

அலறி ஓடுகிறேன்..எங்கே போவேன்?
 

சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்....!
 

பெண்னை பெண்ணாக பார்க்காமல்
மனிதராய் பார்ப்பது எக்காலம்?


பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ??


#பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லாரும் இதை ஷேர் பண்ணுங்கள் நட்புகளே.....!

Thursday, July 12, 2018

முழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும்

"முழங்கால் வலி அதிகமாக இருக்குது"



கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்! அதையே இங்கு செய்தோம்.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை..

அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:

1) பச்சரிசி அதிகமானால்:-
இரத்த சோகை நோய் உண்டாகும்.

2) அச்சுவெல்லம் அதிகமானால்:-அஜீரணம் உண்டாகும்.

3) பலகாரம் அதிகமானால்:-
வயிற்று வலி ஏற்படும்.

4) இஞ்சி அதிகமானால்:-
மென் குரலும் இறுக்கமாகும்.

5) பழைய சோறு, கஞ்சி அதிகமானால்:-

வாய்வு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்.

6) தேங்காய் அதிகமானால்:
-
சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.

7) மாங்காய் அதிகமானால்:-

வயிறு கட்டும், சளி வளரும், இடுப்புவலி வரும், பித்தம் அதிகமாகும்.

8) கோதுமையை பித்த உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால்:-
வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்.

9) பாதாம் பருப்பு அதிகமானால்:-
வாய் சுவை மாறும், பித்தம் அதிகமாகும், வயிறு மந்தமாகும்.

10) முற்றிய முருங்கை அதிகம் சாப்பிட:-

வாய்வு, சளி ஏற்படும்.

11) எருமைப்பால் அதிகம் குடிக்க:-
கிட்னி கல், அறிவு மங்கும்.

12) மிளகு:-
உடம்பில் சக்தி இல்லாதவர்கள் அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

13) மிளகாய் அதிகமானால்:-
வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

14) காபி அதிகமானால்:-

கை நடுங்கும், பித்தம் அதிகமாகும், கண் எரியும், நெஞ்சு உலரும், ஆண்மை கெடும்.

15) டீ அதிகமானால்:-
உடல் நடுங்கும், கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்.

16) எலுமிச்சை அதிகமானால்:-
பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

17) எள்ளு அதிகமானால்:-
பித்தம், செரியாமை உண்டாகும்.

18) உப்பு அதிகமானால்:-
எலும்பு உருக்கும், விந்தை குறைக்கும்!

19) வெங்காயம் அதிகமானால்:-
தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.

20) குங்குமப்பூ அதிகமானால்:-
மதியழிக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை கோணலாக்கும்.

21) வெள்ளைப் பூண்டு அதிகமானால்:-
ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும், குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
Photo

மனஅழுத்தம், உடல் சூடு பிரச்சினைகளுக்கு தீர்வு !




மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..!!! உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…


வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.


மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...