Total Pageviews

Monday, August 23, 2021

கனிவுடன் பேசி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த காவலர் பழனியாண்டி!

 மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசும் எஸ்.ஐ.யை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். மதுரை மாநகரக் காவல் ஆணையர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

 29 ஆண்டுகள் அனுபவம்
 போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர் மதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி. 
 
 எல்லாரும் நல்லாருக்கணும் எல்லாரும் நல்லாருக்கணும் ''எல்லாரும் நல்லாருக்கணும்... குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும்... அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும்... தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க... இதெல்லாம் ஒங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்'' இந்த உத்வேகமான, கனிவான குரலுக்கு சொந்தக்காரர்தான் ழனியாண்டி. மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார்
 
  29 ஆண்டுகள் அனுபவம் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து 29 ஆண்டுகளாகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை நகர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வருகிறார் பழனியாண்டி.. 'குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்... ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும்... எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும்... எதுக்காகவும் கவலைப்படக்கூடாது..' என்று போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் உரத்துப் பேசுகிறார்.
 
இவரின் குரல்தான் ஆறுதல் இவரின் குரல்தான் ஆறுதல் பல்வேறு கவலைகளுடன் சாலைகளில் செல்பவர்கள் பழனியாண்டியின் குரலை கேட்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பழனியாண்டிக்கு ரசிகர்களாவே மாறி விட்டனர். 'என்னோட வீட்டுல ஒரு லட்சம் ரூபாய் மதிப்புல புத்தகங்கள் வச்சிருக்கேன்... வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனா வாசிப்பு... வாசிப்பு.. வாசிப்புதான்... அதுல நான் கத்துக்கற நல்ல விசயங்கள பொதுமக்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன்... இந்தப் பணிய ரொம்ப ரசிச்சு நான் செய்யுறேன்... 
 
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் சார் நான் வேலை செய்யுற இடத்துக்கே வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செஞ்சாரு... அத பெருமையா கருதுறேன்'' என்று மகிழ்வுடன் பேசுகிறார் பழனியாண்டி. 
 இவரின் குரல்தான் ஆறுதல்
 கனிவுடன் பேசி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த காவலர் பழனியாண்டியின் புகழ் பட்டிதொட்டிஎங்கும் பரவியது. இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போனில் தொடர்பு கொண்டு காவலர் பழனியாண்டியை வாழ்த்தினார். மேலும் மதுரை வரும்போது உங்களை அழைத்து பேசுவதாகவும் சைலேந்திரபாபு கூறினார். இதனை தொடர்ந்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.


Friday, April 16, 2021

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? 
 

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 
 
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
 
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 
 
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
 
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
 
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
 
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
 
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
 
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
 
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
 
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். 
 
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). 
 
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

 

Friday, April 2, 2021

வாக்குரிமை !

 

 
200 ரூபாய் பணத்திற்கும், 

ஒரே ஒரு பிரியாணி 
 
பொட்டலத்திற்கும் ,

வறண்ட நாக்கோடு, கொளுத்தும் 
 
கொடும் வெயிலில், உயிரையும் 
 
இழக்கத் தயாராகிப்போன ஒரு 
 
சமூகத்தில்,
 
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
 
அயோக்கியன் என்று தெரிந்த 
 
பின்னும்,
 
அவனுக்கு ஆரத்தி எடுத்து,
 
ஆரத்தித் தட்டில் விழப்போகும் 
 
சில்லரை பணத்திற்காக,
 
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
 
எத்தனை கொடுமைகள் 
 
இழைத்தாலும்
 
அதனையெல்லாம் மறந்துவிட்டு 
 
மீண்டும் மீண்டும் சின்னங்களை 
 
மட்டுமே பார்த்து
 
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எப்படி நடக்கும்?
 
🙊🙉🙈
 
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற 
 
சமூகத்தில் முன்னேற்றம் எந்த 
 
வழியில் வந்து சேரும்?
 
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா
 
 அந்தக் கட்சி ...
 
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் 
 
அந்தக் கட்சிக்குத்தான் 
 
ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன்
 
 வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர்
 
 குடிக்கிற மகன்கள் இருக்கிற 
 
தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி 
 
உருவாகும்?
🙊🙉🙈
 
கட்சி எது? சின்னம் எது? தலைவர் 
 
யார்? எது சரியான பாதை? என்ற
 
 அடிப்படை அரசியல் அறிவுகூட 
 
இல்லாத பட்டதாரிகள் மலிந்த 
 
இளைய தலைமுறையினால் 
 
மாற்றம் எப்படி வந்து சேரும்?
 
🙊🙉🙈
தேர்தல் என்றால் ஒரு நாள் 
 
விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு
 
 செல்லாமல் விடுமுறை 
 
கொண்டாடுகிற தேசத்தில் புதிய 
 
அரசு எப்படி சாத்தியம்?
 
🙊🙉🙈
எமது மக்கள் எப்போதும் தற்காலிக
 
 சுகங்களிலே நிறைவடைந்து 
 
விடுபவர்களாய் இருக்கிற 
 
வரையிலும்
 
நிம்மதியான வாழ்க்கையை வாழவே
 
 போவதில்லை...
 
People deserves the Government..... 
 
மக்களின் தரத்திற்குத் தக்கபடிதான் 
 
அரசு அமையும்..
 
*முதலில் மாற வேண்டியது 
 
அரசியல்வாதி அல்ல.. "நாம்தான்"....*

 

Sunday, March 28, 2021

நடைப்பயிற்சியின் பயன்கள்


👬💞 1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.Staff in hand, the Mahatma walked every day of his life... | Hindustan Times

 

👬💞 2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.

 

👬💞 3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.

 

👬💞 4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.

 

👬💞 5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.

 

👬💞 6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

 

👬💞 7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.

 

👬💞 8) அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

 

👬💞 9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.

 

👬💞 10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.

 

👬💞 11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.

 

👬💞 12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.


👬💞 13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.

 

👬💞 14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.

 

👬💞 15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.


👬💞 16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.

 

👬💞 17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.

 

👬💞 18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.

 

👬💞 19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.

 

👬💞 20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.

 

👬💞 21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.

Thursday, March 18, 2021

Electric bike Atum 1.0 - Rs.50,000/- only மிக குறைவான விலையில் மின்சார பைக்!

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை!
The electric bike comes with a 2-year battery warranty and is claimed to be developed using indigenous parts.
ஆட்டம் 1.0 - 25 கிமீ வேகத்தை வழங்குகிறது.

ஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.

அதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

எலக்ட்ரிக் பைக் 2 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது உள்நாட்டு பகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்!
 
 அதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.
100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

ஆட்டம் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வம்சி கடாம் கூறுகையில், “3 வருட கடின உழைப்பு மற்றும் பயணத்திற்கான நிலையான வழியை அறிமுகப்படுத்தும் பார்வைக்குப் பிறகு, ஆட்டம் 1.0 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தேசமாக மாற்றுவதற்கான எங்கள் பெரிய உறுதிப்பாட்டில் ஆட்டம் 1.0 ஒரு முக்கியமான மைல்கல் என்று நாங்கள் நம்புகிறோம். ”

ஆட்டம் 1.0 6 கிலோ எடை கொண்ட சிறிய பேட்டரி பேக் உடன் வருகிறது. 

Wednesday, March 17, 2021

மின்சார வாகனங்களின் தேவை!

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பசுமை இல்ல வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் வாகனங்கள் இவ்வாயுக்களை அதிகளவு வெளியிடுகின்றன.

எனவே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. அவை சுற்றுசூழலில் எந்த வகையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் நிறை குறைகள் பற்றிப் பார்க்கலாம்.

 
மின்சார கார்

மின்சார கார் என்பது மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியது. இதில் மின்சாரத்தை சேமிக்க பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாட்டரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை மின்மோட்டர்கள் எடுத்துக் கொண்டு காரினை செயல்பட வைக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும் ரீஜார்ஜ் செய்யக் கூடியவை.
 

மின்சார வாகனங்களின் குறைகள்

மின்சார வாகனங்களின் வேகம் மற்றும் செல்லும் தூரம் ஆகியவற்றின் அளவானது குறைவாக உள்ளது.

இவை ஒலியில்லாமல் செல்வதால் சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டினால் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ள இடங்களின் இவ்வாகனங்களின் பயன்பாடு கேள்விக் குறியாகிறது.

 
மின்சார காரினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கம்

மின்சார கார்கள் இயங்கத் தேவையான மின்சாரமானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து பெறப்படும்போது சுற்றுசூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.

சூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

 நிலக்கரியின் மூலம் மின்சாரம் பெறப்பட்டால், அவ்விடங்களில் மின்சார கார்கள் மறைமுக சுற்றுசூழல் பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்துகின்றன.

அதாவது அதிக மின்சார தேவையின் காரணமாக அனல்மின் நிலையங்களிலிருந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

இவ்விடங்களில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைவிட மின்சார கார் மறைமுகமாக அதிகளவு காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் கழிவு நீக்கம் சுற்றுசூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இக்கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் காரீயம், நிக்கல், காப்பர் மற்றும் லித்தியம் போன்ற கடின உலோகங்கள் உள்ளன. இவற்றின் கழிவுநீக்கம் சுற்றுசூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மின்சார வாகனங்களில் பாட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் பாட்டரிகளின் மூலப்பொருட்கள் மிகக்குறைந்த அளவே மண்ணில் இயற்கையாக கிடைக்கின்றன.

இம்மூலப்பொருட்களைப் பெறுவதற்காக சுரங்கங்கள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. மேலும் மூலப்பொருட்களை தனியே பிரித்தெடுக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.

நவீன அறிவியலின் முன்னேற்றத்தால் மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் சூரியன், காற்று மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகளவு கிடைக்கப்படும்போது மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.

மின்சார வாகனங்களின் பாட்டரிகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக கழிவுநீக்கம் செய்யப்படும் போதும், மறுசுழற்சி செய்யப்படும்போதும் அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நவீன அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாடு வருங்கால சந்ததியருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

முதல் நடைமுறை மின்சார கார் 1880-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மின்சார கார் பிரபலமடைந்தது.


சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் மீண்டும் பிரபலமடையத் துவங்கிவிட்டன.

மின்சார வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு மாசுக்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம்.

பாட்டரிகள் ஆரம்பத்தில் அதிக விலையைக் கொண்டிருந்தன. தற்போதைய நவீன அறிவியலின் காரணமாக மின்சார வாகனங்களின் பாட்டரிகளின் விலை குறையத் துவங்கியுள்ளது.

இக்காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் பிரபலமடையத் துவங்கியுள்ளன.

 
மின்சார வாகனங்களின் நிறைகள்

மின்சார வாகனங்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே காற்று மாசுபாடு குறைக்கப்படுகிறது.

பெட்ரோலிய எரிபொருட்கள் இவ்வகை வாகனங்களுக்கு தேவையில்லை என்பதால் வற்றும் வளமான எண்ணெய் வளம் குறிப்பிட்ட அளவு பாதுக்கப்படுகிறது.

இவை சத்தம் எழுப்புவது இல்லை. எனவே சுற்றுசூழலில் ஒலி மாசுபாடு குறைக்கப்படுகிறது.

blue and black bmw m 3 coupeமின்சார காரில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் காரில் உள்ள காற்று பைகள் விரிவடைந்து மின்மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வது தடை செய்யப்படுகிறது. இதனால் கோர விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

Wednesday, March 3, 2021

தேடல் உள்ளவரை உங்கள் வாழ்வில் ருசியிருக்கும்!

 

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். 

உதாரமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம்.

படித்தவுடன் வேலையை தேடுகிறோம்.

வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம்.

கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம்.

திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்.

 இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி.

நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். 

அப்படி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். 

மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள்.

மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள்.

சும்மா இருக்காதீங்க.....

அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் !

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...