Total Pageviews

Wednesday, December 16, 2020

சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!

 
 
 
போன். 8695959595. *
 
"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.
 
கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? 
 
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' 
 
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
 
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. 
 
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
 
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
 
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. 
 
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
Cell No., -> 86 95 95 95 95
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
வாழ்த்துக்கள்! !!
 
👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.

அழகான வரிகள் ! நீ . . .நீயாக இரு !

 அழகான வரிகள் பத்து.

 

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
 
நாம் எல்லோரும்சாதாரண மனிதர்கள் 
🏹
2} பொறாமைக்காரரின் பார்வையில்..
 
நாம் அனைவரும் அகந்தையாளர்கள்
🏹
3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. 
 
நாம் அற்புதமானவர்கள்
🏹
4} நேசிப்போரின் பார்வையில்.. 
 
நாம் தனிச் சிறப்பானவர்கள்
🏹
5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.
.
நாம் கெட்டவர்கள்
🏹
7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
 
ஒழிக்கப்பட வேண்டியவர்கள்
🏹
8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் ஏமாளிகள்
🏹
9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள்
🏹
10} கோழைகளின் பார்வையில் நாம் அவசரக்குடுக்கைகள்
🏹
✅ நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
 
ஒரு தனியான பார்வை உண்டு. 
 
🕊 ஆதலால் -பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள் 🏹
🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
 
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
 
🥁 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
 
🥁 இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
 
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...! 
 
எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் 
 
சொத்தாக இருக்கட்டும்
👍
🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.
 
நீ . . .நீயாக இரு !
 

தங்கம் விலை அதிகம்தான் . . .
 
தகரம் மலிவு தான் . . .
 
ஆனால் தகரத்தைக் கொண்டு
 
செய்யவேண்டியதை
 
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
 
அதனால் தகரம் மட்டமில்லை . . .
 
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
 
எனவே நீ . . .நீயாக இரு !
 
கங்கை நீர் புனிதம் தான் . . .
 
அதனால் கிணற்று நீர் வீண் என்று
 
அர்த்தமில்லை . . .
 
தாகத்தில் தவிப்பவருக்கு
 
கங்கையாயிருந்தால் என்ன ?
 
கிணறாகயிருந்தால் என்ன ?
 
நீ . . .நீயாக இரு !
 
காகம் மயில் போல் அழகில்லை தான் . .
 .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
 
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
 
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
 
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நேற்று போல் இன்றில்லை . . .
 
இன்று போல் நாளையில்லை . . .
 
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?
 

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், 
 
கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, 
 
அப்படியென்றால் என்ன தெரியுமா…?
 
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, 
 
சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் 
 
உள்ளது.
 
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் 
 
அடிப்படையில் அமைகின்றன.
 
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், 
 
உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், 
 
உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) 
 
நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த 
 
நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை 
 
மேல்நோக்கு நாட்கள்.
 
 
இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக 
 
விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், 
 
மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான 
 
மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய 
 
நாட்கள் ஆகும்.
 
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், 
 
விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய 
 
ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) 
 
நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு 
 
நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், 
 
கீழ்நோக்கு நாட்கள்.
 
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் 
 
தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், 
 
கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் 
 
முதலான பணிகளைச் செய்வது நல்லது.
 
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், 
 
சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி 
 
ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், 
 
அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
 
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், 
 
சமநோக்கு நாட்கள்.
 
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், 
 
செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், 
 
சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் 
 
உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
 
 
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் 
 
மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி 
 
காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு 
 
நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் 
 
பதிவுசெய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு 
 
முறையில் இருக்கும்.

 

Monday, May 18, 2020

உறவுகள் எப்படி இருக்க வேண்டும் ?




உறவுகள் எப்படி இருக்க வேண்டும்?

உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், குழந்தை, சொந்தபந்தம், பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர் என்று தொடங்கி அவரது நண்பர், அவரது பகைவர், அனைவருமே அவருடைய உறவு வட்டத்திற்குள் வருபவர்தான். இத்தனை உறவுகள் எதற்காக என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதருக்கிருக்கும் விதம்விதமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவே விதம்விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

உங்கள் வாழ்வில் நிகழும் விதம்விதமான செயல்பாடுகளுக்கேற்ப விதம்விதமான உறவுகள் அமைகின்றன. இதில், ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களின் தன்மை மாறிக்கொண்டே வருகிறபோது, அந்த செயல்களுக்கேற்ப ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறவிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் பங்குதாரரிடம் தொலைபேசியில் பேசுகிறீர்கள். அடுத்தநிமிடமே உங்கள் குழந்தையிடம் ஏதோ கேட்கிறீர்கள். அதற்கடுத்த நிமிடமே உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு பதில் சொல்கிறீர்கள். ஒவ்வோர் உறவையும் நீங்கள் ஒவ்வொருவிதமாகக் கையாள வேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையை கையாள்கிற விதத்தில் உங்கள் கணவரை கையாள முடியாது. எனவே, இத்தனை உறவுகளையும் ஒருசேர கையாள்வதென்பது பந்துகளை ஒரே நேரத்தில் வீசிப்பிடிப்பதைப் போன்றது. உங்கள் கைகளில் ஒரேயொரு பந்து இருக்குமென்றால் எளிதாக இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப்பிடிக்க வேண்டும், ஒன்றைக் கூட நழுவவிடக் கூடாது என்றால் அது எவ்வளவு சிரமமானது! ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கையாள்வதென்பது இப்படித்தான். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப் பிடிக்கும்போது அவரால் வேறெதிலும் கவனம் செலுத்தமுடியாது. நீங்கள் உறவுகளை கையாள்கிற சூழலும் இப்படித்தான் இருக்கிறது. உங்களுடைய சில தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், அந்த உறவுகளின் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது.

இன்னொரு விதமாகவும் வாழலாம். அது எவ்விதமான உறவுகளும் இல்லாமல் வாழ்வது. தனக்குள்ளேயே முழு நிறைவைக் கண்டு வெளியே வேறு உறவுகளைத் தேட வேண்டிய தேவையில்லாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், இப்போதைய சூழலில் பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுகள்தான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே தீர்மானிக்கின்றன. எனவே, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி மிகவும் மேன்மையான உறவுகளை மேற்கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும். உறவுகளின் ஆதார சுருதியே தேவைகள்தான் என்பதை முதலில் பார்த்தோம். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள்.

நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, தொழில் தொடங்குவது, இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள்தான். இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், மனிதர்களை கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிறபோதுதான் உறவுகள் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

பெரும்பாலான மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானது ஆண், பெண் உறவுகள்தான். அவர்கள் சேர்ந்திருக்கும் நேரங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பிரித்து வைத்தீர்கள் என்று சொன்னால் 24 மணிநேரத்திற்கு மேல் அவர்களால் பிரிந்திருக்க முடியாது. மறுபடியும் சேர்த்து வைத்தால் 10 நிமிடங்களுக்குள் சண்டையைத் தொடங்கி விடுவார்கள். அவர்களால், சேர்ந்தும் இருக்க முடியாது, பிரிந்தும் இருக்க முடியாது. பிரச்சினையே இதுதான். இது அவர்களுக்குள் இருக்கும் ஒருவிதத் தேவையின் காரணமாக ஏற்படுகிற மோதல். தங்களுக்குள் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவர்கள் உணரவில்லை. ஒருவர் இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ பிழிந்தெடுக்கப் பார்க்கிறார். ஆனால், இதுவொரு போராட்டமாகத்தான் இருக்கும். நெருக்கமான உறவுகளில் இருக்கும் இத்தகைய இரண்டு பேர் ஒருவரையொருவர் கொலை செய்துவிடப் போவதில்லை. ஆனால், ஒருவரையொருவர் வெவ்வேறு விதங்களில் சித்ரவதை செய்து கொள்வார்கள். இது ஓர் ஒப்பந்தம். ஏனெனில், இன்னொருவரை கொலை செய்துவிட்டால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லை.

எனவே, மேன்மையான உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதற்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும்போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும்போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள், தங்கள்
வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உறவுகளைப் பயன்படுத்தாமல், வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வருத்தமாக இருந்தாலும் அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால், நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடன்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள்.  உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்குமென்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்தவரையில் அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் வெளிச்சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால்தான் அது சாத்தியமில்லை.
 நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவுகொள்ளத் தான் விரும்புவார்கள். யாரிடமாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள் கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள். வாழ்க்கை பலரையும் சார்ந்திருக்கிறது என்பதால்தான் உறவுகளையே நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நீங்களே கையாள முடியாது. உங்களைச் சுற்றி மனிதர்கள் வேண்டும். அதற்காகத்தான் உறவுகள். ஆனால், எல்லோரிடமிருந்தும் நீங்கள் எதையாவது பெற்றுக் கொண்டே இருக்க விரும்பினால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஓர் அந்நியருடன் இருப்பதை விடவும் எச்சரிக்கையாக உங்களிடம் நடந்து கொள்வார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

உறவுகளை இனிமையானவையாய் வைத்துக் கொள்வதும், சிக்கல்மிக்கதாய் உருவாக்கிக் கொள்வதும் உங்களைப் பொறுத்துதான் இருக்கிறது. நெருக்கமானவர்கள் என்றால் அவர்களுடனான மனத்தடைகள் உடைந்திருக்க வேண்டும். ஆனால், அந்நியர்களிடம் இயல்பாய் இருக்கிறீர்கள், நெருக்கமானவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் அதீத எதிர்பார்ப்பையே காட்டுகிறது. ஒருவரோடொருவர் நெருங்கியிருக்கும் போதே ஒருவரிடமிருந்து ஒருவர் தற்காத்துக் கொள்ள தேவைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் உங்களால் உங்களுடன் உறவுகொண்டிருப்பவர்களோடு சேர்ந்திருப்பதும் சாத்தியமில்லை, விலகியிருப்பதும் சாத்தியமில்லை. இந்த உலகத்தில் வாழ்கிறபோது உறவுகளைப் பொறுத்தவரையில் உங்களுக்கு தேர்வுகள் ஏதும் கிடையாது. நீங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், யாருடனும் உறவுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க சாத்தியமில்லை. ஆனால், உறவுகள் மேன்மையானவையாக இருக்க வேண்டுமா? சிக்கல் உள்ளவையாக இருக்க வேண்டுமா? என்று தேர்வு செய்வது உங்களால் முடியும்.

வாழ்க்கை எப்போதுமே நேர்கோடாக இருப்பதில்லை. வாழ்வை நடத்துவதற்கென்று எத்தனையோ விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் புரிதலை நீங்கள் கைவிட்டால் உங்கள் செயல்திறனை நீங்கள் இழக்கிறீர்கள். தனிப்பட்ட உறவாகட்டும், தொழில்முறை நிர்வாகமாகட்டும், எல்லா இடங்களிலும் அடிப்படைத் தேவையென்னவோ ஆழமான புரிதல்தான்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...