Total Pageviews

Saturday, April 23, 2022

முதியோர் நலன் காப்பது நம் கடமை!

குடும்பத்தின் மேன்மை மட்டுமின்றி சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் முதியோர்கள் பெரியளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும் பாரபட்சமும், சமூகப் புறக்கணிப்பும் தொடர்கின்றன.woman sitting on brown bench

சர்வதேச அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றால் அவர்களுடைய வாழ்நாள் அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

முதியவர்கள் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, தன்னார்வப் பணிகளை செய்வதோடு, தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் மிகுதியான பலனைக் கொடுக்கிறது. எனவே, வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் இருப்பதற்கு, நீடித்த பராமரிப்பை அளிப்பது நம் ஒவ்வொருவரின் முக்கியக் கடமை.

முதியவர்களுக்கு வயது அதிகரிக்கும்போது நீண்டநாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால் தனியாக, சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடுகிறது. அவர்களுடைய நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரை சார்ந்திருக்கும் நிலை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகுதல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றால் அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிறது. இதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புற்று நோய் போன்ற நோய்களே வளர்ந்து வரும் நாடுகளின் நோய்ப்பளுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தேசிய திட்டத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பு, பல்வேறு நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான, விரிவான சுகாதாரப் பராமரிப்பை மாநில சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மூலமாக அளிப்பதே இந்த தேசியத் திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.முதியோருக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்

* முதுமை மூட்டழற்சி, எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு போன்ற எலும்பு சார்ந்த நோய்கள்.

* தைராய்டு பிரச்னைகள், நீரிழிவு, மாதவிடாய் போன்ற இயக்குநீர் பிரச்னைகள்.

* முதுமை மறதி, பார்க்கின்சன் நோய், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைவு, உடல் சமநிலை இழப்பு போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

* கண்புரை, கண்ணழுத்த நோய் போன்ற பார்வை சார்ந்த நோய்கள் மட்டுமன்றி நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் உண்டாகும் சிக்கல்கள்.

* மாரடைப்பு, தமனித்தடிப்பு, ரத்த அழுத்தம் சார்ந்த இதய நோய்கள்.

* சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற சிறுநீரக பிரச்னைகள். சில சமயங்களில் உடல் நோய்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் டயாலிசிஸ் போன்ற நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படும்.

* பற்களை இழத்தல், ஈறு நோய், சரியாகப் பொருத்தப்படாத பற்களால் ஏற்படும் பற்கள் சார்ந்த பிரச்னைகள்.

* களைப்பால் உண்டாகும் பலவீனம், எடை இழப்பு, மருந்துகளின் பக்க விளைவு, தூக்கக் கோளாறுகள், உடல் நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் முதுமையில் ஏற்படுகிறது.

எனவே, முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னையாகப் பார்க்காமல் சமூக சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஒருநாள் நமக்கும் அதேபோல் வயதாகும். இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

முதியோர் நலன் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள்

* முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும்.

* அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

* அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

*  முதியோருக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பையும், நல மேம்பாட்டையும் வழங்க வேண்டியது நமது கடமை.

60 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு…

* உங்கள் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.

* உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

* அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் மிதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அது உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். நடை, யோகா, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். 

* புகை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால் உடலை அதிக    மாக வருத்தக் கூடாது.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற ! மன உறுதியுடன் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

 * நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும்.

 


அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறு சுறுப்பானவர்களாக மாற்றும்.

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக, நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம்!

Friday, January 7, 2022

நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்

 

 
 
நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது. 
 
அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!!!
 
ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும்
 
ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.
 
ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.
 
முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.
 
அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.
 
நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.
 
இருவருக்கிடடையில் உள்ள தப்பான கருத்துகளை போக்கி கொள்ள, ஒருவரை ஓருவர் நன்றாக புரிந்து கொள்ள, ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். ஆரோக்கியமான விவாதம் நல்ல உறவின் அடையாளம் ஆகும்.
 
அன்புக்குரியவர் சோர்ந்து இருக்கும் போது, எப்போதும் உங்களது ஆதரவை தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அதனை தவிர்க்காமல் ஆதரவு அளிக்க வேண்டும். வாழ்வில் அவர்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
அனைத்து உறவுகளிலும் சந்தேகப்படுவதற்குரிய நிலை வரும். அதனை களைந்து, சந்தேகத்தை போக்கி, அன்பு கொண்டவர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அதற்கு ஏற்ற நேரம் மற்றும் இடைவெளி கொடுக்க வேண்டும்.
 
மாற்றம் ஒன்று தான் மாறாதது. ஆகவே உங்கள் துணையிடம் மாற்றங்கள் தென்பட்டால், அதை எதிர்க்காமல் அதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
 
கருத்து வேறுபாடுகள் எந்த ஒரு உறவிலும் ஏற்படக்கூடியது தான். மேலும் உறவின் வலிமையை சோதிக்க வந்த சோதனைகள் என்று கூட சொல்லலாம். அம்மாதிரியான கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்து கொள்வது மிக அவசியம்.
 
நல்ல உறவு என்பது புதிதாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்ப்பதில் அடங்கி இருக்கிறது. ஆகவே திறந்த மனதுடன் துணையை பற்றி புதிது புதிதாக தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
 

 

Saturday, November 6, 2021

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!

 

Hiatal Hernia Images, Stock Photos & Vectors | Shutterstockதண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

 
சிறுநீரக பாதிப்பு


தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.


Hernia Pictures of 6 Common Types 

ஆர்த்ரிடிஸ்


சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

 
நரம்புகள் டென்சன் ஆகும்


பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

சில குறிப்புகள்


உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்

Monday, August 23, 2021

கனிவுடன் பேசி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த காவலர் பழனியாண்டி!

 மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசும் எஸ்.ஐ.யை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். மதுரை மாநகரக் காவல் ஆணையர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

 29 ஆண்டுகள் அனுபவம்
 போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர் மதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி. 
 
 எல்லாரும் நல்லாருக்கணும் எல்லாரும் நல்லாருக்கணும் ''எல்லாரும் நல்லாருக்கணும்... குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும்... அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும்... தலைக்கவசம் கண்டிப்பா அணிஞ்சுக்கங்க... இதெல்லாம் ஒங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம்'' இந்த உத்வேகமான, கனிவான குரலுக்கு சொந்தக்காரர்தான் ழனியாண்டி. மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வருகிறார்
 
  29 ஆண்டுகள் அனுபவம் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்து 29 ஆண்டுகளாகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை நகர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வருகிறார் பழனியாண்டி.. 'குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்... ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும்... எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும்... எதுக்காகவும் கவலைப்படக்கூடாது..' என்று போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் உரத்துப் பேசுகிறார்.
 
இவரின் குரல்தான் ஆறுதல் இவரின் குரல்தான் ஆறுதல் பல்வேறு கவலைகளுடன் சாலைகளில் செல்பவர்கள் பழனியாண்டியின் குரலை கேட்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பழனியாண்டிக்கு ரசிகர்களாவே மாறி விட்டனர். 'என்னோட வீட்டுல ஒரு லட்சம் ரூபாய் மதிப்புல புத்தகங்கள் வச்சிருக்கேன்... வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனா வாசிப்பு... வாசிப்பு.. வாசிப்புதான்... அதுல நான் கத்துக்கற நல்ல விசயங்கள பொதுமக்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன்... இந்தப் பணிய ரொம்ப ரசிச்சு நான் செய்யுறேன்... 
 
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் சார் நான் வேலை செய்யுற இடத்துக்கே வந்து எனக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செஞ்சாரு... அத பெருமையா கருதுறேன்'' என்று மகிழ்வுடன் பேசுகிறார் பழனியாண்டி. 
 இவரின் குரல்தான் ஆறுதல்
 கனிவுடன் பேசி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இந்த காவலர் பழனியாண்டியின் புகழ் பட்டிதொட்டிஎங்கும் பரவியது. இதனை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போனில் தொடர்பு கொண்டு காவலர் பழனியாண்டியை வாழ்த்தினார். மேலும் மதுரை வரும்போது உங்களை அழைத்து பேசுவதாகவும் சைலேந்திரபாபு கூறினார். இதனை தொடர்ந்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.


Friday, April 16, 2021

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? 
 

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 
 
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
 
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 
 
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
 
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
 
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
 
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
 
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
 
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
 
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
 
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். 
 
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). 
 
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

 

Friday, April 2, 2021

வாக்குரிமை !

 

 
200 ரூபாய் பணத்திற்கும், 

ஒரே ஒரு பிரியாணி 
 
பொட்டலத்திற்கும் ,

வறண்ட நாக்கோடு, கொளுத்தும் 
 
கொடும் வெயிலில், உயிரையும் 
 
இழக்கத் தயாராகிப்போன ஒரு 
 
சமூகத்தில்,
 
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
 
அயோக்கியன் என்று தெரிந்த 
 
பின்னும்,
 
அவனுக்கு ஆரத்தி எடுத்து,
 
ஆரத்தித் தட்டில் விழப்போகும் 
 
சில்லரை பணத்திற்காக,
 
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
 
எத்தனை கொடுமைகள் 
 
இழைத்தாலும்
 
அதனையெல்லாம் மறந்துவிட்டு 
 
மீண்டும் மீண்டும் சின்னங்களை 
 
மட்டுமே பார்த்து
 
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எப்படி நடக்கும்?
 
🙊🙉🙈
 
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற 
 
சமூகத்தில் முன்னேற்றம் எந்த 
 
வழியில் வந்து சேரும்?
 
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா
 
 அந்தக் கட்சி ...
 
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் 
 
அந்தக் கட்சிக்குத்தான் 
 
ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன்
 
 வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர்
 
 குடிக்கிற மகன்கள் இருக்கிற 
 
தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி 
 
உருவாகும்?
🙊🙉🙈
 
கட்சி எது? சின்னம் எது? தலைவர் 
 
யார்? எது சரியான பாதை? என்ற
 
 அடிப்படை அரசியல் அறிவுகூட 
 
இல்லாத பட்டதாரிகள் மலிந்த 
 
இளைய தலைமுறையினால் 
 
மாற்றம் எப்படி வந்து சேரும்?
 
🙊🙉🙈
தேர்தல் என்றால் ஒரு நாள் 
 
விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு
 
 செல்லாமல் விடுமுறை 
 
கொண்டாடுகிற தேசத்தில் புதிய 
 
அரசு எப்படி சாத்தியம்?
 
🙊🙉🙈
எமது மக்கள் எப்போதும் தற்காலிக
 
 சுகங்களிலே நிறைவடைந்து 
 
விடுபவர்களாய் இருக்கிற 
 
வரையிலும்
 
நிம்மதியான வாழ்க்கையை வாழவே
 
 போவதில்லை...
 
People deserves the Government..... 
 
மக்களின் தரத்திற்குத் தக்கபடிதான் 
 
அரசு அமையும்..
 
*முதலில் மாற வேண்டியது 
 
அரசியல்வாதி அல்ல.. "நாம்தான்"....*

 

Sunday, March 28, 2021

நடைப்பயிற்சியின் பயன்கள்


👬💞 1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.Staff in hand, the Mahatma walked every day of his life... | Hindustan Times

 

👬💞 2) பிராணசக்தி அதிகரிப்பதால் இரத்தம் சுத்தம் பெறுகிறது. சுழற்சி வேகம் அதிகரிக்கிறது & அளவும் அதிகரிக்கிறது.

 

👬💞 3) தேவையற்ற இரத்தக் கழிவுகள் வெளியேறுகிறது. வியர்வை மூலம் கொழுப்புக்கழிவுகள், உப்புகள் வெளியேற்றப்படுகிறது. உடல் துர்நாற்றம் குறைகிறது.

 

👬💞 4) நுரையீரல், அதில் உள்ள சிற்றரை திசுக்கள், நல்ல நலம் பெறுகின்றன. சுவாசம் சீர்படுவதுடன் மேம்படுகிறது.

 

👬💞 5) இதயத்தின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இதயத் திசுக்கள் வலிமை பெறுகின்றன.

 

👬💞 6) பசியின்வேகம், பசித்தன்மை, தாகம் ஜீரணம் இவைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. தன் மயமாதல் சிறப்படைந்து எலும்பு, திசுக்களில் சேரும் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

 

👬💞 7) எலும்புகள், தசைகளில் திசைவுகள் குறைந்து புதிய வலுவும், வனப்பும் பெறுகின்றன.

 

👬💞 8) அதிக உடல் எடை, பருமன், சதைக் கோளங்கள் இலகுவாக, இயல்பாக, ஆபத்தில்லாமல், இணக்கமாக, எளிமையாக குறைய நடைப் பயிற்சியில் மாத்திரமே சாத்தியம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

 

👬💞 9) அதிக தேவையில்லாத கொழுப்பை குறிப்பாக எல்.டி.எல் லிஞிலி கொலஸ்ராலை குறைத்து சீர்படுத்தி ஹச்.டி.எல். பிஞிலிஐ அதிகரித்து இதயத் திசுக்களுக்கு ஓய்வுதர துணைபுரிகிறது. நமது இரத்தத்தில் எல்.டி.எல் அளவு 100 மி.கி. மேல் இருக்கக் கூடாது.

 

👬💞 10) நமது முதுமை, திசு அழிவு குறைந்து புதிய செல்கள் உருவாகி இளமை மேம்படுகிறது.

 

👬💞 11) தொப்பை, தொங்கு சதை, பிதுங்கு சதைகள், இடுப்புச் சதைகள் மெதுவாக குறைய ஆரம்பிக்னிற்ன. உடல் கட்டழகு அடைகிறது.

 

👬💞 12) நீரழிவு அன்பர்களுக்கு நடைபயிற்சிதான் ஒப்பற்ற மருந்து எனலாம். எந்த அளவு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளதோ அதற்கேற்ற தூரம் தினமும் நடந்திட வேண்டும்.


👬💞 13) பொதுவாக அனைத்துப் பிணிகளும் நடைப்பயிற்சியால் மட்டுப்படுவதுடன் கட்டுப்படுகிறது. மருந்து மாத்திரைகளின் தேவைகளை உடனடியாகக் குறைக்கிறது.

 

👬💞 14) நமது மெட்டாபாலிசம் அளவு சிறப்புற்று உடலில் வெப்பசக்தி (கலோரி) உற்பத்தி, பயன்பாடு மிகவும் அதிசயதக்க அளவில் கூடுகிறது.

 

👬💞 15) கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்வலி, பாதவலி குறைந்து நரம்பு முறுக்கு, இரத்த அழுத்த தடைநீங்கி புதுசக்தியைப் பெறுகிறது.


👬💞 16) தினமும் காலையில் நீர் குடித்து பின் சிறிது தூரம் நடந்தாலே எப்படிப்பட்ட கடின மலச்சிக்கலும் விலிகிவிடும். மூலநோயும் குறைய ஆரம்பிகிறது.

 

👬💞 17) சுவாச அடைப்பை சரிசெய்கிறது. சைனஸ், ஒற்றை தலைவலி, சரியாகி நுரையீரலில் காற்று சென்று வரும் அளவை பல மடங்கு பெருக்குகிறது.

 

👬💞 18) நடக்கும்போது பசியின்மை விலகுகிறது. உணவின் ருசி மிகுந்திடும்.

 

👬💞 19) இரத்த அழுத்தம், மாரடைப்பு அன்பர்களும் சுகம் அடைகின்றனர்.

 

👬💞 20) மனச்சுமை, மனஅழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றில் இருந்து இலகுவாக, இயல்பாக, இனியமைகா நிவாரணம் கிட்டுகிறது.

 

👬💞 21) மனதில் ஒரு இணக்கம், இயல்புநிலை, ஆனந்தம், உற்சாகம், உத்வேகம் பீறிட்டு வரும் அற்புத சுகத்தை அறிந்திட, அனுபவிக்க நீங்களும் நடங்கள் & பிறருடன் சேர்ந்து நடங்கள். தினமும் நடங்கள். விரும்பி நடங்கள். மகிழ்ச்சியாக நடங்கள்.

Thursday, March 18, 2021

Electric bike Atum 1.0 - Rs.50,000/- only மிக குறைவான விலையில் மின்சார பைக்!

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை!
The electric bike comes with a 2-year battery warranty and is claimed to be developed using indigenous parts.
ஆட்டம் 1.0 - 25 கிமீ வேகத்தை வழங்குகிறது.

ஐதராபாத் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் (Atumobile Pvt Ltd) என்னும் நிறுவனம், புதிய லோ-ஸ்பீடு மின்சார பைக் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக்கிற்கு ஆட்டம் 1.0 (Atum 1.0) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.

அதாவது இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆட்டம் 1.0 மின்சார பைக்கை பதிவு செய்ய தேவையில்லை. அத்துடன் இதனை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமமும் தேவைப்படாது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

எலக்ட்ரிக் பைக் 2 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது, மேலும் இது உள்நாட்டு பகுதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மின்சார பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். 2 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் இந்த மின்சார பைக் வருகிறது. அத்துடன் பல்வேறு வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்!
 
 அதே சமயம் பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகள் என்றால், 100 கிலோ மீட்டர்கள் ஓட்டுவதற்கு சுமார் 80-100 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். இந்த மின்சார பைக்கின் விலை வெறும் 50,000 ரூபாய் மட்டும்தான்.
100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க

ஆட்டம் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆட்டோ மொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வம்சி கடாம் கூறுகையில், “3 வருட கடின உழைப்பு மற்றும் பயணத்திற்கான நிலையான வழியை அறிமுகப்படுத்தும் பார்வைக்குப் பிறகு, ஆட்டம் 1.0 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தேசமாக மாற்றுவதற்கான எங்கள் பெரிய உறுதிப்பாட்டில் ஆட்டம் 1.0 ஒரு முக்கியமான மைல்கல் என்று நாங்கள் நம்புகிறோம். ”

ஆட்டம் 1.0 6 கிலோ எடை கொண்ட சிறிய பேட்டரி பேக் உடன் வருகிறது. 

Wednesday, March 17, 2021

மின்சார வாகனங்களின் தேவை!

மனிதனின் அன்றாட செயல்பாடுகள் சுற்றுசூழலை பாதிப்படைச் செய்து கொண்டு இருக்கின்றன. சுற்றுசூழல் சீர்கேட்டில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

பசுமை இல்ல வாயுக்கள் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் வாகனங்கள் இவ்வாயுக்களை அதிகளவு வெளியிடுகின்றன.

எனவே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மின்சார வாகனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன. அவை சுற்றுசூழலில் எந்த வகையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் நிறை குறைகள் பற்றிப் பார்க்கலாம்.

 
மின்சார கார்

மின்சார கார் என்பது மின்சாரத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியது. இதில் மின்சாரத்தை சேமிக்க பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாட்டரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மின்சாரத்தை மின்மோட்டர்கள் எடுத்துக் கொண்டு காரினை செயல்பட வைக்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும் ரீஜார்ஜ் செய்யக் கூடியவை.
 

மின்சார வாகனங்களின் குறைகள்

மின்சார வாகனங்களின் வேகம் மற்றும் செல்லும் தூரம் ஆகியவற்றின் அளவானது குறைவாக உள்ளது.

இவை ஒலியில்லாமல் செல்வதால் சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டினால் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ள இடங்களின் இவ்வாகனங்களின் பயன்பாடு கேள்விக் குறியாகிறது.

 
மின்சார காரினால் சுற்றுசூழலில் ஏற்படும் தாக்கம்

மின்சார கார்கள் இயங்கத் தேவையான மின்சாரமானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று ஆகியவற்றிலிருந்து பெறப்படும்போது சுற்றுசூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.

சூரிய சக்தி மூலம் மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

 நிலக்கரியின் மூலம் மின்சாரம் பெறப்பட்டால், அவ்விடங்களில் மின்சார கார்கள் மறைமுக சுற்றுசூழல் பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்துகின்றன.

அதாவது அதிக மின்சார தேவையின் காரணமாக அனல்மின் நிலையங்களிலிருந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

இவ்விடங்களில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு இயங்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைவிட மின்சார கார் மறைமுகமாக அதிகளவு காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் கழிவு நீக்கம் சுற்றுசூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் இக்கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் காரீயம், நிக்கல், காப்பர் மற்றும் லித்தியம் போன்ற கடின உலோகங்கள் உள்ளன. இவற்றின் கழிவுநீக்கம் சுற்றுசூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மின்சார வாகனங்களில் பாட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் பாட்டரிகளின் மூலப்பொருட்கள் மிகக்குறைந்த அளவே மண்ணில் இயற்கையாக கிடைக்கின்றன.

இம்மூலப்பொருட்களைப் பெறுவதற்காக சுரங்கங்கள் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. மேலும் மூலப்பொருட்களை தனியே பிரித்தெடுக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுசூழல் பாதிப்படைகிறது.

நவீன அறிவியலின் முன்னேற்றத்தால் மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் சூரியன், காற்று மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகளவு கிடைக்கப்படும்போது மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.

மின்சார வாகனங்களின் பாட்டரிகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முறையாக கழிவுநீக்கம் செய்யப்படும் போதும், மறுசுழற்சி செய்யப்படும்போதும் அது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நவீன அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாடு வருங்கால சந்ததியருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
மின்சார கார் ரீசார்ஜ் செய்தல்

முதல் நடைமுறை மின்சார கார் 1880-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மின்சார கார் பிரபலமடைந்தது.


சுற்றுச்சூழலில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் மீண்டும் பிரபலமடையத் துவங்கிவிட்டன.

மின்சார வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு மாசுக்கள் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம்.

பாட்டரிகள் ஆரம்பத்தில் அதிக விலையைக் கொண்டிருந்தன. தற்போதைய நவீன அறிவியலின் காரணமாக மின்சார வாகனங்களின் பாட்டரிகளின் விலை குறையத் துவங்கியுள்ளது.

இக்காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் பிரபலமடையத் துவங்கியுள்ளன.

 
மின்சார வாகனங்களின் நிறைகள்

மின்சார வாகனங்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே காற்று மாசுபாடு குறைக்கப்படுகிறது.

பெட்ரோலிய எரிபொருட்கள் இவ்வகை வாகனங்களுக்கு தேவையில்லை என்பதால் வற்றும் வளமான எண்ணெய் வளம் குறிப்பிட்ட அளவு பாதுக்கப்படுகிறது.

இவை சத்தம் எழுப்புவது இல்லை. எனவே சுற்றுசூழலில் ஒலி மாசுபாடு குறைக்கப்படுகிறது.

blue and black bmw m 3 coupeமின்சார காரில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்பட்டால் காரில் உள்ள காற்று பைகள் விரிவடைந்து மின்மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வது தடை செய்யப்படுகிறது. இதனால் கோர விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...