Total Pageviews

Sunday, May 8, 2022

ஆத்திச்சூடி!

 Amazon.com: Tamil Pulavar Avvaiyar: History and Writings (Tamil Edition)  eBook : Prema, Poovai Amudan, ARU, Ramanathan: Kindle Store

உயிர் வருக்கம்ஆத்திச்சூடி

1.அறம் செய விரும்பு  :

  அறம்  செய்வதற்கு விரும்பு / ஆசைப்படு.

·      தருமம் செய்ய நீ விரும்புவாயாக

·      நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம் :

ஆறுவது- தவிர்க்க வேண்டியது, சினம்கோபம்.

·      கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

·     கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல் :

இயல்வதுநம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு

கரவேல் –  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே     ( “கரவல்கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

·   உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஈவதுதருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை

விலக்கேல்நீ தடுக்காதே

·   ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

உடையதுஉனக்கு உள்ள பொருளை

விளம்பேல்நீ பிறர் அறியும்படி  சொல்லாதே

·    உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

·    உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.

·    உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

ஊக்கமதுசெய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை

கைவிடேல்நீ தளர்ந்து போக விடாதே.

·  எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

எண்கணித நூலையும்

எழுத்துஅற நூல்களையும், இலக்கண நூலையும்

·   எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

ஏற்பதுஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சிபழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

·   இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

ஐயமிட்டுஉன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து

உண்பிறகே நீ உண்ண வேண்டும்.

·         யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவுஉலக போக்கிற்கு எற்றவாறு;

ஒழுகுநட

·         உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

·         நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

·         ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்

·         அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்ஆத்திச்சூடி

14. கண்டொன்று சொல்லேல்.

·         கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல் வளை.

·   என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

  • என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16. சனி நீராடு.

  • சனி(குளிர்ந்த) நீராடு.

17. ஞயம்பட உரை.

·         கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.

·         உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.

·         ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்.

·         உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.

·         ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்.

·         எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்.

·         பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)

·         நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24. இயல்பு அலாதன செய்யேல்.

·         நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்.

·         பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26. இலவம் பஞ்சில் துயில்.

·         இலவம் பஞ்சுஎனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27. வஞ்சகம் பேசேல்.

·         கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28. அழகு அலாதன செய்யேல்.

·         இழிவான செயல்களை செய்யாதே

29. இளமையில் கல்.

·         இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30. அறனை மறவேல்.

·         கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31. அனந்தல் ஆடேல்.

·         மிகுதியாக தூங்காதே

ககர வருக்கம்ஆத்திச்சூடி

32. கடிவது மற

·         யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33. காப்பது விரதம்

·         தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)

·         பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமை பட வாழ்

·         உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று

·         இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

·         நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

·         நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி

·         பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

·         கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

·         உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

·         பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி

·         குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43.கௌவை அகற்று

·         வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்ஆத்திச்சூடி

44. சக்கர நெறி நில்

·         தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45. சான்றோ ரினத்திரு

·         அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

·         பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

·         புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

·         கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

·         ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

·         செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்


51. சேரிடமறிந்து சேர்

·         நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்

·         பெரியோர்சீஎன வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்

·         பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

·         முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்ஆத்திச்சூடி

55. தக்கோ னெனத்திரி

·         பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

·         யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

·         நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று

·         பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற் கிடங்கொடேல்

·         முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்

·         ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்

·         கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்

·         உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்

·         மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

·         பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்

·         ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்ஆத்திச்சூடி

66. நன்மை கடைப்பிடி

·         நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடொப் பனசெய்

·         நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. நிலையிற் பிரியேல்

·         உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்

·         வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

·         நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல்பல கல்

·         அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72. நெற்பயிர் விளை

·         நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுகு

·         ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

·         பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய வுரையேல்

·         பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்

·   மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

·         பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

·         பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

·         குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்

·         பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

·   உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்!

82. பூமி திருத்தியுண்

·   விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.()விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக்கொள்

·  அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை யகற்று

·    அறியாமையைப் போக்கு

85. பையலோ டிணங்கேல்

·  அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்

·   பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

·         யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்ஆத்திச்சூடி

88. மனந்தடு மாறேல்

·         எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக் கிடங்கொடேல்

·   பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

·   சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

·         மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

·         எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோ டிணங்கேல்

·         மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லினல்லாள் தோள்சேர்

·   பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்

·   ல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட !

96. மைவிழியார் மனையகல்

·  விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவ தறமொழி

·  சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98.மோகத்தை முனி

·   நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்- ஆத்திச்சூடி

99. வல்லமை பேசேல்

·         உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாதுமுற் கூறேல்

·         பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

·         கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெறநில்

·   க்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

·   ர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடிவாழ்

·   ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்!


105. வெட்டெனப் பேசேல்

·     யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

106. வேண்டி வினைசெயேல்

·  வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறை துயிலெழு

·   நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

·   பகைவர்களை நம்பாதே !

109. ஓரஞ் சொல்லேல்

·  எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

Tuesday, May 3, 2022

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? வாழைப்பூ கசாயத்தை அடிக்கடி குடிங்க...ஓடிடும்!

 வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான். 

 

இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி.இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

டைப் 2 நீரிழிவு 

 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது

 

 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.  

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி? 

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும். 

வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்!

  

Thanks to Manithan.com

 

Tuesday, April 26, 2022

அருந்தமிழ் மருத்துவம் 500 !

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, எக்காலத்திலும் உதவும் !

இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது!

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை !


முடிவளர நீலிநெல்லி!


ஈளைக்கு முசுமுசுக்கை!


எலும்பிற்கு இளம்பிரண்டை!

பல்லுக்கு வேலாலன்!


பசிக்கு  சீரகமிஞ்சி!


கல்லீரலுக்கு  கரிசாலை!


காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!


காதுக்கு சுக்குமருள்!


தொண்டைக்கு அக்கரகாரம்!


தோலுக்கு அருகுவேம்பு!

நரம்பிற்கு அமுக்குரான்!


நாசிக்கு நொச்சிதும்பை!


உரத்திற்கு  முருங்கைப்பூ!


ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தன நெய் !


  மூட்டுக்கு முடக்கறுத்தான் !


அகத்திற்கு  மருதம்பட்டை!

 அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு  எள்ளெண்ணை!


  உணர்ச்சிக்கு  நிலப்பனை!


குடலுக்கு ஆமணக்கு!


கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!

 

களைப்பிற்கு சீந்திலுப்பு!


குருதிக்கு அத்திப்பழம்!


  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!


 வெள்ளைக்கு கற்றாழை!


சிந்தைக்கு  தாமரைப்பூ!


  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

 கக்குவானுக்கு வசம்புத்தூள்!


  காய்ச்சலுக்கு  நிலவேம்பு  !        

                
விக்கலுக்கு மயிலிறகு!


வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!


  நீரிழிவிற்கு ஆவாரைக்குடி
நீர்!


வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  !


   வெட்டைக்கு சிறுசெருப்படையே !

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை !


  சீழ்காதுக்கு நிலவேம்பு!


நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
   

நஞ்செதிர்க்க அவரிஎட்டி !

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
    

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
 

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
  

பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்!


  கழிச்சலுக்கு தயிர்சுண்டை !
 

அக்கிக்கு வெண்பூசனை!
 

 ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
   

விதைநோயா கழற்சிவிதை !


புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
 

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!


  கரும்படை வெட்பாலைசிரட்டை!
 

கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
  

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
   

உளம்மயக்க கஞ்சாகள்ளு!
 

உடல்இளைக்க தேன்கொள்ளு!
 

 உடல் மறக்க இலங்கநெய்யே!


அருந்தமிழர் வாழ்வியலில்


  அன்றாடம்சிறுபிணிக்கு


அருமருந்தாய் வழங்கியதை


அறிந்தவரை உரைத்தேனே!!


#தமிழன்

Saturday, April 23, 2022

சொத்தை ஏன் பிரித்துக் கொடுக்க வேண்டும்!

குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?

ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த சொத்துகள், அவர் சரியாக உயில் (Will) எழுதிச் செல்லவில்லை என்றால், அவர் இந்த உலகில் இல்லாத போது குடும்ப உறுப்பினர்கள் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தலாம். 

 


அவர்களுக்குள் சண்டை, சச்சரவு, பகை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரு விரிவான உயில் எழுதுவது அவசியம். இதன் மூலம் உடன்பிறந்தவர்கள் இடையே உறவு சீராகத் தொடர்வதை உறுதி செய்வது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?

1. நியாயமாகப் பிரித்துக் கொடுக்கவும்

நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சொத்தை சமமாகப் பிரித்துக் கொடுப்பது என்பதல்ல. உண்மையில் நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு என்ன திறமை, தகுதி, வசதி வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன என்பதற்கு ஏற்ப பிரித்துக் கொடுப்பதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரித்துக் கொடுப்பது குடும்ப உறுப்பினர்கள் இடையே மனக் கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, நியாயத்தை விளக்குவது பெற்றோரின் பொறுப்பாகும்.

ஏன் இப்படிப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை உயிலில் விரிவாக எழுதி வைப்பது நல்லது. முடிந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் விளக்கிச் சொல்லி விஷயத்தைப் புரிய வைத்து அதன்படிகூட செல்வம் மற்றும் சொத்துகளைப் பிரித்து உயில் எழுதி வைக்கலாம்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு இரு மகன்கள் இருந்தால் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கேட்டு தெளிவுபடுத்தி, அதன் அடிப்படையில் உயில் எழுதி வைப்பது நல்லது.

இதனால், பிற்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவு ஏற்படுவது தடுக்கப்படும். இது குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொழில் மற்றும் வணிகத்துக்கும் பொருந்தும்.

2. அனைத்து சொத்துகளையும் பட்டியலிடுங்கள்

உயிலில் அனைத்து சொத்துகளையும் பட்டியலிடாமல் இருப்பது மற்றும் ஏற்கெனவே எழுதிக் கொடுத்த சொத்து விவரங்களை உயிலில் எழுதாமல் விடுவது குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை, சச்சரவு உருவாகக் காரணமாக இருக்கக்கூடும். உதாரணத்துக்கு, கல்யாணமான மூத்த மகனுக்கு சொந்த வீடு கட்ட, 3 சென்ட் நிலம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விவரம் உயிலில் இடம் பெற்றிருக்காது. இதை மனதில் வைத்து அவருக்கு சொத்தில் மனை எதுவும் கொடுக்காமல் உயில் மூலம் எழுதி வைக்கப்பட்டிருக்லாம். இந்த நிலையில் அந்த மூத்த மகன் எனக்கு உயிலில் மனை இடம் எதுவும் எழுதி வைக்கவில்லை. எனக்கும் மனை இடத்தில் பங்கு வேண்டும் எனப் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை செய்யக் கூடும். எனவே, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சொத்துகளையும் உயிலில் குறிப்பிடுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் இடையே உங்களின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

3. உயிலை அமல்படுத்துபவரை நியமியுங்கள்

உயில் சரியாக அமல்படுத்தப்பட, அதற்கென சரியான அமல்படுத்துபவரை நியமிப்பது கட்டாயமாகும். இந்த உயில் அமல்படுத்துபவர் (Will Executioner) குடும்ப நண்பர், நம்பகமான நிதி ஆலோசகர், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர் என யாராக வேண்டுமானலும் இருக்கலாம்.

இவர்களில் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடையே நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருப்பது அவசியம். மேலும், அவர் அனைத்து குடும்ப உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது அவசியம்.

4. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும்

உயில் என்பது உங்களின் சொத்துகளின் சட்டப்படியான பிரகடனம் (legal declaration) ஆகும். உயில் குறித்து ஏதாவது பிரச்னை வந்தால், பதிவு செய்யப்பட்ட உயில் என்றால், உயிலில் உள்ளபடி அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒரு உயில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபப்ட வேண்டும். இந்த உயிலில் இரண்டு சாட்சிகள் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், உயிலை எழுதியவர் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் இதை எழுதினார் என மருத்துவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.

இந்த வழிகளை பெற்றோர்கள் சரியாகப் பின்பற்றும் பட்சத்தில் சொத்து விஷயத்திற்காக குடும்பத்தில் தகராறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்!

முடி கொட்டுவது நிற்க! முடி வளர்வதற்கான வழிமுறைகள் !

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும்.

 

முடிநன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.


சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

 

தலையில் பேன் வருவதற்கான காரணமும், தீர்வும்...

பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.

பேன்பேன் தொல்லையிலிருந்து மீள வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும்.

துளசி இலை

துளசி இலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் இறந்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

100 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் வேப்பம்பூவை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

குப்பை மேனி கீரை

பேன் தொல்லைப் போக்குவதில் குப்பை மேனி கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை எடுத்து சாறு எடுத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.

வெங்காயச் சாறு

தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்துவிடும்.

கருவேப்பிலை

தேங்காய் எண்ணையை காய்ச்சி, அதில் நிழலில் உலர்த்தி காய்ந்த கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வந்தால்பேன் வரவே வராது.

வசம்பு

வசம்பை அரைத்து தலையில் தடவி, பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்!

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...