Total Pageviews

Monday, July 11, 2022

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

 உணவின் சுவையை அதிகரிக்க நாம் சேர்க்கும் ஓர் பொருள் தான் உப்பு. ஆனால் நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்து உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.

 உடலில் உள்ள திரவ அளவை கட்டுப்படுத்த, சிறிய அளவில் உப்பை சேர்த்தால் போதும். அளவுக்கு அதிகமாக உப்பை சேர்த்தால், இரத்த நாளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதனால் தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு வந்தால், அதனால் இதய நோய், உடல் பருமன், அதிகப்படியான டென்சன், பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

 எனவே தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களை, உணவில் உப்பை சேர்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர்.

இங்கு உடலில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தாலேயே உடலில் உள்ள உப்பை வெளியேற்றிவிடலாம்.

பீன்ஸ் !

பீன்ஸ் புரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்து வந்தால், உடலில் இருந்து உப்புச்சத்தின் அளவு குறையும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களின் உணவில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள உணவுகளைச் சேர்ப்பது நல்லது.

  தயிர்! தயிர்!

  தயிரை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும், உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றலாம். ஏனெனில் தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

 மீன்! மீன்!

 


மீனை உட்கொண்டு வந்தால், அதில் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பும் குறையும். எனவே சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் உட்கொள்ளுங்கள்.

 வேக வைத்த உருளைக்கிழங்கு

  வேக வைத்த உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோலில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை வேக வைத்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு குறையும்.

  உலர் திராட்சை

 உலர் திராட்சை உலர் திராட்சையிலும் பொட்டாசியம் வளமாக உள்ளதால், இதனை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் உப்பு அதிகம் சேர்வதைத் தடுக்கலாம். உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட்டிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் ஒரு உலர்ந்த ஆப்ரிக்காட்டை உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

 வாழைப்பழம்

 


வாழைப்பழம் வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்துள்ள உணவுகள் ஓட்ஸ், நார்ச்சத்துள்ள காய்கறிகள், கோதுமை பிரட் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், அதிகப்படியான உப்பை உடலில் இருந்து வெளியேற்றலாம்.

 மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலின் மெட்டபாலிச அளவை அதிகமாக பராமரிக்கும். உப்பை சேர்க்க வேண்டாம் உப்பை சேர்க்க வேண்டாம் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தம் வரக்கூடாதெனில் உப்பை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.

 

Sunday, July 10, 2022

சர்க்கரை வியாதிக்கு தேன் காய் !!! சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், தேன் காய் !

சர்க்கரை வியாதிக்கு தேன் காய் !!!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 'தேன்காய்': சேலத்தில் கிலோ ரூ.1,500க்கு விற்பனை'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். காய் என்று சொல்லப்படும் நிலையில், அதன் முழு தோற்றம், காய்ந்த நெத்தமாக இருக்கிறது. இதன் மேல் பகுதியை பிரித்து விட்டு, உள்ளே இருக்கும் சிறிய விதையை, 48 நாள், வெறும் வயிற்றில் விழுங்கினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது என்பதால், இந்த காய்க்கு,மவுசு அதிகரித்துள்ளது. அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.100 .
நாள்பட்ட காயங்கள் ஆற... தேன் காயின் இலைகளை அரைத்து பற்று போட - சீக்கிரம் குணமாகும்.

தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்) மதுரை - 625301 . செல்: 9965805751 , 9787817573 .

(நாக்கில் படாமல் விதையை விழுங்க வேண்டும். பட்டால் பயங்கர கசப்பாக இருக்கும்)


https://www.youtube.com/watch?v=PVRMOsAqEN0

Thursday, June 16, 2022

பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் !

எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்படவைத்தது"

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து

என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார் வழக்கு தொடுத்தவரும் அவரே!



ஐயா எங்களுக்கு ஒரே மகள், என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது, நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலை செய்து அதில் வரும் சம்பாத்யத்தில்தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்,வருகிறேன்.


மகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன் பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்கவைத்தேன் வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால் அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன், அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்க துவங்கிவிட்டாள் எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும் இனி அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்த போது அவள் காணாமல் போய்விட்டாள், அவளை அவளது விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தை கூறி கடத்திப் போயிருப்பதாக சந்தேகப்படுகிறேன், ஆகவே எப்படியாவது என் மகளை கண்டுபிடித்து சேர்த்துவைக்க வேண்டும் என்ற கேட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் உத்திரவுப்படி அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம் பெண், ‛யாரும் என்னைக் கடத்தவில்லை! நான் மேஜரான பெண், எனக்கு பிடித்தவருடன் வாழ்வதற்காக நானேதான் விரும்பிச் சென்றேன்' என்றார்.நல்ல ஆங்கிலத்தில் பேசிய அந்த பெண்ணிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.


சரிம்மா..அதுக்காக உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டியேம்மா என்ன நியாயம் என்று கேட்டேன்


அந்த இளம் பெண்ணிடம் இருந்து பதில் ஏதுமில்லை


இதற்கு மேல் சட்டத்திலும் இடமில்லை


ஆனால் என் மனம் கேட்கவில்லை ஏதாவது ஒரு ‛ட்விஸ்ட்' நடக்கும் என்று நினைத்தேன்


ஏனேனில் இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல, நிஜமான நீதிமன்றம் இங்கே உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு, எல்லாமே எந்திரத்தனமாக நடந்துவிடாது


‛சரிம்மா.. உன்னை ஒண்ணும் சொல்லலை, உன் கூட உன் அம்மா கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்கிறார், ஒரு மணி நேரம் பேசிவிட்டு வாருங்கள்' என்றேன்


இருவரும் பேசும் போது அந்த தாயின் பாசம் மகளின் அடிமனதை நிச்சயம் தொடும், பழசை நினைத்துப் பார்ப்பாள், கொஞ்சமாவது பாசத்தோடு ஏதாவது செய்ய முற்படுவாள் என்பது என் எண்ணம்.ஆனால் அவர்கள் பேசி முடித்துவந்த போது நான் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை


‛ஐயா உங்களுக்கு எல்லாம் நிறைய சிரமம் கொடுத்துட்டேன், என் மகள், அவ விருப்பப்படி விரும்பினவங்ககூடயே இருக்கட்டும், அவ சந்தோஷமா இருந்தா சரி' என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு,‛ ஒரே ஒரு வேண்டுகோள்தான்யா, இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளை பார்க்கிறதுக்காக வந்துருக்காரு, அந்த மனுஷன்ட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.


‛எங்கம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்


அந்தம்மா கை காட்டிய இடத்தில் சுவரோடு சுவராக ஒருவர் சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார், அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்திவைத்துள்ளனர் கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.


அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்..அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.


‛சரிங்கய்யா நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது ‛சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும், பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா, கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா, அப்புறம் ஊருக்கு போய்ட்டா வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும் பிழைச்சுக்கவும் ஐயா' என்றார்.


நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது


‛இந்தாம்மா நீ பிச்சை எடுக்க வேணாம், என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க 'என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்


நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது
அதை அந்த அம்மாளிடம் கொடுத்து உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல ஊருக்கு போவதற்கான சிறு தீர்வுதான் என்று சொல்லிக்கொடுத்தேன்பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது


பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள் என்ற வேண்டுகோளுடன் முன்னாள் நீதிபதியான சா.நாகமுத்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.


சென்னை வாணிமகாலில் நடந்த மறைந்த அமிழ்தன் எழுதிய முப்பால் உரை என்ற நுால் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு உரை நிகழ்த்தப்பட்டது.

(படித்ததில் பகரிந்தது)

Tuesday, June 7, 2022

வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க !

நாட்டில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 பாஸ்வேர்ட்டில் எச்சரிக்கை:

நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மிக எளிதாக வைத்திருந்தால் ஹேக்கர்கள் எளிதில் உங்கள் ஆன்லைன் பேங்கிங்கை அணுகலாம். மிகவும் வீக்கான பாஸ்வேர்டுகளுக்கு உதாரணமாக, password, qwerty, 123456 போன்றவற்றைக் கூறலாம். இதனைத் தவிர உங்களின் மொபைல் எண் மற்றும் பிறந்த நாள் உள்ளிட்டவையும் உள்ளது. எனவே உங்களின் பாஸ்வேர்ட் தனித்துவமான மற்றும் யாரும் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் இருப்பது நல்லது. யாரிடமும் பாஸ்வேர்டை ஷேர் செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட விவரங்களை பகிர கூடாது:

உங்களின் தனிப்பட்ட விவரங்கள், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்பின் தெரியாதவர்களிடம் பகிரக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் பணத்திற்கு ஆபத்து. பிறந்த தேதி, திருமண தேதி, குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் கையெழுத்து போன்ற உங்களின் விவரங்களைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் நெட் பேங்கிங் லாகின் செய்து அக்கவுண்டில் உள்ள பணத்தை திருட நேரிடும். அதனைப் போலவே மொபைலுக்கு வரும் ஓடிபி யாரிடமும் பகிர கூடாது. எந்த விவரங்களையும் தரவேண்டாம்.

வங்கியின் பாதுகாப்பு ஆலோசனைகள்:

வழக்கமாக உங்கள் வங்கிகள் இ-மெயில் மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலம் தகுந்த பாதுகாப்பு ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிவருகின்றன. மோசடிகளை தவிர்த்து வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கப்படுகிறது. எனவே அதனை கவனமாக பின்பற்றுங்கள்.

பேங்க் ஸ்டேட்மெண்ட், மெசேஜ்களை செக் செய்தல்:

வங்கிகள் பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலமாக தகவல்களை அனுப்பி வைக்கின்றனர். அதனால் உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் மெசேஜ்களை தவறாமல் செக் செய்வது நல்லது.

பாதுகாப்பான நெட்வொர்க்கில் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துதல்:

ஹோட்டல்கள்,உணவகங்கள் போன்ற பொது நெட்வொர்க்கில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் அவசரத்திற்கு பொது நெட்வொர்க்கை பயன்படுத்தி பேங்க் அக்கவுண்ட் நீங்கள் அணுகினால், பாதுகாப்பான நெட்வொர்க்கை பெற்றவுடன் உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடுவது நல்லது.

செக்புக் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துதல்:

உங்களது செக் புக்கை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் உங்கள் கார்டு பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் pos மெஷினை பயன்படுத்தும் போது ஏதேனும் அசாதாரண இணைப்புகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வங்கிப் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...