Total Pageviews

Saturday, April 30, 2016

நண்பன் யார்?




உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.
 

கேள்வி -- பதில் 

பாணியில் இவர் அருளிய


" பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா " 


என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் 

பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

பற்றுதல்.

✒கள்வர்கள் யார்?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

✒எதிரி யார்?

சோம்பல்.

✒எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு.

✒குருடனை விட குருடன் யார்?

ஆசைகள்
உள்ளவன்.

✒சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

✒மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

✒எது துக்கம்?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

✒உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

✒தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

✒சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

✒எது சுகமானது?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

✒எது இன்பம் தரும்?

நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

✒எது மரணத்துக்கு இணையானது?

அசட்டுத்தனம்.

✒விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?

காலமறிந்து செய்யும் உதவி.

✒இறக்கும் வரை உறுத்துவது எது?

ரகசியமாகச் செய்த பாவம்.

✒எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?

துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள். நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

✒சாது என்பவர் யார்?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

✒உலகத்தை யாரால் வெல்ல முடியும்?

✨சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

✒யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

✨எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

✒செவிடன் யார்?

✨ நல்லதைக்
கேட்காதவன்.

✒ஊமை யார்?

✨சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான 


சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

✒நண்பன் யார்?

✨பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

✒யாரை விபத்துகள் அணுகாது?

✨ மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், 


அடக்கமுள்ளவனையும்.

Monday, April 25, 2016

கோடை வெப்பத்தை சமாளிக்க மேற்க்கொள்ள வேண்டியவை !



கொட்டித்தீர்த்த மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!

கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.

பருத்தி ஆடை: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடை முடியும் வரை பருத்தித் துணிகளை இறுக்கமின்றி தளர்வாக உடுத்த வேண்டும். மொத்தமான, செயற்கையான ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

தலைப்பாதுகாப்பு: தொப்பி அல்லது குடையால் கட்டாயம் தலையில் வெய்யில் தாக்காமல் காக்க வேண்டும். குழந்தைகளை காலை 9 மணிக்கு பின்பும் 5 மணிக்கு முன்பும் வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரடியாக சூரியச் சூடு தலையில் தாக்கினால் மூளைப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

குடிக்கும் பானம்: ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. பிரிட்ஜில் வைத்த நீரைக் கட்டாயம் பருகக் கூடாது. பனிக்கட்டி (அய்ஸ்) சேர்த்து நீர் அல்லது பானங்கள் பருகக் கூடாது. உடல் கொதிப்பேறி இருக்கும் நிலையில் அதிகக் குளிர்ச்சியாய் குடித்தால் நரம்பு பாதிக்கப்படும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கண்ணாடி வெடிக்கும். அதுபோல்தான் உடலும் பாதிக்கப்படும். எனவே, அதிகக் குளிர்ச்சியுடன் குடிக்கக் கூடாது.

நீர்மோர்: அதிகம் தண்ணீர் கலந்த மோரில் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை கலந்து பருகுவது நல்லது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் மோருடன் வெள்ளரிப் பிஞ்சு: வெள்ளரிப் பிஞ்சை சிறு துண்டுகளாக்கி அதை மோரில் போட்டு சிறிது உப்பு கலந்து நன்குக் கலக்கி நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் மென்று சாப்பிட வேண்டும். இது சூடு தணிக்கவும், தாகம் தீர்க்கவும் உதவுவதோடு, நமது சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க பெரிதும் உதவும். சிறுநீர்க் கடுப்பு வராது. வெய்யிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இது கட்டாயம்.

உணவு: காரம், புளிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு கூடவே கூடாது. பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளநீர்: இதற்கு இணையான பானம் எதுவும் இல்லை. தினம் ஒரு இளநீர் அல்லது நான்கு நுங்கு சாப்பிட வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள்; பழச்சாறுகளை அறவே சாப்பிடக் கூடாது. அவை முழுக்க முழுக்க நலத்திற்குக் கேடானவை. நாகரிக வேட்கையில் இவற்றைப் பருகக் கூடாது.

மாதுளை: வெய்யிலுக்கு மிகவும் உகந்த பழம் மாதுளை. தினம் ஒரு மாதுளை எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

தர்பூசணி, கொமுட்டி பழங்கள்: இவை இரண்டும் ஒரே வகைதான். சுத்தமான கலப்படமில்லா தர்பூசணி வெய்யிலுக்கு மிகவும் ஏற்றது, மலிவானது. கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பானைநீர்: மண்பானை வாங்கி அதை மணல்மேட்டில் வைத்து பானையில் நீர் ஊற்றி குளிந்£ பின் அதைப் பருகுவது வெய்யிலுக்கு ஏற்றது.

சந்தனம்: உடலுக்கு மெல்லியதாக தூய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழை: வெய்யிலுக்கு சோற்றுக் கற்றாழை அரிய உணவு. இது மேற்பூச்சிக்கும் மிகுந்த பயன்தரும்.

சோற்றுக் கற்றாழையை பிளந்து அதிலுள்ள சோற்றை எடுத்து, அதை 7 முறை அலசி அதனுடன் தேன் சேர்த்து உண்ண வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்தது.

சிறுநீர்: கோடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வராது. அதனால் கழிக்காமல் இருப்பது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இயற்கை நிழல்: கோடையில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைவிட தோப்பு, பூங்கா என்று இயற்கை நிழலில் இருப்பது உகந்தது. குறிப்பாக வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம், மாமரம் போன்றவற்றின் நிழல் உடலுக்கு மிகவும் ஏற்றது.

புளிய மரம், கருவேல் மரம், முருங்கை மரம் போன்றவற்றின் நிழலைத் தவிர்க்கவும்.

பதனீர்: பனையின் பாளையிலிருந்து கிடைக்கும் பதனீர் கோடைக்கும், உடலுக்கும் ஏற்றது. தூய்மையான பதனீர் என்பதை உறுதிசெய்து பருகவும்
ஜ¦னி வேண்டாம்: ஜீனியைத் தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜீனி உடல்நலத்திற்குக் கேடு பயக்கும். ஜீனியை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு உடல் நலத்திற்கு நல்லது. வெல்லமும், பனைவெல்லமும், உடலுக்கு நலம் தந்து, இரும்புச் சத்தை ஏராளமாய் தரும். இனிப்புக்கு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஜீனி வேண்டாம்.

டீ, காபி வேண்டாம்: வெய்யில் நேரத்தில் டீ, காபி வேண்டாம். அப்படியே பருகினாலும் அதிக சூட்டில் பருக வேண்டாம்.

புகை வேண்டாம்: புகைப் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வெய்யில் காலத்தில் புகைப்பதைப் போன்ற கொடிய செயல் வேறு இல்லை.

இருமுறை குளிக்கவும்: பொதுவாக இருமுறை குளிப்பது நல்லது. கோடையில் கட்டாயம் குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்க வேண்டும்.

நீரை வீணாக்கக் கூடாது: கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாய் இருக்கும். எனவே, தண்ணீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தவும்.

அம்மையைத் தடுக்கும் வேம்பும் மஞ்சளும்: வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். எனவே, ஒருபிடி வேப்ப இலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நீர் ஊற்றி, நீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து 10 மில்லி அளவு அச்சாற்றைப் பருகினால் அம்மை வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.

அம்மை வந்தால் இ¬ தினம் மூன்றுவேளை பருக வேண்டும். சாற்றின் அடியில் தங்கும் மஞ்சள் படிவை உடலில் பூசவேண்டும்.

பேயம்பழம் சாப்பிட வேண்டும்: அம்மைக்கு உகந்த பழம் பேயம் பழம். தவறாது தினம் நான்கு பழம் சாப்பிட வேண்டும்.

வெய்யிலில் விளையாடக் கூடாது: காலை 9 மணிக்கு பிறகும் மாலை நான்கரை மணிக்கு முன்பும் விளையாட வேண்டாம். இளைஞர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

கம்புக் கூழ்: வெய்யில் காலத்திற்கு கம்புக் கூழ் மிகவும் ஏற்றது. சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு கம்புக் கூழ் சாப்பிட்டால் சுவையும் சுகமும் ஏற்படும்.

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு காலையில் சோறு, நீர், வெங்காயம் மூன்றையும் சேர்த்து உண்டால் நாள் முழுக்க வெம்மையைத் தாங்கும், உடல் குளிர்ச்சியடையும்.

மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுவதில் மணத்தக்காளி சிறந்தது. எனவே, வாரம் மூன்று நாள் இதை உணவில் வேர்க்கவும்.

கீழாநெல்லி: மஞ்சள்காமாலை வருவதை இது தடுக்கும். எனவே, கீழாநெல்லி கீரையை கூட்டு செய்து இரண்டு உருண்டை சோற்றில் பிசைந்து வாரம் ஒருமுறை சாப்பிடவும்.

வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தினம் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி. சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

Sunday, April 24, 2016

பிரதம மந்திரி காபீட்டு திட்டம் !

பிரதம மந்திரி காபீட்டு திட்டம் !

உண்மையிலேயே நல்ல திட்டம்!

ஆனால் இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
எத்தனை வங்கி அதிகாரிகளுக்கு தெரியும்? மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சென்றவாரம் வங்கிக்கு சென்று இருந்தேன்.

அப்போது ஒரு ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்.

தன் கணவர் இறந்து விட்டதாகவும் அவர் கணக்கில் இருக்கும் 5000 ரூபாயை எடுக்க அதற்கான சான்றிதழ்களுடன் வந்து இருந்தார்.

வங்கி மேனேஜர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்.

அந்த மேனேஜர் என் நண்பர் தான் !

அந்தப் பெண் அங்கிருந்து பணம் பெறப் போகும் போது அந்த மேனஜர் மீண்டும் பாஸ்புக்கை வாங்கி பார்த்து விட்டு உன் கணவர் 7000 கடன் வாங்கி இருக்கிறார் எனவே நீ தான் 2000 கட்ட வேண்டும் என சொல்ல அந்த பெண் அழுது விட்டார்.

உடனே நான் அந்த பாஸ் புக்கை வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது.

அதை தவிர மேலும் ஒன்றும் தெரிந்தது.

அந்த கணக்கில் இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் செய்யப்பட்டு இருந்தது.

இதை நீங்கள் பார்க்கவில்லையா இந்த பெண்ணிற்கு 2 லட்சம் வருமே என்று சொன்னதும் மனிதர் பதறிவிட்டார் !

சார் அந்த பெண்ணின் கணவரிடம் அந்த காப்பீட்டு திட்டபடிவங்களில் கையெழுத்து வாங்கினீர்களா இல்லை என்றால் எப்படி இந்த பணம் அவர் nominee க்கு கிடைக்கும் என்றவுடன் அவர் தலையில் கை வைத்து கொண்டார் !

பிறகு அந்த பெண்ணை அழைத்து 7000 வாங்கிக் கொள்ள அனுமதித்தார் !

அந்த பெண்ணுக்கு 2 லட்சம் கிடைக்குமா என்பது தெரியவில்லை !

இது தான் இன்றைய நிலை !

எனக்கு தெரிந்து பெரும்பாலான வங்கிகள் இதை செய்யவில்லை!

பணத்தை மட்டும் டெபிட் செய்து கணக்கு காட்டிவிட்டார்கள் இதைப் பற்றி Indian Bankers Association க்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

ஒரு அரசு அதன் நல்ல திட்டங்களை கொண்டு வரத் தான் முடியும் !

அதை செயல்படுத்தவேண்டிய வங்கிகள் தூங்கினால் என்ன செய்வது ?

இன்று காலை Modi Parishad என்ற அமைப்பு இந்த காப்பீட்டு திட்டத்தை பற்றி பதிவிட்டிருந்தது

அதை படித்தவுடன் இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் ?

நம் நாட்டில் ஆந்திராவில் இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை மக்களிடம் கொண்டு செல்லலாமே!

Thanks to Ushaselvi Marimuthu !

ரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

ரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை:

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்..??

கட்டாயம் இதைப் படியுங்கள்...!!

நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். முன்பதிவின் போது நீங்கள் PAN நம்பரை கொடுத்திருந்தால், உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.

இங்கு தான் பிரச்சனையே..!! எப்படி..??

தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். 
குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். 
அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.

எனவே ரயில் பயணிகளே, உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப்பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். 
ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License (அ) Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்..!

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

மைல்கல் !



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை.

பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை.

நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை.

பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !

மீண்டும் சூடேற்றக்கூடாத உணவுகள் !
.


மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.


சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும்.
அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட வைப்பதை தவிர்க்கவும்.
.
#உருளைக்கிழங்குகள்
உருளைக்கிழங்குகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மையை அளிப்பதில் மாற்று கருத்து கிடையாது.
அதில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் எவ்வளவு தூரம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் அது நச்சுத்தன்மையை அடைந்துவிடும்.
.
#கோழிக்கறி
தற்போதைய காலத்தில் மீண்டும் சுட வைக்கப்படும் உணவில் முக்கிய பங்கை கோழிக்கறி பெறுகிறது.
ஆனால் அதனை மீண்டும் சுட வைத்து, உண்ணுவது மிக ஆபத்தானதாகும். அதற்கு காரணம் இந்த உணவில் உள்ள அளவுக்கு அதிகமான புரதம். இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.
.
#காளான்கள்
காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.
.
#பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.
.
#கீரை
கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
.
#முட்டைகள்
அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். எனவே மீண்டும் சுட வைத்த அவித்த முட்டைகள் அல்லது பொரித்த முட்டைகளை விட்டு விலகியே இருங்கள். இவை உங்கள் வயிற்றை பதம் பார்த்து விடும்.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...