Total Pageviews

Tuesday, May 3, 2022

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? வாழைப்பூ கசாயத்தை அடிக்கடி குடிங்க...ஓடிடும்!

 வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான். 

 

இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி.இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

 

டைப் 2 நீரிழிவு 

 

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது

 

 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.  

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி? 

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும். 

வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்!

  

Thanks to Manithan.com

 

Tuesday, April 26, 2022

அருந்தமிழ் மருத்துவம் 500 !

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, எக்காலத்திலும் உதவும் !

இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது!

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை !


முடிவளர நீலிநெல்லி!


ஈளைக்கு முசுமுசுக்கை!


எலும்பிற்கு இளம்பிரண்டை!

பல்லுக்கு வேலாலன்!


பசிக்கு  சீரகமிஞ்சி!


கல்லீரலுக்கு  கரிசாலை!


காமாலைக்கு கீழாநெல்லி!

கண்ணுக்கு நந்தியாவட்டை!


காதுக்கு சுக்குமருள்!


தொண்டைக்கு அக்கரகாரம்!


தோலுக்கு அருகுவேம்பு!

நரம்பிற்கு அமுக்குரான்!


நாசிக்கு நொச்சிதும்பை!


உரத்திற்கு  முருங்கைப்பூ!


ஊதலுக்கு நீர்முள்ளி!

முகத்திற்கு சந்தன நெய் !


  மூட்டுக்கு முடக்கறுத்தான் !


அகத்திற்கு  மருதம்பட்டை!

 அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு  எள்ளெண்ணை!


  உணர்ச்சிக்கு  நிலப்பனை!


குடலுக்கு ஆமணக்கு!


கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே!

கருப்பைக்கு அசோகுபட்டை!

 

களைப்பிற்கு சீந்திலுப்பு!


குருதிக்கு அத்திப்பழம்!


  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை!


 வெள்ளைக்கு கற்றாழை!


சிந்தைக்கு  தாமரைப்பூ!


  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

 கக்குவானுக்கு வசம்புத்தூள்!


  காய்ச்சலுக்கு  நிலவேம்பு  !        

                
விக்கலுக்கு மயிலிறகு!


வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்!


  நீரிழிவிற்கு ஆவாரைக்குடி
நீர்!


வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  !


   வெட்டைக்கு சிறுசெருப்படையே !

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை !


  சீழ்காதுக்கு நிலவேம்பு!


நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்!
   

நஞ்செதிர்க்க அவரிஎட்டி !

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்!
    

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்!
 

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்!
  

பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்!


  கழிச்சலுக்கு தயிர்சுண்டை !
 

அக்கிக்கு வெண்பூசனை!
 

 ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி!
   

விதைநோயா கழற்சிவிதை !


புண்படைக்கு புங்கன்சீமையகத்தி!
 

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்!


  கரும்படை வெட்பாலைசிரட்டை!
 

கால்சொறிக்குவெங்காரபனிநீர்!
  

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே!

உடல்பெருக்க உளுந்துஎள்ளு!
   

உளம்மயக்க கஞ்சாகள்ளு!
 

உடல்இளைக்க தேன்கொள்ளு!
 

 உடல் மறக்க இலங்கநெய்யே!


அருந்தமிழர் வாழ்வியலில்


  அன்றாடம்சிறுபிணிக்கு


அருமருந்தாய் வழங்கியதை


அறிந்தவரை உரைத்தேனே!!


#தமிழன்

Saturday, April 23, 2022

சொத்தை ஏன் பிரித்துக் கொடுக்க வேண்டும்!

குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?

ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த சொத்துகள், அவர் சரியாக உயில் (Will) எழுதிச் செல்லவில்லை என்றால், அவர் இந்த உலகில் இல்லாத போது குடும்ப உறுப்பினர்கள் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தலாம். 

 


அவர்களுக்குள் சண்டை, சச்சரவு, பகை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரு விரிவான உயில் எழுதுவது அவசியம். இதன் மூலம் உடன்பிறந்தவர்கள் இடையே உறவு சீராகத் தொடர்வதை உறுதி செய்வது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?

1. நியாயமாகப் பிரித்துக் கொடுக்கவும்

நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சொத்தை சமமாகப் பிரித்துக் கொடுப்பது என்பதல்ல. உண்மையில் நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு என்ன திறமை, தகுதி, வசதி வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன என்பதற்கு ஏற்ப பிரித்துக் கொடுப்பதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரித்துக் கொடுப்பது குடும்ப உறுப்பினர்கள் இடையே மனக் கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, நியாயத்தை விளக்குவது பெற்றோரின் பொறுப்பாகும்.

ஏன் இப்படிப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை உயிலில் விரிவாக எழுதி வைப்பது நல்லது. முடிந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் விளக்கிச் சொல்லி விஷயத்தைப் புரிய வைத்து அதன்படிகூட செல்வம் மற்றும் சொத்துகளைப் பிரித்து உயில் எழுதி வைக்கலாம்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு இரு மகன்கள் இருந்தால் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கேட்டு தெளிவுபடுத்தி, அதன் அடிப்படையில் உயில் எழுதி வைப்பது நல்லது.

இதனால், பிற்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவு ஏற்படுவது தடுக்கப்படும். இது குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொழில் மற்றும் வணிகத்துக்கும் பொருந்தும்.

2. அனைத்து சொத்துகளையும் பட்டியலிடுங்கள்

உயிலில் அனைத்து சொத்துகளையும் பட்டியலிடாமல் இருப்பது மற்றும் ஏற்கெனவே எழுதிக் கொடுத்த சொத்து விவரங்களை உயிலில் எழுதாமல் விடுவது குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை, சச்சரவு உருவாகக் காரணமாக இருக்கக்கூடும். உதாரணத்துக்கு, கல்யாணமான மூத்த மகனுக்கு சொந்த வீடு கட்ட, 3 சென்ட் நிலம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விவரம் உயிலில் இடம் பெற்றிருக்காது. இதை மனதில் வைத்து அவருக்கு சொத்தில் மனை எதுவும் கொடுக்காமல் உயில் மூலம் எழுதி வைக்கப்பட்டிருக்லாம். இந்த நிலையில் அந்த மூத்த மகன் எனக்கு உயிலில் மனை இடம் எதுவும் எழுதி வைக்கவில்லை. எனக்கும் மனை இடத்தில் பங்கு வேண்டும் எனப் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை செய்யக் கூடும். எனவே, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சொத்துகளையும் உயிலில் குறிப்பிடுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் இடையே உங்களின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

3. உயிலை அமல்படுத்துபவரை நியமியுங்கள்

உயில் சரியாக அமல்படுத்தப்பட, அதற்கென சரியான அமல்படுத்துபவரை நியமிப்பது கட்டாயமாகும். இந்த உயில் அமல்படுத்துபவர் (Will Executioner) குடும்ப நண்பர், நம்பகமான நிதி ஆலோசகர், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர் என யாராக வேண்டுமானலும் இருக்கலாம்.

இவர்களில் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடையே நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருப்பது அவசியம். மேலும், அவர் அனைத்து குடும்ப உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது அவசியம்.

4. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும்

உயில் என்பது உங்களின் சொத்துகளின் சட்டப்படியான பிரகடனம் (legal declaration) ஆகும். உயில் குறித்து ஏதாவது பிரச்னை வந்தால், பதிவு செய்யப்பட்ட உயில் என்றால், உயிலில் உள்ளபடி அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒரு உயில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபப்ட வேண்டும். இந்த உயிலில் இரண்டு சாட்சிகள் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், உயிலை எழுதியவர் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் இதை எழுதினார் என மருத்துவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.

இந்த வழிகளை பெற்றோர்கள் சரியாகப் பின்பற்றும் பட்சத்தில் சொத்து விஷயத்திற்காக குடும்பத்தில் தகராறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்!

முடி கொட்டுவது நிற்க! முடி வளர்வதற்கான வழிமுறைகள் !

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும்.

 

முடிநன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.


சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

 

தலையில் பேன் வருவதற்கான காரணமும், தீர்வும்...

பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.

பேன்பேன் தொல்லையிலிருந்து மீள வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும்.

துளசி இலை

துளசி இலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் இறந்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

100 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் வேப்பம்பூவை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

குப்பை மேனி கீரை

பேன் தொல்லைப் போக்குவதில் குப்பை மேனி கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை எடுத்து சாறு எடுத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.

வெங்காயச் சாறு

தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்துவிடும்.

கருவேப்பிலை

தேங்காய் எண்ணையை காய்ச்சி, அதில் நிழலில் உலர்த்தி காய்ந்த கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வந்தால்பேன் வரவே வராது.

வசம்பு

வசம்பை அரைத்து தலையில் தடவி, பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்!

முதியோர் நலன் காப்பது நம் கடமை!

குடும்பத்தின் மேன்மை மட்டுமின்றி சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் முதியோர்கள் பெரியளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும் பாரபட்சமும், சமூகப் புறக்கணிப்பும் தொடர்கின்றன.woman sitting on brown bench

சர்வதேச அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றால் அவர்களுடைய வாழ்நாள் அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

முதியவர்கள் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, தன்னார்வப் பணிகளை செய்வதோடு, தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் மிகுதியான பலனைக் கொடுக்கிறது. எனவே, வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் இருப்பதற்கு, நீடித்த பராமரிப்பை அளிப்பது நம் ஒவ்வொருவரின் முக்கியக் கடமை.

முதியவர்களுக்கு வயது அதிகரிக்கும்போது நீண்டநாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால் தனியாக, சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடுகிறது. அவர்களுடைய நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரை சார்ந்திருக்கும் நிலை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகுதல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றால் அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிறது. இதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புற்று நோய் போன்ற நோய்களே வளர்ந்து வரும் நாடுகளின் நோய்ப்பளுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தேசிய திட்டத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பு, பல்வேறு நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான, விரிவான சுகாதாரப் பராமரிப்பை மாநில சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மூலமாக அளிப்பதே இந்த தேசியத் திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.முதியோருக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்

* முதுமை மூட்டழற்சி, எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு போன்ற எலும்பு சார்ந்த நோய்கள்.

* தைராய்டு பிரச்னைகள், நீரிழிவு, மாதவிடாய் போன்ற இயக்குநீர் பிரச்னைகள்.

* முதுமை மறதி, பார்க்கின்சன் நோய், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைவு, உடல் சமநிலை இழப்பு போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

* கண்புரை, கண்ணழுத்த நோய் போன்ற பார்வை சார்ந்த நோய்கள் மட்டுமன்றி நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் உண்டாகும் சிக்கல்கள்.

* மாரடைப்பு, தமனித்தடிப்பு, ரத்த அழுத்தம் சார்ந்த இதய நோய்கள்.

* சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற சிறுநீரக பிரச்னைகள். சில சமயங்களில் உடல் நோய்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் டயாலிசிஸ் போன்ற நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படும்.

* பற்களை இழத்தல், ஈறு நோய், சரியாகப் பொருத்தப்படாத பற்களால் ஏற்படும் பற்கள் சார்ந்த பிரச்னைகள்.

* களைப்பால் உண்டாகும் பலவீனம், எடை இழப்பு, மருந்துகளின் பக்க விளைவு, தூக்கக் கோளாறுகள், உடல் நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் முதுமையில் ஏற்படுகிறது.

எனவே, முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னையாகப் பார்க்காமல் சமூக சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஒருநாள் நமக்கும் அதேபோல் வயதாகும். இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

முதியோர் நலன் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள்

* முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும்.

* அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

* அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

*  முதியோருக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பையும், நல மேம்பாட்டையும் வழங்க வேண்டியது நமது கடமை.

60 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு…

* உங்கள் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.

* உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

* அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் மிதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அது உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். நடை, யோகா, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். 

* புகை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால் உடலை அதிக    மாக வருத்தக் கூடாது.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற ! மன உறுதியுடன் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

 * நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும்.

 


அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.

* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறு சுறுப்பானவர்களாக மாற்றும்.

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக, நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம்!

Friday, January 7, 2022

நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்

 

 
 
நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது. 
 
அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!!!
 
ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும்
 
ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.
 
ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.
 
முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.
 
அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.
 
நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.
 
இருவருக்கிடடையில் உள்ள தப்பான கருத்துகளை போக்கி கொள்ள, ஒருவரை ஓருவர் நன்றாக புரிந்து கொள்ள, ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். ஆரோக்கியமான விவாதம் நல்ல உறவின் அடையாளம் ஆகும்.
 
அன்புக்குரியவர் சோர்ந்து இருக்கும் போது, எப்போதும் உங்களது ஆதரவை தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அதனை தவிர்க்காமல் ஆதரவு அளிக்க வேண்டும். வாழ்வில் அவர்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
அனைத்து உறவுகளிலும் சந்தேகப்படுவதற்குரிய நிலை வரும். அதனை களைந்து, சந்தேகத்தை போக்கி, அன்பு கொண்டவர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அதற்கு ஏற்ற நேரம் மற்றும் இடைவெளி கொடுக்க வேண்டும்.
 
மாற்றம் ஒன்று தான் மாறாதது. ஆகவே உங்கள் துணையிடம் மாற்றங்கள் தென்பட்டால், அதை எதிர்க்காமல் அதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
 
கருத்து வேறுபாடுகள் எந்த ஒரு உறவிலும் ஏற்படக்கூடியது தான். மேலும் உறவின் வலிமையை சோதிக்க வந்த சோதனைகள் என்று கூட சொல்லலாம். அம்மாதிரியான கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்து கொள்வது மிக அவசியம்.
 
நல்ல உறவு என்பது புதிதாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்ப்பதில் அடங்கி இருக்கிறது. ஆகவே திறந்த மனதுடன் துணையை பற்றி புதிது புதிதாக தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
 

 

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...