Total Pageviews

Thursday, February 16, 2012

ஜெயந்தி என்றொரு நீதிதேவதை!





அஜீத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சிட்டிசன்’ திரைப்படத்தில், அதிகாரிகளின் அராஜகத்தால் அத்திப்பட்டி எனும் கிராமமே அழிந்துபோகும். கிட்டத்தட்ட அதற்கு இணையான ஓர் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது,

 சென்னை, திருமுல்லைவாயில், ஜெயா காலனி. இதற்கு காரணமான நீதிபதி ஐ.ஜெயந்தியை... நீதிதேவதையாகவே போற்ற ஆரம்பித்துவிட்டனர் அந்த மக்கள்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேலான நரிக்குறவர்கள் வசிக்கும் 1.8 ஏக்கர் நிலம், தனக்குச் சொந்தமானது என்று அம்பத்தூர் முன்சீப் நீதிமன்றத்தில் பாலு என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 18 வருடங்களாக இழுபட்ட வழக்கில்தான்... 'அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. அந்த மக்களே தொடர்ந்து அங்கு வாழலாம்’ என அதிரடியாக தற்போது தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயந்தி.

'கிழிந்த உடைகளுடன் தினமும் காலையிலிருந்து மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்து நீதிக்காக போராடியுள்ளனர் அந்த ஏழைகள். ஆனால், மனுதாரர் தரப்பில் 'டாம் அண்ட் ஜெர்ரி' ஓடிப் பிடித்து விளையாடுவது போல 18 ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
காரணம் இல்லாமல் வாய்தா கேட்டு வழக்கை தள்ளி வைப்பதால், சட்டங்களை அந்த ஏழைகள் தங்களின் நண்பனாக கருதாமல் எதிரியாகத்தான் கருதுவார்கள். வழக்கை ஒரு நாள் தள்ளிப் போட்டாலும்கூட, அது அந்த ஏழைகளின் ஒரு நாள் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவதற்கு சமமாகும்’
- இப்படியெல்லாம் நெத்தியடியாக இன்னும் பல கருத்துக் களையும் தீர்ப்பில் ஜெயந்தி வெளிப்படுத்தியிருப்பது... அவருடைய மதிப்பை பல படிகள் உயர வைத்துவிட்டது.

''ஜெயந்திம்மா இந்த கோர்ட்டுக்கு வந்த பின்னதான், கோர்ட்டுக் குள்ள எல்லாம் எங்களால வரமுடிஞ்சுதுங்க. அதுக்கு முன்ன... 'உள்ள வரக்கூடாது'னு அதிகாரிங்க வெரட்டி வெரட்டி அடிப்பாங்க. ஜெயந்தியம்மாதான் உள்ள அனுமதிக்கச் சொல்லி, என்ன பிரச்னைனு அன்பா, அக்கறையா விசாரிச்சாங்க. எங்களையும் சக மனுசங்களா மதிச்சி பேசின முதல் மனுஷி!'' என்று முகத்தில் நன்றியும், நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார் நரிக்குறவர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் தனலட்சுமி.


''எப்பவுமே ஜெயந்தி இப்படித்தாங்க. இல்லாதவங்களுக்காக இரக்கப்படுறது... அவங்க ரத்தத்துல ஊறின ஒண்ணு'' என்று சொல்லி நெகிழ்கிறார், அவருடைய கல்வி வழிகாட்டிகளில் ஒருவரான, சென்னைப் பல்கலைக்கழக பொது நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரவிசங்கர்.

''ஜெயந்தியோட பூர்விகம்... கன்னியாகுமரி மாவட்டம். படிப்புனா... ஜெயந்திக்கு ரொம்பப் பிடிக்கும். மனித உரிமையியல், இந்திய அர சியல் சட்டம், இன்டர்நேஷனல் லா இப்படி பத்துக் கும் மேலான மேற்படிப்பு பட்டங்களை வாங்கியிருக் காங்க. ரெண்டு பிஹெச்.டி. முடிச்சிருக்காங்க.
'என்னோட படிப்பு ஆர்வத்துக்கு காரணமே... அப்பா ஐசக்தான். அவர் ஸ்கூல்ல தலைமை ஆசிரியரா இருந்தவர். எங்களோட சாப்பாட்டை பத்திக்கூட கவலைப்பட மாட்டார். யாராவது படிப்பு செலவுனு கேட்டா போதும்... கையில இருக்குற பணத்தை எடுத்துக் கொடுத்துடுவார். அந்த ஆர்வம்தான் என்னையும் படிக்கத் தூண்டிக்கிட்டே இருக்கு!’னு ஜெயந்தி சொன்னப்ப... நான் அசந்துட்டேன்.

ரோட்டுல ஒரு சின்னக் குழந்தை அழுக்கு சட்டையோட போறதை பார்த்தாலும்... பக்கத்துல அழைச்சு... 'என்ன படிக்கிறே... அப்பா, அம்மா எங்கே?'னு கேட்பாங்க. படிக்கலைனா... அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பாங்க!

டயானா அப்படிங்கற திருநங்கை, நோய் வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாம உடல்நிலை ரொம்ப மோசமா கிடந்தாங்க. கடைசி கட்டத்துலதான் ஜெயந்திகிட்ட உதவி தேடி வந்தாங்க. அதுக்குப் பிறகு, டயானாவுக்காக ரொம்ப பிரயத்தனம் பண்ணினாங்க ஜெயந்தி. ஆனாலும் காப்பாத்த முடியல! ராத்திரி பன்னிரண்டு மணினுகூட பார்க்காம ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போயி அடுத்து ஆக வேண்டிய வேலைகளையெல்லாம் ஜெயந்திதான் செய்து முடிச்சாங்க. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அவங்களோட வேலை, படிப்பு, பொதுச்சேவைனு பல விஷயங்களுக்கும் உறுதுணையா இருக்கறது... கணவர் தேவதாஸ். குடிநீர் வடிகால் வாரியத்துல வேலை பார்க்கறார். இவங்களுக்கு ஒரே பொண்ணு மாஸி. பல் டாக்டருக்கு படிச்சுட்டிருக்காங்க! இத்தகைய குணம் வாய்ந்த அவங்களுக்கு லெக்சரரா பாடம் எடுக்கறதையே நான் பெருமிதமாத்தான் நினைப்பேன்'' என்று ஜெயந்தி பற்றி நம்மிடம் எடுத்து வைத்தார் ரவிசங்கர்.

ஆனால், ஜெயந்தியின் தீர்ப்பு தந்த மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்காததுதான் எதிர்பாராத சோகம். தற்போது சென்னை, 20-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுவிட்டார் ஜெயந்தி.
இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று கொதிக்கும் ஜெயா காலனி மக்கள், 'ஜெயந்தியம்மாவ மறுபடியும் எங்க பகுதி நீதிமன்றத்துக்கே பணிமாற்றம் செய்யணும்’ என்று உயர் நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என்றெல்லாம் எழுப்பிக் கொண்டிருக்கும் கோஷங்களை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

- அவள் விகடன்

Monday, February 13, 2012

ஒழுக்கம் - தந்தை பெரியார்



ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பன யெல்லாம் அவைகளைச்செய்கின்ற மதிக்கப்படுகின்றதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.

பாவத்திற்குப் பயந்து திருடாதவனும், காவலுக்குப் பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதை உடையவனாவான்.

எது குற்றம்  குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே, ஒரு மனிதன்தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம்.

ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்

ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால்,அதனால் அவனுக்கு, ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைபூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான் அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும் மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத் தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய்க் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டயவனாகலாம். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக் குறைவுக்கும் ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது
.
ஒழுங்கு, கடவுள், மதம், சாத்திரம்

ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங்களுக்குத்தான் இயற்கைக்கு மாறான இடங்குளுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை. அதனாலேதான் சற்று ஒழுங்கு இருக்கிற இடத்திலே அரசன் இருப்பதில்லை; மற்றும் மதம், சாத்திரம் இவைகள் எல்லாம் இருப்பதில்லை.

ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் உள்ள தொடர்பு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க முள்ளவேன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.
எந்தக் காரியங்களை ஒரு மனிதன்; தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்த்தும், வேறுபல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய  முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படுப்பட்ட காரியமானாலும் ஒருக்காலமும் குற்றமாகாது.

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே சமுயதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது; இன்றியமையாதது.

Sunday, February 12, 2012

what is life ?



Life is a Challenge....................Meet it
Life is a Gift..........................Accept it
Life is an adventure..................Dare it
Life is a sorrow................Overcome it
Life is a tragedy........................Face it
Life is a duty........................Perform it
Life is a mystery.....................Unfold it
Life is a song.............................Sing it
Life is an opportunity................Take it
Life is a journey.................Complete it
Life is a promise.......................Fulfill it
Life is a beauty........................Praise it
Life is a spirit.........................Realize it
Life is a struggle........................Fight it
Life is a puzzle.........................Solve it
Life is a goal........................Achieve it

                     -About life from Bagavath Geeta

மன நிம்மதி பெறுவது எப்படி?



உங்கள முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோஅழிக்கவோ முடியாது.உங்களது தொழிலும்,உங்களது வாழ்கையும் உங்கள் முன்வினையாலேயே உருவாக்கபடுகிறது.தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு அடுத்தவரை பழிக்காதீர்கள்.


சூழ்நிலைக்கு  ஏற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியை குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதைவிட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள்.நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும் போது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும்.முயற்சி செய்து பாருங்கள்!


பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதை பொருத்து கொள்ளுங்கள்.எதைக் குணப்படுத்த முடியாதோ அதை பொறுத்தே ஆகவேண்டும்.மகிழ்ச்சியுடன் சக்தி ங்களிடம் அதிகரிக்கும்.


பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது.அதிகமான கவலைகள்தான் வந்துசேரும்."நான் செய்கிறேன்" என்ற ஆணவத்துடன் மென்மேலும் பொறுப்புகளை கூட்டி கொண்டு போகாதீர்கள்.(இதுதான் வம்பை விலைக்கு வாங்குவது).அதிக நேரத்தை பிரார்த்தனை,வழிபாடு மற்றும் த்யானத்தில் செலவிடுங்கள்.மனமே இல்லாதபோதுதான் பூரண திருப்தி கிட்டுகிறது.மனம் என்பது எண்ணங்களின் குவியலே.எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.

தியானம் என்னும் அற்புத மருந்து

ஒழுங்கான தியான நேரத்தை கடைபிடியுங்கள்.தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது.மனதில் சஞ்சலமற்ற தன்மையை உண்டாக்குகிறது. முன்போல மனம் அலைந்து திரியாது.தியானம் உங்களது பல்வேறு திறமைகளை வளர்த்து குறைந்த நேரத்திலேயே வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வளர்க்கிறது.

வாழ்கை தத்துவங்கள்




ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

மிளகு - பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை






மிளகு- பாம்பு கடிக்கு முதலுதவி


பாம்பு என்றால் படையும் நடுங்கும். யாரையாவது பாம்பு கடித்துவிட்டால்,​​உடனே அந்த இடத்தில் கயிற்றால் கட்டுவதும்,​​ அந்த இடத்தில் பற்களை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் சரியான நடவடிக்கை அல்ல.​ ​

பாம்பு கடித்த இடத்தை டிடர்ஜென்ட் சோப்பால் தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும்.​ பின்னர் பாம்பு கடித்தவருக்கு  20 மிளகுவை எடுத்து  பொடி செய்து அரை லிட்டர் தண்ணிரில்  கலந்து  குடிக்கச் செய்ய  வேண்டும் !  .​ இப்படிச் செய்வதன் மூலம் அந்த நபரை சாவிலிருந்து  காப்பாற்ற முடியும்.  அவருடைய உடம்பில் விசம் பரவாமல் இருக்க  உடனடியாக மருத்துவமனைக்கு  அழத்துச் செல்ல வேண்டும்.


óýÈ¢ : ¦ƒÂ¡ ¦¾¡¨Ä측ðº¢.

Saturday, February 11, 2012

சர்க்கரை குறைக்க வெண்டைக்காய்



சர்க்கரை அளவை கட்டுப்படுத்த  குறைக்க
தினமும் இரு  வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் தலை பாகத்தையும் அடிபாகத்தையும் வெட்டிவிட்டு மிதமுள்ள  காயை 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டி அதை அரை லிட்டர் தண்ணிரில் இரவில் ஊற்விடுங்கள்.  காலையில் எழுந்தவுடன் வெண்டைக்காயை  துண்டுகளை வெளியில் எடுத்து  வீசி விட்டு தண்ணீரை மட்டும்  குடியுங்கள். குறைந்து 1 மணி  நேரம்  காபி அல்லது டீ  குடிக்க வேண்டாம்.இப்படி  இரு வாரங்கள்  குடித்து வந்தால்  உங்களது உடலில் உள்ள் சர்க்கரையின் அளவு கண்டிப்பாக் குறையும். 

அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
 

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...