Total Pageviews

Wednesday, May 16, 2012

இந்திய ஜனாதிபதி ஆவதற்கான தகுதி


* இந்தியக் குடிமகனாக, 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்பவராக இருக்கக் கூடாது.

* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

* டெபாசிட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்.

ஜனாதிபதியின் அதிகாரம்

* லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) அழைப்பது,

* பிரதமரின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில் உரையாற்றுவது இவரது பணிகள்.

* பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும்.

* பிரதமரின் அறிவுரைப்படி, மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் ஆகியவற்றை நியமித்தல்.

* அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

* சுப்ரீம் கோர்ட்டின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கும்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது.

மொத்த ஓட்டு எவ்வளவு: ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் + எம்.பி.,க்களின் ஓட்டு) மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408). இதில் “மெஜாரிட்டி’ பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

எம்.எல்.ஏ., ஓட்டுகள்: ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு எத்தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
மாநிலத்தின் மக்கள்தொகை

= ——————————————-
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை * 1000

விதி 52 (2)ன் படி, “1971 சென்செஸ்’ மக்கள்தொகை தான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. (உதாரணமாக) தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 234. இதன் படி 4,11,99,168/ (234*1000)= 176. ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 * 176) 41,184. இதன்படி அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.
எம்.பி., ஓட்டுகள்

அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு
————————————————-

மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை

இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு 
மதிப்பு 708. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) 5,49, 408


எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

 

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.



 

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.

Tuesday, May 8, 2012

வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !

 
மனிதர்களகிய  நாம் நமக்கு என்ன உணவு  வேண்டும், எவ்வளவு உணவு உன்ன வேண்டும் என்று  ஒரு வரைய்றை வகுத்து கொள்ள வேண்டும்.  நமது உடம்புக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும்.  

தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கின்றதே என்பதற்க்காக  அளவுக்கு அதிகமாக விலங்குகளை போல் உண்ணக்கூடாது.

கெட்டுப்போன, மற்றும் காலாவதியான உணவுகளை உண்ணக்கூடாது.

Food Position எனப்படும் வியாதிக்கு ஆட்படாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். 

உணவு வகைகள் வீண்கின்றதே என்பதற்க்காக உணவுகளை உண்ணக்கூடாது.

வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல!  

தரமான உணவுகளை மட்டும்,  தேவைக்கு எற்ப நன்றாக கூளூ போல் மென்று உண்ண வேண்டும்

தவறான் உணவு உண்ணும் முறையினால்தான் வ்யிற்றுப்போககு மற்றும் அஜீரண கோளாறு போன்ற்  வியாதிகளுக்கு  உட்படுகின்றோம்.

செரிமானமின்மை ஒரு வயிறு பிரச்சனை என்றும் அஜீரணம் அமிலம் ரிஃப்ளக்ஸ் வயிறு காரணமாக நெஞ்செரிச்சல் உண்டாக்க கூடும். இது உணவுக்குழாய் கஷ்டப்படுத்துகிறது. அஜீரணம் வாயில் ஒரு கசப்பான அல்லது புளிப்பு சுவை விட்டுச்செல்கிறது. 

அஜீரணதிற்க்கான் காரணங்கள் 

1.வேகமாக உணவுகளை உண்ணுவதால்,
 சரியாக மெல்லாமல் உணவுகளை உண்ணுவதால்
2.  செரிமான சக்திக்கு மிகப்பட்ட / கன உணவுகளை உண்ணுவதால்
3. நுகர்வு அதிகமாக இருப்பதனால் / மது அருந்துவதனால்
4. புகைப்பதனால்,
5. சரியான   துக்கமின்மை காரணமாகவும்,
6. மன அழுத்தம் மற்றும் கவலை எதிர்ப்பு அழற்சி மருந்துகள்
7. வாழ்க்கை முறை மாற்றங்கள்

அஜீரணத்தால் பாதிக்கும் நோய்கள்

1. வயிற்றில் வலி
2. வயிறு குமட்டல், வீக்கம்
3. கட்டுப்பாடற்ற உளறுகிறாய்
4. ஹார்ட்பர்ன்
5. குசு [ Gas Trouble ]

K.P.Sithayan Sivakumar

லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.

உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?

வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).http://ctrlq.org/irctc/
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த  பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

 

 உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

 

ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

கல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.



பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...


•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும். 

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

Thanks to One India Tamil

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

 

கார் ஓட்டும்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்:

கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை காட்டிலும், செல்போன் பேசியபடி வந்து விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு சாலை விபத்து செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் நடப்பதாகவும், இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகளும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டாதீர்கள் என்று அரசாங்கமும், போலீசாரும் பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

டிரைவிங்கின்போது செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகள்:

1.கார் அல்லது பைக்கில் புறப்படுவதற்கு முன், செல்போனில் வந்துள்ள அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்புவது நல்லது. முக்கியமானவர்களிடம் அவசியம் பேச வேண்டியிருந்தால், பேசிவிட்டு அதன்பிறகு புறப்படுங்கள்.

2.காரை ஓட்டிக்கொண்டே எஸ்.எம்.எஸ். எழுதி அனுப்பவதை பலர் குலத்தொழிலாக கொண்டுள்ளனர். இதை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு மட்டுமல்ல, எதிரில் வருபவருக்கும் நல்லது. 

3.டிரைவிங்கின்போது அழைப்புகள் வந்தால் செய்தியை தெரிந்துகொண்டு சுறுக்கமாக பேசி முடித்துவிடுங்கள். எதிர்முனையில் பேசுபவரிடம் டிரைவிங் செய்வதை தெரிவித்துவிடுங்கள். இதனால், அவர் உங்களை தவறாக நினைத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

4.மோசமான வானிலையின்போது, டிரைவிங் செய்தால் கட்டாயம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது புத்திசாலித்தனம். இதுபோன்ற சூழ்நிலைகளில் கவனம் சிதறினால், நொடியில் மரணம் ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது.

5.அலுவலகம் மற்றும் வீட்டில் இருப்பவர்களின் நம்பர்களை ஒன்-டச் டயல் ஆப்சனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். டிரைவிங்கின்போது அவசரமாக பேசும் சூழ்நிலை இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

6.டிரைவிங்கின்போது செல்போனை எளிதாக எடுக்கும் வகையில், டேஷ்-போர்டில் கண்ணுக்கு எதிரில் படும்படியாகவோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொள்ளுங்கள்.

7.வாய்ஸ்-மெயில் மோடில் செல்போன் இருந்தால், அனைத்து அழைப்புகளையும் நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

8.டிரைவிங்கின்போது அவசியம் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பேச முற்படுங்கள். இயலாத நேரத்தில் ஹேண்ட்-ப்ரீ மற்றும் ஹேட்போன் ஆகியவற்றை பயன்படுத்தி சுறுக்கமாக பேசிமுடித்துவிடுங்கள்.

9.அழைப்பு ஏதும் வந்தால், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு வழவழ என்று பேசிக்கொண்டு நிற்காதீர்.

விபத்துக்களும், மரணங்களும் எதிர்பாராமல் நடப்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் அதற்கு முக்கிய காரணம் நாமாகிவிடக்கூடாது என்பதை அனைவரும் முதலில் உணரவேண்டும். மேலும், டிரைவிங்கின்போது செல்போன் பேசுவதற்கு சில வழிமுறைகளை இருந்தாலும், அவை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்குத்தான். டிரைவிங் செய்யும்போது செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

வாகனங்களுக்கு இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம்




வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.

பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும். 

பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.

மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.

Thursday, May 3, 2012

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்



பொதுவாக 70% நோய்கள் தண்ணீரின் மூலம்தான் பரவுகின்றன. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் ஜீரம், காலரா, மஞ்சள் காமாலை நோய், போன்றவைகள் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கும்  (ஆஸ்மாட்டிக் பிரங்கைட்டிஸ்) நீர்க்கணை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சுக்குழல்களில் சுருக்கம் ஏற்படுவதால் நீர்க்கணை மற்றும் இருமல் ஏற்படுகிறது
.
வீட்டின் அருகே சுற்றுப்புறங்கள் தூய்மையில்லாத காரணத்தால் கழிவுநீர்களில் வாழும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலமாக மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை நோய்ஏற்படலாம். மழைகாலங்கள் மட்டுமல்லாமல் கோடைக்காலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  திறந்த வெளியில் மலம் ஜலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். 

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்

 

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...