Total Pageviews

Monday, December 22, 2014

பண நெருக்கடியை சமாளிப்பது எப்படி ?





மாதச்சம்பளம் வாங்குபவர்கள் பலரும் மாதக்கடைசியில் பண நெருக்கடியை சந்திக்கிறார்கள்.

ஆனால், கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், மாதக் கடைசி அவதியில் இருந்து தப்பித்துவிடலாம்.


இதோ ஐடியாக்கள்,


சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட் போடுவது மட்டுமின்றி, அப்படியே நடக்கவும் செய்ய வேண்டும்.


மாத மாதம் வழக்கமாகச் செய்ய வேண்டிய வீட்டு வாடகை, மளிகை, பால் போன்றவற்றை சம்பளம் வாங்கியவுடனே முடித்துவிட்டால், வேலை முடிந்த நிம்மதியும் ஏற்பட்டு, ஒரு தெளிவு பிறக்கும்.


வழக்கமான கட்டாயச் செலவுகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போவதால் எந்தப் பலனுமில்லை என்பதை உணருங்கள்.


சம்பளம் கையில் கிடைத்ததுமே, அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.


ஒன்றுக்கு ஒதுக்கிய தொகையை அதற்கே செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம்தான் மிஞ்சும்.


கட்டாயச் செலவுகள் போக கையில் எவ்வளவு பணம் எஞ்சியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.


தள்ளிப்போடக்கூடிய, அவசியமற்ற செலவுகளை தாராளமாகத் தள்ளிப்போடலாம்.


ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதை, எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது.


உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தைப் போட்டுவிடலாம். இந்தப் பணத்தை மிகவும் அவசர தேவை எதுவும் ஏற்பட்டால் தவிர எடுக்கக் கூடாது.


இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது எதிர்பாராத செலவுகளின்போது பெரிதும் கைகொடுக்கும்.


ஆனால், இப்படி ஒதுக்கி வைத்திருக்கும் பணம் இருக்கும் தைரியத்தில் செலவுகளை கூட்டிக்கொள்ளக்கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், மாதக் கடைசியில் எடுத்துச் செலவழித்துவிடக் கூடாது.


மாறாக, உறுதியோடு பணத்தை தொடர்ந்து சேமித்து வந்தால், பின்னாளில் ஒரு பெருந்தொகை உங்களிடம் சேர்ந்திருக்கும்.


கடன் வாங்கிச் செலவு செய்வதை, அதிலும் ஆடம்பரச் செலவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


வீட்டுக் கடனுக்கு மட்டும்தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதையும், சொந்த வீட்டுக் கனவை நனவாக்க மட்டுமே கடன் பெறலாம், மற்ற கடன்கள் எல்லாம் தேவையில்லாதவை என்று மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ளுங்கள்.

Thanks to Lankasri.com

Sunday, December 7, 2014

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் "ஆப்" கண்டுபிடிப்பு! -என்ஜீனியர் ரெசிங்டன்

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும்போது, அவர்களை எச்சரிக்கும் வகையிலான செல்போன் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஒரு என்ஜீனியர் கண்டுபிடித்துள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது எல்லைக்கோடு குறித்து தெரியாததால் இலங்கை எல்லை பகுதியில் சென்று விடுவது நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து கொடுமைப்படுத்துவதும், கடும் தண்டனை வழங்குவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் இதனை தவிர்க்கும் பொருட்டு ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் இணையத் தொடர்பு இல்லாமலும், கைத்தொலைபேசி சிக்னல் இல்லாமலும்கூட பயன்படுத்திட முடியும். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இந்திய கடல் எல்லைமுடிந்து அடுத்த நாட்டின் கடல் எல்லை நெருங்குவதை 1 கிலோ மீட்டருக்கு முன்பே அவர்களது மொபைல் போனில் அது எச்சரிக்கை ஒலியினை எழுப்பும். உதாரணத்திற்கு படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையை நெருங்கும்போதே இந்த செல்போன் எச்சரிக்கை ஒலியெழுப்பும். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி விட்டால், எச்சரிக்கை படம் திரையில் தோன்றுவதோடு, வெளியேறு என்ற எச்சரிக்கை வார்த்தைகளையும் இந்த செல்போன் எழுப்பும். இதனால் மீனவர்கள் உஷராகி, எல்லை மீறாமல் மீன் பிடிக்க முடியும். இதற்கான சாப்ட்வேரை தூத்துக்குடி, பெரைரா தெருவை சேர்ந்த என்ஜீனியர் ரெசிங்டன் என்பவர் கண்டறிந்துள்ளார். இதனை அவர் நேற்று தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார். இதுகுறித்து ரெசிங்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏழு லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களது தீராத பிரச்னை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால், அவர்களது கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இரவு பகல் பராது தொடர்ந்து மூன்று ஆண்டு முயற்சி, பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி இந்த சாப்ட்வேர் கண்டறிந்துள்ளேன். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் இந்திய-இலங்கை இந்த இரு நாடுகளுக்கிடையேயான கடல் எல்லைக் கோடு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் வளைகுடா ஆகியவற்றை கொண்டதாகும். எல்லைக்கோடு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் 1974 ல் வரையறை செய்யப்பட்டது. இது 1,095 கி.மீ., நீளம் கொண்டது. கடலளவில் 591 நாட்டிக்கல் மைல் கொண்டது. கடலில் இந்த எல்லைக் கோடுகள் கண்ணுக்கு புலப்படாத கோடு, என்பதால் மீனவர்கள் அடிக்கடி பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த சாப்ட்வேர் உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், போல் இதனை மீனவர்கள் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பின்னர், எந்த பயமும் இன்றி தடங்கலின்றி கடலில் மீன் பிடிக்கலாம். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்களின் படகு அடையும் போது, அவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரைடு மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்புடன், ஒலி எழுப்பும். 
 
அதனை தாண்டி அந்த படகு இலங்கை எல்லைக்கோட்டை தாண்டும் போது,சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன் கூடிய ஒலியினை எழுப்பும். இந்த சாப்ட்வேரில் ஒரு திசை காட்டும் கருவி உள்ளது. இது வேலை செய்ய எவ்வித இணையதள வசதியும்,மொபைல் சிக்கனலும் தேவையில்லை. மொபைல் ஆப் லைனில் இருந்தாலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. ஜி.பி.எஸ்.கருவியில் அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் வரைப்படங்கள் இருப்பதால், 

சாதாரண மீனவர்களுக்கு தெரிவதில்லை. நான் கண்டுப் பிடித்துள்ள புதிய சாப்ட்வேரில் மேப் வசதியுள்ளது. அதில் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் அனைத்து கட்டளைகளும் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை மீனவர்கள் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டியற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த சாப்ட்வேரில் மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும், அவர்களது மொபைல் போனில் எல்லை தாண்டியதும் பதிவாகிவிடும். மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் புதிய செல்போன் ஆபத்து நேரங்களில் மீனவர்கள் இந்த சாப்ட் வேரை மொபைலின் திரையில் தொட்டால் போதும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்.அதில் மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., கோடுடன் வருவதால் பொய்தகவல்களை அனுப்ப முடியாது. மேலும் படகு இருக்கும் இடத்தை துல்லியமாகவும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியவரின் மொபைல் எண்ணும் அதில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் குறித்த தகவலை எளிதில் கரையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து, கடற்படை மூலம் மீனவர்களை எளிதில் மீட்க வழி செய்யும், இதில் தகவல்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுவதால், இதற்க்கு மட்டும் அவர்கள் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை துன்பங்களில் இருந்து காக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்றார் அவர்.
 

Thanks to One india .com

Tuesday, November 25, 2014

மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ !



1)இந்திய மீனவர் அனைவருக்கும் மத்திய அரசு அடையாள அட்டையுடன் , ஒரு அலைபேசி ஒன்றும் அளிக்க வேண்டும்.

2) அலைபேசியில் நமது எல்லை தாண்டும் போது அதற்க்கான அபாய அறிவிப்பினை மீனவருக்கு தெரிவிக்க வேண்டும்.

3) நமது நாட்டு கப்பலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.

4) எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை மற்ற நாட்டு கடற் படையினர் அந்தந்த நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும்.

5)  பத்து முறைக்கு மேல்  ஓப்படைக்கப்படும் மீனவருக்கு கடலில் மீன் பிடிக்கும் உரிமையை அந்தந்த அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

6) மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ இரு அரசுகளும் முழுமையான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.

Friday, September 26, 2014

மது - என்னதான் தீர்வு ?




மது குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், மது (ஆல்கஹால்) ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு 'நோயே' !

1. மது பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...


2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் மது குடிப்பவர்களும்...



3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் மது குடிப்பவர்களும்...

 

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...
 

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...
 

6. இன்று மட்டும்தான் மது குடிப்பேன் ( ! ) நாளை மது குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...
 

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...
 

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) மது போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...
 

9. மது குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...
 

10.மது  மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...
 

11.மது  குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...
 

12. மது போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

 
மது - என்ன தான் பாதிப்புகள் ?
 

1. ஞாபக மறதி
 

2. உடல் உறுப்புகள் பாதிப்பு
 

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்
 

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்
 

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்
 

6. தற்கொலை முயற்சி செய்தல்.
 

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில்  சந்தேகித்தல்
 

8. குழந்தையின்மை
 

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.
 

10.  இறுதியில் அகால மரணம்
மது 'குடி' நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

 
என்னதான் தீர்வு ?
 

1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.
 

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.


3.மது போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.


4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.


5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு 'கவுன்சிலிங்' செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.


6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான 'ஜூன் 26' அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.


7. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!


1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.


15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

Saturday, June 14, 2014

நிம்மதியாய் வாழ் !

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :
  • உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே. 
  •  
  • உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
  •  
  • உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
  •  
  • நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
  •  
  • உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
  •  
  • உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
  •  
  • இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.

Friday, April 25, 2014

'என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா !



'நம்மை வெறுப்பேற்றுபவரையும் விரும்புவது சாத்தியமா ? ' என உணர்த்தும் இந்தக் கட்டுரை, உறவுச் சிக்கல்களை அவிழ்க்கும்படியாக அமைகிறது. 'என்னப் புரிஞ்சக்கவே மாட்றாங்கப்பா…' எனப் புலம்புபவர்கள் இதைப் படித்து உணர்ந்தால், அற்புத உறவுகளை அனுபவிக்கலாம்…

சத்குரு:

உங்களை எரிச்சலடையச் செய்பவர்களை எப்படி நேசிப்பது? இது ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆழமாய் எழும் ஒரு கேள்வி. அவர்களை அன்பு செய்வது போல நடிக்க வேண்டாம், அவர்கள் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும்.

சரி, அவர்கள் உங்களை எதற்காக எரிச்சலடையச் செய்ய வேண்டும்?

 நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே பதில். 

அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அவர்கள் இல்லை. 

அதே சமயம் நீங்கள் தீவிரமான கடவுள் பக்தர் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறீர்கள்.

பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் சரிதான், ஆனால் அது நடக்கப் போவதில்லை!

நீங்கள் கடவுளை நம்புபவராக இருந்தால், நீங்கள் வெறுக்கின்றீர்களே அவரும் கடவுளின் படைப்பு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வெறுப்படைவதே 'எது சரி, எது தவறு' என்று நீங்கள் முன்முடிவு எடுத்துவிடுவதால்தான். தங்கள் செய்முறையை ஒருவர் கொஞ்சம் மாற்றிக் கொண்டாலே, "இது தான் சரி," என்ற உங்களுடைய பிடிவாதத்தை அசைத்து விடலாம். அதன் பிறகென்ன அவர்களை வெறுக்க வேண்டியதுதான்..

உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல் இருக்க வேண்டும் என்னும் உங்களுடைய எதிர்பார்ப்பின் விளைவுதான் இது. உலகிலுள்ள எல்லோரும் உங்களைப் போல இருந்தால், உங்களால் இங்கு வாழ முடியுமா? ஏன் உங்கள் வீட்டில் உங்களைப் போல் இன்னொருவர் இருந்தால் உங்களால் அங்கு வாழ இயலுமா? உலகில் உள்ளோர் எல்லாம் தனி குணத்துடன் இருப்பது நல்லதுதான்.

இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அந்த மனிதரைப் பாருங்கள், உலகில் அவர் போல் இன்னொரு மனிதரை உங்களால் அடையாளம் காண இயலுமா? இவரைப் போல் ஒருவர் இல்லை, இவரைப் போல் இன்னொருவர் வரப்போவதும் இல்லை. இந்த மனிதர் தன்னேரில்லாத ஒருவர். இந்த உயிரைப் போல் இன்னொரு உயிர் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், எவ்வளவு விலை மதிப்பில்லாத உயிர் இது என்பதை நீங்கள் பார்த்தால், அவர் உங்களை எப்படி எரிச்சலடையச் செய்ய முடியும்?

உங்கள் எல்லைக் கோட்டை அவர் தாண்டினால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும், அவர் எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டினால் அவருக்கு பித்து பிடிக்கும்.

உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அவர்கள் அனைவரும் தனித்துவமான உயிர்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். அதன்பின் வெறுப்பது என்ற கேள்விக்கு இடமில்லையே? உங்கள் கண் குருடாக உள்ளது, நீங்கள் எரிச்சலடைவதற்கான காரணமும் அதுவே. உங்கள் கண்களைத் திறந்து உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை பார்த்தால், நீங்கள் எரிச்சலடைய முடியுமா என்ன?

இவ்வுலகில் பல்வேறு விதமான சிக்கலான உறவுமுறைகளுக்குள் நீங்கள் வாழ்கிறீர்கள். மனிதர்களின் குறைபாடுகளையும் அவர்களின் தகுதிகளையும் புரிந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து செய்யுங்கள். அப்போதுதான் சூழ்நிலையை உங்களுக்கு தேவையானவாறு மாற்றியமைக்க உங்களால் இயலும். பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் சரிதான், ஆனால் அது நடக்கப் போவதில்லை! ஒரு உறவு உங்களை நெருங்க நெருங்க அவரைப் புரிந்து கொள்ள நீங்கள்தான் இன்னும் பிரயத்தனப்பட வேண்டும்.

பல மாதங்களாக ஒரு மனிதர் கோமாவிற்கு செல்வதும் அதிலிருந்து மீண்டு வருவதுமாக இருந்தார். அவருடைய மனைவி இரவும் பகலும் அவர் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். கவனம் திரும்பிய ஒரு கணத்தில், அவளை அருகில் வருமாறு சைகை செய்தான் கணவன். அருகில் அமர்ந்த அவளிடம், "என்னோட கஷ்ட காலத்தை பத்தி நான் யோசிச்சிட்டு இருந்தேன்… என்னை வேலையிலேர்ந்து சஸ்பெண்ட் பண்ணப்பவும் நீ என்னோட இருந்த, என்னோட வியாபாரம் மூழ்கிப் போனப்பவும் நீ என்னோட இரவும் பகலும் வேலை செஞ்சிட்டு என் கூட இருந்த, என்னை யாரோ சுட்டப்போ அப்பவும் நீ என்னோட தான் இருந்த, இப்போ… நான் உடம்பு சரியில்லாம சரிஞ்சு கிடக்கிறேன் இப்பவும் நீ என்னோட தான் இருக்கிற. இதை எல்லாத்தையும் நான் நினைச்சு பார்க்கும் போது என்னோட துரதிர்ஷ்டமே நீ தான்னு தோணுது," என்றார்.

ஏதோ அடுத்த நபருக்கு குறைபாடுள்ள புரிதல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. நீங்கள் உருவாக்கும் சூழ்நிலைகளால் மற்றொரு நபர் உங்களை சிறப்பான முறையில் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மற்றொருவரை புரிந்து கொள்ள இயலாத போது, அவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று உங்கள் எதிர்பார்ப்புகளை நீட்டிக் கொண்டே போனால், வம்புகளில் தான் போய் முடியும். உங்கள் எல்லைக் கோட்டை அவர் தாண்டினால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும், அவர் எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டினால் அவருக்கு பித்து பிடிக்கும்.

அதுவே உங்கள் புரிந்து கொள்ளும் திறனை அவர்களுடைய புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டு நீங்கள் வளர்த்துக் கொண்டால், அவர்களுடைய புரிதலும் உங்களுடைய புரிதலுடன் இணக்கமாகிவிடும். அவர்களுடைய வரையறைகளையும் திறன்களையும் உங்களால் அரவணைத்துப் போக முடியும்.

எல்லா மனிதர்களிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன, சில கெட்ட குணங்களும் உள்ளன. இதனை உங்கள் புரிந்து கொள்ளும் திறனிற்குள் உள்ளடக்கக் கற்றுக் கொண்டால் உறவுகள் உங்களுக்கு வேண்டியவாறு இயங்கும். அவர்களுடைய புரிதலின் போக்கிற்கு விட்டுவிட்டால் வாழ்க்கை தற்செயலாய் மாறிவிடும். ஒருவேளை உங்களுடைய உறவினர்கள் பெருந்தன்மையான மனதுடன் இருந்தால், உறவுமுறை சுமூகமாக போகும். அவர்கள் அப்படி இல்லாத பட்சத்தில் உறவு முறியும்.

உங்கள் நெருங்கிய உறவோ, உங்கள் அலுவலோ, உங்கள் வியாபாரமோ, இல்லை உலகமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாழ்க்கையை முடிவு செய்பவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், எல்லா மனிதர்களையும், எல்லா பொருட்களையும் உங்கள் புரிதலுக்குள் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

மக்களின் மடத்தனத்தையும் தாண்டியதாய் உங்கள் புரிதல் மலர வேண்டும். உங்களைச் சுற்றி மிக அற்புதமான பல மனிதர்கள் இருக்கிறார்கள், ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர்கள் கொஞ்சம் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் இழப்பது அவர்களைத்தான். அவர்களது கோபங்களையும், அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் நிச்சயமாக அவர்களை இழப்பீர்கள். ஆனால் அவர்களை புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களை எப்படி கையாள்வது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கை ஒரு நேர்கோடல்ல. வாழ்க்கை முறைப்படி நடப்பதற்கு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய வேண்டி வரும். உங்கள் புரிந்து கொள்ளும் திறனை கோட்டை விட்டால், உங்கள் திறமையையும் அதனுடன் சேர்த்தே இழந்துவிடுவீர்கள். தனிப்பட்ட உறவுகள் ஆகட்டும் அல்லது வேலை சூழ்நிலையில் நிலவும் மேலாண்மை ஆகட்டும் இரு இடங்களிலும் உங்களது தேவை - புரிதல். புரிதல் இல்லாத பட்சத்தில் கனிவு தரும் சுகமான உறவுகள் மலராது.

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...