Total Pageviews

Monday, July 22, 2013

வேப்ப மரத்தின் பயன்கள்



வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாகிஸ்த்தானும் தான்.

பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது.

நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம். பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.

வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம்.

இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்

வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீழ் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். தொழுநோய் (குஷ்ட )நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.

வேப்பம்பட்டை 5 பலம், காசறை (கஸ்தூரி) மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும்.

உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம்




பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் காணப்படும் சர்க் கரையின் அளவைப் பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின்  அளவைக் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள உணவு கட்டுபாடு மிகவும் அவசி யமாக உள்ளது. ஆகவே உணவுக்கட்டு பாட்டில் எச்சரிக்கையுடன்  செயல்பட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எந்த வகையான உணவுகளை சேர்க்கலாம் தவிர்க்கலாம் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நீரிழிவுக்காரர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச் சத்துகள், கொழுப்பு சத்துகள், அதிக கலோரிகள் இல்லாத உணவு வகைகளை தேர்வு செய்து  உட்கொள்லாம்.
செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள் கொண்ட உணவுகள்
செறிவூட்டப்பட்ட கொழுப்புக்களை கொண்ட உணவுகளான இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சமைத்த பன்றி இறைச்சி, தீயில்வாட்டிய  இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் செறிவூட்டப் பட்ட உணவை தவிர்க்கவும். குறிப்பாக  பதப்படுத்தபட்ட உணவுகளில் வெண் ணெய் உணவுகளை சேர்க்ககூடாது..
அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தின் முதல் எதிரி. நீரிழிவு நோ யாளிகள் கொழுப்பு உணவு வகை களை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படும்.  ஆதலால் கண்டிப்பாக கொழுப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவுகளான முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் தோல்  போன்ற வற்றில் கொழுப்பு சத்து இருப்பதால் இந்த வகை உணவுகளைத் தவிர்க்கலாம்.
ஃபைபர் நிறைந்த உணவுகள்
நார்சத்து அதிகமுள்ள உணவுகள் செரிமானத்திற்கு நல்லது. இவை ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும். நீரிழிவு  நோயாளி களுக்கு ஃபைபர் நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நார்சத்துகளை கொண்ட ராஸ்பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, உலர்ந்த  திராட்சைகள், பார்லி, தவிடு, பாப்கார்ன், பழுப்பு அரிசி, பயறு வகைகள், ஆர்டிசோக், மற்றும் பட்டாணி போன்ற உணவுகளில் நார்சத்து அதிகம்  கொண்டுள்ளதால் இவை நீரிழிவுக்கு சிறந்தது.
நல்ல கார்போஹைட்ரேட்
சிறந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தஅளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.  சிறந்த கார்போஹைட்ரேட்  கொண்ட உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளான முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், தவிடு,  மற்றும் பருப்பு வகைகள் உள்ளன.
நல்ல கொழுப்புகள் கொண்ட உணவுகள்
நல்ல கொழுப்புகளை கொண்ட உணவு களான பாதாம், ஆலிவ், வெண்ணெய், மற்றும் அக்ரூட் பருப்புகள் சிறந்தவை. சால்மன் மீன், போத்தா மீன்,  கானாங் கெளுத்தி போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.


தொப்பையைக் குறைக்க சரியான வழி




தொப்பையைக் குறைப்பது அவ்வளவு கடினமான விஷயமே இல்லை. பணத்தைச் செலவு செய்து தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று யாராவது ஆலோசனை சொன்னால் உஷாராக இருங்க; அது ஏமாற்று வேலையாக இருக்கும்.

தொப்பை வளர வளர சர்க்கரை நோய், பி.பி., முதுகுவலி, மூட்டுவலி, மனஅழுத்தம் என்று நிறைய பிரச்சினைகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே தொப்பையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது.

முக்கியமான விஷயம், தொப்பையானது ஒரே நாளில் வளர்ந்து விடுவது கிடையாது. ஆனால் தொப்பையைக் குறைப்பது மட்டும் ஒரு சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று பலர் பேராசைப்படுகிறார்கள்.

15 நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம் என்று வரும் விளம்பரங்களில் போய் விழுந்து, உடலைக் கெடுக்து கொள்கிறார்கள். அது தவறு, முடியாத காரியமும் கூட. அது சாத்தியம் என்றால் நம் ஊரில் யாருக்கும் தொப்பையே இருக்காது.

தொப்பையைக்குறைக்க காலை உணவைத் தவிர்க்கிறார்களே, அது சரியா?
தொப்பையைக் குறைக்க சரியான வழி காலை உணவைத் தவிர்ப்பது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட தவறான செயல் எதுவுமில்லை. காலை உணவைத் தவிர்த்தால் உடல்நலம் கெடுவதோடு, தொப்பை முன்பைவிட அதிகமாகிவிடும்.

இரவு 8 மணிக்கு சாப்பிடும் ஒருவர் மறுநாள் காலை உணவைத் தவிர்த்து மதியம் 1 மணிக்கு சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் ஏறத்தாழ 17 மணி நேரம்                      வயிற்றைக் காயப்போட்டதாகிவிடும். காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை  உடலுக்கு வழங்கக் கூடியது.

அதைத்தவிர்த்தால் மதியத்திற்குப் பிறகு பசியால் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். அது தானாக வயிற்றைப் பெருக்க வைக்கும். அதனால் காலையில் மறக்காமல் சாப்பிட வேண்டும், ஆனால் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது.

உணவுப் பழக்க வழக்கங்களால் தொப்பையைக் குறைக்க முடியுமா?
முடியும், அதற்கு பெரிய அளவில் டயட் எல்லாம் இருக்கக் தேவையில்லை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளரில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் தொப்பை குறையும்.

இஞ்சி, மிளகு அடிக்கடி மென்று வர வேண்டும். காலையில் எழுந்ததும் தினமும் கொஞ்சம் கறிவேப் பிலையை பச்சையாக மென்று விழுங்க வேண்டும். தொடர்ந்து 4 மாதங்கள் இப்படி செய்தால் தொப்பை குறையும்.

டயட்டில் இருந்துதான் ஆவேன் என்று அடம் பிடிப்பவர்கள், அந்த சமயத்தில் பச்சைக் காய்கறிகள், தக்காளி, கேரட் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும் அது நல்ல பலனைத்தரும் எதையும் சாப்பிடாமல் சாப்பாட்டின் அளவைக்குறைப்பது, உடலைக் கெடுப்ப தற்கு சமம்.

தொப்பையைக்குறைக்க சிறந்த வழிதான் என்ன?
ஒரே வழிதான் அது உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றால் 30 நிமிடங்கள், நடைப்பயிற்சி என்றால் காலையில் 45 நிமிடங்கள், 3 அல்லது 4 மாதங்கள் தொடர்ந்து நடந்து பாருங்கள். பிறகு உங்கள் இடுப்பின் அளவை அளந்து பாருங்கள் தானாக இடுப்பளவு இறைந்திருக்கும்.

தொப்பையைக் குறைக்க முயல்பவர்களுக்கு சில டிப்ஸ்
1) உடனே தொப்பையைக் குறைக்க நினைக் காதீர்கள். தொப்பை உங்களுக்கு உடனே வந்தது அல்ல. அது வர எவ்வளவு காலம் பிடித்ததோ, அவ்வளவு காலத்தை தொப்பை வெளியேறவும் தாருங்கள்.

2) சாப்பிடாமல் இருக்கக்கூடாது. பசிக்கும் போது மட்டும் அளவோடு சாப்பிடுங்கள். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரம் அவசர மாக சாப்பிடக்கூடாது, மென்று நிதானமாக சாப்பிட வேண்டும்.

3) உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சாப்பிடத் தோன்றினால், பழங்கள், காய்கறிகள் வைத்து சாலட் மாதிரி செய்து, பசிக்கும்போது எல்லாம் சாப்பிடலாம், வாரத்திற்கு ஒரு நாள்அய்ஸ்க்ரீம், பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதால் தப்பில்லை. ஆனால் வாரத்திற்கு ஒரு தடவை தான். அதையே தொடர்ந்து விடாதீர்கள்.

4) தண்ணீர் தான் உங்களின் தொப்பையைக் குறைக்க பெரிய அளவில் உதவக்கூடியது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

5) உங்கள் பிள்ளைகளுடன் அல்லது நண்பர்களுடன் வாரம் ஒரு நாள் ஏதாவது விளையாடுங்கள். வாலிபால், ஃபுட்பால், பூப்பந்து, கபடி என்று ஆடுங்கள். பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி. உங்கள் தொப்பைக்கும் டாடா காட்டலாம்.

6) சிலருக்கு அலுவலகத்தில், குடும்பத்தில், உறவினர்களிடத்தில், சுற்றுச் சூழலில் என்று எந்த வகையிலாவது மன அழுத்தம் இருக்கும். அதைப்போக்க ஒரு அரை மணிநேரம் யோகா பண்ணுங்கள். முடியாவிட்டால் நல்ல நூல்களை தினமும் ஒரு மணி நேரம் ஆழ்ந்து படியுங்கள்.

7) சிகரெட், மது வேண்டவே வேண்டாம். சிலர் சாப்பிட்டதும் ஜீரணிக்கும் என்று ஒரே ஒரு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருப்பீர். அது தான் ஆபத்து, தொப்பைக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும்.

8) மாத்திரைகளால் உடல் எடையையோ, தொப்பையையோ குறைக்க முயற்சிக்கக் கூடாது அது பிற்காலத்தில் பெரிய வம்பில் கொண்டுபோய் விடும் யோசியுங்கள்.

9) குடும்பத்துடன் டி.வி.பார்க்கும் நேரத்தில் குடும்பத்தாருடன் வீட்டுக்குள்ளேயே ஏதாவது விளையாட்டு விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திப் பாருங்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகக் கல்லை தவிர்க்கலாம்!







சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக  உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன.

இது, மிகச் சிறு துகள் அளவில்  துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக்கூடும். எனவே நாள்தோறும் தண்ணீர் அதிகம் குடிப்பதனால் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம்.


Thursday, July 11, 2013

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !





சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



Monday, June 24, 2013

வேலை செய்யும் நிறுவனத்தில் நம் வளர்ச்சிக்கு கடைபிடிக்க வேண்டிய நல்ல 10 பண்புகள்



1) எல்லோரிடத்திலும் எப்போதும், எந்த சூழலிலும் அன்பான அணுகு முறையை கையாளுவது.

2) திட்டமிட்ட அயராத உழைப்பு.

3) அனைவரையும் சமமாக பாவித்து, அவர்களும் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுதல்

4) எளிதில் கவலைப்படாத உறுதியான மனம்.

5) நல்லவற்றைச் செய்வதற்க்கு அன்சாத துணிவு

6) எந்த நிலையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் பிடிவாதக்குணம்.

7) எவரையும் புண்ப்டித்தாத மென்மையாத் தன்மை

8) ஒப்பற்ற ஒழக்கம்

9) குன்றாத உற்ச்சாகம்

10) மாறாத விசுவாசம்



Wednesday, May 29, 2013

மனக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை தத்துவம்


 


பிறரை தண்டனைக்குள்ளாக்காதீர்கள் !

நீங்களும் தண்டிக்கப்படமாட்டீர்க்ள் !.

பிறரை மன்னியுங்கள்!

நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள் !

உன்னிடத்தில் / உங்களிடத்தில் உதவி கேட்கின்ற எவருக்கும் உங்களிடம் உள்ளதைக் கொடுங்கள்!.

உன்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்பவனிடம் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்!.

ஏனெனில்,எதுஎடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே அதாவது இந்த பூஉலகில் இருந்தேஎடுக்க ப்பட்டது. எது இன்று உன்னுடையதாக இருக்கின்றதோ, அது நாளை வேறொருவருடையதாகின்றது. எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது கொடுக்கப்பட்டதோ அதுவும் இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. இந்த உண்மை தெரியாமல்,  இது என்னுடையது,   இது அவனுடையது என்பது அறியாமையே !

வாழ்க்கை என்றல் என்ன?

வாழ்க்கை நம் கையில் ஒப்படைக்கப்படிருக்கிறதா?  அல்லது அது விதிப்படி நடக்குமா?

நீங்கள் போகும் பாதையில் ஒரு கல் கிடக்கிறது நீங்கள் அதை காலால் உதைத்தால் உங்களுக்கு அடிபட்டு துன்பம் வந்துவிடும் அந்த கல்லை எடுத்து ஒரு சிற்பம் செய்தீர்களானால் அந்த சிற்பத்தின் அழகு உங்கள்ளுக்கு மட்டுமல்லாமல் அதை காண்கிற அனைவருக்கும் இன்பத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கையும் அந்த கல் போன்றதே நீங்கள் அதனுடன் தொடர்புகொல்லாதவரை அது விதிப்படியே நடக்கும் நீங்கள் வாழ்க்கை என்னும் கல்லின் மீது மேற்கொள்ளும் வினையின் தன்மையை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மாறுபடும் நீங்கள் மேற்கொள்ளும் வினையின் தன்மை நன்மையாக இருக்குமாயின் உங்களுக்கு நன்மை ஏற்படும் தீமையாக இருக்குமாயின் தீமை ஏற்படும்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் மாசற்றவராக எதிலும்  எங்கேயும்  நிறைந்து  இருக்கிறார். யார் ஒருவர் நல்ல ஓழுகத்துடனும், பிறருக்கு கனவிலும் துன்பம் இழைகாதிருப்பவரும், தூய நெறி, நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவரும், தான,  தர்ம, வழிகளைப்பின்பற்றுபவருமே  கடவுளாகிறார். உங்களை சுற்றியுள்ள உலகை கூர்ந்து கவனியுங்கள் பூமியில் பிறக்கிற எந்த ஒரு சிசுவும் மாசற்றுத்தான் பிறக்கிறது அதற்க்கு ஏதும் செய்ய தெரியாது பொய்சொல்ல தெரியாது தவறு என்பதே அந்த சிசுவிடம் இருக்காது ஏனெனில் கடவுள் மாசற்றவர் அவருடைய படைப்பும் அவ்வாறே இருக்கும்,

பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

கொலை, களவு, செய்யாதிருப்பாயாக.

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

உன் தாயையும் தகப்பனையும் கணம் பண்ணுவாயாக.

உன்னிடத்தில் உள்ளவற்றை பாவப்பட்டவருக்கு கொடுப்பாயாக்!

நீங்கள் பிறரிடத்தில் என்ன  எதிர் பார்க்கின்றீகளோ  அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

பிற உயர்களிடத்தில் அன்பாய் இரு.

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் மாடுகள் போல் இயந்திரதனமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.

நமது கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்பமான வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவருடைய இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம்.

நம் மனதிலிருந்து தான் தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது.

நம் மனம் எப்பொழுது தான் தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால் நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.



Monday, May 27, 2013

பிரச்னைகள்




பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா?

 பொது வேலைக்கு சென்ற இடத்தில் பிரச்னையா? 

அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். 

அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக வீட்டுக்குள் நுழையுங்கள். 

இரவு நல்லபடி கழியும். 

அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...