Total Pageviews

Tuesday, December 22, 2020

முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை!

 

    தவளை கத்தினால் மழை.
 
🌝 அந்தி ஈசல் பூத்தால் 
 
அடை மழைக்கு அச்சாராம். 
 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
 
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
 
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
 
🌝 தை மழை நெய் மழை.
 
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
 
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
 
🌝 வெள்ளமே ஆனாலும் 
 
பள்ளத்தே பயிர் செய். 
 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
 
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
 
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
 
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
 
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
 
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
 
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
 
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
 
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ. 
 
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
 
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
 
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
 
🌝 ஆடு பயிர் காட்டும் 
 
ஆவாரை கதிர் கட்டும்.
 
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
 
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
 
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
 
🌝 தேங்கி கெட்டது நிலம் 
 
தேங்காமல் கெட்டது குளம்.
 
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
 
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
 
🌝 விதை பாதி வேலை பாதி.
 
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
 
🌝 கோப்பு தப்பினால் 
 
குப்பையும் பயிராகாது.
 
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்! 
 
வாழ்க வளமுடன்! 
 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
 
 
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
 
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
 
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
 
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய !

1.உங்களுக்கு சொந்தம் மற்றும் உறவு இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள் . அவர் எவ்வளவு நம்பிக்கை குரியவராக இருந்த போதிலும்.
 
 
 
*ஆசிரியராக
 
*நண்பணாக
 
*டிரைவராக
 
*பக்கத்து வீட்டு காரனாக
 
*whats app நண்பனாக
 
*வகுப்பில் படிக்கும் ஆணாக
 
*கூட வேலை செய்பவனாக...
 
*வியாபாரியாக
 
இருந்த போதிலும், அவர்களை அந்த அந்த இடங்களில் மட்டும் விட்டுவிடு... மொபைல் மூலம் உன் வீடு வரை வரவைக்காதே.
 
2. ஒரு ஆணை நீங்கள் நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் நினைத்து பழகழாம் கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே. அவரின் பார்வையும் அதே மாதிரி உள்ளது என உன்னால் கூறமுடியாது...
 
3. நீங்கள் ஆணிடம் இருந்து எதை வேண்டு மானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..
 
4. பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்! அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்ணை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?
 
5. பெண்ணே ! நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே !
 
6. தந்தையே மகளைக் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது .
 
7. நல்ல ஆண்கள் உன்னிடம் எல்லை தாண்டி வரமாட்டார்கள்.. அதே போல் நீயும் நல்ல பெண் என்றாள் எல்லை தாண்டமாட்டாய்... 
 
8. நாம் சரியாக இருந்தாலே போதும் நமக்கெதிரான குறறங்கள் பாதியாக குறைந்துவிடும்....!

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...