Total Pageviews

Tuesday, August 23, 2022

மனம் !

 


மனதைத் தயார் செய்திடலாம் .

கட்டுப்படுத்த முடியாத மனதை விட மோசமான எதிரி யாரும் இல்லை மனிதருக்கு.

கரைகளைத் தாண்டும் முதலைகளும், கட்டுப்பாடுகளைத் தாண்டும் மனங்களும் தங்கள் பலத்தை இழக்கின்றன.

மனம் இயங்கும் போது இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி மகிழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை வழங்குகிறது.

மனம் இயக்கமற்று இருக்கும் போது தெளிவு, ஞானம், பேரானந்தம் ஞானத்தையும் கடந்த நிலை ஏற்படுகிறது.

விழுவதற்கு உங்கள் கால்கள் முடிவு செய்தால்,  எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதை தயார் செய்யுங்கள்.

விழுவது உங்கள் கால்களாக இருந்தால். எழுந்து
ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.

ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு.

பத்தாயிரம் ரூபாய் பத்தாது என்று சொன்னவனும் உண்டு.

நீங்கள் எடுக்கும் முடிவில் தான் எல்லாம் உள்ளது.

நொடிகளும், நிமிடங்களும் முக்கியமாகும்.
வாழ்வின் போராட்டங்களை எதிர் கொள்பவர்களுக்கு. 

அமைதியும் நிறைவும் தவழும்.

1.அன்புதான்

2.பாராட்டுதான்

3.இருப்பதை நினைத்து   சந்தோஷப்படுவதுதான்

நன்றி ஏன் சொல்ல வேண்டும்.

1. பெற்றுள்ளதை உணர்வதற்காக!

2. இன்னும் தேவையானதைப் பெறுவதற்காக!

3. இருக்கும் நல்லதைத் தக்க வைப்பதற்காக!

நன்றியை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்!

1. மனப் பூர்வமாக/உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

2. நல்ல வார்த்தைகளாலும், நல்ல செயல்களாலும் வெளிப்படுத்தலாம்.

3. நன்றி உணர்வையும் உங்களையும் பிரிக்க முடியாதபடி, நீங்கள் பெறப்போகும் ஒன்றிற்கு, பெற்றுவிட்ட உணர்வோடு வெளிப்படுத்தலாம்.

நன்றியை எதற்கு எதற்கெல்லாம் சொல்லலாம்.

1. பிறந்ததிலிருந்து இதுநாள்வரை வளமோடு வைத்திருக்க உதவும் இயற்கைக்கும், மனிதர்களுக்கும்!

2. நம் உயிரை வைத்திருக்கும் ஆரோக்கியமான உடலுக்கும், உடலிலுள்ள உறுப்புகளுக்கும் !

3. இதுநாள் வரை பெற்ற ஆசீர்வாதங்களுக்கும்,  இனி பிரபஞ்சப் பேராற்றல் தரப்போகும் நன்மைகளுக்கும்!

🔸 நன்றியுணர்வோடு இருப்பதால்
என்ன பலன்கள் கிடைக்கும்

1. முதலில் அமைதியும், திருப்தியும் கிடைக்கும்

2. நீங்கள் தேவையானதாக நினைப்பதைவிட, உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவெல்லாம் கிடைக்கும்!

3. . வாழ்வின் வளங்கள் அனைத்தும் பெற்றதான மனம் உணர்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

Positive Thinking என்றால் என்ன? செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை !

 


நேர்மறை எண்ணம்.

எதையும் Negatie ஆக  யோசிக்காமல், இருப்பது.

செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும் நேர்மை!

சுயநலம் மட்டும் கருதாமல் சமூக நலம் காக்கும் எண்ணங்களும் இந்த catagoryயே என்றேன்.

புரியவில்லையே"என்றார்.

சில வித்தியாசமான examples சொல்கிறேன். எளிதாக புரியலாம்.

1) பறவையை பிடித்து கூட்டில் அடைப்பதை விட, மரம் ஒன்று நட்டால் எண்ணற்ற பறவைகள் கூடுகட்டுமே என்று யோசித்து செயலில் இறங்குதல்.

2) ஒருவருக்கு உதவும் போது பணம் மட்டும் இல்லாமல், அவரே உழைத்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வழி உள்ளதா என்று யோசித்தல்.

3) நம்மை காயப்படுத்துவர்களை திருப்பி எப்படி அடிக்கலாம் என்று யோசிக்காமல், ஒதுங்கி கொண்டு, நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடல்.

4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok. இதிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்று ஆராய்தல்.

5) வெற்றி மேல் வெற்றி வரும் போது, ஆணவத்தோடு என் முயற்சி என்று எண்ணாமல், இறைவனும் நம்மோடு பயணிக்கிறார் என்று அமைதி காத்தல்.

6) உடல் நலமில்லாத வரை காணும் போது, அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மனதார எண்ணுதல்.

7) நம்மை சுற்றி இருப்போர், நமக்கு கடமைகளில் உதவுவோர், நமக்கு நல்லது நினைப்போர், அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துதல்.

8) தெருவில் செல்லும் போது, நம்மை கடக்கும், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் etc etc வாழ்த்துதல்!

9) ஹோட்டலுக்கு செல்கிறோம். உணவு அருந்தி விட்டு புறப்படும் போது பரிமாறியவர்க்கு டிப்ஸ் உடன், புன்னகையோடு Thank you சொல்லி பாருங்கள். அவர் அகமும் முகமும் மலரும்.

10) வீட்டில் நமக்கு உதவியாக இருக்கும் Servantsயும், நம்மை நம்பி வருகிறார்கள் என்று கனிவோடு நடத்துதல்.

சொல்லிக் கொண்டே போகலாம்." என்றேன்.

புரிந்தது " என்றார் நண்பர்.


Friday, August 5, 2022

இரத்த சோகை என்றால் என்ன? Anemia [ Tamil ]

 இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும்.

ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. அதாவது உடலில் போதியளவு ஒக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும். இது உடல் வெளிறுதல், களைப்பு அல்லது சோர்வு, மற்றும் உடற் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.

இரத்த சோகை ஒரு குறுகிய காலத்துக்கு அல்லது ஒரு நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம். தீவிரம் குறைந்த நிலைமைகளில், உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் தான் சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. தீவிரம் கூடிய நிலைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

இரத்த சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

இரத்த சோகைக்கான அறிகுறிகள் அதன் கடுமை, ஹீமோகுளோபின் எவ்வளவு விரைவாகக் குறைகிறது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பனவற்றை பொறுத்திருக்கிறது. ஒரு பிள்ளையின் உடல் எவ்வளவு நன்றாக ஹீமோகுளோபினின் தாழ்ந்த நிலையைச் சமாளிக்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக இருப்பதால், தோல் வெளிறுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைக்கப்பட்டதால், உடலில் சக்தி குறைவுபடுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைந்ததால், உடற்பயிற்சி செய்தபின் அல்லது விளையாடிய பின் விரைவான சுவாசம்

இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் அதன் வகைகள்

இரத்த சோகையில் அநேக வகைகள் இருக்கின்றன. பொதுவாக, காரணங்களின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டச் சத்து இரத்த சோகைகள்

இரத்த சோகை வகைகளுள் மிகவும் பொதுவானது, இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையாகும். இது உணவில் இரும்புச் சத்து குறைவதால் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு இரும்புச் சத்து தேவை. தாய்ப்பால், இரும்புச் சத்தால் பலப்படுத்தப்படாத பசுப்பால் ஃபோர்முலாக்கள், அல்லது முழுப் பசுப்பால் மாத்திரம் குடிக்கும் குழந்தைகளுக்கு 6 மாதங்களின் பின்னர், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. உங்கள் குழந்தை இன்னமும் திட உணவு உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தைகளின் ஃபோர்முலாக்கள் இரும்புச் சத்தால் செறிவூட்டப்பட்டதாயிருக்கவேண்டும்.

முழுமையாக முதிர்ச்சியடைந்த குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியமுள்ள தாய்மார்கள், இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் பரிந்துரை செய்யப்படும் வரையில், 6 மாதங்களுக்குத் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொண்டிருப்பார்கள். தாய்ப்பாலிலுள்ள இரும்புச் சத்து நன்கு உறிஞ்சப்படும். 6 மாதங்களில் திட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இது தாய்ப்பாலூட்டுதல் மாத்திரமல்ல, ஆனால் சிபாரிசு செய்யப்படும் சமயத்தில் இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், இரத்த சோகையை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

உணவில் ஃபோலிக் அசிட், விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.


நோயினால் ஏற்படும் இரத்த சோகைகள்

அரிவாள்செல் இரத்த சோகை என்பது சிவப்பு அணுக்களை உருக்குலையச் செய்யும் பரம்பரை வியாதியாகும். இந்த உயிரணுக்கள், சாதாரண இரத்தச் சிவப்பு அணுக்களைப்போல உடல் முழுவதும் நன்கு நீந்திச் செல்ல முடியாது. இதனால் உடலுக்கு குறைந்தளவு ஒகிசிஜனே கிடைக்கின்றது.

சிறுநீரகம் செயற்படாமல் போதல், புற்றுநோய், மற்றும் க்ரோன்ஸ் நோய் என்பனவற்றாலும் தீராத இரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை நோய் மற்றும் லூபஸ் நோய் போன்ற தன்னுடல் தாக்கும் நோயினாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

அப்ளாஸ்டிக் இரத்த சோகை என்பது ஒரு அரிதான மற்றும் கடுமையான நோய். இது உடல் போதிய அளவு புதிய இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். ஒரு பிள்ளை இந்த இரத்த சோகை நோயுடன் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் ஏற்படலாம் அல்லது ஒரு மருந்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் இது இரத்தப் புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகும்.

ஹீமொலிட்டிக் இரத்த சோகை பெரும்பாலும் ஒரு மரபுவழி நோய். இது அதிகளவில் இரத்தச் சிவப்பு அணுக்களை அசாதாரணமுறையில் அழிக்கும்.

இரத்த சோகைக்கான வேறு காரணங்கள்

  • கடுமையான அல்லது தீராத இரத்தக் கசிவினால் இரத்த சோகை ஏற்படும். தீராத இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை, இரப்பைக் குடற் பாதையில் மிகவும் சாதாரணமாகச் சம்பவிக்கும். இது பசுப்பாலிலுள்ள புரதச் சத்தின் ஒவ்வாமையினால் பெரும்பாலும் சம்பவிக்கும்.
  • தைரோயிட் இயக்குநீர் அல்லது டெஸ்டோஸ்டிரோன் இயக்குநீரின் தாழ்ந்த அளவுகள்.
  • குறிப்பிட்ட சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

இரத்த சோகைக்கான ஆபத்தான காரணிகள்

இரத்த சோகையை விருத்தி செய்வதற்கான உயர்ந்த ஆபத்திலிருக்கும் சில பிள்ளைகளின் பிரிவுகள் இருக்கின்றன. உயர்ந்த ஆபத்துக்குக் காரணமாகக்கூடிய காரணிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • குறைமாதப் பிரசவம் மற்றும் பிறப்பின்போது எடை குறைவாக இருத்தல்
  • முன்னேற்றமடைந்துவரும் உலகிலிருந்து சமீபத்தில் குடியேற்றம் செய்தல்
  • வறுமை
  • உடற்பருமன் அல்லது தவறான உணவுப் பழக்கங்கள்

இரத்த சோகையின் நீண்ட காலப் பாதிப்புகள்

பிள்ளைகளிலுள்ள சிகிச்சை செய்யப்படாத இரத்த சோகை அவர்களின் வளர்ச்சியில் ஒரு கடுமையான பாதிப்பைக் கொண்டுவரலாம். இரத்த சோகை மூளை விருத்தியடைவது மற்றும் செயற்படுவதைப் பாதிக்கலாம். பெரும்பாலும் இது, கூர்ந்து கவனிப்பதில் பிரச்சினைகள், வாசிக்கும் திறனில் தாமதம், மற்றும் மோசமான பள்ளிக்கூடச் செயற்திறன்கள் என்பனவற்றை விளைவிக்கும்.

இரத்த சோகையைக் குறித்து உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிவிக்கும் ஒரு எளிமையான இரத்தப் பரிசோதனையை உங்கள் மருத்துவர் செய்வார். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, அளவு, மற்றும் வடிவம் என்பன இரத்த சோகையின் வகையைக் காண்பிக்கும். ஒரு சில இரத்தத் துளிகளினால் ஹீமோகுளோபினின் அளவை விரைவாக அளந்துவிடலாம். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை இரத்தத்தின் மொத்தக் கனவளவுடன் ஒப்பிட்டும் அளவிடலாம். இந்தப் பரிசோதனை ஹிமட்டோக்றிட் என அழைக்கப்படும்.

உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு உடற் பரிசோதனையையும் செய்வார். உங்கள் பிள்ளையின் சக்தியின் அளவுகள், பொதுவான உடல்நலம் , உணவுகள், மற்றும் குடும்ப வரலாறு என்பனவற்றைப் பற்றியும் கேட்பார்.

இரத்த சோகைக்கான சிகிச்சைகள்

சிகிச்சை, உங்கள் பிள்ளையின் இரத்த சோகை எ​வ்வளவு கடுமையானது மற்றும் அதற்குக் காரணம் என்ன என்பனவற்றைச் சார்ந்திருக்கிறது. பொதுவான சிகிச்சைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • இரும்புச் சத்தைக் கொடுக்கக்கூடிய மருந்துகள் மற்றும் சப்ளிமென்டுகள்.
  • குழந்தைகளின் இரும்புச் சத்து​ நிறைந்த ஃபோர்மூலா.
  • பாலைக் குறைத்து இரும்புச் சத்தைக் கூட்டுதல் போன்ற உணவு முறையில் மாற்றங்கள். இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுக்குள் உட்படுகின்றன. இறைச்சி சாப்பிடாத பிள்ளைகள் கேல், ஸ்பினாச், கொலாட் க்றீன்ஸ் மற்றும் ஆட்டிச்சோக்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்ணவேண்டும்.
  • ஃபோலிக் அசிட் மற்றும் விட்டமின் பி 12 சப்ளிமென்டுகள்.

கடுமையான நோயொன்றினால் உண்டாகும் இரத்த சோகை பின்வருவனவற்றை தேவைப்படுத்தலாம்:

  • சிலகுறிப்பிட்ட வகையான இரத்த சோகைக்கு இரத்தம் ஏற்றப்படும். இவை ஹைப்போபிளாஸ்டிக் இரத்த சோகை, தாலஸ்ஸமியா, மற்றும் ஹீமோகுளோபினோபதீஸ் என்பனவற்றை உட்படுத்தும். அடிக்கடி இரத்தம் ஏற்றுவதனால் உடலில் இரும்பின் அளவு அதிகரித்து விஷம் சார்ந்த பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தலாம். இரத்தமேற்றுதல்களுடன் உடலிலிருந்து இரும்புச் சத்தை அகற்றும் மருந்துகள் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படலாம்.
  • தொற்று நோயை எதிர்க்கக்கூடிய மருந்துகளினால் சிகிச்சை.
  • எலும்பு மஜ்ஜையை அதிகளவு இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யச் வைப்பதற்கான சிகிச்சை.
  • மண்ணீரலை அகற்றுதல். பிறப்பு சார்ந்த ஸ்ஃபெரொசைற்றோசிஸ் மற்றும் பிறப்பு சார்ந்த எலிப்ற்றோசிற்றோசிஸ் போன்ற சில நிலைமைகள், மண்ணீரலைக்கொண்டு அதிகளவு இரத்தச் சிவப்பணுக்களை அழிக்கச் செய்கின்றன.
  • ​ அரிவாள்செல் இரத்த சோகை, தலஸ்ஸெமியா, மற்றும் அப்ளாஸ்டிக் இரத்த சோகை போன்ற கடுமையான நிலைமைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை ஒரு தெரிவாக இருக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழைக்கவும்:

  • உங்கள் பிள்ளை அடிக்கடி வெளிறி, களைப்படைந்து மற்றும் விரைவாகச் சுவாசிக்கிறான்.
  • உங்கள் பிள்ளைக்கு இரத்த சோகை இருக்கலாம் என நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.

முக்கிய குறிப்புகள்

  • மிகவும் பொதுவாக, இரத்தத்தில் போதியளவு இரும்புச் சத்து இல்லாதிருப்பதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • உங்கள் பிள்ளை அடிக்கடி களைப்படைந்து, பெலவீனமாக மற்றும் வெளிறி இருந்தால் இரத்த சோகைக்காக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.
  • உங்கள் குழந்தை இன்னும் திட உணவுகள் உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தை ஃபோர்மூலாக்கள் இரும்பு சத்தால் நிறைந்திருக்கவேண்டும்.
  • இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்பட, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.​​

Wednesday, July 13, 2022

பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு.....!!!

பயமாக இருக்கிறது.... இன்றைய தலை            முறையினரின் போக்கு.....!!!

பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்

படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.

கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..

காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..

பெண்கள் மீது மரியாதையே இல்லை..

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..

ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..

ஒரு வரி கூட வாசிப்பதில்லை..

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..

வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..

பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..

சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..

ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....

இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..

பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..

பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..

தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...

அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....

இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..

இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..

மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்

கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை.

எதிர்கால வரலாறு.....

மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை..

பயமாக இருக்கிறது......இன்றைய தலைமுறையின் போக்கு....

பெ.திருநாவுக்கரசு.Sub Inspector of Police.

Monday, July 11, 2022

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

 உணவின் சுவையை அதிகரிக்க நாம் சேர்க்கும் ஓர் பொருள் தான் உப்பு. ஆனால் நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்து உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.

 உடலில் உள்ள திரவ அளவை கட்டுப்படுத்த, சிறிய அளவில் உப்பை சேர்த்தால் போதும். அளவுக்கு அதிகமாக உப்பை சேர்த்தால், இரத்த நாளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதனால் தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு வந்தால், அதனால் இதய நோய், உடல் பருமன், அதிகப்படியான டென்சன், பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

 எனவே தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களை, உணவில் உப்பை சேர்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர்.

இங்கு உடலில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தாலேயே உடலில் உள்ள உப்பை வெளியேற்றிவிடலாம்.

பீன்ஸ் !

பீன்ஸ் புரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்து வந்தால், உடலில் இருந்து உப்புச்சத்தின் அளவு குறையும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களின் உணவில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள உணவுகளைச் சேர்ப்பது நல்லது.

  தயிர்! தயிர்!

  தயிரை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும், உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றலாம். ஏனெனில் தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

 மீன்! மீன்!

 


மீனை உட்கொண்டு வந்தால், அதில் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பும் குறையும். எனவே சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் உட்கொள்ளுங்கள்.

 வேக வைத்த உருளைக்கிழங்கு

  வேக வைத்த உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோலில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை வேக வைத்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு குறையும்.

  உலர் திராட்சை

 உலர் திராட்சை உலர் திராட்சையிலும் பொட்டாசியம் வளமாக உள்ளதால், இதனை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் உப்பு அதிகம் சேர்வதைத் தடுக்கலாம். உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட்டிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் ஒரு உலர்ந்த ஆப்ரிக்காட்டை உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

 வாழைப்பழம்

 


வாழைப்பழம் வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்துள்ள உணவுகள் ஓட்ஸ், நார்ச்சத்துள்ள காய்கறிகள், கோதுமை பிரட் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், அதிகப்படியான உப்பை உடலில் இருந்து வெளியேற்றலாம்.

 மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலின் மெட்டபாலிச அளவை அதிகமாக பராமரிக்கும். உப்பை சேர்க்க வேண்டாம் உப்பை சேர்க்க வேண்டாம் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தம் வரக்கூடாதெனில் உப்பை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.

 

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...