Total Pageviews

Friday, December 5, 2025

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

 

சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்கு செலவு செய்யும் பணத்தை உணவுக்காக செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் .

இதற்கான அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

#உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,

கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.

வாழ்வதற்காக உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்

அமைதியுடனும்

பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு

30 நிமிடம் முன்னதாகவும்

உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

எனவே,

நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்....

~பிரபு சண்முகம்

தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டால் !

 எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரின் தாய் , உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பூரி தொண்டையில் சிக்கி அவர் கண்முன்னே இறந்தார் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்

இத்தகைய நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இங்கே வாழைப்பழமோ? ரம்புட்டான் பழமோ? அதன் விதையோ? பூரியோ? தனிப்பட்ட காரணங்கள் அன்று

நாம் உண்ணும் எந்த உணவுப் பொருளும்

குறிப்பாக சிறார் சிறுமியிடத்திலும் முதியோர் இடத்திலும் சில நேரங்களில் இளையோர் இடத்திலும் கூட தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

பொதுவாக உணவை

லயித்து அமைதியாகப் பொறுமையாக உணவைப் பார்த்து ரசித்து நன்றாக மென்று உண்ண வேண்டும். வெடுக் வெடுக்கென வேகமாக விழுங்குவதோ, வேறு ஏதேனும் விஷயத்தில் கவனத்தை வைத்துக் கொண்டு உணவை விழுங்குவதோ தவறானது.

முக்கியமாகப் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவது மிகவும் ஆபத்து.

சோக்கிங் வாய்ப்பை அதிகரிக்கும்.

சிறார் சிறுமியர்

முதியோர்களிடத்தில் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும்.

இதனால் தொண்டைப்பகுதி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவ்வாறு நாம் உண்ணும் உணவோ அல்லது ஏதேனும் பொருளோ தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுப் பாதையில் தடையை ஏற்படுத்துவதை "சோக்கிங்"(CHOKING) என்று அழைக்கிறோம்.

இது யாருக்கு வேண்டுமானாலும்

எப்போது வேண்டுமானாலும்

எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால்

இதற்குண்டான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது சிறந்தது.

உணவாலோ வேறு பொருட்களாலோ

சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலில் இருப்பவர்களால் இரும முடிந்தால் அவர்களைத் தொடர்ந்து இருமுவதற்கு பணிப்பது நல்லது.

"இருமல்" என்பது சுவாசப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை வெளியே கொண்டு வரும் வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை அந்த நபரால் இருமவோ பேசவோ கத்தவோ முடியாத நிலையில் இருப்பின்

உடனே நாம் செய்ய வேண்டியது

அவருக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு

நமது கரங்களில் அவரது மார்புப் பகுதியைத் தாங்கிக் கொண்டு

அவரை இடுப்புப் பகுதியில் குனிவதற்குப் பணித்து

அவரது பின் புறத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில்

நன்றாக உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம்

அடைப்பு சரியாகும் வாய்ப்பு அதிகம்.

இந்த செயல்முறையில் பலன் கிட்டாவிடில் நாம் செய்ய வேண்டியது

"ஹெம்லிச் செயல்முறை"

அது என்ன?

எப்படி செய்வது?

மூச்சுத் திணறல் ஏற்பட்டவரின் பின் புறம் நின்று கொண்டு

அவரது இடுப்பை பின்புறத்தில் இருந்து ஒரு கைகொண்டு அணைத்துக் கொள்ள வேண்டும்.

கைகளின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவது போல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைத்து கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப் பகுதியில் இருக்குமாறு வைக்க வேண்டும்.

இப்போது மற்றொரு கையை பின்புறத்தில் இருந்து முன்பக்கமாக அவரை அணைத்து இன்னொரு கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போது வேகமாக அழுத்தமாக மேல்நோக்கி இரண்டு கைகளையும் வயிற்றுப் பகுதியில் அழுத்தித் தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த நபரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இந்த செயல்முறை அமையும்.

இவ்வாறு தொடர்ந்து வேகமாக ஐந்து முறை செய்ய வேண்டும்.

மேற்கூறிய பின்பக்கம் தட்டுதலை ஐந்து முறையும்

இந்த ஹெம்லிச் செயல்முறையை ஐந்து முறை என்று தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதற்கிடையில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர் மூர்ச்சை நிலைக்குச் சென்றால்

அவரை கீழே அவரது முதுகுப் பகுதி தரையில் கிடக்குமாறும் அவரது கைகள் இருபுறமும் இருக்குமாறும் கிடத்தி அவரது வாயை நோக்க வேண்டும்.

உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திய உணவுப் பொருள் அல்லது வேறு பொருள் கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் அதை கைவிட்டு லாவகமாக எடுக்க வேண்டும்.

கண்ணால் அந்த பொருளை பார்க்காமல் கையை விட்டு எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மேற்கொண்டு அந்தப் பொருளை உள்ளே தள்ளி விட்டு அதனால் மேற்கொண்டு சுவாசப்பாதை அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.

அந்த நபருக்கு மூச்சு இல்லாத நிலை இருப்பின் தொடர்ந்து சிபிஆர் எனும் உயிர்காக்கும் இதய மற்றும் சுவாசப்பாதை மீட்பு முதலுதவியை வழங்கி வர வேண்டும்.

ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது

நமது கைகளை இணைத்துக் கொண்டு நமது வயிற்றுப் பகுதியில் வைத்து கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். அந்த கடினமான தளம் என்பது நாற்காலியாக இருக்கலாம் அல்லது மேஜையாக இருக்கலாம்.

பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவர்கள் எளிதில் வாய்க்குள் போட்டுக் கொள்ளாத அளவில் விளையாட்டுப் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்மில் யாருக்கேனும் திடீரென உணவு சாப்பிடும் போது இத்தகைய சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டால்

மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

-பகிர்வு

Saturday, November 29, 2025

சாவு வீட்டில் கையில் காசு இல்லாமல் திணரும் குடும்பம் !

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது...

தவறாக எண்ண வேண்டாம்:

கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா...?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.

எளிமையாக பார்த்தாலும்::

ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30, 40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????.

சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது????

என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?.

கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக் கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.

இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவு செய்து ஏற்க வேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...

அப்படி என்ன செயல்?...

இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம். தேவையானால் மரியாதைக்கு உதிரி பூ தூவுங்கள். ஏன்?...

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்.

அந்த பூ மாலைக்கு ரூ100/- 200/- 500/- 1000/-  என செலவு செய்வதை விட..

இறந்து போன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்.

ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் தள்ளிக்கிட்டு போக, ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும். ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில்தான் தூக்கி போவார்கள். ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை. மனதிலும் தெம்பு இல்லை.

எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.

திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.

“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.

நாம எழுதுற மொய்ப் பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்.

கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை.

நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு கால நெருக்கடியில உருவாகி இருக்கலாம்.

ஆனா கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் ... மொய் எழுதும் பழக்கம் அவசியம் இன்றைய விலைவாசி கால நிலைமைக்கு தேவை.

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல??

ஆனா பெரும்பாலும் இல்லைதானே.

அம்மாவை, அப்பாவை, அண்ணனை, தம்பியை, பிள்ளையை, இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?. தன்மானம் சுட அவனை நாம் கடனோ உதவியோ கேட்க விடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கு ம் சகமனிதன் ஒருவனின் கரங்களை இறுக பற்றி

“நாங்க இருக்கோம்யா, தைரியாமா இருய்யா. செலவை நாம் எல்லோரும் பாத்துக்கலாம்” என சக மனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்ல வேண்டிய தருணம் மற்றதை விட அதுதான்.

இதுவரை இல்லாவிட்டாலும்..... 

இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது.

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.

நம் நண்பன் வீடாக இருந்தாலும் சரி.

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?.

கண்டிப்பாக செய்தே தீர வேண்டும்*

தொகை முக்கியம் அல்ல.

இயன்றது.

Wednesday, November 26, 2025

நம் முன்னோர்களே நமது அடையாளம்!

 


ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

இது இந்தியாவின் உண்மை.

அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக.

ஆம்...

அது நாமாகவோ,

நம் தாயாகவோ, தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,

அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.

வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்,

அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள்

இரு கைகளை கூப்பி வணங்குபவர்கள்.

வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்

அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்

அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்,

அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும், அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது.

செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்

தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்

எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்,

கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்

சமூக பயம் உள்ளவர்கள்,

பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்

பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள்

வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.

இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா?

ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.

மரியாதை கொடுங்கள்

அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்

இல்லையெனில் அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்

அதாவது, மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை,

கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை,

மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை

எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்.


நம் முன்னோர்களே நமது அடையாளம்.

அவர்களே நமது முகவரி

மற்றும் நமது பெருமை!

அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்.

அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும், நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு"

Tuesday, November 25, 2025

ஆண் வாரிசுகள் இல்லாத பெண் மட்டுமே உள்ள குடும்பங்களில் அவர்களின் பெற்றோரின் இறுதிக் காலம் எப்படி முடிவுக்கு வருகிறது?

 


  • இதுவும் ரொம்ப உணர்வுபூர்வமான, ஆனா சமூகத்துல நாம பார்க்கிற ஒரு முக்கியமான கேள்வி. ஆண் வாரிசுகள் இல்லாத, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்கள்ல பெற்றோரோட இறுதிக் காலம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
  • இந்தக் காலத்துல, "ஆண் வாரிசுதான் பாதுகாப்பான்"ங்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வருது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாதிரி, பெற்றோரைப் பார்த்துக்கிற விஷயத்துலயும் ரொம்பவே பொறுப்பாவும், அக்கறையோடும் இருக்காங்க.
  • பெண் குழந்தைகள், திருமணத்துக்குப் பிறகும், பெற்றோரின் உடல்நலம், மருத்துவச் செலவு, உணவு போன்ற விஷயங்கள்ல முழுப் பொறுப்பை எடுத்துக்குறாங்க. மகன்களைவிட உணர்ச்சிபூர்வமான அக்கறை பெண்கள்கிட்ட அதிகமா இருக்குன்னு நிறைய ஆய்வுகள் சொல்லுது.
  • பெரும்பாலான நேரத்துல, மகள்களோட கணவர்கள் (மாப்பிள்ளைகள்) இந்தப் பொறுப்புகளைப் புரிஞ்சுகிட்டு ஆதரவு தர்றாங்க. பெற்றோரின் வீட்டுச் செலவு அல்லது மருத்துவச் செலவை மகளும் மாப்பிள்ளையும் சேர்ந்து ஏத்துக்குறாங்க.
  • மகள்கள் வெவ்வேறு நகரங்கள்ல அல்லது வெளிநாடுகள்ல இருக்கும்போது, நேரடியா அவங்களோட இருக்க முடியாது. அப்போ, பெற்றோர்கள் சில சமயம் தனிமையையோ அல்லது உதவிக்கு ஆள் இல்லாமலோ கஷ்டப்படலாம்.
  • இந்தக் குடும்பங்கள், வீட்டு வேலை மற்றும் பராமரிப்புக்கு ஆட்களை நியமிப்பது, அல்லது வசதியைப் பொறுத்து முதியோர் இல்லங்கள் போன்ற தீர்வுகளை நோக்கிச் செல்வதுண்டு. இதுதான் இந்தப் பிரிவில் இருக்கும் ஒரு பெரிய சவால்.
  • பெற்றோர்கள் தங்கள் கடைசி காலத்துல, மகளோட வீட்லயே போய்த் தங்குற பழக்கம் இப்போ அதிகமாயிட்டிருக்கு. அவங்க தங்கள் மருமகன் வீட்டிற்குப் போறதைப் பத்தித் தயக்கம் காட்டுறது இல்ல.
  • ஆண் பிள்ளை வேணும்னு எதிர்பார்த்த பெற்றோர்கள்கூட, தன் மகள்கள் நல்லா பார்த்துக்கும்போது, "ஆண், பெண் வித்தியாசம் இல்லை; நல்ல குணம்தான் முக்கியம்"னு சொல்லி மனநிறை வடையறாங்க.
  • பெற்றோரின் கடைசி காலத்தில் இருக்கும் ஒரே சவால், மகள்கள் தங்கள் புதிய குடும்பம் மற்றும் பிறந்த வீடு ஆகிய இரண்டையும் சமன்செய்வதில் ரொம்பவே சிரமப்படுறதுதான்.
  • சுருக்கமா, ஆண் வாரிசுகள் இல்லாதது பெரிய பிரச்னையே இல்லை. மகள்கள் மனசு வெச்சா, பெற்றோரின் இறுதிக் காலம் அன்பு, அரவணைப்பு, மற்றும் பொறுப்போடுதான் நிறைவடைகிறது.

திருமணமே செய்துகொள்ளாத பிரம்மச்சாரிகளின் கடைசி கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

 

இளமையில் சிங்கிள்தான் கெத்து. திருமண வாழ்க்கையை விட பிரம்மச்சாரியம் தான் சிறந்தது என செல்லும் பல ஆண்களுக்கு முதுமையில் இந்த நிலைதான் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.....

மிக கடினமாக இருக்கும்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியது மிகவும் வேதனைக்குரியது.

அந்த பெண்ணின் சகோதரர் "சிங்கிள்தான் கெத்து" என்ற மனநிலையில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இளமை தீர்ந்தது.திருமணம் வயதை கடந்தாயிற்று. இப்போது திரும்பி பார்த்தால் சிங்கிள்தான் கெத்து என‌ சொல்லி அவருடன் சுற்றிய சக நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவரை விட வயதில் குறைந்த உறவினர்கள் அணைவரும் திருமணம் முடித்து விட்டார்கள் ,

இப்போது அவர் மட்டும் தனி மரமாக வாழ்கிறார். சுகர் போல எதோ நோய் வேறு உள்ளதாம்.

"நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னால், நீங்களாவது என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே" என அழுதாராம்.

திருமணம் ஆகாத தனி மனிதராக இருப்பதால் வெட்கத்தில் உறவு முறைகளில் நடக்கும் விஷேசத்திற்க்கு, திருமணத்திற்கு கூட அவர் சகோதரர் செல்லாமல் தவிர்ப்பதாக சொல்லி அந்த சகோதரி அந்த நீயா நானா அரங்கத்திலேயே அழுது காணும் நம்மையும் அழ வைப்பார். 

Thursday, November 13, 2025

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?

பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.

அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தேன்- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது? | Home Remedies To Remove Hair From Face In Tamil

அதன் பின் நீரில் நனைத்த துணியால் முடி வளரும் எதிர்திசையை நோக்கியவாறு துடைக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

2. தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்கும்.

Thanks to Lakasri.com 

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு

  சக்கரை நோயை வைத்து, இந்தியாவில் 1000க்கும் மேல் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர். இனிமேலாவது இதற...