Total Pageviews

Wednesday, January 7, 2026

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகளை மொபைல் போன்களில் பார்க்கிறார்கள். ஆனால், இதற்கு இணையச் சேவை கட்டாயம் தேவைப்படுகிறது. விரைவில், இணைய இணைப்பு இல்லாமலேயே இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு 'டைரக்ட்-டு-மொபைல்' (Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் வரவிருக்கிறது. இந்தச் சேவை, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D2M தொழில்நுட்பம் செயல்படுவது எப்படி?

D2M தொழில்நுட்பம், மொபைல் டேட்டா அல்லது வைஃபை இல்லாத மொபைல் போன்கள் கூட, நேரடியாகச் செயற்கைக்கோள் மற்றும் ஒளிபரப்பு கோபுரங்களில் இருந்து நேரடி உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பம், அடிப்படை ஃபீச்சர் போன்கள் உட்பட ₹1,000 முதல் ₹2,500 வரையிலான குறைந்த விலை போன்களில் அணுகக் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர்.

இது அடிப்படையில் உங்கள் போனை ஒரு ஒளிபரப்பு சிக்னல்களைப் பெறும் தொலைக்காட்சி பெட்டியாக மாற்றும்.

எந்தெந்த சாதனங்களில் பயன்படுத்தலாம்?

 

டாடா குழுமத்திற்குச் சொந்தமான சாங்க்யா லேப்ஸ் (Saankhya Labs) உருவாக்கிய SL-3000 சிப்செட் மூலம் இந்தச் சேவை செயல்படுத்தப்படும்.

லாவா மற்றும் எச்எம்டி (Lava and HMD) போன்ற போன் தயாரிப்பாளர்கள் ₹2,000 முதல் ₹2,500 விலையில் D2M திறன் கொண்ட ஃபீச்சர் போன்களை உருவாக்கி வருகின்றனர். முதற்கட்டமாக, பொது ஒளிபரப்பாளரான பிரசார் பாரதியின் உள்ளடக்கங்கள் இந்தச் சாதனங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும். டெல்லி மற்றும் பெங்களூருவில் இதன் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

எதிர்கால திட்டங்கள்

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில், பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சுமார் இரண்டு டஜன் நகரங்களில் மேலும் பல சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், அரசு அவசரகால எச்சரிக்கைகள் மற்றும் பொது அறிவிப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே கோடிக்கணக்கான மக்களுக்கு அனுப்ப முடியும்.

இருப்பினும், டேட்டா மூலம் வருமானம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

எனினும், D2M தொழில்நுட்பம் இந்தியாவின் டிஜிட்டல் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Thursday, January 1, 2026

தலைவர்கள் குருபூஜை பொதுமக்களை தொந்தரவு பண்றது !

 


தெய்வமா போற்ற படும் தலைவர்கள் குரு பூஜைக்கோ, கோவிலுக்கோ எங்க போறதுனாலும் சாராயம் குடிக்காம மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம போயி வணங்கிட்டு வர்றது தான் தெய்வங்களுக்கு செய்யுற அதிகபட்ச மரியாதை...

அங்க போறப்போ அலப்பறைய கூட்டுறோம்னு சரக்க போட்டுட்டு ஆடுறது, வாகனங்கள் மேல ஏறி குதிக்குறது,  பஸ் மேல ஏறி பொதுமக்களை தொந்தரவு பண்றது , ரயில் மேல ஏறி கரன்ட் கம்பிய பிடிக்குறது ன்னு சில அல்ற சில்றைங்க பண்ணிட்டு தான் இருக்கு... 

இதெல்லாம் அறுவறுக்க தக்க விஷயம்... சிலர் பண்ற தப்பால அந்த தலைவர்கள் மேல கூட பொது மக்களுக்கு வெறுப்புதான் வரும்...

கோபி சுதாகர் வீடியோ பாத்தப்போ உள்ளததான் போடுறான்னு தோணுச்சு...

ஆனா புரியாத ஒரே ஒரு விஷயம் என்னன்னா இந்த அலப்பறை பண்றதெல்லாம் ஆதிக்க சாதி ன்னு சொல்ற பெரும்பான்மை சமுதாய பசங்க மட்டும் தானா?

தேவர்,  தீரன் சின்னமலை,  அழகு முத்து கோன், சித்திரை முழுநிலவு மாநாடு, இம்மானுவேல் சேகரன்,  ஒன்டிவீரன், ன்னு   தமிழகத்துல அத்தனை சாதிக்கும் ஒரு விழா நடந்துட்டு தான் இருக்கு...

எல்லா சாதிலயும் அசிங்கம் பிடிச்சவனுங்க இருக்கதான் செய்யுறானுக... அவன் பண்றான் அவன கேளுன்னு சொல்றத விட முதல்ல நான் சரியா இல்லேங்குறத ஒத்துக்கணும்.‌‌ என் சமூக இளைஞன் தப்பு பண்ணா அத நான் கண்டிக்கணும் முதல்ல... 

அப்புறம் மத்தவங்கள குறை சொல்லலாம்...

கடந்த பத்து வருஷங்கள்ல ஆணவக்கொலை எத்தனை நடந்துருக்கு?? காதலிக்க மறுத்த மேல் சாதி பெண்ணை வெட்டி கொன்னது, கத்தியால குத்துனுது எத்தனை சம்பவம் நடந்துருக்கு??

தப்புன்னா எல்லாமே தப்புதான... சாதிக்கொரு சட்டம் நீதிலாம் வேணாம்.. யார் தப்பு பண்ணாலும் தப்புதான்.. எவன் பண்ணாலும் கண்டிக்கணும்.‌‌..

என் சாதிக்காரன் தப்பு பண்ணா சரி.. பாதிக்க பட்டது என் சாதிக்காரன்னா பொங்குவோம்னா அதுதான் உண்மைலயே ஊறிப்போன சாதிவெறியின் உச்சம்...

Wednesday, December 31, 2025

கடன் வாங்கி வீடு வாங்கலாமா?

 

உறவினர்களிடம் கடன் வாங்கி வீடு வாங்கலாமா?

வேண்டாம். அவ்வாறு வாங்கி வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ சில நேரத்தில் தவறாக முடிந்து விட வாய்ப்புள்ளது.

உங்கள் நிம்மதியும் தொலைந்து, அவமானத்தை யும் சந்திக்க வேண்டி வரலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர்

பழைய ஓட்டு வீட்டில் வசித்தார் அவர் பக்கத்தில் இருந்த காலி மனையில் வீடு கட்ட ஆரம்பித்தார். நானும் என் நண்பர்களும் அங்கதான் விளையாடி கொண்டிருப்போம்.

பார்த்து பார்த்து கட்டினார். மிக அழகான வீடு. குடிசையில் வாழும் எனக்கு அந்த வீடு பெரும் பிரம்மிப்பை தந்தது.

எல்லாம் முடிந்து வண்ணம் பூசி கொண்டிருக்கிறார்கள். பிரச்சனை ஆரம்பம் ஆனது. அப்போதுதான் தெரிகிறது பலரிடம் அவர் கடன் வாங்கி இருக்கிறார்.

பலர் வீட்டின் முன்னே சத்தம் போட ஆரம்பித்தனர். மிக அமைதியான அந்த ஆசிரியர் மிகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

பல அவமானங்கள். வேறு வழியில்லாமல் அந்த வீட்டை விற்க வேண்டி வந்தது. கடன்கார்ர்களின் பெரும் தொல்லையினாலும், மன வேதனையில் இருந்த்தாலும் உடனே விற்பனை செய்ய வேண்டிய நிலையினாலும் மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்ய நேரிட்டது.

எல்லோருக்கும் கடனை அடைத்தார். அவர் சேமிப்பையும் சேர்ந்து இழந்தார்.

கண்டிப்பாக அவர் மனதில் ஒரு திட்டத்துடனே கடன் வாங்கி இருப்பார். ஆனால் காலம் என்ன கணக்கு வைத்திருக்கும் என்று யாருக்கு தெரியும்.

நிகழ்காலத்தில் நாம் போடும் கணக்குகள் எல்லாம், எதிர்காலத்தில் சரியான விடையை அளிக்கும் என்று சொல்ல முடியாது.

கடன் வாங்கலாம். அது நம்மை படு குழியில் தள்ளி, ஏற முடியாத அளவிற்கு கடனாக இருக்கக்கூடாது. முட்டிகால் அளவுக்கு கடன் இருந்தால் எளிதாக ஏறிவிடலாம்.

இன்றும் அக்கட்டிடம் சாட்சியாக நிற்கிறது.

நான் வீடு கட்டும்போது ஒரு ரூபாய் கடன் இல்லாமல் தான் கட்டினேன். கடன் வாங்கி ஆடம்பரமாய் கட்டாமல் என் தேவைகளுக்கு ஏற்ப கட்டினேன். எவர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இல்லை எனக்கு.

வீட்டை கட்டிபார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள். நாம் எதிர்பார்க்கும் செலவுகளை தாண்டி செல்லும். நாம் தான் விழிப்போடு இருந்து கடன்களை தவிர்த்து, நம் விரல்களுக்கு ஏற்ற வீக்கத்தை பொறுத்து கடன் வாங்க வேண்டும்.

முழுதாக கடன் வாங்கி முழுகி விட கூடாது.

பணத்தை கடன் வாங்கியவர்👇

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...

இது ஆடம்பர வீடு.....

திருமணத்தில் அறுசுவை உணவை வீணாக்காதீர்கள்.!

 

நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

99+ Thousand South Indian Food Royalty-Free Images, Stock Photos & Pictures  | Shutterstock 

🚩நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

🚩கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

🚩ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

🚩ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

🚩நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள்.

உணவை வீணாக்காதீர்கள்....

வாழும் நாள் வரையிலும் நிம்மதியாக வாழப் பழகுங்கள் !!

 


இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா?
 ஒரு சில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், 
 
அடுத்த வேளை உணவுக்கான ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும், 
 
பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்.
 
படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர். 
 
சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக் கொண்டிருப்பார். 
 
ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென 
உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.
 
மறுநாள் விருந்தில், 
 
கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக் கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக் கொண்டிருப்பார்.
 
இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியமாய் வகுத்திருப்பர். 
 
தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகி விட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துக் கொண்டிருப்பார். கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்.
 
அடுத்து வரும் நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும். உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்.
 
இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,
 
ஒருமாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார், அடுத்து வரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத் துவங்கியிருப்பர், அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்,
 
ஒரு பெரிய ஆலமரத்தின்  இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்.
 
நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள். இதற்கிடையில் உங்கள் முதல் வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.
 
கண்மூடித் திறக்கும் நொடியில் வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவு கொள்ளக்கூடும், 
 
உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம்  பேர்களில், 
யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், 
அபூர்வமாய் உங்களைப் பற்றி யாரிடமோ பேசக்கூடும்.
 
மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, 
வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். 
 
மற்றபடி, நீங்கள் எதுவுமே  இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி 
பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்.
 
இப்போது சொல்லுங்கள்... 
 
உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, 
 
இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் ?
 
வாழும் நாள் வரையிலும் நிம்மதியாக வாழப் பழகுங்கள் !!
 
படித்ததை பகிர்ந்துள்ளேன் உண்மையும் கூட...
 
--#தருமபுரி_ஜெகன்

Tuesday, December 30, 2025

பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது ஏன்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

 

பெருமாள் கோவிலுக்குச் சென்றால் அங்கு தீர்த்தம் கொடுப்பார்கள். இது எதற்கு தருகிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாங்கிக் குடித்து விட்டு கண்ணில் ஒற்றிஇ தலையில் தடவி விட்டுச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இதன் உண்மையான தாத்பரியம் இதுதான்.

பெருமாள் கோவிலைப் பொருத்தவரையில் 3 முறையில் தீர்த்தம் வாங்க வேண்டும். இதைக் கேட்டும் வாங்கலாம். முதல் முறை தீர்த்தம் ப்ரதமம்இ காரீய சித்யர்த்தம் என்று பெயர். நம் செயல்களில் வெற்றி பெற வேண்டி இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை தவிதீயம். தர்மஸ்தாபனம் என்கிறார்கள். நாம் வாழ்க்கையில் தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது. மூன்றாம் முறை தீர்த்தத்தை சத்ரிதீயம் சமோஷ ப்ரோக்தம். அதாவது குணார்னவம் என்கிறார்கள்.

மெய்ப்பொருளான பகவானை உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. மூன்று முறையும் பருக வேண்டும். தலையில் தடவ கூடாது. கண்ணிலும் ஒத்திக் கொள்ளக் கூடாது. அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியிலோ வாங்க வேண்டும். பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும். கீழே சிந்தாமல் இருக்க வேண்டும். பருகியதும் நாராயணா என்று 3 முறை சொல்ல வேண்டும்.

கோவிலுக்குச் சென்றால் அங்கு போய் முறையாக எப்படி சாமி கும்பிடுவது, வலம் வருவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரகாரம் சுற்றும்போது எதை எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும். சாமி கும்பிட்டதும் என்ன செய்ய வேண்டும்? என நம் முன்னோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஒழுக்க நெறிகள் இருக்கும். அதைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக லுங்கி அணிந்து செல்லக்கூடாது. சில கோவில்களில் சூடம் ஏற்றக்கூடாது என்று ஒரு நியதி இருக்கும். அதைக் கடைபிடிக்க வேண்டும்.

சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?

சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனைஇ தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என சரணடைந்து விடுகிறோம். அதுவரை நாத்திகராக இருப்பவர்கள் கூட இதுபோன்ற ஒரு கட்டத்தில் இத்தனை நாளும் நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்டவா. என்னை மன்னிச்சிக்கோன்னு இறைவனிடம் சரணாகதி அடைவதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒரு நேரத்தில்தான் நாம் சரணாகதி அடைய வேண்டுமா? நாம் தினம் தினம் நம்மையே அறியாமல் சரணாகதி அடைகிறோம்.

'டைரக்ட்-டு-மொபைல் Direct-to-Mobile - D2M) என்ற புதிய தொழில்நுட்பம் !

 இனி இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் வீடியோ, லைவ் கிரிக்கெட் பார்க்கலாம்: வருகிறது 'D2M' தொழில்நுட்பம் இந்தியா வில் கோடிக்கணக்கான மக்...