




திருமண தோஷங்கள் எவை? அவற்றை தீர்ப்பது எப்படி?
திருமணம் தொடர்பான குறிப்பிடத்தக்க தோஷங்கள் மொத்தம் ஆறு.
அவை, செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மற்றும் புத்திர தோஷம் என மொத்தம் ஆறு தொஷங்கள் உள்ளன.
திருமணம் என்றால், பெண்ணின் ஜாதகத்தை தீர ஆராய வேண்டும்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இருப்பின், ஆண் ஜாதகத்திலும் இத்தகைய நிலைய் இருந்த்ஹால் அவர்களை வாழ்வில் ஒன்றினைப்பது தான் சிறப்பு.
அதை விடுத்து அல்லது கவணிக்காமல் திருமணம் முடித்தால், ஆணின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லக்னம், நிலவு, வெள்ளி (சுக்கிறன்) ஆகியவை வற்றிற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்.
கவனிக்காமல் திருமணம் முடித்துவிட்டால், அதன் பாதிப்பை தீர்பதற்கு செவ்வாய் கிழமை நோண்பு இருந்து முருகனுக்கு வழிபாடு விடாமல் செய்து வர வேண்டும். அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபடுவது இன்னும் நல்ல பலனை தரும்.
இந்த ராகு, கேது ஆகிய இரு கோள்களால் ஏற்படும் தோஷங்களைச் பாம்பு தோஷம் - சர்ப்ப தோஷம் - நாக தோஷம் என்று அழைக்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கோள்கள், இராசியின் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
ராகு-கேது பிறப்பு இராசியில் ராகு ௪ல் அல்லது 10ல் மற்றும் கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து ராகு-கேது தோஷத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்த தோஷம் தீர திருநாகேசுவரம், காளகஸ்தி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம். முருகனை நாள் தோரும் வழிபட்டு வந்தால் குறிஞ்சியின் இறைவன் காப்பான்.
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் ஒன்றில் ஞாயிறு இருந்தால் அதுவே சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே போன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் தீரும்.
ஞாயிற்று கிழமை நோண்பு இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். நாள் தோரும் விடாமல் முருகனுக்கு பால் படையலிட்டு அதை ஏழை குழந்தைகள் அருந்த கொடுத்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
இராசியில் இன்பத்தை தரும் இடமாக என்னும் 7-ம் இடத்தில் புவி வாழ்வில் இன்பங்களை தருகிற வெள்ளி கோள் (சுக்கிரன்) இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல நல்ல பலன்கள் இருந்தாலும் திருமண வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் ஆண் பெண் இருவருக்கும் இந்த தோஷம் இருக்கிறதா என ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
கனவருடன் நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழும் பெண்களுக்கு தட்டை துணி, தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு வழங்கி ஆசி பெற்றால் நல்லது நடக்கும். மேலும் பழமுதிர் சோலைக்கு தை திங்களில் 3 ஆவது வாரத்தில் வெள்ளிக் கிழமை சென்று வணங்கி வந்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.
இந்த குறிப்பிட்ட தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், லக்னத்துக்கு 8 ஆம் இடத்தில் ஞாயிறு, ராகு, கேது, காரி (சனி) கோள்களில் ஏதாவது ஒன்று இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ஆம் இடத்தை நல்ல கோள்களுடன் சேர்ந்து வியாழன் (குரு) பார்த்தால் தோஷம் இல்லை என கொள்ளலாம். 8-ம் இடத்தில் இராசியின் இறைவன் பலம் பெற்றாலும் தோஷம் இல்லை எனலாம்.
இந்த தோஷம் இருப்பதாக கண்டறியப்பட்டது முதல் குல தெய்வ வழிபாட்டை விடாமல் ஆண்டு தோரும் முறையாக மேற்கொண்டு வரவேண்டும். தவரினால், அந்த குறிப்பிட ஆண்டு மூன்று அறுபடை வீடுகளுக்காவது சென்று முருகனை வழிபட வேண்டும்.
இராசி லக்னத்தில் 5 ஆம் இடம் பூர்வ புண்ணிய இடமாக திகழ்கிறது. தாய்மாமன், தாய் வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் தீய கோள்களான ராகு, செவ்வாய், காரி (சனி) அல்லது ஞாயிறு அமைந்தால் குழந்தை பேரு இல்லாமல் போகும் அல்லது போராடி பெற வேண்டி இருக்கும்.
அதே வேளையில் 5ஆம் இடத்தில் உள்ள தீய கோள்களை நன்மை செய்யும் கோள்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்யும் கோள்கள் வேறுபடும்) குழந்தை வரம் கிடைக்கும். அதாவது புத்திர தோஷம் இல்லை எனலாம்.
லக்னத்தின் 5 ஆம் வீட்டிற்கு உரிய கோள் தீய கோளுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.
இந்த தோஷம் தீர வேண்டுமானால், பழனி முருகனை வீட்டின் சாமி அறையில் வைத்து நாள் தோரும் வழிபட வேண்டும்.
இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா.
மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.
நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து,
முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.
"இவர்களுக்கு சொந்த ஊர் மதுரைதானா ?"
"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."
"இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே ! எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ?"
காரணம் இருக்கிறது.
சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர்.
கஷ்டப்பட்ட குடும்பம்தான்.
அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி.
மருத்துவக்கல்லூரியில்
படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...
கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது.
மருத்துவ படிப்பை முடித்த பின்...
சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.
ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது
சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான்.
அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.
அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி
அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க...
அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா.
கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?"
அந்த அம்மா அழுதுகொண்டே,
"இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."
டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?"
அந்த அம்மாக்காரி கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."
டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் இப்போது...
பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்...
எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்த சிறுமியை காப்பாற்ற வழியேதும் இல்லை.
மனமுடைந்து போனார் டாக்டர் கோபி.
அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.
"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க,
"ஒன்றுமில்லை ஹேமா.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில்
நம் கண் முன்னாலேயே
இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"
கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது.
அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள்.
உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம்.
இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம்.
'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா.
கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்."
"என்ன சொல்கிறீர்கள் கோபி ?"
"ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்."
"இந்த சதீஷ்கர் ஊரிலா ?"
"இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில் ஆரம்பிப்பதுதான் நல்லது."
இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
( little moppet heart foundation)
எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு
மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்?
"அதற்குக் காரணம் இருக்கிறது
மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன.
இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக
குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."
ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி.
மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய் உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க...
இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள்.
அனைத்துமே இலவசமாக.
"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?"
சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா.
"பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார்.
நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன்.
எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்."
சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்:
"நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்தக் குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது."
டாக்டர் கோபி,
டாக்டர் ஹேமப்பிரியா,
இருவருக்கும் நமது
நல் வாழ்த்துக்கள்..!
ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்களையும், அவர்களிடம் சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் குழந்தைகளின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
ஆனால் இப்படி ஒரு
தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை...
அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.
சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள்.
அந்த தேவதைதான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும்
மருத்துவ சேவைக்கும் காரணம்.
எங்கிருந்தோ நம்மைப் பார்த்து புன்னகைக்கும் அந்த சின்னஞ்சிறு தேவதையை இங்கிருந்தே நான் வணங்குகிறேன்,வாழ்த்து கிறேன்..!
20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்..... அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்.
வெற்றி கிடைத்தது என்றார்.
யாரந்த மாவீரன்... பேரரசன்..
என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்.
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்.. செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...
படை தஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்... வாஞ்சையுடனும்... தன் பையில் சேமித்து கொண்டார்.
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்.. நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது,காரணம் 400 ஆண்டுகளாக நம்மை ஆண்ட இஸ்லாமிய ஆங்கிலயே ஆட்சியாளர்களின் பெருமைகளை மட்டும் நமக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் மூலம் சிறுவயதிலேயே சொல்லித் தரப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆண்ட நம்முடைய முன்னோர்களின் வீர வரலாறும் பெருமைகளும் மறைக்கப்பட்டு விட்டன காரணம்
.இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... ....
தங்களது ஜாதகம் மற்றும் "சுயவிவரம் பெற்று கொண்டோம். ஒரு வாரத்தில் அல்லது 10 நாடகளில் தங்களுக்கு தகவல் / பதில் தெரிவிக்கின்றோம் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 100க்கு 10 பேர் கூட சரியாக பதில் சொல்லுவதில்லை.
தாங்கள் அனுப்பிய ஜாதகம் மற்றும் "சுயவிவரம்" குறிப்புகளை பார்த்தார்களா அல்லது பார்க்காமல் விட்டுவிடார்களா என்பது கூட தெரிவது இல்லை !
தங்களுக்கு அவர்களை பிடித்து இருந்தாலும் அல்லது அவர்களை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ஜாதக பொருத்தம் சரியாக இருந்தாலும் அல்லது ஜாதக பொருத்தம் சரியாக இல்லா விட் டாலும் நாசூக்காக அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் . அப்போது அனுப்பியவருக்கும் கிடைக்கப் பெற்றவருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் !
வாழ்க நலமுடன்! வளமுடன்! நன்றி!
நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...