Total Pageviews

Friday, September 12, 2025

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

 

நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please🙏May be an image of text that says 'ShareChat @anbalagan இழந்த காலத்தை மறுபடியும் அடைய முடியாது எதிர்காலம் என்னவென்று நம்மால் யூகிக்கவும் முடியாது கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்ப்படுத்தி கொள்வோம் நற்காலை வணக்கம்'
 

காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எடுத்துப்பார்க்கிறேன், கண்ணீர்அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
May be an image of 3 people and text that says 'நல்ல பதிவுகள் சுயநலமற்ற மனிதர்களைத் தேடாதே தாய் தந்தையைத் தவிர வேறு யாரும் தென்படமாட்டார்ள்..!' 
 அய்யோ....
 
என்ன ஆயிற்று எனக்கு?
 
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
 
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
 
நேற்றுஇரவு படுக்கைக்கு செல்லும்போது ,
 
என்இடது மார்பில் கடுமையான வலி
 
ஏற்பட்டது. ஆனால்,அதன்பிறகு எனக்கு
 
எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல
 
தூக்கம் என்று நினைக்கிறேன்.
 
காபிவேண்டுமே, என் மனைவி எங்கே?
 
மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில்
 
படுத்திருந்த யாரையும் காணோம்.
 
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி?
 
அய்யோ நானேதான்.அப்படியானால் நான்
 
இறந்துவிட்டேனா? கதறினேன்....
 
என்அறைக்கு வெளியே கூட்டம்,
 
உறவுக்காரர்களும், நண்பர்களும்
 
கூடியிருந்தார்கள்.
 
பெண்கள் எல்லோரும்
 
அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள்,
 
 சோககப்பிய முகத்துடன்
 
இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெருஜனங்கள்
 
உள்ளே வந்து என்உடலைப் பார்த்துவிட்டுப்
 
போகிறார்கள்.
 
என்மனைவிக்கு சிலர் ஆறுதல்
 
சொல்கிறார்கள். குழந்தைகளைக்
 
கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
 
நான் இறக்கவில்லை.,
 
இங்கே இருக்கிறேன், என்று கத்தினேன்.
 
ஆனால், என்குரல் யாருக்கும் கேட்கவில்லை.
 
என்உடல் அருகே நான் நிற்பதுகூட
 
யாருக்கும் தெரியவில்லை.
 
அய்யோ என்ன செய்வேன் நான்?
 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
 
நான் மீண்டும் என்படுக்கை அறைக்கு
 
சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான்
 
என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான்
 
இருக்குமா?
 
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த
 
அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என்
 
மகனுக்கு என்ன நடக்கிறது என்பது
 
விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால்,
 
அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
 
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்.
 
அவனை பிரிந்து என்னால் இருக்கவே
 
முடியாது. என்மனைவி, பாசமும், பரிவும்
 
கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட
 
அவள் அழுவாள். ஆனால் நான் அவளை இதுவரை 
 
கண்டு கொண்டதே இல்லை.. இதுவரை எனது மொத்த கோவங்களையும் அவளிடம் தான்  கொட்டுவேன்..
 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்..நான் சம்பாதிக்க தொடங்கியதும் அம்மா அப்பா இருவரின் தியாகங்களையும் மறந்தேன்..
 May be an image of 1 person and text that says 'ஒருமுறைதான் கல் கோயிலுக்குள் சென்றது, அது கடவுளாகிவிட்டது. ஆனால், மனிதன் ஆயிரம்முறை கோயிலுக்குச் சென்றாலும் மனிதனாக ஆவதில்லை.'
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான என்புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என்குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்..
 
நான்தான் இறந்துவிட்டேனே. 
 
சுற்று முற்றும் பார்த்தேன்.. நான் ஓரளவுக்கு பணம் சம்பாதித்தவுடன் எந்த உறவுகளை எல்லாம் மதிக்கவில்லையோ, எவர் வீட்டுக்கெல்லாம் நான் முன்னாடி செல்லவில்லையோ, அவர்கள் எல்லாம்தான் முன்னாடி அமர்ந்திருந்தார்கள்.. 
 
வசதி படைத்த யார் வீட்டிற்கெல்லாம் முன்னால் ஓடினேனோ, அவர்கள் எல்லாம் வரவே இல்லை..அவர்களுக்கு நேரமில்லை போல..
 
நான் செய்த தவறை உணர்ந்து கண்களில் நீர் வந்தபடி, அவர்களின் காலை பிடித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது..ஆனால் முடியவில்லை நான்தான் இறந்துவிட்டேனே..
 
நான் எந்த பணத்திற்காக ஓடினேனோ அந்த பணம் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை..
 
அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப்
பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும்
சில நாட்கள் கொடுங்கள். நான் என்மனைவி,
பெற்றோர்கள், நண்பர்களிடம்,உறவுகளிடம்,
எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த " என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று அழுதபடி நான் கத்தினேன்... அவளால் என்
வார்த்தைகளைக் கேட்கமுடியவில்லை.
 
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவுசெய்து இன்னும் ஒருவாய்ப்பு, என் குழந்தையை கட்டிஅணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்கவைக்க , என்அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க,உறவுகளிடம் அரவணைத்துப் போக, இப்பொழுது நான் அழுதேன்!
 
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
 
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
 
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் 
 
கேட்க முடியும் இது என் வாழ்க்கையில்
 
மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி
 
அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ
 
மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி,
 
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்"
 
என்றேன் முதன் முறையாக.
 
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர்,
 
என்அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். 
 
அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த
இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி..
 
நான் புதிதாக பிறந்ததுபோல் உணர்ந்து மாறினேன்.. கண்களில் நீர் தழும்பிய படி.. பாடம் கற்றுக்கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி புதிய மனிதனாக எழுந்து நடந்தேன்..
நண்பர்களே..
 
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது.உங்களது ஈகோவை புறம் தள்ளிவிட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம்
வெளி படுத்துங்கள். ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல்
போகலாம்!!May be an image of text that says 'எதிரிகள் எதிரில் தான் இருப்பார்கள் நாம் எச்சரிக்கையாக இருக்கலாம் ஆனால் துரோகிகள் நம் பக்கத்திலேயே இருப்பார்கள். எச்சரிக்கையாய் இருக்க முடியாது'

Sunday, August 31, 2025

திருமண தோஷங்கள் எவை? அவற்றை தீர்ப்பது எப்படி?

 திருமண தோஷங்கள் எவை? அவற்றை தீர்ப்பது எப்படி?


திருமணம் தொடர்பான குறிப்பிடத்தக்க தோஷங்கள் மொத்தம் ஆறு.

The legend of Rahu and Ketu - AstroTalk Blog - Online Astrology ... 

அவை, செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் மற்றும் புத்திர தோஷம் என மொத்தம் ஆறு தொஷங்கள் உள்ளன.

திருமணம் என்றால், பெண்ணின் ஜாதகத்தை தீர ஆராய வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இருப்பின், ஆண் ஜாதகத்திலும் இத்தகைய நிலைய் இருந்த்ஹால் அவர்களை வாழ்வில் ஒன்றினைப்பது தான் சிறப்பு.

அதை விடுத்து அல்லது கவணிக்காமல் திருமணம் முடித்தால், ஆணின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1. செவ்வாய் தோஷம்:

லக்னம், நிலவு, வெள்ளி (சுக்கிறன்) ஆகியவை வற்றிற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்.

கவனிக்காமல் திருமணம் முடித்துவிட்டால், அதன் பாதிப்பை தீர்பதற்கு செவ்வாய் கிழமை நோண்பு இருந்து முருகனுக்கு வழிபாடு விடாமல் செய்து வர வேண்டும். அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபடுவது இன்னும் நல்ல பலனை தரும்.


2. ராகு-கேது தோஷம்:

இந்த ராகு, கேது ஆகிய இரு கோள்களால் ஏற்படும் தோஷங்களைச் பாம்பு தோஷம் - சர்ப்ப தோஷம் - நாக தோஷம் என்று அழைக்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கோள்கள், இராசியின் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

ராகு-கேது பிறப்பு இராசியில் ராகு ௪ல் அல்லது 10ல் மற்றும் கேது 4ல் அல்லது 10ல் அமர்ந்து ராகு-கேது தோஷத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்த தோஷம் தீர திருநாகேசுவரம், காளகஸ்தி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம். முருகனை நாள் தோரும் வழிபட்டு வந்தால் குறிஞ்சியின் இறைவன் காப்பான்.


3. சூரிய தோஷம் - ஞாயிறு தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் ஒன்றில் ஞாயிறு இருந்தால் அதுவே சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே போன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் தீரும்.

ஞாயிற்று கிழமை நோண்பு இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். நாள் தோரும் விடாமல் முருகனுக்கு பால் படையலிட்டு அதை ஏழை குழந்தைகள் அருந்த கொடுத்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.


4. களத்திர தோஷம் - இன்பத்தை கெடுக்கும்:

இராசியில் இன்பத்தை தரும் இடமாக என்னும் 7-ம் இடத்தில் புவி வாழ்வில் இன்பங்களை தருகிற வெள்ளி கோள் (சுக்கிரன்) இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல நல்ல பலன்கள் இருந்தாலும் திருமண வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் ஆண் பெண் இருவருக்கும் இந்த தோஷம் இருக்கிறதா என ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

கனவருடன் நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழும் பெண்களுக்கு தட்டை துணி, தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு வழங்கி ஆசி பெற்றால் நல்லது நடக்கும். மேலும் பழமுதிர் சோலைக்கு தை திங்களில் 3 ஆவது வாரத்தில் வெள்ளிக் கிழமை சென்று வணங்கி வந்தால் இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.


5.  மாங்கல்ய தோஷம்

இந்த குறிப்பிட்ட தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், லக்னத்துக்கு 8 ஆம் இடத்தில் ஞாயிறு, ராகு, கேது, காரி (சனி) கோள்களில் ஏதாவது ஒன்று இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ஆம் இடத்தை நல்ல கோள்களுடன் சேர்ந்து வியாழன் (குரு) பார்த்தால் தோஷம் இல்லை என கொள்ளலாம். 8-ம் இடத்தில் இராசியின் இறைவன் பலம் பெற்றாலும் தோஷம் இல்லை எனலாம்.

இந்த தோஷம் இருப்பதாக கண்டறியப்பட்டது முதல் குல தெய்வ வழிபாட்டை விடாமல் ஆண்டு தோரும் முறையாக மேற்கொண்டு வரவேண்டும். தவரினால், அந்த குறிப்பிட ஆண்டு மூன்று அறுபடை வீடுகளுக்காவது சென்று முருகனை வழிபட வேண்டும்.


6. புத்திர தோஷம்

இராசி லக்னத்தில் 5 ஆம் இடம் பூர்வ புண்ணிய இடமாக திகழ்கிறது. தாய்மாமன், தாய் வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
 

ஐந்தாம் இடத்தில் தீய கோள்களான ராகு, செவ்வாய், காரி (சனி) அல்லது ஞாயிறு அமைந்தால் குழந்தை பேரு இல்லாமல் போகும் அல்லது போராடி பெற வேண்டி இருக்கும்.

அதே வேளையில் 5ஆம் இடத்தில் உள்ள தீய கோள்களை நன்மை செய்யும் கோள்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்யும் கோள்கள் வேறுபடும்) குழந்தை வரம் கிடைக்கும். அதாவது புத்திர தோஷம் இல்லை எனலாம்.

லக்னத்தின் 5 ஆம் வீட்டிற்கு உரிய கோள் தீய கோளுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.

இந்த தோஷம் தீர வேண்டுமானால், பழனி முருகனை வீட்டின் சாமி அறையில் வைத்து நாள் தோரும் வழிபட வேண்டும்.

Thursday, July 24, 2025

டாக்டர் கோபி ! இந்தக் காலத்தில் இப்படியும் சில டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.!

 இந்தக் காலத்தில்  இப்படியும் சில டாக்டர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.
Doctor Stock Photos, Images and Backgrounds for Free Download


டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. 
மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.

நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து, 
முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.

"இவர்களுக்கு சொந்த ஊர் மதுரைதானா ?"

"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."

"இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே !  எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ?"

காரணம் இருக்கிறது.
சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர். 

கஷ்டப்பட்ட குடும்பம்தான்.
அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி.

மருத்துவக்கல்லூரியில் 
படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...
கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது.

மருத்துவ படிப்பை முடித்த பின்...
சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.

ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது
சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான்.

அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.

அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி
அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க...
அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா.

கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?"

அந்த அம்மா அழுதுகொண்டே,
"இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."

டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?"

அந்த அம்மாக்காரி கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."

டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். 

ஆனால் இப்போது...
பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்...

எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்த சிறுமியை காப்பாற்ற வழியேதும் இல்லை.

மனமுடைந்து போனார் டாக்டர் கோபி.

அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.

"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க,
"ஒன்றுமில்லை ஹேமா.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில் 
நம் கண் முன்னாலேயே
இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"

கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது.

அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம்.

இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம்.

'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா.

கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்."

"என்ன சொல்கிறீர்கள் கோபி ?"

"ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்."

"இந்த சதீஷ்கர் ஊரிலா ?"

"இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில்  ஆரம்பிப்பதுதான் நல்லது."

இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
( little moppet heart foundation)

எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு 
மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்?

"அதற்குக் காரணம் இருக்கிறது
மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன.
இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக
குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."

ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி.

மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய்  உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். 

மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க...

இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள்.

அனைத்துமே இலவசமாக.

"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?"

சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா.
"பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார். 
நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன்.
எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்."

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்:
"நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழை குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்தக் குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது."

டாக்டர் கோபி,
டாக்டர் ஹேமப்பிரியா,
இருவருக்கும் நமது 
நல் வாழ்த்துக்கள்..!

ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்களையும், அவர்களிடம் சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் குழந்தைகளின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு 
தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை...

அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த தேவதைதான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும்
மருத்துவ சேவைக்கும் காரணம்.

எங்கிருந்தோ நம்மைப் பார்த்து புன்னகைக்கும் அந்த சின்னஞ்சிறு தேவதையை இங்கிருந்தே நான் வணங்குகிறேன்,வாழ்த்து கிறேன்..!

Thursday, July 17, 2025

எது நிஜம்?

 


எது நிஜம்?
 
ஏன் மீசை முளைக்கிறது
 
ஆணுக்கு தெரியாது.
 
ஏன் பெண்மை பூக்கிறது
 
பெண்ணுக்கு தெரியாது.
 
குழந்தை எப்போது பிறக்கும்
 
மருத்துவருக்கு தெரியாது.
 
ஏன் பற்கள் முளைக்கிறது
 
மழலைக்கு தெரியாது.
 
எங்கு யாருக்கு என்ன நடக்கும்
 
எவருக்கும் தெரியாது.
 
எப்போது எந்த நோய் வரும்
 
எவருக்கும் தெரியாது.
 
ஏன் மரணம் அழைக்கிறது
 
முதுமைக்கு தெரியாது.
 
மரணத்திற்கு பின் எங்கு
 
போவோம் ஒருத்தருக்கும் தெரியாது.
 
ஏன் மனிதன் அழுகின்றான்
 
கடவுளுக்கு தெரியாது.
 
கடவுள் எங்கு இருக்கிறான்
 
மனிதனுக்கு தெரியாது.
 
எல்லாமும் எல்லோருக்கும்
 
எப்போதும் தெரியாது.
 
என்றாலும் வாழ்கின்றோம்
 
ஏன் என்று தெரியாது.
 
நாளைக்கு என்ன ஆகும்
 
என்பது தெரியவே தெரியாது.
 
இன்று தான் நிஜம்.
 
இந்த நேரம்தான் நிஜம்.
 
இந்த நொடி நிஜம்.
 
நாளை பற்றி
 
கவலைப்படாமல்
 
நிம்மதியாக வாழ்வோம் .....💗

Monday, June 30, 2025

ராஜராஜ சோழன் நான்!

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???

ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்..... அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்.

வெற்றி கிடைத்தது என்றார்.

யாரந்த மாவீரன்... பேரரசன்..

என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 


வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும் என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்.

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்.. செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க

அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...

படை தஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்... வாஞ்சையுடனும்... தன் பையில் சேமித்து கொண்டார்.

இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்.. நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..

வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது,காரணம் 400 ஆண்டுகளாக நம்மை ஆண்ட இஸ்லாமிய ஆங்கிலயே ஆட்சியாளர்களின் பெருமைகளை மட்டும் நமக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் மூலம் சிறுவயதிலேயே சொல்லித் தரப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆண்ட நம்முடைய முன்னோர்களின் வீர வரலாறும் பெருமைகளும் மறைக்கப்பட்டு விட்டன காரணம்

 .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... .... 


Monday, June 23, 2025

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

 திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுற்க்கா ழிமுறைள் !

அன்புள்ள நண்பர்களே! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லது மணமகள் ஜாதகம் மற்றும் "சுயவிவரம்" அல்லது "வாழ்க்கை குறிப்பு" வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பி  கிடைக்க பெற்றால் அனுப்பி நபருக்கு சரியாக பதில் அனுப்புமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

தங்களது ஜாதகம் மற்றும்  "சுயவிவரம் பெற்று கொண்டோம். ஒரு வாரத்தில் அல்லது 10 நாடகளில் தங்களுக்கு தகவல் / பதில் தெரிவிக்கின்றோம் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 100க்கு 10 பேர் கூ சரியாக பதில் சொல்லுவதில்லை.

தாங்கள் அனுப்பிய ஜாதகம் மற்றும்  "சுயவிவரம்" குறிப்புகளை பார்த்தார்களா அல்லது பார்க்காமல் விட்டுவிடார்களா என்பது கூட தெரிவது இல்லை ! 

தங்களுக்கு அவர்களை பிடித்து இருந்தாலும் அல்லது அவர்களை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ஜாதக பொருத்தம் சரியாக இருந்தாலும் அல்லது ஜாதக பொருத்தம் சரியாக ல்லா விட் டாலும் நாசூக்காக அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் . அப்போது அனுப்பியவருக்கும் கிடைக்கப் பெற்வருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் !

வாழ்க நலமுடன்! வளமுடன்! நன்றி!

நான்தான் இறந்துவிட்டேனே ! பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!

  நான் இறந்து விட்டேனா! இறைவா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு.. please   காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித்தாளை எட...