Total Pageviews

Wednesday, October 16, 2024

பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம்! அதுவே உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது


36 வயதான ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது, அது கடைசி கட்டத்தில் இருந்தது. அவரது வயதில், அவர் இதுவரை குட்கா, சிகரெட், பான் அல்லது மது அருந்தியதில்லை. சரியான நேரத்தில் வேலைக்குச் செல்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, இதுதான் அவரது வாழ்க்கை, எந்த நோயும் இல்லை, கவலையும் இல்லை.
      கடந்த 2/3 நாட்களாக வயிற்றுவலி தொடங்கியதால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையைத் தொடங்கினார், ஆனால் பலன் இல்லாததால், மூத்த மருத்துவரை அணுகினார். அங்குள்ள மருத்துவர் அவரது அனைத்து அறிக்கைகளையும் பெற்று, அவருக்கு குடலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தார்.
   

 டாக்டர். அவர் சிகிச்சையைத் தொடங்கினார், சிகிச்சையின் போது அவர் தனது முழு சேமிப்பையும் தனது வீட்டோடு விற்றார், ஆனால் அதன் விளைவாக அவர் இறந்தார். மனித குலத்தின் நலனுக்காக உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு மருத்துவர் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். குடும்பத்தில் பரஸ்பர விவாதத்திற்குப் பிறகு, உடலை ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


     பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து வெளியாகும் ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக்கில் சூடான உணவை உண்பதாலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடித்ததாலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு அவரது உணவு பழக்கம் குறித்து விசாரணை நடத்தியதில் அவருக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு கப் தேநீர் அருந்துவது வழக்கம். மேலும், எங்கு தேநீர் அருந்தினாலும், பிளாஸ்டிக் பைகளில் வந்து, பிளாஸ்டிக் கோப்பைகளில் வழங்கப்படுவதும் தெரியவந்தது.


அடிக்கடி மக்கள் சூடான தேநீர், சூடான காய்கறிகள் அல்லது பிற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் ஆர்டர் செய்து அதையே சாப்பிடுவது அல்லது குடிப்பது அடிக்கடி பார்க்கப்படுகிறது. அதுவே மெதுவாக உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது.
     

அப்போது மருத்துவரும் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவரது சக ஊழியர்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
     ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான இதுபோன்ற மோசமான பொருளை தயாரிக்க அரசு எப்படி அனுமதி அளிக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். 


     பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து நம்மை நம்ப வைக்கிறது, ஆனால் எப்படி புரிந்து கொள்வது? நம்மையும், நம் அன்புக்குரியவர்களையும் மரணத்தை நோக்கித் தள்ளும் வேலையை நாமே அச்சமின்றிச் செய்கிறோம், நம்மைப் பற்றியோ, நம் குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாமல், மரணத்தைத் தழுவும் நாகரீகத்தின் குருட்டுப் பந்தயத்தில் ஓடுகிறோம்.


     எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மீண்டும் உங்கள் அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள், முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை சாப்பிட வேண்டாம், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்கக் கூடாது.

          டாக்டர் ஏ கே பாண்டே, எம்எஸ், புற்றுநோய் மற்றும் இதய பராமரிப்பு சங்கம்.
 
தொடர்ந்து முன்னேறுங்கள், இதுவும் ஒரு புண்ணிய செயல்.*

IT வேலையை நோக்கி ஏன் ஓடுகின்றனர்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.  இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது.  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நண்பரின் மகள் 12வது மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றாள்.  அவளுக்கு IT படிக்க வேண்டும் என்பது ஆசை.  ஆனால் நண்பர் அவளை அமரவைத்து பேசி, வேறு துறைக்கு தயார் படுத்தி விட்டார்.  பல வருடங்கள் குடும்ப உறவு என்பதால், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவரிடம் இது குறித்து பேசியது சுருக்கமாக.

 IT துறையில் தற்போது லட்சக் கணக்கில் சம்பளம் கிடைப்பதன் பின்னால் ஒரு மிகப்பெரிய ஜியோபொலிடிகல் ஸ்ட்ராடஜி உள்ளது.  ஒன்று நமது பாரத வளர்ச்சியை தடுப்பது இன்னொன்று நமது கலாசாரத்தை குடும்ப உறவுகளை சிதைப்பது.

சமீப காலங்களில் பொறியியல் படித்த மாணவர்கள் கூட ஏதோ ஒரு  IT வேலையை நோக்கி ஓடுகின்றனர்.  ஏனெனில் மற்ற துறைகளில் சம்பளம் குறைவு (விதிவிலக்குகள் தவிர்த்து), உற்பத்தி பணி இடங்களில், இயந்திரங்களுக்கு நடுவே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  இதனை இன்றைய தலைமுறை விரும்பாத அளவிற்கு மனதை மாற்றி விட்டனர்.  

இதனால் மற்ற துறைகளில் வளர்ச்சி என்பது 2000ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்து, சீனாவில் இருந்து சிறு பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  பாரதம் காலங்காலமாக சுயதொழிலில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த நாடு.  

ஆனால் இதனை பிரிட்டிஷார் மாற்றி முதலில் அரசு வேலை என்ற மாயை உருவாக்கி, (அதிகபட்சம் ஒரு 5-8% பேர் இருக்கலாம்) அவர்களுக்கு எல்லா சலுகைகள் அதிகம் உடல் உழைப்பு தேவையில்லை, நல்ல வருமானம், அதையும் தாண்டி தங்கள் கடமையை செய்யவும் செய்யாமல் இருக்கவும் வருமானம், பென்ஷன் என எல்லோரையும் அதன் பின்னால் ஓடவிட்டு, தொழில்வளராமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினர்.

ஒரு கால கட்டத்தில் இது முடியாத போது பிரிண்ட் செய்யப்பட்ட டாலர்களை கொடுத்து,  IT துறையை வளர்த்து விட்டனர்.  இதன் மூலம் ஆராய்ச்சி, புதிய தொழில் நுட்பங்கள் அனைத்தும் இந்த 70-80 ஆண்டுகளில் முடங்கி, உடல் உழைப்பும் குறைந்து, தொழில் வளர்ச்சியே மந்தமாகும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.

இன்று எந்த இளைய தலைமுறையினரையும் கேளுங்கள், ஒரு ஏசி அறையில் நாள் முழுவதும் உட்கார்ந்து, வேலை செய்வதை 90% பேர் விரும்புகின்றனர்.  வேறு வழியில்லாமல் வேறு வேலைகளுக்கு சென்றவர்களும், எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளாமல் விதியே என வாழுகின்றனர்.

இதில் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கிறது.  இதனால் பல பெண்கள் குறைந்தபட்சம்              28


வயது - 30 வயது வரை திருமணம் என்பதையே ஏற்பதில்லை.  அப்படியே வரன் தேடினாலும் அவர்களுக்கு இணையாக அல்லது அதிக சம்பளம் வாங்கும் மற்றதுறை இளைஞர்கள் கிடைப்பதில்லை.

பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பு காலத்தை தள்ளி போடுவதால் மக்கள் தொகை இளைஞர்கள் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.   இதே நிலை ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா, சீனாவிலும் பெரும் பிரச்சினையாகி உள்ளது.

மொத்தத்தில் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்


- தொழில் வளர்ச்சி இன்றும் பெரும் பிரச்சினை


-அடிப்படை மனவளர்ச்சி, திறன், ஆராய்ச்சி, குறைந்து கொண்டே வருகிறது.


-குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன.


- பெண்களின் உடல் நிலை பாதிப்புகள் குறித்து சொல்லவே வேண்டாம்.


-பல குழந்தைகள் ஒற்றை குழந்தைகளாக மனஆரோக்கியமின்றி, தனிமைப் பட்டு போகின்றனர்.
 

- இந்த கவர்ச்சிகரமான வேலைகளில் 40 வயதுக்கு பிறகு இவர்கள் ஒதுக்கப்படும் போது ஏற்படும் மன அழுத்தம் ஏராளம்.


- நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை கூடுவதால், பல பிரச்சினைகள்.


-வயதானவர்கள் தனித்து விடப்படுதல், குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைக்கு சூழல் அதிகரிக்கிறது.


- மருத்துவ மாஃபியா இதனை பெரிய அளவில் கொண்டாடி பணம் பார்க்கின்றனர்.


- பாரம்பரிய உணவுகள் மறந்து, வீடுகளில் உணவு தயாரிப்பது குறைந்து, ஆரோக்கியம் பாதிக்கப் படுகிறது.


-ஸ்விக்கி ஜொமாட்டோ நல்ல காசு பார்க்கின்றனர்.  அதே சமயம் கலப்பட உணவுகள், தரமற்ற ஆரோக்கியமற்ற ரெடி உணவுகள் மூலம் பெரும் பணம் பார்க்கின்றனர்.

இப்படி பலவற்றை சொல்லிய அவர், எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அதிக அளவு சம்பாதிப்பதும், பெண்கள் (திறமையானவர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள், விதி விலக்குகள் தவிர்த்து) மற்றவர்கள் குடும்பத்தை பாதிக்காத அளவு வேலை பார்த்தால் அல்லது வேரு சிறு தொழில்களில் ஈடுபட்டால் போதும் என்று முடிவெடுத்துள்ளோம்.

பெண்கள் ஃப்ரீயாக இருப்பதால் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர், மத, இன, கலாச்சார் சம்மந்தமான விழாக்களை முன்னெடுத்து செய்வது, உறவினர் வீடுகளுக்கு எந்த நேரமும் சென்று வருவது, சுற்றுலா அல்லது பில்கிரிமேஜ் செல்வது என மனநலத்துடன் உள்ளனர்.  குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை இழப்பதில்லை.

சரியான நேரத்தில், சரியான ஆட்களுடன் திருமணங்கள், நல்ல குடும்ப உறவுகள் என சந்தோஷமாக இருக்கிறோம்.  தேவையான அளவு சம்பாதிக்கிறோம்.  நன்றாக போகும் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்.

அவர் சொன்னதை அவர் மகள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்.  

நான் இன்னமும் யோசித்துக் கொண்டு உள்ளேன்.

நீங்கள்?

Friday, September 27, 2024

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..




பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை


 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது


 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 


FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*******
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர்

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி          - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட்

100 சென்ட்                     - 1  ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர்

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள்

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

1 குழி (Square Yard)           = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter)            = 1.190 குழி

1 குழி                                  = 9 சதுர அடி

1 ச.மீ(Square Meter)           = 10.76 சதுர அடி

1 குந்தா (Guntha)             = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha)             = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி                             = ஒரு மா

20 மா                                  = ஒரு வேலி

3.5 மா                                 = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்                        = ஒரு வேலி

16 சாண்                             = 1 கோல்

18 கோல்                           = 1 குழி

100 குழி                              = 1 மா

240 குழி                              = 1 பாடகம்

Thursday, September 26, 2024

வசப்படும் வாழ்க்கை !

 வசப்படும் வாழ்க்கை .



_*நாற்பது  வயதுக்கு மேல் வாழ்க்கையில் தைரியம் என்பது,
நம் கையில் இருக்கும் பணத்தை பொருத்தே அமைகிறது.*_

_*வாழ்க்கையில் பணம் இல்லாமல் மனிதனாக வாழ இயலும்.
 

ஆனால் பணம் ஏதும் இன்றி மனிதர்களிடம் வாழ இயலாது.*_

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சம்பாதிப்பது சொத்து இல்லை. அனுபவித்ததுதான் சொத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.

 கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான் மனிதன்..


பாசத்தில் மனிதனை    வாழ்க்கையில் ஒவ்வொரு படிநிலையும்
ஒவ்வொரு ஆசான்...
எந்த படிநிலையும்
வந்தபடியே செல்வதில்லை...
ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும்,
ஏதோ ஒன்றை
ஏற்கச்சொல்லும்...
கற்றுக்கொள்ளவும்,
ஏற்றுக்கொள்ளவும்
தயாராக இருந்தால்
வசப்படுமே வாழ்க்கை.

வாழ்க்கையில்

வெற்றிபெறும் கலையை  முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தர முடியாது. சுயமாக முன்னுக்கு வரும் கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து நீங்கள் முன்னுக்கு வந்த கலையைச் சொல்லிக் கொடுங்கள் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லித்தரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இது சொல்லித் தர முடியாதது.
 

இது பலருக்கும் புரிவதிவதில்லை.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது ஒன்றை  சொல்லிக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வதில்தான்  வெற்றி அடங்கியிருக்கிறது.
 

சிவாஜி கணேசன் எந்தக் கல்லூரியிலும் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார்.

சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக்கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும்‌ இதனை புரிந்து கொள்ளாமல் புகழ் பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு.

சமைத்துப்பார் என்ற புத்தகத்தைக் படித்துச் செய்த சமையலை விட அருமையாக சமைக்கும் அம்மணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காரணம் அனுபவம் மட்டுமல்ல,பழக்கம் மட்டுமல்ல,மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம்  விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைச் சுலபமாகத் கற்றுக்கொள்ளும்.

தூக்கத்திலிருந்து விழித்தால் மட்டும் போதாது. மனதும் விழிக்க வேண்டும். மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால்  திறக்கவேண்டும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆக முடியாது.

*படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு.
கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.*

 தடைக்கு விடை கண்டுபிடித்தால்,
நடை போட்டு வெற்றி வரும்.

 எந்த எல்லைக்கும்
போகலாம் என்ற
நிலை இருந்தும்...
தன்னையும் ஓர்
கண்ணியமான
எல்லைக்குள்
நிறுத்தி
வாழ்பவனே...
நல்ல மனிதன்..

கேட்கப்படும்
மன்னிப்பை காட்டிலும்.
ஏற்கப்படும் மன்னிப்பே
மதிப்பு வாய்ந்தது.

Wednesday, September 18, 2024

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

 


நிம்மதி என்றால், எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை

தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே, நிம்மதியை அடைந்து விடலாம்

தேவையற்ற எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால், நிம்மதி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று

இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.

இருப்பதில் சந்தோஷமாக இருந் தாலே நிம்மதி.

இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.

இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்.

எல்லாம் உங்கள் மனம்தான் காரணம் இல்லாததை எண்ணி அலைந்து நிம்மதியைக் கெடுக்கிறது நீங்கள் அதற்கு அடிமையாக தொலைந்துபோய் இருக்கின்றீர்கள் அதனால் நிம்மதி இருப்பது தெரியாமல் எங்கோ தேடுகிறீர்கள்.

இருக்கும் இடத்தில் இருந்த பொருட்களை வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் நிம்மதி தானாய் தெரியும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தபடியே வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் முயற்சி இருக்கட்டும் ஆனாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முயன்றவரை நேர்மையான வழியில் உழைத்து சம்பாதித்து இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்று உங்கள் நிம்மதியை தொலைக்காமல் இருங்கள்!

மனதில் நிம்மதி, வீட்டில் நிம்மதி, பொருளாதாரத்தில் நிம்மதி எல்லாம் இறைவனை நினைவுக் கூர்ந்து வாழ்வதில் உள்ளது.

 நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

1.ஆரோக்கியமான உடல்

2.திருப்தி அடையும் மனம்

3.நேர்மையாக சம்பாதித்த பணம்

4.அனுசரணையான குடும்பம்

5.ஊக்கப்படுத்தும் துணை

6.உற்சாகம் தரும் நட்பு

7.சரி தவறு கணிக்கும் பக்குவம் !

8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை !

9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது !

10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின் மீது நம்பிக்கை !

செல்வம் தான் நிம்மதியா ?

அதுவும் ஒரு காரணம் !

பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம்! அதுவே உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது

36 வயதான ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது, அது கடைசி கட்டத்தில் இருந்தது. அவரது வயதில், அவர் இதுவரை குட்கா, சிகரெட், பான் அல்லது மது அருந்திய...