Total Pageviews

Wednesday, January 6, 2016

பூச்சிக் கொல்லி ("Hit", "Mortein" )




ஒரு பெண் ஒருத்தி தன் சமையல் அறையில் காஸ் (Gas stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள் .உடனே அவள் பூச்சிக் கொல்லி ("Hit", "Mortein" )மருந்தை தெளித்தாள்.அந்த மருந்தின் வேகம் கேஷ் சிலிண்டரை வெடித்து அவள் மேல் 65% தீக்காயம் ஏற்பட்டது.

அவளைக் காப்பாத்த முற்பட்ட கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
 
கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அந்த பெண் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.அவள் இறந்தது கூட கணவனுக்கு தெரியாது.

அதனால் எரிவாயு எரிந்து கொண்டு இருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது. இந்த செய்தியை படித்ததோடு விட்டுவிடாமல் உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களுடமும் ஏன் சமுக வலைதளங்களிலும் பரப்புங்கள் .மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும், நன்றி !

No comments:

Post a Comment

80 கோடி சொத்து இருந்தும் அநாதைப் பிணம்!" -

  80 கோடி சொத்து இருந்தும் அநாதைப் பிணம்!" - பெற்ற பிள்ளைகளே வராத கொடூரம்! முதியவரின் உடலைத் தகனம் செய்த ஊர் மக்கள்! பணம் பாதாளம் வரை...