இல்லறமே நல்லறம்; அதுவே அனைத்து அறத்திற்கும் அடிப்படை!
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்; பருவத்தே பயிர் செய்!
திருமண வயது வந்த ஆண், பெண் இளைஞர்களே வணக்கம்!
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
உங்களுக்கு 22 வயதுக்கு மேலாகிவிட்டதா?
"விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!", என்ற விருப்பத்துடன் உங்களது வளமான வாழ்க்கையை கற்பனை செய்யுங்கள்; கனவு காணுங்கள்; அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி அடையுங்கள்.
அரசு வேலை வாங்கி, வீட்டுமனை வாங்கி, வீடு கட்டிய பிறகு திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும்; அப்பொழுது நீங்கள் நினைத்த எல்லாம் இருக்கும்; ஆனால், வசதிகளை அனுபவிக்க இளமை இருக்காது; தீர்க்க இயலாத சிக்கல்களுக்கும், வெளியவே வர இயலாத மன உளைச்சல்களுக்கும் உள்ளாகும் நிலை ஏற்படும். கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!
நீங்கள் விரும்பும் வசதிகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது; அவைகள் அனைத்தையும் உங்கள் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அடைய முடியும்; ஆனால் இழந்த இளமை மீண்டும் கிடைக்காது.
உயிர்களுக்கு பொறுப்பையும், கடமையையும், உரிமையையும் உணர்த்துவதற்காக கடவுள் (இயற்கை) கொடுத்த பருவம்தான் இளமைப் பருவம்; இந்தப் பருவம் தான் பல உன்னதமான உறவுகளை உருவாக்கும் பருவம்.
சரியான பருவத்தில் திருமணம் செய்து, உன்னதமான உறவுகளை உருவாக்கும் கடவுளின் (இயற்கையின்) கட்டளையை நிறைவேற்றிய புண்ணியத்தை அடையுங்கள்.
எனவே,
இளைஞர்களே! இளம் பெண்களே!

எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம்; திருமணத்தில் தாமதம் செய்யாதீர்கள்; உடனே உன்னதமான திருமண பந்தத்தில் நுழைந்து, அது கொடுக்கும் அற்புதங்களை, வாழ்க்கையின் பிரம்மாண்டங்களை அனுபவியுங்கள்.
பெற்றோர்களே!
உங்களது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து உங்கள் மகன்களுக்கு, மகள்களுக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்துவைத்து வளமான சமுதாயத்தை உருவாக்குங்கள்.
உங்களது குடும்ப, சமுதாயக் கடமையை நிறைவேற்ற, ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் எப்பொழுதும் தாய் உள்ளத்துடன் எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை செய்கிறது; பயன் பெறுங்கள்.