Total Pageviews

Tuesday, February 7, 2012

கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் திறனிலும் அறிவிலும் அகிலத்துக்கே சவால்விடும் ஆட்களாகிவிட்டோம் நாம். புதிய மென்பொருள் எழுதுகிற அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை நாம் திறமையாகக் கையாண்டாலும், பார்வைப் பாதிப்போ, முதுகெலும்புப் பிரச்னையோ வராதபடி கம்ப்யூட்டர் முன்னால் எப்படி அமர்வது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. 

''கம்ப்யூட்டர் முன்பு நாம் அமரும் முறை சரியாக இருந்தால், கண் வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்!'' என்கிறார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர் கண்ணன் புகழேந்தி. செய்தியும் படங்களுமாக கம்ப்யூட்டரைக் கையாளும் பக்குவம் குறித்து இங்கே விளக்குகிறார்...

இருக்கையின் நுனிப் பகுதியில் அமர்வதும் தவறு. இதனால் தொடைப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படும். தொடைப் பகுதியில் உள்ள தசைநார்கள் இறுகி இடுப்பு வலியும் உருவாகும். தொடந்து தசை நார்கள் இறுகிய நிலையில் இருந்தால், ஆக்ஸிஜன் கிடைப்பது தடைப்பட்டு தசை நார்கள் சுருங்கிய நிலையை அடைந்துவிடும்.
பாதம் முழுவதும் தரையில் அழுந்துமாறு உட்கார வேண்டும். கால் விரல்களின் நுனிப்பகுதி மட்டும் தரையைத் தொடும்படி அமர்வது  தவறு. இதனால் காலின் பின் பக்கத்தசை இறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். இது கால் வலியை உண்டாக்கும். குதிகால் மட்டும் தரையில் படும்படி அமர்வதால் கால் கட்டை விரலிலும் கணுக்காலிலும் வலி ஏற்படும்.
'மடிக்கணினி’ என்றால் அதனை மடியில் வைத்தபடி வேலை செய்யவேண்டும் என்பது இல்லை. எனவே, குனிந்து பார்த்து வேலை செய்யக் கூடாது. இப்படி வேலை செய்வது தலைவலி, கண் வலி, கழுத்து வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

முதுகுத்தண்டு எலும்பு முன்னோக்கி வளையாமலும், பக்கவாட்டில் வளையாமலும் அமர வேண்டும்.

கைப்பகுதியும் மணிக்கட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

கால் மூட்டுகளை அதிகப்படியாக மடக்கியோ நீட்டியோ இருக்காமல், தலைகீழ் 'லி’ வடிவத்தில் இருக்க வேண்டும்.

தாடையானது மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ இல்லாமல் படத்தில் இருப்பது மாதிரி நேராக இருக்க வேண்டும்.

posted by * டாக்டர் விகடன்

சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள்.

Sunday, February 5, 2012

உங்கள பயணம் இனிமையானதாக அமைய



இன்று பயணங்கள் தவிர்க்க முடியதாகிவிட்டது.ஆனால் அந்த பயணம் இனிமையானதாக அமையுமா என்பது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

 குறிப்பாக, பயணங்களின்போது வாந்தி, காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவுகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதற்கான தீர்வுகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்குமணி கூறியதாவது :பயணத்தின்போது, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அடிவயிறு வலி, நீர்க்கடுப்பு ஏற்படும்.

இருமல், சளி, காய்ச்சல்:பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதாலும்,அவர்கள் இருமும்போதும்,ஒரே அறையில் அவர்களுடன் தங்குவதாலும் இந்நோய் பரவலாம். மாஸ்க் அணிவதாலும், நோயாளி பயன்படுத்திய பேனா, பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் இந்நோயை வராமல் தடுக்கும்.

வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி : பயணம் செய்யும் போது மிக அதிகமானவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். "இ-கோலி' என்ற பாக்டீரியாவாலும், "ரோட்வைரஸ்' என்ற வைரஸாலும், "ஜியார்டைசிஸ்' என்பதாலும் வருகிறது. உணவு, குடிநீர்தான் முக்கிய காரணம். இதை தடுக்க, வேகாத உணவுகளை உண்ணக்கூடாது. பச்சை உணவுகளை உண்ணக்கூடாது.

 தெருவில் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டும்தான் பருகவேண்டும்.

ஐஸ்கட்டிகளில் குளிரூட்டப்பட்ட பானங்களை பருகக்கூடாது.

தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி: உயரமான மலைபகுதிகளுக்கு செல்லும்போதும், கார், பஸ் பயணத்தின்போது கட்டாயம் தலைசுற்றல் ஏற்படும். இதை தடுக்க, பயணத்தின்போது நிறைய சாப்பிடக்கூடாது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள்,திண்பண்டங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. டாக்டர் ஆலோசனைபடி, மாத்திரைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பயணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பே அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடிவயிறுவலி, நீர்க்கடுப்பு: பயணம் செய்யும் இடமும், தங்கும் இடமும் புழுக்கமாக இருந்தால் நீர்க்கடுப்பு ஏற்படும். பயணத்தின்போது சரியான அளவு தண்ணீர் குடிக்காததாலும் இந்த பாதிப்பு ஏற்படும். பயணத்தின்போது இரண்டு முதல் மூன்று லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அருந்த வேண்டும்.

பயண முதலுதவி பெட்டி: செல்லும் இடம், தங்கும் நாட்கள், பயணத்தின் தன்மை, தங்கும் இடத்தில் உள்ள மருத்துவ வசதிகள், தங்கும் இடங்களில் உள்ள வியாதிகளை கணக்கிட்டு,முதலுதவி பெட்டியில் வைக்கும் மருந்துகளின் அளவும்,மருந்து தன்மையும் மாறலாம்.

காய்சல், தலைவலிக்கு Paracetamol மாத்திரை, வாந்திக்கு Domperidone, Metaclopromide மாத்திரை,வயிறு எரிச்சல், வயிறு வலிக்கு  மாத்திரை, வயிற்றுபோக்கிற்கு Pantaprazole, Rabiprazole, Ranitidine மாத்திரை, தலைசுற்றுக்கு Lopramide, codiene sulphate, metronidazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இம்மாத்திரைகளை டாக்டர் மருந்துச்சீட்டுடன், மருந்து அளவு மற்றும் மருந்து சாப்பிட வேண்டிய நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பயணத்தின்போது காயம் ஏற்பட்டால், களிம்பு, மருந்துகள், பிளாஸ்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு: அதிகநேர பயணம், மோசமான ரோடு, கடும் வெயிலில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் 36வது வாரம் வரை உள்நாட்டு சிறிய பயணங்கள் மேற்கொள்ளலாம். 32 வாரங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது.

மாரடைப்பு நோயாளிகளா நீங்கள்?விமானம் பயணம் மேற் கொள்ளும் போது,உங்களது உடல்நிலை குறித்த தகவல்களை டாக்டர் கைப்பட எழுதிய சான்றிதழ் டெலிபோன் எண்ணுடன் இருக்க வேண்டும். நீங்கள் "பேஸ்மேக்கர்' வைத்து இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். ஜன்னல் இருக்கைகளை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து,ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை விமானத்துக்குள்ளேயே நடக்கலாம்
.
நுரையீரல் நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக சளி, மூச்சு முற்றல், நுரையீரல் தமனி அழுத்தம், நெஞ்சக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், மூன்று மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் "இன்ஹேலர்' வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக நேரம் விமான பயணம் மேற்கொள்ளும்போது, சர்வதேச நேர மாற்றங்களை குறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். தவறினால், சர்க்கரை குறைநிலை ஏற்படலாம்.

 இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இன்சுலின் ஊசி, குளூகோஸ் மானிட்டர், சாக்லெட் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் ரத்தஅழுத்தம் உள்ளவரா? பயணத்தின்போது ரத்தஅழுத்தத்திற்குரிய மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பயணத்திற்கு முன்பு டாக்டரிடம் ரத்தஅழுத்தம் சரியான அளவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Source: Dinamalar

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும்  நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

Wednesday, February 1, 2012

எடையை குறைக்க எட்டே வழிகள்!



காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்,அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.

 முடிந்த வரை சாக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது.

இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு,உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும்போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.
இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம்.

மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் அதிகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.தினசரி

1.காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது, 35 நிமிடம் உடற் பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3.அப்போத தயாரித்த வெண் பூசணிச் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)

4. காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.முடிந்த வரை சர்ககரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6.மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்ததல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க செல்லவும்.
'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.

- நன்றி: 'தினமலர்' நாளிதழ்

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.
 

Tuesday, January 31, 2012

மின்சாரத்தை சேமிப்போம்



தினமும் பல மணி நேர மின்வெட்டை சந்திக்கும் நாம் சிந்தித்தால் மின்சாரத்தை நிச்சயமாக சேமிக்க இயலும். மின்சாரப் பற்றாக்குறை நம் நாட்டை பலமாக உலுக்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலம் என்னவாகும்? ஒரு குடிமகனாய் நம்மால் முடிந்ததை நாட்டிற்காக செய்வோமே.......

Ø வீடுகளில் CFL பல்பை பயன்படுத்தவும்.
...
Ø பயனற்ற இடங்களில் பல்பை எரியூட்டாதீர்.

Ø தொலைக்காட்சி, கணினி போன்ற மின்சாதனங்களை வேலை முடிந்தவுடன் அனைத்துவிடவும்.

Ø மொபைல் சார்ஜ் ஏற்றிய பின் சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை கழட்டி வையுங்கள்.

Ø மின்சாதனங்களை வாங்கும் போதே அரசின் மின்சிக்கன நட்சத்திரங்களை பார்த்து வாங்கவும்.

Ø வீட்டை விட்டு வெளியில் அல்லது வெளியூர் செல்லும்போது வீட்டின் மைய இணைப்பை நிறுத்தி செல்லவும்.

முடிந்தவரை எளிமையாய் வாழக் கற்றுக்கொண்டாளே போதும் நம்மால் உலகை வளப்படுத்திட முடியும்


நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

PAN கார்டு பெறுவது எப்படி?



PAN - Permanent Account Number.

பான் கார்டு என்பது இந்திய மக்களுக்கு அளிக்கபடும் நிலையான எண் அடங்கிய அடையாள அட்டை.வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கு இந்த பான் கார்டு மிக அவசியம்.பான் கார்டு இருந்தால் மட்டுமே பங்குச்சந்தை மட்டும் வங்கிகளில்.ரொக்க பணம் வைப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய இயலும்.

பான் கார்டு பெற்றுத் தருவதாக சொல்லி பல நபர்கள் பல நூறு ரூபாய்களை செலவழிக்கின்றனர். அனால் அதன் உண்மைநிலை வேறு. உண்மையில் பான் கார்டு பெற தற்போது அரசு விதிகளின் படி வெறும் 110 ரூபாய் மட்டுமே ஆகிறது. பான் கார்டை பெற விரும்புவோர் வங்கிகள் அல்லது பங்குசந்தை அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெற பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் - படிவம் எண் 49A.



நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
 

 

வணக்கம்"


ஆங்கிலம் நம்மை எவ்வளவு அதிக்கதிற்கு ஆட்படுத்தியிருக்கிறது என்பதை சிறு தொலைப்பேசி உரையாடல் உணர்த்திவிடும். தொலைபேசியை எடுத்த உடனே நாம் முதலில் பயன்படுத்தும் வார்த்தை HELLO என்ற வேற்று மொழி வார்த்தையை தான். நம் தமிழில் அழகான "வணக்கம்" என்ற வார்த்தை இருப்பதை ஏன் நாம் மறந்து விடுகிறோம்.

வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.

தமிழக மாவட்டங்களின் இணையதளங்கள்


தமிழக மாவட்டங்கள் அனைத்தின் இணைய முகவரியையும் தேசிய தகவல் மையம் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. உங்கள் மாவட்டம் எதுவாய் இருந்தாலும் இனி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இருந்த இடத்தில இருந்தே உங்கள் மாவட்டங்களின் நிலையை
கண்காணிக்கலாம்.
http://www.tn.nic.in/tnhome/tndis.html
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும்.
 
திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள்.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.
 

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற



இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். ...அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.


PNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:

இணையத்தின் மூலம் பதிவு :

1) முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.
2) தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
3) அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில் sms ஆக வந்து சேரும்.

இணையவசதி அற்றோர் தங்களது மொபைல் மூலமாக எப்படி இந்த வசதியைப் பெறுவது:

Ø மொபைலில் MYPNR என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பின் தங்களது பத்து இலக்க PNR Number ஐ டைப் செய்து இந்த குறுந்தகவலை
92200 92200 என்ற எண்ணிற்கு அணுப்பவும்.
எடுத்துக்காட்டு MYPNR0123456789 to 9220092200.

இனி டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு நீங்கள் அதனை பின்தொடர வேண்டாம் இனி நிலவரங்கள் உங்களை பின்தொடரும் நீங்கள் நிம்மதியாக இருங்கள்.

இந்த சேவை முற்றிலும் இலவசமானது .

http://mypnrstatus.com/

எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள்.

நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.
 

Friday, January 27, 2012

இந்திய கனவு


 
தட்டுப்பாடில்லா தண்ணீர்

கலப்படமில்லா உணவு

மாசில்லாக் காற்று

சுகாதாரமான சூழ்நிலை

விபத்தில்லா பயணம்

மதவெறியற்ற மக்கள்

சிதைவில்லா கோவில்கள்

லஞ்சமில்லா அலுவகங்கள்

ஊழலில்லா அரசியல்

நேர்மையான தலைவர்கள்

கலவரமில்லா வீதிகள்

தாதாக்கள் இல்லாத நகரங்கள்

இன்னும் நீள்கிறது கனவுப் பட்டியல்

விடிவு மட்டும்தான் இல்லை
.
...
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.

சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும்.

லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம்.
 

கணவரை மகாராஜாவைப் போல மதியுங்கள்


தம்பதியர் இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய கால கட்டத்தில் இருவரும் இணைந்து இருக்கும் நேரங்கள் குறைவு
 
அவர்களின் புரிதலின்மையினால் சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விரிசல் உருவாகின்றன
 
மகாராஜாவைப் போல மதியுங்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நமக்கான மதிப்பும் மதிக்காத இடத்தை ஒதுக்கலாம் சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம்
 
தோற்றுப் போவது நல்லது வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள் நீங்களே முதல் தோழி உங்களவரை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
 
அக்கறை அவசியம் உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள்
 
ஒப்பிட தேவையில்லை உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம்
 
நிதி மந்திரியாகுங்கள் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்
 
மறதி நல்லதிற்கே உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார்
 
நீங்களே தொடங்குங்கள்
 
கணவன்தான் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள்
 
தன்னையே ரசிக்கலாம் உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்
 
சந்தோச கூடாரம் 

வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள்."ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்"என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.
.

 உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள்இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.


 இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன்.ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

 மறந்து விடுங்கள்.
 ஆடம்பரம் வேண்டாம். உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை.

இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

 ஒருவர் போல் மற்றவர் இருக்கமுடியாது. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!
எனவே கணவரை உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட தப்பித்தவறி ஒப்பிட்டு பேச வேண்டாம்.
இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள்.
 நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்

நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
 அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.
மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பது சராசரி மனித மனத்தின் எதிர்பார்ப்பு.
 அதிலும் இல்லத்தரசியிடம் கிடைக்கும் மதிப்புதான் கணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அவார்டு.
எனவே கணவரை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம்
ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். அப்புறம் பாருங்கள் இந்த மகாராணியை கேட்காமல் மகாராஜா ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார்.
 இதற்கு காரணம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்தாததுதான் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்
இல்லத்தரசிகள் சின்னச்சின்ன வழிகளை கையாண்டு கணவரிடம் அன்பை வெளிப்படுத்தினாலே வாழ்க்கை வசந்தமாகும் என்கின்றனர் அவர்கள். இருவரிடையே பிணைப்பை அதிகரிக்கும்,
 உற்சாக ஐடியாக்களை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.
 வீட்டிற்குள் என்னதான் தம்பதியர் மனமொத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதல் அரிதாகிவருகிறது!
 தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும்.நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள்

உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.. இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று..பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள்.நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம்.. 

கணவனின் வரவுக்குள் செலவு ! .. . 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவருடைய நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த தோழியாக நீங்கள் மாறிவிடுவீர்கள்., சந்தேகங்கள் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது. உடனுக்குடன் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுவது இருவருக்குமே நல்லது.. ., .. அந்த சில மணி நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்

காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.
 

Monday, January 23, 2012

நடைமுறை நாகரீகம்

   

நடைமுறை நாகரீகம் என்பது பொது இடங்களிலும் விருந்தினர்களிடமும் பிறர் முன்னிலையிலும் நாம் நடந்து கொள்ளும் முறையாகும். நடைமுறை நாகரீகம் தெரியாமல் நாம் ஏடாகூடமாக நடந்து அசடு வழிவதைத் தவிர்க்க ஒரு சில யோசனைகளை தெரிந்து கொள்வோம். 


மற்றவர்கள் முன் பொது இடத்தில் உரக்கப் பேசுவது, நாகரீகம் அல்ல. மற்றவர் பார்வை நம் மேல் பதியும்படி உரக்கச்சிரிப்பதும் நல்லதல்ல.
நமக்குத் தெரிந்ததையே பேசிக்கொண்டு, மற்றவர்களின் வாயை அடைக்க நினைப்பதும், நமது பிரச்சினைகளையே சொல்லிச் சொல்லி புலம்புவதும் பிறருக்கு விருப்பமில்லாத ஆர்வமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

விருந்தினர் முன்னிலையில் நாம் இரகசியம் பேசுவதைப்போல் வீட்டாரோடு காதோடு காதாக பேசுவது தவறு.... அப்படி மிகவும் முக்கியமாக பேச வேண்டியது இருந்தால் தனியே போய் பேசுவதே நலம்.
நாம் விருந்தினராக செல்லும் இடத்தில் நமது வீட்டையும், அவர்கள் வீட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதல்ல. அதிலும், ‘எங்கள் வீடு உசந்தது’ என்ற ரீதியில் பேசுவது அநாகரீகம்.

பொது இடத்தில் பல் குத்துவது, காது குடைவது, குறும்பு செய்வது தவறானது. 

தும்மல் வந்தால் முகத்தைத் திருப்பி தும்முதல் நலம். பொது இடத்தில் நடைபெறும் விருந்துகளில் அரக்க பரக்க உண்ணக்கூடாது. நிதானமாய், சத்தம் வராமல் நாகரீகமாய் சாப்பிட வேண்டும். 

தண்ணீர், குளிர்பானங்களை “மடக் மடக்” என ஒலி வரும் வகையில் குடிக்கக்கூடாது. பெண்கள் அதிக நகை அணியாமல் வெளியில் வருவது நல்லது. தூய்மையாக உடை அணிவதும் எளிய அலங்காரமும் போதும். இவை மற்றவர்களின் முன்னிலையில் உங்கள் மதிப்பை உயர்த்தும்.

Thursday, December 29, 2011

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்

தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.
இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Thanks to malaimalar

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்!

 அதிக நேரம் டி.வி. பார்ப்பதும் நல்லதல்ல. அந்த நேரத்தில் கண்களில் அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் டி.வி. பார்க்கும்போது கண் சம்பந்தப்பட்ட நரம்பு செயலிழந்து விட வாய்ப்புண்டு. குடித்துவிட்டு டி.வி. பார்ப்பதென்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல ஆகும்.

அடிக்கடி சேனலை மாற்றிக் கொண்டு இருப்பதும் கண்ணுக்கு நல்லதல்ல. ஒரு சேனலிலிருந்து இன்னொரு சேனலுக்கு மாறும்போது முதலில் ஒரு நொடி இருட்டும், அடுத்த நொடி அதிக வெளிச்சமும் ஏற்படும். இது கண் உறுப்புக்களைத் தூண்டித் தூண்டி பார்க்கச் செய்து கண்களை சீக்கிரமே சோர்வடைய வைக்கிறது.
இதைத் தடுக்க சேனலை மாற்றாமல், ஒரே சேனலையே பாருங்கள் என்று சொன்னால், யாராவது கேட்பார்களா? கண்டிப்பாக கேட்க மாட்டார்கள். கண் பாதிக்காமல் சேனலை மாற்றி மாற்றிப் பார்க்க ஒரு புதிய வழியை சொல்கிறேன், செய்து பாருங்கள். சேனலை மாற்றுவதாக இருந்தால் முதலில் கண்ணை ஒரு நொடி மூடி வைத்துக்கொண்டு சேனலை மாற்ற ரிமோட்டை அழுத்துங்கள்.
சேனலை மாற்றியபிறகு, கண்களை நான்கைந்து முறை மூடி திறந்து மூடி திறந்து பாருங்கள். அதற்கப்புறம், ஒது பத்து முறையாவது கண்ணை சிமிட்டிவிட்டு அதற்கப்புறம் டி.வி.யைப் பார்க்க ஆரம்பியுங்கள். இந்த மாதிரி செய்தால் கண்ணுக்கு ஓரளவு களைப்பு ஏற்படாது. வெளியூர் செல்லும் பஸ்களில் இப்பொழுதெல்லாம் டி.வி. கண்டிப்பாக இருக்கிறது.
இந்த டி.வி.யை ரொம்ப கிட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, ரொம்ப பின்னாடி உட்கார்ந்து கொண்டு, ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு, எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பது கண்ணுக்கு நல்லதல்ல. அடுத்து டி.வி. ஸ்கிரீன் அகலத்தை மாதிரி, குறைந்தது 7 மடங்காவது தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதுவும் பஸ்ஸில் முடியாது.
அதற்கும்மேல், பஸ் ஆடிக்கொண்டே போவதால் டி.வி. ஒழுங்காகத் தெரியாது. இதுவும் கண்ணுக்கு கெடுதியே. எனவே பஸ்சில் டி.வி. பார்ப்பதைத் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது அல்லது தூங்குவது கண்ணுக்கு ரொம்ப நல்லது. "நாம் பார்க்கும் பொருள், அதிக வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல.
மிகக் குறைவான வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல'' என்று டெலிவிஷன் ஒளியைப் பற்றிய ஆய்வுகளை தொடரும் ஜான் புல்லோ என்கிற விஞ்ஞானி சொல்கிறார். `நான் 20 வருஷமா இருட்டு அறையிலே உட்கார்ந்துதான் டி.வி. பார்க்கிறேன், எனக்கு கண் ஒண்ணும் ஆகலையே. நல்லாத்தானே இருக்கு?' என்று சிலர் சொல்லலாம். நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.
வெளித்தோற்றத்திற்கு எல்லோருடைய கண்களும் நன்றாக இருப்பதுபோல்தான் தோன்றும், டெஸ்ட் பண்ணிப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு கண் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியும். செல்போனைப்போல கம்ப்யூட்டரும் இன்றைய உலகில் மிக மிக முக்கிய தேவையான பொருளாக ஆகி விட்டது.
கம்ப்யூட்டர் இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது. கம்ப்யூட்டர் உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கம்ப்யூட்டர் மாறிவிட்டது. இந்த கம்ப்யூட்டர் உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கம்ப்யூட்டரோடு படுத்து உறங்குகிறார்கள்.
பெரிய பெரிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், காலையிலிருந்து இரவு வரை அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துதான் ஆக வேண்டும். பார்க்கமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஐ.டி. கம்பெனிக்காரர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் கொடுக்கும்போது கண்டிப்பாக அவர்கள் சொல்கிற வேலையை செய்துதான் ஆக வேண்டும்.
`கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்` (சி.வி.எஸ்.) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால், கம்ப்யூட்டரில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும்போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்துவிடுவதுதான் என்று தெரியவருகிறது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை (14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது கண் சிமிட்டுவது குறைந்துவிடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
1. கம்ப்யூட்டர் மானிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மானிட்டர் மீது படுவதாக இருந்தால் மானிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு முன்னால் மாட்டிக்கொள்ளுங்கள்.
2. கம்ப்யூட்டரும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி, நல்ல நாற்காலியாக இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால்தான் கம்ப்யூட்டரில் அதிக கவனம் செலுத்த முடியும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி வந்து விடும். கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள். உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ. முதல் சுமார் 50 செ.மீ. தூரம் தள்ளி, கம்ப்யூட்டர் மானிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள். அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4.தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இடைஇடையில் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக, வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் மானிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மானிட்டரிலிருந்து சுமார்
70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.
6. கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது. எப்படி வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளுங்கள் என்று ஊறுகாய்க்கு டிவி.யில் விளம்பரம் வருவதுபோல, எப்படி வேண்டுமானாலும் டி.வி.யிலும், கம்ப்யூட்டரிலும் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் கண்ணுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

Tuesday, December 27, 2011

மனிதநேயத்தையும் தாண்டி.....தியான பயிற்சி



பிறர் சொல்லாத வரை நாம் அவரை தியான ஆசிரியர் என்றுதான் நம்பக் கூடும். தியானத்தை ஒரு கலையாக மட்டும் அணுகாமல் அறிவியல் மற்றும் வரலாற்று பூர்வமாக பேசுவதைக் கேட்கும்போது, தியானத்தில் அவர் வைத்திருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இன்றுள்ள தியான பயிற்சி ஆசிரியர்களுக்குத் தெரியாத தகவல்களைக் கூட அவர் தெரிவிக்கும்போது, நாமும் அவரிடம் யோகா கற்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மை அறியாமல் ஏற்படுகிறது.
தான் அறிந்த கலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், புழல் சிறைக் கைதிகளுக்கு அவர் தியான பயிற்சி அளிப்பதை சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது.
அவர் சிறைக் கைதிகளை ஏ.டி.ஜி.பி. டோக்ராவாக மட்டுமின்றி மனிதநேயமுள்ள மனிதராக அணுகுவது, கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற 6 மாதங்களாக 50 கைதிகளுக்குத் தியான பயிற்சி அளிக்கும் டோக்ரா, மேலும் பல கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம், தாரிவால் பகுதியைச் சேர்ந்த எஸ்.கே. டோக்ரா, 1982 -ல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. எனப் பல பதவிகள் வகித்துள்ளார்.
இப்போது சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் டோக்ரா, பல்வேறு பணிச்சுமைக்கு இடையே நமக்கு அளித்த பேட்டி:
தியானம் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் இருந்தே தியானம் கற்று வருகிறேன். புத்தங்கள் மூலம் தியானம் செய்யும் முறையை அறிந்த பின்னர் அதன்படி செய்யத் தொடங்கினேன். என்னுள் தியானம் ஏற்படுத்திய மாற்றத்தை உணர்ந்ததால், மேலும் அதைப் பற்றி அதிகமாக படித்தேன். இன்றும் தியானத்தைப் பற்றி படித்து புதிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
நீங்கள் பின்பற்றுவது எந்த வகை தியானம்?
மகரிஷி பதஞ்சலி முனிவர் எழுதிய யோகா சூத்ரா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானத்தை செய்து வருகிறேன். இன்று உலகத்தில் உள்ள அனைத்து தியான வகைகளிலும் பதஞ்சலி கூறியதை அடிப்படையாக கொண்டதே ஆகும். மேலும் மனித மூளை செயல்பாடுகளை நுட்பமாக தெரிந்துக் கொண்டு, அதற்கு ஏற்றார்போல தியானம் செய்கிறேன்.
கைதிகளிடம் தியானம் குறித்த ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்தினீர்கள்?
தியானம் மூலம் கைதிகளின் நடத்தையையும், சிந்தனையையும் மாற்ற முடியும் என எண்ணினேன். மேலும் மன உளைச்சலில் இருப்பவர்களை அதில் இருந்து மீட்க முடியும் என நினைத்தேன்.
அதன்படி புழல் சிறையில் கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டேன். ஏ.டி.ஜி.பி. என்பதற்காக யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை, விருப்பமுள்ள கைதிகள் இதில் சேரலாம் என அறிவித்தேன். முதலில் 10 கைதிகள்தான் சேர்ந்தனர்.
தியானம் அவர்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை மற்ற கைதிகளிடம் கூற, கைதிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. ஒரு வகுப்புக்கு 50 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காக, வேறு கைதிகள் சேர முன்வந்தும் சேர்க்கவில்லை.
தியான முறைகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கிறீர்கள்?
வாரந்தோறும் கைதிகளுக்குத் தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன். 2 மணி நேரம் நடக்கும் வகுப்பில், முதலில் கைதிகள் தியானத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதற்கு அவர்களை மனம் திறந்து பேச வைப்பேன். அவர்கள் அமைதியான மனநிலைக்கு வந்த பின்னர், தியானம் கற்றுக் கொடுக்கிறேன்.
பயிற்சியில் பங்கேற்ற கைதிகளிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
கடுமையான மன உளைச்சலிலும், தீய உணர்விலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் சிக்கித் தவித்த அவர்கள், தியான பயிற்சியின் மூலம் ஆழ்மன அமைதியை உணர்ந்துள்ளனர். தாங்கள் செய்த தவறுகளின் பாதிப்பை புரிந்துள்ள அவர்கள், நல்லவற்றை சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது சக கைதிகளிடம் அன்பு செலுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால், தாங்கள் இருப்பது சிறை என்பதை மறக்கத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த திட்டம்?
இதுவரை அளித்த தியான பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளதால், மேலும் தியான பயிற்சியை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்ததாக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிக புகார்களுக்கு உள்ளாகும் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் புழல் சிறையில் தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இதன் மூலம் சிறைகளில் ஏற்படும் பிரச்னை கட்டுப்படுத்தப்படுவதோடு, அவர்களும் வாழ்க்கையில் நல்ல நிலைக்குச் செல்ல முடியும். இப்பயிற்சியை ஜனவரி இறுதியில் இருந்து தொடங்க உள்ளேன்.

ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!



ஃபுகுஷிமாவை மூட ரூ. 78,400 கோடி, 40 ஆண்டுகள் தேவை!

டோக்கியோ, டிச.21: ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Monday, December 19, 2011

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள்

கழிவு நீரில் கழுவப்படும் காய்கறிகள் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை, கழிவு நீரில் கழுவுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 1,000 எக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது. கேரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கியை கழுவி விற்பனைக்கு அனுப்பினால் மட்டுமே, நல்ல விலை கிடைக்கும். ஆனால், இங்கு நீர்த்தேக்கம், கிணறுகள் இல்லாததால், ஓடை கழிவு நீரில், காய்களை கழுவும் நிலை நீடிக்கிறது. பூம்பாறை, மன்னவனூரில் இது அதிகம். சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிட நினைப்போருக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கிஷோர் கூறுகையில், காய்கறி கழுவ 3 இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான நிதி வரவில்லை என்றார்.

Saturday, December 17, 2011

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்


<>
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம்.

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:

*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
3) குடல் புண்ணின் அறிகுறிகள்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.

இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:

1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

****நன்றி : களஞ்சியம்

Friday, December 16, 2011

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்


1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்


எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்


உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!


Thanks to penmai.com

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...