Total Pageviews

Tuesday, February 25, 2020

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

குறைந்த உழைப்பு அதிக ஊதியம் !  எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?

இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! பெறுகிறார்கள்! புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் ! புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள் !

கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள். கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளைஞர்கள் பற்றிய நல்ல செய்திகள்.

 கெட்ட செய்திகளும் உண்டு.

புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது!

செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை!

    உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை!

    விளையாட்டில் ஆர்வம் இல்லை!

விளையாட்டுக் குழுக்கள் இல்லை. விளையாட்டுப் போட்டிகளும் இல்லை!

 சுயநலம் பெருகி விட்டது!

நிறைய இளைஞர்கள் குடிக்கிறார்கள் என்ற செய்தி தினம் தினம் வந்து கொண்டே உள்ளது!

சுற்று சூழலும் அதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம், டீ குடிக்க வச்சிக்கோ என்று செலவுக்கு கொடுப்பார்கள். இப்போது அது கட்டிங்க்கு என்று மாறி கொண்டுள்ளது. மக்களிடத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒழுங்கு முறைகள் ஒழுக்கத்துடன் கூடிய கலாச்சார விழுமியங்கள் காலாவதியாகிவிடுமோ?

இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?

இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள்.
 
திறமைகளும் சுமார்தான்.. தயங்கி தயங்கி பேசுவார்கள்..தொழில்நுட்ப அறிவு மிக குறைவு.. ஆனாலும் நல்லவர்கள் நிறைய இருந்தார்கள். தவறு செய்ய பயப்படும் சூழல் இருந்தது. சிகரெட் பிடிப்பதே ஒளிந்து கொண்டுதான் என்ற நிலை.. உள்ளூர் டீக்கடையில் டீ குடிப்பது கூட கௌரவ குறைவு என்று நினைத்தவர்களும் உண்டு. பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் விளையாட்டுக்களில் ஆர்வமாக கலந்து கொண்டார்கள். ஊர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.  கல்வியும் மற்ற திறமைகளும் குறைவாகத்தான் இருந்தது.

இப்போதைய தேவை !

அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.

 இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள்! ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள்! உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு நல்ல உணவு அவசியம்!  உள்ளம் ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம்.

 கெட்ட பழக்கம் வேண்டாம்!

விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். இன்று சிகரெட்டால் நுரையீரலில் குணப்படுத்தமுடியாத நோயால் அவதிப்படுவோர், மதுவால் கல்லீரலில் கடுமையான பாதிப்புக்கு ஆளானோர், சூதாட்டத்தி்ல் பெரும் செல்வத்தை இழந்தவர்களெல்லாம் முதலில் ஜாலிக்காகவும் டைம்பாசுக்காகவும் தான் ஆரம்பித்திருப்பார்கள். எனவே ஜாலிக்காக என்று எதை செய்ய நினைத்தாலும் சற்று யோசியுங்கள்.

உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது !
 
உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள் உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள் !.
 
திறமைகளை வளருங்கள் !

தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது!

நட்பு வட்டம்

நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதி்க்க முடியும்.அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

நேரந்தவறாமை !

ஒவ்வொரு காரியமும் குறிப்பி்ட்ட நேரத்தி்ல் நிறைவேற்றப்பட வேண்டும்.காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது.எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.

பேசும் திறன் !

பேசும்போது தெளிவாக, தன்மையாக பேச வேண்டும். அதே சமயம் நிதானமாக நம் எண்ணங்களை புரிய வைக்க வேண்டும்.

மற்ற மொழிகற்றல்!

எல்லோர்க்கும் அவரவர் தாய் மொழி மீது அலாதி பிரியம். என்றாலும் கூடுதல் மொழி கற்றுக் கொள்வதால் அனேக நன்மைகள் உண்டு. அடுத்த மொழி கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் கை கொடுக்கும்.

சுத்தம் பேணுதல்!
 
நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது சுகாதாரம் மட்டுமன்றி, நம்மீது பிறர்க்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் ஓய்வு நேரம் ஆக்கபூர்மானதாக அமையட்டும் !

இதுபோன்ற இன்ன பிற தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துங்கள்.

பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது..

பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீ்ர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.

நேர்மறை எண்ணங்கள் (positive approach)

உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.

பெற்றோர்கள் !
பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள்! நல்லவர்களாக வருவார்கள். நல்ல பண்பாடு, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்!

நமது வாழ்வில் ஆனந்தம் என்றும் தங்கும்!

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !

எந்த ஓரு காரியமும் நேர்வழியில் லஞ்ச லாவண்யம் இன்றி செய்ய முடியாமல் போகும் போது தேவையான காரியங்களை நிறை வேற்ற கையூட்டு கொடுக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஒருவர் வீடு கட்ட நினைக்கின்றார் என்றால் மாநகராட்சியிடமிருந்து வீடு கட்டுவதற்க்கான அனுமதி பெற வேண்டி உள்ளது. யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? இல்லை என்பதே பலரின் பதிலாகும். வீட்டிற்க்கு மின் இணைப்பு பெற யாராவது ஒருவர் கையூட்டு கொடுக்காமல் அனுமதி பெற்றவர் உண்டா? என்றால் இல்லை என்பதே பலரின் பதிலாகும்.

 "முன்பெல்லாம் கடமையை மீறுவதற்குத்தான் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது, கடமையைச் செய்யவே லஞ்சம் தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டதுதான் மிகவும் வேதனையான விஷயம். இப்படி சமூகத்தில் அடி ஆழம்வரை ஊடுருவிய ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு நாளில் சாத்தியமில்லை. அதற்கான முன்னெடுப்புகளைத் தனிநபர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை இணைந்து செயல்படுத்தினால்தான் சாத்தியம்"

.எனவே மக்கள் நேர்வழியில் செல்வதைவிட குறுக்கு வழியையே, அதாவது லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பதையே விரும்புகிறார்கள், அது ஏன்? விரும்புவதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கு இதுவே சுலபமான வழி அல்லது இது தான் ஒரே வழி என்பதாக தோன்றலாம். சில சமயங்களில், லஞ்சம் கொடுப்பது ‘லாக்-அப்’பிலிருந்து வெளிவருவதற்கு ஓர் எளிய வழியாக இருக்கலாம். அரசியல்வாதிகளே, போலீஸ்காரர்களே, நீதிபதிகளே லஞ்சம் வாங்குவதை கண்டு கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அவர்களே அப்படி செய்யும்போது, அதை கவனிப்பவர்களும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.

லஞ்சமும் ஊழலும் பெருக பெருக நாளடைவில் அதுவே சகஜமான ஒன்றாகி வாழ்க்கையின் பாகமாகிவிடுகிறது. மிகக் குறைந்த வருமானம் வாங்கும் மக்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறார்கள். நாலு பேருக்கு மத்தியில் “கௌரவமான” வாழ்க்கை நடத்த வேண்டுமானால், லஞ்சத்திற்குள்தான் தஞ்சம் புக வேண்டும் என்று நினைக்கிறார்கள். கறாராக லஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும் சரி ஏதாவது சலுகை பெற லஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை.

இரண்டு பலமான சக்திகள் ஊழல் என்ற உலைக்கு தீமூட்டுகின்றன. சுயநலமும் பேராசையுமே அந்த சக்திகள். ஊழல் செய்யும் மக்கள் தங்களுடைய ஊழலால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுகளவுகூட கவலைப்படுவதில்லை. ஏன்? சுயநலமே காரணம். லஞ்சம் கொடுப்பதால் தாங்கள் நன்மையடைகிறார்கள் என்பதன் காரணமாக தாங்கள் செய்வது சரியென கருதுகிறார்கள். பொருளாதார நன்மைகள் பல கிடைப்பதால் ஊழல் புரிபவர்கள் இன்னும் பேராசைமிக்க பெருச்சாளிகளாய் மாறிவிடுகிறார்கள்.ஆனால் அது ஊழலையோ சட்டவிரோதமான காரியங்களையோ எப்போதும் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.

இப்படிப்பட்ட ஊழலாலும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவாலும் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே. ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ‘ஊழல் என்பது ஏழைகளை ஒடுக்குவதற்கான ஒருவழி’ என தி இக்கானமிஸ்ட் சுருக்கமாக குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஒழிக்க முடியுமா? அல்லது ஊழல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றா? இக்கேள்விக்கு விடை காண முதலில் ஊழலுக்கான சில அடிப்படை காரணங்களை நாம் கண்டு உணர வேண்டும்.

பல வலுவான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அதோடு, புதிய சட்டங்களையும் இயற்ற வேண்டும். ஓர் அதிகாரி லஞ்சம் பெற்றதாக நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால், ஏற்கெனவே லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்கள் கூட மீண்டும் மீண்டும் வாங்கும் நிலையே இருக்கிறது.

ஒவ்வொருவரும், தங்களுக்கு எந்தச் சான்றிதழ் வாங்கினாலும் அதை அவசரகதியில் அணுகாமல், உரியகாலத்துக்கு முன்னரே தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு, பள்ளியில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் போய் சான்றிதழ் வாங்க நின்றால், நம் அவசரத்தைப் பயன்படுத்தி, லஞ்சம் கேட்பது அதிகாரிகளுக்கு சுலபமாகிவிடும். அதோடு, பிறப்புச் சான்றிதழ் தொடங்கி, மின் இணைப்புவரை ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கட்டணம், எவ்வளவு நாள்களில் கிடைக்கும் என்பதைப் பற்றி தகவல்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது, கூடுதல் கட்டணங்கள் கொடுப்பதையும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் உதவும்.

மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்குரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளில் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருத்தல் என அரசு, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலே 80 சதவிகித ஊழல் கட்டுக்குள் வந்துவிடும்.

அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற தேசமாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை. எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டோம். வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கட்டுப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் நாம் செயல்பட்டால் லஞ்சம், ஊழலை ஒழிக்கலாம்".

Monday, February 24, 2020

மனித மனம் எதை விரும்புகிறது ?

மனித மனம் எதை விரும்புகிறது ?

*‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்*.

*‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா*

*‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே,*

*'எப்படியாவது தனிக்குடித்தனம்' போயிடுன்னு’–*

*அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்*.

*‘
மகிழ்ச்சி ! ரொம்ப மகிழ்ச்சி ! .

*இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது! 

ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’*

*‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’*

*அம்மாவிற்கு அதிர்ச்சி !

*மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது*.

*1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி! – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்*.

*2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்*.

*3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.

*4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது*.

*5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்*.

*6.பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல் படுகின்ற, மனநிலை உண்டாகி விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்*.

*7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்*.

*8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்*.

*9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது*.

*10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப் போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்*.

*11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படு கின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர் கொள்வதே அதை வெல்ல உதவும்*.

*12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒரு முகப்படுத்தும் வழி*.

*13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை*.

*14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு*.

*15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்*.

*மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்*.
(ச.க.ம.)

*16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்*.

*17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும்*.
*வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்*.

*18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்*.

*19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்*.

*20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்*.

*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.

*பொறுமையைவிட மேலான தவ முமில்லை*

*திருப்தியை விட மேலான இன்பமு மில்லை*

*இரக்கத்தை விட உயர்ந்த அறமு மில்லை*

*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
  
*முக மலர்ச்சி யோடும், நம்பிக்கை யுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*  

Tuesday, January 28, 2020

விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. 

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்த படி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும் போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடை வெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால்,  அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட் என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...!

Friday, January 24, 2020

அமைதியான குடும்ப வாழ்விற்கு பெண்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் ..

அமைதியான குடும்ப வாழ்விற்கு  பெண்கள்   பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் ..


1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்

4.முதலில் அனைத்து வீட்டு வேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப் படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள் இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களைப்போலவே செய்வார்கள்.

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதை தவிருங்கள்

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "

10.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்றீர்களோ, உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்

 11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்

12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்

16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை

  17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏண்டா பெண்ணாய் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர். எண்ணவும் கூடாது

18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கை கொள்ள செய்திடும்

20.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

21.நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

22.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்

24.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமேஅணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

27.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும். சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்

29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது முப்பது நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

31.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்திடுங்கள்

31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்க வேண்டாம்

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

33.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள்

34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்

35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

36.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டாம். தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள். கொடுத்த பின் புலம்பவேண்டாம்

38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம்

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள். வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடாதீர்

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ண வேண்டாம் உழவர் சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே

44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது

48.தேவை இல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது. மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை மறக்க வேண்டாம்

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டாம்

51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அஃது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்

53.கணவரின் வெளிநாட்டு பயணங்கள், கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள். ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண். ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்

58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்கவேண்டாம்

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள். சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்

65.மொத்தத்தில் நீங்கள் தாயாக தோழியாக மனைவியாக இருப்பதைவிட சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்

66.பயிற்சியாளருக்குப் பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும். வாழ்க்கை எளிமையாகும். இனிமையாகும்

67.அன்பு நிலை பெற ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.

வாழ்க வளமுடன்..

Saturday, November 16, 2019

பணம் !

கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை.


 ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம் . . . 

ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை வந்துவிட்டால், எல்லாரும் குழம்பி போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”

இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது.

பணத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது.

மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது.

மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது.

புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது.

நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது.

 ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது.

 கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது.

வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது .


வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. 

இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.

 “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”

பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பதுதான் தப்பு.

பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போதுதான் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகிறது!

வாழத் தெரிந்த மனிதர்கள் !

பெரும்பாலான மனிதர்கள் கனவு உலகிலேயே  வாழ்கின்றனர். 


விழித்துப் பார்த்தால் தான் உண்மையான வாழ்க்கை புரியும்.

சந்தோஷத்தை  நிராகரிப்பவர்கள் எவரும்  இல்லை. 

அதே சமயம் துக்கத்தை ஏற்பவர்களும் எவரும் இல்லை. 

கர்மம் என்பது பந்தப் படுத்துவதும், பந்தத்திலிருந்து விடுவிப்பதும் ஆகும்.

 கர்மத்தை விடாமல் ஞானத்தை பெற முடியாது.

அர்ப் பணிப்புகள் இருந்தால்தான் உயர்ந்த பலனைப் பெற முடியும்.


குறிப்பாக அகங்காரங்களை அர்ப் பணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுய நலத்தை விடுத்து கொஞ்சம், கொஞ்சம் பொது நலத்தில் ஈடுபட வேண்டும்.

எதுவெல்லாம் அழியக்கூடியதோ அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. 

உடலைப் பற்றி கவலைப்படாதவர்கள் வாழத் தெரிந்தவர்கள் ! மற்றவர்கள் வாழத் தெரியாதவர்கள்! வாழ்வை விரையம் செய்கின்றனர் என்று அர்த்தம்!

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...