Total Pageviews

Saturday, November 16, 2019

பணம் !

கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை.


 ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம் . . . 

ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை வந்துவிட்டால், எல்லாரும் குழம்பி போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”

இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது.

பணத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது.

மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது.

மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது.

புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது.

நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது.

 ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது.

 கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது.

வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது .


வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. 

இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.

 “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”

பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பதுதான் தப்பு.

பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போதுதான் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகிறது!

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...