Total Pageviews

Tuesday, June 19, 2012

பூக்களை மிதிக்காதீர்.


பூக்கள் மென்மை ஆனவை

பூக்கள் மற்றும் மாலைகள் கடவுளுக்கு மட்டுமே  சாத்தப்படுகிறது.

மரண்ம் அடைந்தவரும் கடவுளுக்கு நீகரானவரே !

இறுதி ஊர்வலங்களில் எச்சரிக்கை தேவை!
இருப்பினும் எல்லா ஊர்களிலும், இறுதி ஊர்வலங்களில் மலர் மாலைகளை மரண்ம் அடைந்த நபரின் மேலிருந்து எடுத்து வீசுகின்றனர்.

 இறந்த பிணம் நோய் கிருமிகளின் கூடாரம் என்பர்... அதுவும், இறந்தவர் நோயாளி எனில், கிருமிகள் அந்த மாலைகளில் மிக அதிகமாக இருக்கும்

அதை வீசி எறிவதால் அக்கிருமிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பிணத்தின் மீதுள்ள மாலைகளின் மீது கை வைக்காதீர்கள்

என்ன தான் நமக்கு வேண்டியவராயினும், நோய்க் கிருமிகள் நம்மை தாக்காது இருக்குமா? ஊர்வலத்தில் மாலைகளை உயரமாகத் தூக்கி வீச, மின்சார ஒயர்களில் மாட்டிக் கொண்டு மின் வெட்டுக்கு வழி வகுக்கின்றனர்

பட்டாசை கட்டுக் கட்டாக கைகளில் பிடித்து தூர வீசுவதால் தீ விபத்தும், தீக்காயங்களும் பலருக்கு ஏற்படுகின்றன. இறுதி ஊர்வலம் அமைதியாக, யாருக்கும் இடையூறு இன்றி நடக்க வேண்டும்

இந்த இழி செயல்களால், மற்றவர்கள், இறந்தவர்  தம் குடும்பத்தை அசிங்கமாகப் பேசக்கூடும். எனவே, இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.. 
அந்த காலத்தில் அறியாமையால் செய்த காரியங்களை  இப்போதும் செய்தல் கூடாது

சின்ன வயதில் அம்மா சொன்னது இது.

சாவு வீட்டில் எல்லாமே தீட்டு. தெருவில் இருக்கும் பூவை எல்லாம் மிதிக்க தொடக் கூடாது. அப்படி செய்தல் உடனே குளித்து விட்டுத்தான் வர வேண்டும். அது சுகாதாரத்துக்கு தான் என்று இப்போது நன்றாக தெரிகிறது.... 

By : Sithayan Sivakumar 

தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்!

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம்.

உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும்.


No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...