Total Pageviews

Monday, September 16, 2024

விட்டுக் கொடுத்தல் இருந்தால் குடும்பம் என்றும் அழியாது !

 

* கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே செய்துகொள் என்று நழுவி விடுவார்கள். சொத்தை கத்தரிக்காய்,முற்றிய வெண்டைக்காய் வாங்கிவந்தாலும் வாய் திறக்காதீர்கள்.நாளடைவில் நல்லதை தேர்ந்தெடுக்க பழகிடுவார்கள்.

* பசியோடு இருக்கும் போது உங்கள் கோரிக்கைகளை வைக்காதீர்கள் நிராகரிக்கப்படும்.

* நொடிக்கு நொடி அம்மாவீட்டு பெருமையை பேசாதீர்கள்.நொய்நொய்ன்னு மாமியார் வீட்டைப் பற்றி குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். வீண் சண்டை தான் வரும்.

* குடும்பச் செலவுக்காக இருந்தாலும் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்காதீர்கள்.சில நேரங்களில் பொறுப்பு உங்கள் தலையில் விழுந்துவிடும்.

*போன் பேசினால் யார் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். தும்பு உங்களிடம் இருக்கிறது. தைரியமாக இருங்கள்.

*உங்கள் தேவைகளை அதிகாரமாக கேட்காதீர்கள் அன்பாக கேளுங்கள் உடனே கிடைக்கும்.

*கணவரின் ஆடை அலங்காரங்களை ரசித்துப் பாராட்டுங்கள்.மனைவியை விட்டால் ரசிக்கவும்,பாராட்டவும் அவர்களுக்கு யாரும் இல்லை.

* கணவன் கோபப்படும் போது உங்கள் கருத்தை சொல்லி நீங்களும் கத்தாதீர்கள்.அமைதியாக இருந்து விட்டு சரியான நேரத்தில் வலிமையாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் பலன் இருக்கும்.

பெண்களின் அன்பு பட்டம் போன்றது.

ஆண்களின் அன்பு நூல் போன்றது !

கண்ணுக்குத் தெரியாது.

குடும்பம் என்பது அழகான,கூடு. அங்கு விட்டுக் கொடுத்தல் இருந்தால் என்றும் அழியாது........

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...