Total Pageviews

Thursday, September 26, 2024

வசப்படும் வாழ்க்கை !

 வசப்படும் வாழ்க்கை .



_*நாற்பது  வயதுக்கு மேல் வாழ்க்கையில் தைரியம் என்பது,
நம் கையில் இருக்கும் பணத்தை பொருத்தே அமைகிறது.*_

_*வாழ்க்கையில் பணம் இல்லாமல் மனிதனாக வாழ இயலும்.
 

ஆனால் பணம் ஏதும் இன்றி மனிதர்களிடம் வாழ இயலாது.*_

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சம்பாதிப்பது சொத்து இல்லை. அனுபவித்ததுதான் சொத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.

 கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான் மனிதன்..


பாசத்தில் மனிதனை    வாழ்க்கையில் ஒவ்வொரு படிநிலையும்
ஒவ்வொரு ஆசான்...
எந்த படிநிலையும்
வந்தபடியே செல்வதில்லை...
ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும்,
ஏதோ ஒன்றை
ஏற்கச்சொல்லும்...
கற்றுக்கொள்ளவும்,
ஏற்றுக்கொள்ளவும்
தயாராக இருந்தால்
வசப்படுமே வாழ்க்கை.

வாழ்க்கையில்

வெற்றிபெறும் கலையை  முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தர முடியாது. சுயமாக முன்னுக்கு வரும் கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து நீங்கள் முன்னுக்கு வந்த கலையைச் சொல்லிக் கொடுங்கள் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லித்தரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இது சொல்லித் தர முடியாதது.
 

இது பலருக்கும் புரிவதிவதில்லை.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது ஒன்றை  சொல்லிக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வதில்தான்  வெற்றி அடங்கியிருக்கிறது.
 

சிவாஜி கணேசன் எந்தக் கல்லூரியிலும் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார்.

சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக்கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும்‌ இதனை புரிந்து கொள்ளாமல் புகழ் பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு.

சமைத்துப்பார் என்ற புத்தகத்தைக் படித்துச் செய்த சமையலை விட அருமையாக சமைக்கும் அம்மணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காரணம் அனுபவம் மட்டுமல்ல,பழக்கம் மட்டுமல்ல,மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம்  விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைச் சுலபமாகத் கற்றுக்கொள்ளும்.

தூக்கத்திலிருந்து விழித்தால் மட்டும் போதாது. மனதும் விழிக்க வேண்டும். மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால்  திறக்கவேண்டும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆக முடியாது.

*படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு.
கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.*

 தடைக்கு விடை கண்டுபிடித்தால்,
நடை போட்டு வெற்றி வரும்.

 எந்த எல்லைக்கும்
போகலாம் என்ற
நிலை இருந்தும்...
தன்னையும் ஓர்
கண்ணியமான
எல்லைக்குள்
நிறுத்தி
வாழ்பவனே...
நல்ல மனிதன்..

கேட்கப்படும்
மன்னிப்பை காட்டிலும்.
ஏற்கப்படும் மன்னிப்பே
மதிப்பு வாய்ந்தது.

No comments:

Post a Comment

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...