குழப்பங்கள் நிறைந்த குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும் ?
வாழ்க்கையில் பிரச்சனைகள் குழப்பங்கள் அவ்வப்போது வரலாம், போகலாம். ஆனால், சில வீடுகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் சண்டை சச்சரவுகளும் தான் வாழ்க்கையாக இருக்கும். இப்படிப்பட்ட குடும்பத்தில் மன நிம்மதி இருக்காது. குடும்பத்தில் ஒரு அமைதி இருக்காது. சூனியம் பிடித்த வீடு போல இருக்கும். திடீரென்று பிரச்சனை தலை தூக்கும். நேற்று வரை நன்றாக இருந்த குடும்பம், இன்று நடுத்தெருவில் வந்து நிற்கும். அவமானப்படும். வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பாதை மாறி சென்றிருப்பார்கள். பெற்றவர்களுக்கு கோடி கோடியாக பணம் இருந்தும் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு. நம் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை எப்படி சரிசெய்வது?
1.குடும்பத்தில் உள்ள அனைவரும் புரிதல் உணர்வுடன் நடந்தது கொள்ள வேண்டும் .
2.விட்டு கொடுப்பதில் தான் வாழ்க்கை உள்ளது .
3.அவரவர் வேலைகளை அவர் அவர் செய்ய வேண்டும்.
4.வீண் விவாதம் செய்யக்கூடாது!
5.நம் செயல்கள் மற்றவர் மனம் புண்படும் படி இருக்கக்கூடாது .
6.பெரியவர்கள் சிறியவர் பாகு பாடின்றி ஒருவரை ஒருவர் மதிப்பு கொடுத்து வாழ வேணடும் .
7. நான் இல்லை என்றால் இந்த குடும்பம் சிறப்பாக இருக்காது போன்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது .
8.குடும்பத்து உறுப்பினர் அனைவரும் சேர்ந்து வாரம் ஒரு முறையாவது பேச மற்றும் சேர்ந்து உணவு உட்க்கொள்ள வேண்டும் .
9.குடும்பம் வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி குடும்ப உறுப்பினர் களுடன் மனம் விட்டு பேசவேண்டும்.
10.குடும்பத்தில்உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வேலை செய்து குடும்ப பொருளாதாரத்தில் பங்கு அளிப்பு செய்ய வேண்டும்.
11.குடும்பத்தில்குழப்பம்,பிரச்சனை, ஏற்பட்டால் அனைவரும் கலந்து பேசி சரியான தீர்வு காண வேண்டும்.
12.கடன் வாங்க கூடாது. தேவை இல்லாமல் ஊர் சுத்த கூடாது.
13.அடுத்தவர் சொல்லும் பிரச்சனைகளை மூளையில் ஏற்றி வருத்தம் கொள்ளக் கூடாது.
14.மற்றவர்உங்களிடம்ஏதாவதுஅறிவுரையோ அல்லது ஏதாவது ஒன்று பற்றி உங்களிடம் விளக்கம் கேட்டால், உங்களுக்கு அது பற்றி தெரிந்தால் மட்டும் அது பற்றி பேசுங்கள்! இல்லையனில் எனக்கு தெரியாது என்பதனை சொல்லுங்கள் !
15.குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல் பட வேண்டும்.
16.குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் உணவு சுவையாகவும், தரமானதாகவும் இருக்கும் படி செய்ய வேண்டும் .
17.குடும்ப உறுப்பினர்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை யுடனும் மறுபடியம் அதே தவறை செய்யாமலும் இருக்க வேண்டும்.
18.தேவை இல்லாமல் யாராவது மூன்றாம் நபரை குடும்ப உறுப்பினர் அழைத்து வரக் கூடாது.
19.பிரச்சனைக்குரிய நபர் எனஒருவர் பற்றி தெரிந்தால், அவரிடம் தேவை இல்லாமல் விவாதம் செய்யக் கூடாது .
20.மொத்தத்தில் குடும்ப உறுப்பினர்
கள் அடுத்தவர் மன நிம்மதியுடன் வாழ தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment