Total Pageviews

Tuesday, November 25, 2025

திருமணமே செய்துகொள்ளாத பிரம்மச்சாரிகளின் கடைசி கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

 

இளமையில் சிங்கிள்தான் கெத்து. திருமண வாழ்க்கையை விட பிரம்மச்சாரியம் தான் சிறந்தது என செல்லும் பல ஆண்களுக்கு முதுமையில் இந்த நிலைதான் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.....

மிக கடினமாக இருக்கும்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியது மிகவும் வேதனைக்குரியது.

அந்த பெண்ணின் சகோதரர் "சிங்கிள்தான் கெத்து" என்ற மனநிலையில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இளமை தீர்ந்தது.திருமணம் வயதை கடந்தாயிற்று. இப்போது திரும்பி பார்த்தால் சிங்கிள்தான் கெத்து என‌ சொல்லி அவருடன் சுற்றிய சக நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவரை விட வயதில் குறைந்த உறவினர்கள் அணைவரும் திருமணம் முடித்து விட்டார்கள் ,

இப்போது அவர் மட்டும் தனி மரமாக வாழ்கிறார். சுகர் போல எதோ நோய் வேறு உள்ளதாம்.

"நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னால், நீங்களாவது என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே" என அழுதாராம்.

திருமணம் ஆகாத தனி மனிதராக இருப்பதால் வெட்கத்தில் உறவு முறைகளில் நடக்கும் விஷேசத்திற்க்கு, திருமணத்திற்கு கூட அவர் சகோதரர் செல்லாமல் தவிர்ப்பதாக சொல்லி அந்த சகோதரி அந்த நீயா நானா அரங்கத்திலேயே அழுது காணும் நம்மையும் அழ வைப்பார். 

No comments:

Post a Comment

ஆண் வாரிசுகள் இல்லாத பெண் மட்டுமே உள்ள குடும்பங்களில் அவர்களின் பெற்றோரின் இறுதிக் காலம் எப்படி முடிவுக்கு வருகிறது?

  இதுவும் ரொம்ப உணர்வுபூர்வமான, ஆனா சமூகத்துல நாம பார்க்கிற ஒரு முக்கியமான கேள்வி. ஆண் வாரிசுகள் இல்லாத, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடு...