பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.
அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

அதன் பின் நீரில் நனைத்த துணியால் முடி வளரும் எதிர்திசையை நோக்கியவாறு துடைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நிரந்தரமாக நீங்கும்.
Thanks to Lakasri.com
No comments:
Post a Comment