Total Pageviews

Saturday, September 7, 2024

ஐயா!! எனது வாழ்வாதரமான மாடு காண வில்லை !

 ஒரு காவல் நிலையம்..

மிகவும் பரபரப்பான ஒரு நாள்..

ஒடுக்கிய கண்கள் அழுக்கு வேஷ்டி ஜிப்பா என ஒரு முதியவர் உள்ளே நுழைகிறார்..

ஒரு மணிநேரம்.. யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்..

வெளி செல்ல வந்த காவலர் என்ன வேண்டும் என கேட்க..

அய்யா!! நான் ஏழை விவசாயி.. என்னிடம் இருந்த பசு மாடு காணாமல்

போய் விட்டது.. அது வாழ்வாதாரம்..

5,6 நாட்கள் ஆகி விட்டது.. தேடி அலைந்து கிடைக்கவில்லை.. அதை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுக்க வந்தேன்..

காவலர் ஏட்டையாவை காட்டி அவரிடம் சொல்லும் படி கூறி சென்று விட ஏட்டையா டேபிள் அருகில் செல்ல அவரும் என்ன என்று கேட்டார்

அவரிடம் மறுபடியும் முதலில் இருந்து…

இருய்யா.. எஸ். ஐ வரட்டும்.. அப்படி ஓரமா நில்லு.

மேலும் இரண்டு மணி நேரம்..

எஸ். ஐ வர மற்றவர்கள் பார்த்து விட்டு எஸ். ஐ கிளம்பும் நேரம் அவர் முன் நிற்க அவர் யாருய்யா நீ என..

அய்யா நான் ஒரு விவசாயி.. மறுபடி முழுகதை..

அவர் மனுஷன் காணாமல் போறதையே கண்டு பிடிக்க முடியவில்லை..

நீ மாட்ட கண்டு பிடித்து தர சொல்றே..

என கூற அய்யா அது தான் என் ஒரே ஆதாரம் என்று கூற

ஏட்டுவிடம் இந்த ஆளுகிட்ட எழுதி வாங்கி அனுப்பி விட என்று கூறிட..

அவரும் நடந்ததை ஒரு பேப்பரில் எழுதி ஓர மாக வைத்து விட்டு எதிரில் உள்ள கடையில் 6 டீ கொண்டு வர சொல்லு..

அப்படியே பேப்பர் பேனா கர்பன் வாங்கி வா!!!

என கூற அவர் ஜிப்பா பையை துலாவி 32 ரூபாயை எடுத்து டேபிளின் மேல் வைக்க..

சரி நீ ஊருக்கு போய் ஒரு 50 ரூபாய் வாங்கி வா..

என கூற அய்யா எனக்கு யாரும் கடன் தர மாட்டார்கள்..

என்று கூற.. ஓரமாய் நில்லு என்று சொல்ல..

ஏறக்குறைய உள்ளே நுழைந்து 8 மணி நேரம் ஆகி விட்டது..

பிறகு ஏட்டு அவரை கூப்பிட்டு கைநாட்டு வை என கூறி உள்ளார்..

ஏட்டு டேபிள் அருகே வந்தவர் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து கைஎழுத்து இட்டு தன் ஜிப்பா பையில் இருந்து வட்ட சீல் எடுத்து பிராதின் பின் பக்கம் குத்தி விட்டு அங்கு கிடந்த சேரில் போய் அமர்ந்து விட்டார்..

ஏட்டு க்கு ஒன்றும் புரியாமல் முழித்து பிராதின் பின் புறம் பார்க்க கைகால் தந்தி அடிக்க தடுமாற்றத்துடன் எழுந்து நிற்க அதை பார்த்த காவலர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொள்ள

அடுத்த பத்து நிமிடம்..

அனைத்து காவல் அதிகாரி களும் ஆஜர்..

வந்தவர் யார் தெரியுமா???

அன்றய பிரதமர்..

அவரின் அலுவலகத்தில் கிடைக்க பெற்ற

அஞ்சல் அட்டை. வாரம் இரண்டு முறை..

ஐயா!! எனது வாழ்வாதரமான மாடு காண வில்லை.. தேடி தர காவல் நிலையத்தில் பிராதை வாங்காமல் கேவலமாக நடத்துகிறார்கள் என்று எழுதி இருந்தது..

அதை கண்டு வருந்தியவர் தான் அந்த காவல் நிலையம் சென்று கலங்க அடித்தவர்..

விவசாயிகள் தோழன் அய்யா சரன்சிங் அவர்கள்..

கண்ணில் பட்ட காணோளி..

எப்படி பட்ட மகாத்மா க்கள் இருந்த இந்தியா.

மறைக்க பட்ட வரலாறுகள்..

மக்கள் மன்றத்தில் வைக்க பட வேண்டும்..

Thursday, September 5, 2024

முதுமை + தனிமை= கொடுமை !

முதுமை + தனிமை= கொடுமை ! 


 

பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!

 வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்... 

 இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை... இங்குதான் என் மகள் படிப்பாள்... இங்குதான் விளையாடுவாள்... என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்... என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து.... 

என்ன சமைப்பது?... என்ன சாப்பிடுவது?... அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்.. 

பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது... தனிமை... வெறுமை... அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்... பயணம் ஒரு கொடுமை... 

லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்... சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது... ஓலாவும், ஊபரும்... நமக்கு தேவைப்படும் நேரத்தில், பீக் hour சார்ஜ் போட்டு களைப்படைய செய்கின்றனர்... 

நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்.... இன்று சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது... 

 எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்... வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன! 

இவை வேண்டாமென ஒதுங்கி... பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்... பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்... என்றால்... 

அந்த நேரம் அவர்கள்... ஏதோ ஒரு மாலில்... ஏதோ ஒரு ஓட்டலில்... ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்... பிசியாக இருப்பார்கள்... "ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்... "இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்... 

நாலு நாள் கழித்து... "எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்... நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்... அவர்கள் டைமிற்கு... நம் தூக்க நேரம்... பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்! 

நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்..., அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது. மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்... பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்... அவன் வெளியே விளையாடறான்... அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்... அவன் டியூஷன் போயிருக்கான்... யோகா போயிருக்கான்... என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்... 

எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்... முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு... ஓடி விடும்... 

என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?... 

 நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்... அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!... எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?

 இந்த அரசியல்களும்... இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!... என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...

 ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...! மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்... "எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது... ( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...) "எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..." ( மனதுக்குள் ஏதோ...) வாழ்கிறேன்!

Tuesday, August 27, 2024

இன்றைய தலைமுறையினரின் போக்கு.....!!!


பயமாக இருக்கிறது.... இன்றைய தலை முறை யினரின் போக்கு.....!!!
 

 பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்!
 
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.!
 
கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்!
 
யாருக்குமே மரியாதை தரக்கூடாது!
 
தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...!
 
எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. !
 
காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!
 
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்!
 
பெண்கள் மீது மரியாதையே இல்லை!
 
ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரிதான் !
 
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌!
 
ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது!
ஒரு வரி கூட வாசிப்பதில்லை!
 
தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது!
 
ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது!
 
வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டி ருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்!
 
பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌!
 
சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌!

 
எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை!
 

எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்!

 
ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது!

 
இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை!

 
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்!

 
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்!

 
அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்.
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..

 
பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை!

 
இவர்களுக்கும் அந்த இரு தலை முறையின ருக்கும் மலையளவு வித்தியாசம்!

 
மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இரு பாலருக்கும் பொருந்தும்!

 
காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்!

 
கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை!
 

எதிர்கால வரலாறு.....

 மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை!

தெருக்களில் பொழுதுபோக்கு நிகழ்வு,கேளிக்கை
நிகழ்ச்சி , மகளிர் நடனம், ஆடல், பாடல் போன்ற   
நிகழ்ச்சியில்   ஈடுபடுகின்றனர்!
பயமாக இருக்கிறது......இன்றைய தலை முறையின் போக்கு!

மனிதர்கள் விசித்திரமானவர்கள்!

  🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕

 


 ஒரு உணவகத்தில்இங்கு அனைத்து உணவுகளும் இலவசம். 

ஆனால் கொஞ்சம் வாந்தி பேதி வரும் 🤮என்று எழுதி வைத்தனர்.

யாருமே சாப்பிட வரவில்லை கடையை மூடிவிட்டனர்!

 ******************

ஒரு பேருந்தில் 🚍 அனைவருக்கும் இலவசம்!

 ஆனால் அவ்வப்போது ப்ரேக் பிடிக்காது என்று எழுதினர்!

 ஆளே ஏறவில்லை!


**************************
ஒரு மருத்துவமனையில் 🏥 அனைத்து சிகிச்சையும் இலவசம் !

உயிருக்கு  உத்திரவாதம் இல்லை என்று எழுதி வைத்தால்,

 யாருமே வரவில்லை.

********************

குடி குடியை கெடுக்கும் உடல் நலத்தை கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு 

ஒதுக்கு புறத்தில் கடையை 10 மணிக்கு திறந்தால் ஒரே கூட்டம் !

எந்த விளம்பரமோ,  சலுகையோ, இலவசமோ, உட்கார  இடமோ, மரியாதையோ இல்லை. 

தினசரி 800 கோடிக்கு விற்பனை.

ரொக்கம் கொடுத்து சரக்கு விற்பனை ஜோர்.

🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕

*********************

Saturday, August 24, 2024

நல்ல தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 நல்ல தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 


வெது வெதுப்பான குளியல், அமைதியான நேரம், அடிக்கடி வெது வெதுப்பான குளியல், சிறிது நேரம் தியானம் அல்லது நினைவாற்றலைப் பயிற்சி செய்வது நம் மனதை அமைதிப்படுத்த உதவும். தூக்கத்திற்கு முன் நம் மனதை அமைதிப்படுத்துவது முக்கியம், ஏனெனில் எண்ணங்கள் நம் மனதில் ஊடுருவி நம்மை அமைதியின்மைக்கு ஆளாக்க வேண்டாம்.

பெரும்பாலும், நாம் தூங்கத் திட்டமிடும் போது பல எண்ணங்கள் நம் மூளையை குழப்புகின்றன. அடுத்த நாளைத் திட்டமிடுவதும், 'அடுத்த நாளுக்காகக் கவலைப்படுவதை' போக்க, செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எழுதுவதும் நல்ல நடைமுறையாகும். இது உங்கள் தூக்க தாமதத்தை மேம்படுத்த உதவும்.

ஒரு நபருக்கு தேவையான அளவை விட குறைவான தூக்கம் வரும்போது தூக்கமின்மை ஏற்படுகிறது, அவர்கள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும். இது கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம், மேலும் அறிவாற்றல் செயல்பாடு, உணர்ச்சி சமநிலை மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனைக் குறைப்பதன் மூலம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

தூக்கமின்மைக்கு சிகிச்சை தரும் முன்னர் மருந்துகளால் அல்லது மன உளைச்சலால் தூக்கமின்மை ஏற்படுகிறதா கண்டறிய வேண்டும். உறக்கம் தரக்கூடிய சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தினமும் இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் தூங்குவது என்ற பழக்கம் தொடருமானால், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். தூக்கக் குறைபாடு உங்கள் ஆயுளைக் குறைக்கும் என்று மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நாம் எல்லோருமே தூங்கப்போனால், நாளைக்கு காலையில் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் மக்கள் எழமாட்டார்கள். உலகத்தில் நடக்கிற இயற்கையான மரணம் இது. ஒருவேளை நீங்கள் நாளைக்கு காலையில் எழுவதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? நீங்கள் உத்தரவாதத்துடன் வந்திருக்கிறீர்களா என்ன? கேரண்டி கார்டு இல்லை! நீங்கள் எழுந்திருப்பீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த அளவுக்காவது நீங்கள் செய்ய வேண்டும்.

இது உங்கள் ஆன்மீக செயல்முறைக்கான முதல் படி!. நீங்கள் விழித்திருந்தால், ஒரு சின்ன கொண்டாட்டம் வேண்டாமா? நீங்கள் எழுந்து நடனமாடத் தேவையில்லை, ஒரு புன்னகையாவது செய்யலாமே? இன்னும் இது உயிரோடு இருக்கிறதே! ரெண்டரை லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள், அவர்கள் எல்லாம், உங்களை, என்னைப் போன்ற மக்கள். ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார்கள்! எங்கே தேடினாலும் அவர்கள் இல்லை! ஆனால், இங்கே நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! இதற்காக ஒரு பெரிய புன்னகை செய்வீர்களா?

Wednesday, August 21, 2024

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் ?

 


உலகின் மக்கள் தொகை 800 கோடியில் கஷ்டப் படாதவரோ அல்லது கஷ்டத்தை அனுபவிக்காத வரோ கிடையாது!

நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

நிலத்தைக் கூரிய ஏர்முனை கொண்டு கீறுவது நிலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்குமென்றால் பயிரிட முடியாது, விளைச்சல் இருக்காது,உண்ண உணவு கிடைக்காது. உழவு செய்யப்பட்ட நிலம் பண்படுத்தப் பட்டு விவசாயம்திற்குத் தயாரா வது போல் கஷ்டங்கள் மனிதனைப் பண் படுத்து கின்றன; அனுபவங்கள் வாழ்க்கையை எதிர் கொள்ள உதவும் பேருபாயங்களாகும்.


மகிழ்ச்சியினால் ஏற்படும் அனுபவங்களை விட இடர்களினால் விளையும் அனுபவங்கள் மனிதனு க்கு உற்ற துணையாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். பெரும் பான்மையோரும் இதை ஆமோதிப்பர்.

இறைவன் நம்மால் தாங்கமுடியாத எதையும் தரமாட்டார் என்பதும் இறை நம்பிக்கையுடைய எனது மற்றொரு அனுபவம். “நமக்கு ஏனிந்த கஷ்டம்? என்ற கேள்வியில் ஆரம்பமாகும் ஆக்க பூர்வமான சிந்தனை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஆகும்.

நம்மை கேட்டு சூரியன் உதிக்கவில்லை, காற்று வீசுவதில்லை , மழை பெய்யவில்லை!

நம் கையில் இருப்பது , இன் நேரம் , இப்போதைய செயல் , அது மட்டுமே, அது போல் செய்து முடிக்க வேண்டிய செயல்களை பட்டியலிட்டு , ஒவ்வொ ன்றாக முடிக்கவும்!

நடப்பவை நடக்கட்டும் என்று ஏற்று கொள்ளவும். மனது அமைதி அடையும்!

Tuesday, August 20, 2024

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம் !

 திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம் | Happy Marriage Life Worship

வாழ்க்கையில் திருமண பந்தம் என்பது மிக முக்கியமான பந்தம்.நம்முடைய பாதி வாழ்க்கையின் ஒரு பகுதி திருமண வாழ்க்கையில் தான் செலவிட வேண்டும்.அப்படியாக அந்த திருமணத்திற்கு சரியான வரன் அமையவேண்டும் என்று தான் எல்லோருடைய கனவாக இருக்கும்.

திருமணத்தில் மணமகன் மணமகளும் நல்ல பந்தத்தோடு அன்பும் பாசமும் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். அப்படியாக திருமணம் ஆகும் வயத்தில் இருப்பவர்கள் அனைவர்க்கும் ஒரு வித பயம் ஏற்படும் அதாவது நல்ல கணவன் மனைவி அமையவேண்டும் என்று.

அப்படியாக ஒருவருடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். 

பொதுவாகவே திருமணத்தில் தடைகள் ஏற்படுகிறது அல்லது திருமணத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் அதற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர்கள் ராகு கேது தான்.

இவர்களின் ஆதிக்கத்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பவர்கள் ராகு கேதுவை வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷங்கள் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். எப்பேர்ப்பட்ட திருமண பிரச்சினையாக இருந்தாலும் ராகு கேதுவை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ராகு காலமான காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணிக்குள் அருகில் நாக சொரூபமாக இருக்கக்கூடிய தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

உதாரணமாக நாகாத்தம்மன், மாரியம்மன் போன்ற கோவில்களுக்கு செல்லலாம். கோயில்கள் இல்லாத பட்சத்தில் புற்று இருக்கும் இடத்திற்கு கூட சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து 8 வாரம் செய்து வர திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...