Total Pageviews

Wednesday, August 21, 2024

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் ?

 


உலகின் மக்கள் தொகை 800 கோடியில் கஷ்டப் படாதவரோ அல்லது கஷ்டத்தை அனுபவிக்காத வரோ கிடையாது!

நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

நிலத்தைக் கூரிய ஏர்முனை கொண்டு கீறுவது நிலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்குமென்றால் பயிரிட முடியாது, விளைச்சல் இருக்காது,உண்ண உணவு கிடைக்காது. உழவு செய்யப்பட்ட நிலம் பண்படுத்தப் பட்டு விவசாயம்திற்குத் தயாரா வது போல் கஷ்டங்கள் மனிதனைப் பண் படுத்து கின்றன; அனுபவங்கள் வாழ்க்கையை எதிர் கொள்ள உதவும் பேருபாயங்களாகும்.


மகிழ்ச்சியினால் ஏற்படும் அனுபவங்களை விட இடர்களினால் விளையும் அனுபவங்கள் மனிதனு க்கு உற்ற துணையாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். பெரும் பான்மையோரும் இதை ஆமோதிப்பர்.

இறைவன் நம்மால் தாங்கமுடியாத எதையும் தரமாட்டார் என்பதும் இறை நம்பிக்கையுடைய எனது மற்றொரு அனுபவம். “நமக்கு ஏனிந்த கஷ்டம்? என்ற கேள்வியில் ஆரம்பமாகும் ஆக்க பூர்வமான சிந்தனை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் ஆகும்.

நம்மை கேட்டு சூரியன் உதிக்கவில்லை, காற்று வீசுவதில்லை , மழை பெய்யவில்லை!

நம் கையில் இருப்பது , இன் நேரம் , இப்போதைய செயல் , அது மட்டுமே, அது போல் செய்து முடிக்க வேண்டிய செயல்களை பட்டியலிட்டு , ஒவ்வொ ன்றாக முடிக்கவும்!

நடப்பவை நடக்கட்டும் என்று ஏற்று கொள்ளவும். மனது அமைதி அடையும்!

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...