Total Pageviews
Monday, May 18, 2020
மண்ணின் மக்கள் " வேலை வழங்கு வாரியம்' அமைத்திடுக!
Sunday, May 17, 2020
சுத்தம் வேண்டும் நித்தம்!
சுத்தம் வேண்டும் நித்தம்!
குளிக்கும் பழக்கம்
நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால் மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவைக்கவும்.
கை சுத்தம்
சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.
பல் சுத்தம்
சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக் காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.
காயங்களை மூட வேண்டும்
காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். இதைத் தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள் மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத் தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்
தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்
தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில் தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால் மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல் போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்’ செய்து அனுப்புவது நல்லது.
Saturday, March 21, 2020
Whatsapp மூலம் இன்டேன் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதி!
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும்.
A. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை.
REFILL
என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
B. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்
REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID>
என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example. : REFILL#7500000051153961
C. உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.
STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example : STATUS#2-000120518460
நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.
உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.
உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.
எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....
-படித்ததில் பிடித்தது
Saturday, March 14, 2020
உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள !
பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்!
பயிற்சியும், முயற்சியும் மூலதனம்!
உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க !
இரத்த அணுக்கள்
இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்
உடற்பயிற்சி
மருத்துவக் காப்பீடு - Medi Claim Policy
மருத்துவக் காப்பீடு - Medi Claim Policy
யாருக்குக் கிடைக்கும்?
யாருக்கு எந்த பாலிசி?
எப்படி க்ளைம் செய்வது
- பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
- சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கன மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.
பாலிசி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை
மருத்துவ காப்பீடு - சில தகவல்கள்
- 3 மாத குழந்தை முதல் 86 வயது வரையானோர் இந்த பாலிசி எடுக்கலாம்.
- பிரீமியம் தொகை குறைவு. அதிக பலன்கள்.
- எதிர்பாராத விபத்து, திடீர் நோய்கள் போன்றவை, நிச்சயமில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நம்மால் திட்டமிட முடியாது. ஆனால் ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற நேரங்களில் செலவுகளைச் சமாளிக்க முடியும்.
- குடும்பத்தில் அனைவரது மருத்துவ செலவுகளையும் மருத்துவக் காப்பீடு மூலம் ஈடு செய்யலாம்.
உண்மை விவரங்கள்
மன நிம்மதியாக வாழ ; பதட்டம் இல்லாமல் வாழ வழி என்ன ?
ஒரு காகிதத்தை எடுத்து இன்று மேற்கொள்ளவேண்டிய பணிகளை திட்டமிட்டு குறித்துக் கொள்ளுங்கள்
செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும் எனவே .செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் செருப்புகள் என்றாலும் கடிகாரம் என்றாலும் ; தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
எந்தவொரு இடத்திற்கும் சற்று முன்கூட்டியே செல்ல பழகிக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
டீ, காபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை, மது ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.
சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை - இதைச் செய்வேன் என்பது போன்றவை.
இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.
செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால், மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது என்று சொல்லப்பழகுங்கள்.
உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
எளிமையாக வாழுங்கள்.
அதிக நேரம் நண்பர்களுடன் உற்சாகமாகப் பழகுங்கள்.
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத்தரும்.
ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.
பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட எழுதிப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.
பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.
இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள். நீங்கள் வாழ்வீர்கள் ;வளமுடன் வாழ்க,வளமுடன் வெல்க,வளமுடன் செழிக்க,
Monday, March 9, 2020
உலர்திராட்சை !
1) மூக்கடைப்பு
( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)
2)படிப்பில் கவனமில்லை
3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
5)உடல் பலவீனம்.
5,6 வது மாதத்தில் உடல் பலமானது தெரிந்தது.
அதே 5வது 6 வது மாதத்தில் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டபோது எனது நினைவு த்திறன் 200,300மடங்கு அதிகமானது.
உலர்திராட்சை சாப்பிடுவதால் டெங்கு வராது.
மஞ்சள் காமாலை நோய் வராது.
சளி, காய்ச்சல் வரவே வராது.
உண்போம்!
Sunday, March 8, 2020
கொரானாவை விரட்டும் மூலிகைகள் !
சைனா வின் சீதோஷ்ண நிலை வேறு, நம் நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. சைனா போல் லாம் நம் நாட்டில் கொரானா வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் பலர் சொல்கிறார்கள். சைனா, பிரான்ஸ் போல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நோய் இருக்கு. சாதாரண சளி, தும்மல் ஆகியவை வந்தாலே கொரானா வைரஸா என்று பயந்து விடவேண்டாம்.
ஒரு குட்டி கதை சொல்கிறேன்.
ஒரு பாலைவனம் அந்த பாலைவனத்தில் ஒரு ஞானி கண்களை மூடி அமர்ந்தவாறு தியானத்தில் இருந்தார். அப்பொழுது புதிதாக உருவான ஒரு அபாயகரமான வைரஸ் கிருமி அவரை கடந்து சென்று கொண்டிருந்ததது. தியானத்தில் இருந்து கண் விழித்த அந்த ஞானி ஏ கிருமியே எங்கே செல்கிறாய் என்று கேட்க இயற்கை நியதிப்படி ஆயிரம் உயிர்களை காவு வாங்க நான் பக்கத்து நாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு அந்த கிருமி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. வந்த வேலையை கச்சிதமாக முடித்த அந்த கிருமி மீண்டும் வந்த அதே வழியில் திரும்பி கொண்டிருந்தது. அப்ப அதே ஞானி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார்.
ஆயிரம் பேரை காவு வாங்க போறேன் ன்னு சொன்ன ஆனால் 20 ஆயிரம் உயிர்களை கொன்று இருக்கிறாயே என்று அவர் கேட்க அதற்கு அந்த கிருமி ஞானியிடம் என்ன பதில் சொன்னது தெரியுமா?
இயற்கை நியதிப்படி நான் கொன்றது ஆயிரம் பேரை தான். ஆனால் பயத்தால் செயற்கையாக செத்தவர்கள் கூடுதலாக 19 ஆயிரம் பேர். ஆகமொத்தம் 20 ஆயிரம் பேர்.
இந்த பேய் னு ஒன்னு இருக்கோ, இல்லையோ இருக்கு னு ஒரு வாதத்திற்கு வைத்து கொண்டாலும். யாரிடம் அதிக பயம் இருக்கோ அந்த பயம் இருப்பவர்களை தான் பேய், பிசாசு, நோய் கிருமி அனைத்தும் முதலில் தாக்கும். இருக்கும் கிருமிகளில் மிக, மிக அபாயகரமானது பயம் தான். உங்களின் அந்த பயத்தை முதலில் கொல்லுங்கள்.
விழிப்புணர்வு தேவை தான். அதே சமயம் இந்த உலகில் பிறந்த அணைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். மரணம் நமக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். துணிந்தவனுக்கு ஒருமுறை மட்டுமே மரணம். பயந்தவனக்கு தினம், தினம் மரணம்.
பயத்தால் தினம், தினம் செத்து பிழைக்கும் ஒரு பிழைப்பு உனக்கு தேவையா? என்று பயம் இருப்பவர்கள் தங்களை தாங்களே இதுபோல் கேட்டு கொள்ளுங்கள். அதாவது ஆட்டோ சஜ்ஜஷன்.
கொரானா போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை காக்கும் அருமருந்துகள், மூலிகைகள் சிலவற்றை இப்பதிவில் கீழே தந்துள்ளேன். இப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளை அளவாக தினமும் உண்டு வந்தால் அது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.
1] கற்பூரவல்லி [ Oregano ]
2] தழுதாழை என்கிற வாதமடக்கி இதற்கு முனிவர் மூலிகை என்றும் பெயர் உண்டு இதன் ஆங்கில பெயர் [Sage]
3] திருநீற்றுப்பசிலை எனும் [ Basil ]
4] அனைவர்க்கும் தெரிந்த வில்வம் எனும் [ Bael ]
வில்வ இலைகள் சிவபெருமானுக்கு உகந்தது. வில்வ மரம் மூலம் கிடைக்கும் காய், பழம், பட்டை, இலை, பூ என அனைத்தும் மகத்தான மருத்துவ குணங்கள் வாய்ந்தது. வில்வப்பூவை தண்ணீரில் போட்டு லேசான சூட்டில் கொதிக்க வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்தாலே போதும். நம் உடலில் உள்ள விஷத்தை கூட முறிக்கும் ஆற்றல் வில்வப்பூவிற்கு உண்டு.
5] புதினா எனும் மின்ட்.
கற்பூரவல்லி, தழுதாழை கூட புதினா குடும்பத்தை சேர்ந்த மூலிகைகள் தான்.
தினமும் காலை இட்லி, தோசை போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது கொஞ்சம் புதினா சட்னியை, புதினா தொகையலை சேர்த்து கொள்ளுங்கள். உங்கள் நாக்கு ருசிக்கு ஏற்றவாறு வெங்காய சட்னி, சாம்பார் போல் ஏதேனும் தனியாக ஒரு சைடிஷ் இருக்கட்டும். உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, ரத்தத்தை சுத்தப்படுத்த தினமும் புதினா கூடுதலாக இருக்கட்டும்.
புதினா சட்னி செய்வதும் எளிது.
இதைதவிர்த்து கீரைகளில் வள்ளலாரால் தெய்வீக மூலிகை என்று அழைக்கப்பட்ட கரிசலாங்கண்ணி கீரை மற்றும் முடக்கத்தான் கீரை இரண்டும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும்.
மிக முக்கியமாக நான் மீண்டும் சொல்கிறேன். பயத்தை காட்டிலும் மோசமான ஒரு நோய் உலகில் வேறு எதுவும் இல்லை. நம்பள ஏதாவது நோய் தாக்கி விடுமோ என பயந்து, பயந்து முகமூடியோடு சுற்றுபவர்களை தான் நோய் கிருமிகள் முதலில் தாக்கும். மண்ணில் உருண்டு, பிரண்டு விளையாடும் குழந்தைகளுக்கு இம்யூனிட்டி யும் டெவலப் ஆகும், கம்யூனிட்டியும் டெவலப் ஆகும்.
அதனால் உங்களிடம் இருக்கும் பயம் எனும் கிருமியை முதலில் கொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்!
கொரோனா வைரஸ் பற்றி!
5.காரோனா வைரஸ் கை மேல் 10 நிமிடம் உயிருடன் இருக்கும் அதனால் ஆல்கஹால் கிருமி நீக்கியை ஊபயோகித்தால் தடுக்கலாம்.
6.இந்த வைரஸ் 26_27 டிகிரி வெப்பம் படும் பொழுது இறந்து விடும் அதனால் அதிக வெப்பநிலையில் உயிர் வாழாது அதனுடன் காய்ச்சிய தண்ணீர் மற்றும் சூரிய ஒளி நமது உடலில் பட்டால் இந்த நோய் வராது அதனுடன் ஐய்ஸ்கிரீம் குளிர் பானம் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
7 சூடான உப்பு தண்ணீரில் கொப்பளிக்கும் பொழுது நமது தொண்டையில் டான்சிலில் உள்ள கிருமியை அழிப்பதன் மூலமாக அந்த கிருமி நுரையீரலுக்கு செல்வதை தடுக்கிறது. மேலே சொல்லியிருக்கிற உத்திகளை கடைபிடித்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
நன்றி யுனிசெஃப்.
Pandemic என்றால் என்ன?
கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?
சிகிச்சையும் மருந்தும்…
Tuesday, February 25, 2020
குறைந்த உழைப்பு அதிக ஊதியம் ! எங்கே செல்கிறார்கள் இளைஞர்கள்? எப்படி உள்ளது இளைஞர் சமூகம்?
கெட்ட செய்திகளும் உண்டு.
புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது!
செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை!
உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை!
விளையாட்டில் ஆர்வம் இல்லை!
விளையாட்டுக் குழுக்கள் இல்லை. விளையாட்டுப் போட்டிகளும் இல்லை!
சுயநலம் பெருகி விட்டது!
நிறைய இளைஞர்கள் குடிக்கிறார்கள் என்ற செய்தி தினம் தினம் வந்து கொண்டே உள்ளது!
சுற்று சூழலும் அதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம், டீ குடிக்க வச்சிக்கோ என்று செலவுக்கு கொடுப்பார்கள். இப்போது அது கட்டிங்க்கு என்று மாறி கொண்டுள்ளது. மக்களிடத்தில் இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒழுங்கு முறைகள் ஒழுக்கத்துடன் கூடிய கலாச்சார விழுமியங்கள் காலாவதியாகிவிடுமோ?
இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?
இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள்.
இப்போதைய தேவை !
அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.
இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!
ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள்! ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள்! உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு நல்ல உணவு அவசியம்! உள்ளம் ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம்.
கெட்ட பழக்கம் வேண்டாம்!
விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். இன்று சிகரெட்டால் நுரையீரலில் குணப்படுத்தமுடியாத நோயால் அவதிப்படுவோர், மதுவால் கல்லீரலில் கடுமையான பாதிப்புக்கு ஆளானோர், சூதாட்டத்தி்ல் பெரும் செல்வத்தை இழந்தவர்களெல்லாம் முதலில் ஜாலிக்காகவும் டைம்பாசுக்காகவும் தான் ஆரம்பித்திருப்பார்கள். எனவே ஜாலிக்காக என்று எதை செய்ய நினைத்தாலும் சற்று யோசியுங்கள்.
உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது !
தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது!
நட்பு வட்டம்
நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதி்க்க முடியும்.அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
நேரந்தவறாமை !
ஒவ்வொரு காரியமும் குறிப்பி்ட்ட நேரத்தி்ல் நிறைவேற்றப்பட வேண்டும்.காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது.எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.
பேசும் திறன் !
பேசும்போது தெளிவாக, தன்மையாக பேச வேண்டும். அதே சமயம் நிதானமாக நம் எண்ணங்களை புரிய வைக்க வேண்டும்.
மற்ற மொழிகற்றல்!
எல்லோர்க்கும் அவரவர் தாய் மொழி மீது அலாதி பிரியம். என்றாலும் கூடுதல் மொழி கற்றுக் கொள்வதால் அனேக நன்மைகள் உண்டு. அடுத்த மொழி கற்பதை ஒரு சுமையாகக் கருதாமல் மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் கை கொடுக்கும்.
சுத்தம் பேணுதல்!
உங்கள் ஓய்வு நேரம் ஆக்கபூர்மானதாக அமையட்டும் !
இதுபோன்ற இன்ன பிற தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்துங்கள்.
பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது..
பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீ்ர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.
நேர்மறை எண்ணங்கள் (positive approach)
உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.
பெற்றோர்கள் ! பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள்! நல்லவர்களாக வருவார்கள். நல்ல பண்பாடு, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்!
கையூட்டு அல்லது ஊழல் லஞ்சம் பெருக காரணங்கள் என்ன? அதை எப்படி ஓழிப்பது !
Monday, February 24, 2020
மனித மனம் எதை விரும்புகிறது ?
*‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்*.
*‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா*
*‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே,*
*'எப்படியாவது தனிக்குடித்தனம்' போயிடுன்னு’–*
*அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்*.
*‘மகிழ்ச்சி ! ரொம்ப மகிழ்ச்சி ! .
*இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது!
*‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’*
*அம்மாவிற்கு அதிர்ச்சி !
*மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது*.
*1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி! – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்*.
*2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்*.
*3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.
*4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது*.
*5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்*.
*6.பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல் படுகின்ற, மனநிலை உண்டாகி விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்*.
*7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்*.
*8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்*.
*9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது*.
*10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப் போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்*.
*11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படு கின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர் கொள்வதே அதை வெல்ல உதவும்*.
*12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒரு முகப்படுத்தும் வழி*.
*13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை*.
*14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு*.
*15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்*.
*மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்*.
(ச.க.ம.)
*16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்*.
*17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும்*.
*வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்*.
*18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்*.
*19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்*.
*20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள் வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்*.
*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.
*பொறுமையைவிட மேலான தவ முமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமு மில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமு மில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சி யோடும், நம்பிக்கை யுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*
தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !
தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் ! நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...