Total Pageviews

Monday, June 23, 2025

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

 திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுற்க்கா ழிமுறைள் !

அன்புள்ள நண்பர்களே! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லது மணமகள் ஜாதகம் மற்றும் "சுயவிவரம்" அல்லது "வாழ்க்கை குறிப்பு" வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பி  கிடைக்க பெற்றால் அனுப்பி நபருக்கு சரியாக பதில் அனுப்புமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

தங்களது ஜாதகம் மற்றும்  "சுயவிவரம் பெற்று கொண்டோம். ஒரு வாரத்தில் அல்லது 10 நாடகளில் தங்களுக்கு தகவல் / பதில் தெரிவிக்கின்றோம் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 100க்கு 10 பேர் கூ சரியாக பதில் சொல்லுவதில்லை.

தாங்கள் அனுப்பிய ஜாதகம் மற்றும்  "சுயவிவரம்" குறிப்புகளை பார்த்தார்களா அல்லது பார்க்காமல் விட்டுவிடார்களா என்பது கூட தெரிவது இல்லை ! 

தங்களுக்கு அவர்களை பிடித்து இருந்தாலும் அல்லது அவர்களை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ஜாதக பொருத்தம் சரியாக இருந்தாலும் அல்லது ஜாதக பொருத்தம் சரியாக ல்லா விட் டாலும் நாசூக்காக அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் . அப்போது அனுப்பியவருக்கும் கிடைக்கப் பெற்வருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் !

வாழ்க நலமுடன்! வளமுடன்! நன்றி!

Tuesday, June 10, 2025

மனிதம் பற்றிய உளவியல் தகவல் !

 மனிதம் பற்றிய உளவியல் தகவல்!



1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். 

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

18. ஒருவர் அதிகமாக  Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.

Wednesday, June 4, 2025

பருவத்தே திருமணம் செய்ய வேண்டியதின் அவசியம்! 

  


 

இல்லறமே நல்லறம்; அதுவே அனைத்து அறத்திற்கும் அடிப்படை! 

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்; பருவத்தே பயிர் செய்!

திருமண வயது வந்த ஆண், பெண் இளைஞர்களே வணக்கம்! 

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. 

உங்களுக்கு 22 வயதுக்கு  மேலாகிவிட்டதா? 

"விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!", என்ற விருப்பத்துடன் உங்களது வளமான வாழ்க்கையை கற்பனை செய்யுங்கள்; கனவு காணுங்கள்;  அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி வெற்றி அடையுங்கள். 

அரசு வேலை வாங்கி, வீட்டுமனை வாங்கி, வீடு கட்டிய பிறகு திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும்;  அப்பொழுது நீங்கள் நினைத்த  எல்லாம்  இருக்கும்; ஆனால்,  வசதிகளை அனுபவிக்க இளமை இருக்காது; தீர்க்க இயலாத சிக்கல்களுக்கும், வெளியவே வர இயலாத மன உளைச்சல்களுக்கும் உள்ளாகும் நிலை ஏற்படும். கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! 

நீங்கள் விரும்பும் வசதிகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது; அவைகள் அனைத்தையும் உங்கள்  தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அடைய முடியும்; ஆனால் இழந்த இளமை மீண்டும் கிடைக்காது. 

உயிர்களுக்கு  பொறுப்பையும், கடமையையும், உரிமையையும் உணர்த்துவதற்காக கடவுள் (இயற்கை) கொடுத்த பருவம்தான் இளமைப் பருவம்;  இந்தப் பருவம் தான் பல உன்னதமான உறவுகளை உருவாக்கும் பருவம். 

சரியான பருவத்தில் திருமணம் செய்து, உன்னதமான உறவுகளை உருவாக்கும் கடவுளின் (இயற்கையின்) கட்டளையை நிறைவேற்றிய புண்ணியத்தை அடையுங்கள். 

எனவே, 

இளைஞர்களே!  இளம் பெண்களே! 



எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம்; திருமணத்தில் தாமதம் செய்யாதீர்கள்; உடனே உன்னதமான திருமண பந்தத்தில் நுழைந்து, அது கொடுக்கும் அற்புதங்களை, வாழ்க்கையின் பிரம்மாண்டங்களை அனுபவியுங்கள். 

பெற்றோர்களே!


உங்களது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து உங்கள் மகன்களுக்கு, மகள்களுக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்துவைத்து வளமான சமுதாயத்தை உருவாக்குங்கள். 

உங்களது குடும்ப, சமுதாயக் கடமையை நிறைவேற்ற,  ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் எப்பொழுதும் தாய் உள்ளத்துடன் எந்த எதிர்பார்ப்புமின்றி சேவை செய்கிறது;  பயன் பெறுங்கள். 
 

Thursday, May 29, 2025

சொத்துக்காக சண்டை வருவது ஏன் ?

 


 பணம், பதவி என்று வரும்போது ! உறவுகள் மறப்பது வரலாறு.!

அண்ணனை தம்பி கொன்று ஆட்சிக்கு வந்தது ! நமக்கு தெரியும் தானே!

 சொத்துக்காக மகன், பெற்றவரை வெறுப்பது !

உடன் பிறந்தவர்கள் சண்டை இடுவது  என்பது  மனித இயல்பு  தானே!

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு உண்டு! 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது பிரச்சனை சண்டை, கருத்து 
வேறுபாடு வரத்தான் செய்யும் ! 

பங்காளிகள் என்றால் பகையாளிகள் தான் என்றாகி விட்டது!

 இப்போது உடன் பிறப்பு மகளிரும் அடக்கம். சொந்த சொத்துப்பிரச்சனை !

சமூக உயர்வு தாழ்வு, (சாதி விட்டு சாதிக் கல்யாணம்) !

அகங்காரம் !

ஆணவம் !

தான்தான் முதன்மைப்பெற்றவன் என்ற இறுமாப்பு !

வறட்டு கௌரவம் !

நல்லோர்கள் சகாவாசமின்மை !

வஞ்சகம்!

சூழ்ச்சி  !

பொறாமை !

 கபடம் !

 நம்பியோரைகெடுத்தல் !

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுதல் !

இவைகள் மற்றும் பல காரணங்கள். !

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன ?

பரஸ்பர அன்பு, 

மரியாதை,

நல்லனவை ஏற்றல், 

அல்லனவை நீக்குதல், 

உறவை விடபணம் தான் பெரிது என்ற எண்ணம் இல்லாமை!

 நல்லொழுக்கம் ,

சான்றோர் அறிவுரைப்படி வாழ்தல், 

பிறரைப் பார்த்து பொறாமைப் படாமல் முன்னேற்றம் காணல், 

போன்றவற்றை கடைபிடித்து, 

விட்டு கொடுக்கும் மனப்பான்மை,

 ஆகியவை பலன்தரும். 

சமூகம் திருத்தகூடிய சூழ்நிலைகள் உருவாக்கப் பட வேண்டும்!

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

  தி ரு மண ம் விரை வாக சுமுக மகா நடை பெ று வ த ற் க் கா ன வ ழி மு றை க ள் ! அன்புள்ள நண்பர்களே ! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லத...