Total Pageviews

Wednesday, March 3, 2021

தேடல் உள்ளவரை உங்கள் வாழ்வில் ருசியிருக்கும்!

 

மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். 

உதாரமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம்.

படித்தவுடன் வேலையை தேடுகிறோம்.

வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம்.

கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம்.

திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்.

 இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி.

நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். 

அப்படி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். 

மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள்.

மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள்.

சும்மா இருக்காதீங்க.....

அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் !

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

Monday, March 1, 2021

தனியார் நிறுவன ஊழியரின் பென்சன் கணக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி!

பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்! செ.கார்த்திகேயன். Thanks to Vikatan.com

`வருங்கால வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் (EPFO) வரும் அனைத்து ஊழியர்களும் பென்ஷன் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதியத்தொகையை வருங்கால வைப்புநிதி ஆணையம்  கணக்கிட்டால், அது பலமடங்கு உயரும். இதனால் அரசு ஊழியர்களைப்போல, தனியார் ஊழியர்களும் பல ஆயிரம் ரூபாயை பென்ஷனாக பெறும் நிலை உருவாகும். 



பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இதுவரை 8.33% மட்டுமே

பொதுவாக, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்புநிதியாக (EPF) 12%, நிறுவனத்தின் சார்பில் 12% சேர்த்து வருங்கால வைப்புநிதித் திட்டத்தில்  டெபாசிட் செய்யப்படும். ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67% மட்டுமே வருங்கால வைப்புநிதித் திட்டத்துக்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% `பணியாளர் ஓய்வூதியத் திட்டம்’  (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.

1.9.2014-ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களின்படி, அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகிய இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ளபோது, பணியாளர்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பு பிடிக்கத் தேவை யில்லை எனக் கூறப்பட்டது. அதனால், நிறுவனத்தின் 12% பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில்தான் வரவுவைக்கப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்கள் பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.

உச்சவரம்பு இனி கிடையாது!

மேலும், 1.9.2014-ம் தேதிக்குப்பிறகு புதிதாக வேலையில் சேர்பவர்களும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கடந்த 2018-ல் அறிவித்திருந்தது. வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் திட்டங்களில் இருக்கும் இந்த வேறுபாட்டை எதிர்த்து, கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சார்பில் கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இந்த வழக்கினை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், ‘ரூ.15,000 ரூபாய் என வரம்பு எதுவும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கக்கூடாது. வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும்  ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்துக்குப் போன ஆணையம்

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, வருங்கால வைப்புநிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன்படி, கடந்த 1.9.2014 அன்று கொண்டுவரப்பட்ட  வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் திருத்த மசோதா, மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நடைமுறைக்குச் சரிவருமா, இதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (வேலூர் கிளை) உதவி ஆணையர் ஆர். கணேஷிடம் பேசினோம்.

இ.பி.எஸ் டெபாசிட் தொகை அதிகரிக்கும்

``பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் படி, ஒருவருடைய மாதச் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்புநிதியின் நிறுவனப் பங்களிப்பிலிருந்து 8.33% ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!

இதற்கான  சம்பள வரம்பு மாதம் 5,000 ரூபாய் என ஆரம்பத்தில் வைக்கப்பட்டு, அதற்கு பி.எஃப் 12% பிடிக்கப்பட்டது. இந்த வரம்பு 6,500 ரூபாயாக அதிகரித்து, தற்போது 15,000 ரூபாயாக உள்ளது. இதில் 12% என்பது ரூ.1,800 பி.எஃப்-ஆகப் பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவன மானது பணியாளர்களின் பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்த ரூ.1,800-ல் 8.33% அதாவது, ரூ.1,250 ரூபாய் பணியாளர் பென்ஷன் கணக்குக்குச் செல்கிறது.  

தனியார் நிறுவன ஊழியர்களின் பென்ஷன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வெறும் 15,000 ரூபாயை அடிப்படை ஊதியமாகக் கருதாமல், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, உச்ச நீதிமன்றமும் அப்படியே உறுதிசெய்திருக்கிறது. இதனால் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு அதிக பென்ஷன் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் கூறியதை  நடைமுறைபடுத்த  வேண்டும் என்றால், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் நிறுவனத்தின் பங்களிப்பான 12%  தொகையை முழுமையாக பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இதுதவிர,  பணியாளர்களின் 12%  பங்களிப்பி லிருந்து குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் கூடுதல் தொகையை ஓய்வூதியமாக பணியாளர்களின் ஓய்வின்போது வழங்க முடியும். இதனால் பணி ஓய்வின்போது கிடைக்கும் பி.எஃப் மொத்தத் தொகை குறையும்” என்றார்.

தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் குழப்பங்கள் இருப்ப தால், விதிமுறைகள் அனைத்தும் முறைப்படுத்தப் பட்டபிறகு, இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையை பி.எஃப் அமைப்பு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் நிறுவன ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் பென்ஷனை மட்டுமே நம்பியிருக்காமல், புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) சேர்ந்து, பணம் சேர்த்தால், எதிர்காலத்தில் கூடுதல் பென்ஷன் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

செ.கார்த்திகேயன்

பென்ஷன் தொகை பல மடங்கு உயரும்!

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி மாதச் சம்பளமாக ரூ.50,000 பெற்று பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால், தற்போது இருக்கும் பென்ஷன் திட்டத்தின்படி அவர் ஓய்வுபெற்றபிறகு மாதத்துக்கு ரூ.5,180 பென்ஷன் கிடைக்கும். இனிவரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழுச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும்பட்சத்தில், புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

அதே நபர், 30 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசிச் சம்பளமாக ரூ.50,000 பெற்று, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அவருக்கு ரூ.22,857 ஓய்வூதியம் கிடைக்கும். 25 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருந்திருந்தால், ரூ.19,225 ஓய்வூதியமாகக் கிடைக்கும். அதேபோல, ஒருநபர் தன்னுடைய கடைசிச் சம்பளமாக ரூ.1,00,000 பெற்றிருந்து 33 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்!

Saturday, February 27, 2021

12 வகையான திருமணப் பொருத்தங்கள் ! மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.!

 

 

இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.

சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.

அவை :

  • தினப்பொருத்தம்
  • கனபோருத்தம்
  • யோனிப்போருத்தம்
  • ராசிப்போருத்தம்
  • ரஜ்ஜிப்பொருத்தம்

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
-- 12 வகையான திருமணப் பொருத்தங்கள்

இவை அல்லாமல் ஜாதகரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
-- ஜாதகப் பொருத்தங்கள்


உங்கள் திருமண பொருத்தத்தை அறிய...

http://www.tamilsurangam.in/astrology/general_astrology/marriage_matching/index.html

 https://www.prokerala.com/astrology/thirumana-porutham.php 

 

மணமகன் மணமகள்
பெயர்
இராசி
நட்சத்திரம்

பெயர்
இராசி
நட்சத்திரம்

 

Tuesday, December 22, 2020

முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை!

 

    தவளை கத்தினால் மழை.
 
🌝 அந்தி ஈசல் பூத்தால் 
 
அடை மழைக்கு அச்சாராம். 
 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
 
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
 
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
 
🌝 தை மழை நெய் மழை.
 
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
 
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
 
🌝 வெள்ளமே ஆனாலும் 
 
பள்ளத்தே பயிர் செய். 
 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
 
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
 
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
 
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு.
 
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்.
 
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
 
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
 
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
 
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ. 
 
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல் .
 
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு.
 
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
 
🌝 ஆடு பயிர் காட்டும் 
 
ஆவாரை கதிர் கட்டும்.
 
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
 
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்.
 
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
 
🌝 தேங்கி கெட்டது நிலம் 
 
தேங்காமல் கெட்டது குளம்.
 
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
 
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்.
 
🌝 விதை பாதி வேலை பாதி.
 
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
 
🌝 கோப்பு தப்பினால் 
 
குப்பையும் பயிராகாது.
 
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.
வாழ்க வையகம்! 
 
வாழ்க வளமுடன்! 
 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
 
 
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
 
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட
முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
 
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...
 
#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய !

1.உங்களுக்கு சொந்தம் மற்றும் உறவு இல்லாத ஆண்களுடன் எவ்வித தொலைத் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள் . அவர் எவ்வளவு நம்பிக்கை குரியவராக இருந்த போதிலும்.
 
 
 
*ஆசிரியராக
 
*நண்பணாக
 
*டிரைவராக
 
*பக்கத்து வீட்டு காரனாக
 
*whats app நண்பனாக
 
*வகுப்பில் படிக்கும் ஆணாக
 
*கூட வேலை செய்பவனாக...
 
*வியாபாரியாக
 
இருந்த போதிலும், அவர்களை அந்த அந்த இடங்களில் மட்டும் விட்டுவிடு... மொபைல் மூலம் உன் வீடு வரை வரவைக்காதே.
 
2. ஒரு ஆணை நீங்கள் நண்பனாகவோ , சகோதரனாகவோ, தந்தையாகவோ, வேறு எந்த முறையிலும் நினைத்து பழகழாம் கொஞ்சம் சிந்தித்து பார் பெண்ணே. அவரின் பார்வையும் அதே மாதிரி உள்ளது என உன்னால் கூறமுடியாது...
 
3. நீங்கள் ஆணிடம் இருந்து எதை வேண்டு மானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அவனது மனதை உன்னால் தெரிந்து கொள்ள முடியாது..
 
4. பெண்ணே நீ சொல்லலாம் “அவனது பார்வை தப்பாக தெரிய வில்லை” என்று, நீ எவ்வாறு உறுதியாக கூறுவாய்! அதை நீ கண் சிமிட்டும் நேரத்தில் அவன் உன்ணை தப்பான என்னத்துடன் ரசித்தால் உன் நிலமை என்னவாகும்?
 
5. பெண்ணே ! நீ சிறு வயதில் இருந்து நன்றாக பழகிய ஆணாக இருக்கட்டும் அவனுக்கும் இயற்கை உணர்வு உண்டு என்பதை மறந்து விடாதே !
 
6. தந்தையே மகளைக் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது மற்ற ஆண்களை எவ்வாறு உன்னால் நம்ப முடிகிறது .
 
7. நல்ல ஆண்கள் உன்னிடம் எல்லை தாண்டி வரமாட்டார்கள்.. அதே போல் நீயும் நல்ல பெண் என்றாள் எல்லை தாண்டமாட்டாய்... 
 
8. நாம் சரியாக இருந்தாலே போதும் நமக்கெதிரான குறறங்கள் பாதியாக குறைந்துவிடும்....!

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...