Total Pageviews

Monday, May 16, 2022

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன் ?

 


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. இதில் சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா? அல்லது இரட்டை விளக்கு ஏற்றுவது தான் விசேஷமா? என்று சந்தேகம் இருக்கலாம்.

பொதுவாகவே, நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும். எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.

ஒரு முகம் - சாந்தமான மன நிலையை தரும்.

இரண்டு முகம் - குடும்பத்தில் துயரங்கள் நீங்கும், செல்வம் தரும், சமூகத்தில் மதிப்பு - மரியாதை கூடும்.

மூன்று முகம் - செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும், வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை கூடும்.

நான்கு முகம்- சொத்து சுகங்கள் சேரும், ஆரோக்கியம் மேன்மை அடையும்.

ஐந்து முகம் - குறைவு இல்லாத நல் வாழ்க்கை தரும்.

இவை தவிர, வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது. எனினும், அதே சமயத்தில்... விளக்கு ஏற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. அதையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்...

1.
வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு.

2.
ஒருவேளை, தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

3.
தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

4.
தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இது கூடுதல் பலனைத் தர வல்லது.

5.
விளக்கை மலை ஏற்றும் சமயத்தில் அதில் உள்ள தீயை வாயால் ஊதி அணைக்கக்கூடாது... மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம் என்பது எல்லோரும் அறிந்த பொது விதி. அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது. அது பாவம்.

6.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம். இதனால் வீடு தொடைத்துப் போகும், வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.


இதுதவிர, விளக்கில் இடும் திரிகளுக்கும் கூட பலன் உண்டு...

1.
சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும்.

2.
திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம்.

3.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும்.

4.
மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.

5.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.

6.
தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும். இதனால் தரித்திர யோகம் கொண்ட ஜாதகம் கூட ராஜ யோகமாக மாறிவிடும்.

7.
வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.


1 comment:

  1. பலன் தரும் தகவல்கள் நண்பரே...

    ReplyDelete

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...