Total Pageviews

303,556

Wednesday, November 27, 2024

வாழ்க்கையில் விரக்தியில் இருந்து விடுபடுவது எப்படி?

 

மன அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடு மனவிரக்தி.இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள், தனிமையில் அழுவது, சோர்வு, பசியின்மை போன்றவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாகும்.


 விரக்தி மேலீடும்போது, நமக்கு நெருக்கமான உறவுகளிடம் அல்லது நண்பர்களிடம் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் போது, மன அழுத்தம் குறைகிறது.

எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும், என் உறவினர் இவ்வாறு விரக்தியடைந்து, மன சஞ்சலத்தோடு என்னைத் தேடி வரும் போது, அவருக்கு ஆறுதலும் தேறுதலும் கூறுவது என் வாடிக்கை.திரும்பிச்செல்லும்போது, நன்றாக இருப்பதாகக் கூறிச் செல்வார்.

எந்த நேரமும் ஏற்பட்ட பிரச்சினையை எண்ணிக் கலங்காமல், புத்தகம் வாசிப்பில் மனதை செலுத்தலாம்.

வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடலாம்.

மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வரலாம்.முக்கியமாக கோயில், பூங்காக்கள்.இவ்விடங்களுக்கு செல்வதன் மூலம், புதிய காற்றை சுவாசிக்கவும், உடலுக்குப் புத்துணர்ச்சித் தரக்கூடிய நடைப்பயிற்சியும் மனதை இலேசாக்கும்.

மனக் கவலையினால் உடலில் இருக்கும் தசைகள் இறுகும். அதைத் தடுத்து, தசைகளை இலேசாக்கி, உடல் சோர்வடைவதையும் தடுக்கிறது நடைப்பயிற்சி.

பூங்காவில் நடைப்பயிற்சி எனும் போது புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படலாம்.அவர்களோடு அளவளாவும்போது, மனதில் தோன்றிய அழுத்தமும், விரக்தியும் நீங்கி, நம்மையுமறியாமல் மனமகிழ்ச்சி ஏற்படும்.

மனதிற்குப் பிடித்த இசையைக் கேட்கலாம்.மென்மையான இசை , மனதை வேறு சிந்தனைக்குச் செல்வதைத் தடுக்கும்.

தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். தியானத்தின் மூலம் கற்பனையில் இயற்கைக் காட்சிகளைக் காண்பது மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

கடைகளுக்குச் சென்று, பார்வையிடல், விருப்பப் பொருட்களை வாங்குதல் போன்றவையும் விரக்தியிலிருந்து மனதை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும்.

வீட்டில் தோட்டம், மாடித்தோட்டம் என்றிருந்தால் அவற்றின் பராமரிப்பில் கவனத்தைச் செலுத்தினாலும் விரக்தி மனப்பான்மை திசைமாறும்.

வீட்டுக் குழந்தைகளோடு விளையாடுதல், வேறு வேலைகளில் ஈடுபடுதலும் இதற்கு தீர்வாக அமையும்.

இந்த உலகில் பிறந்த எல்லோருக்கும் ,எல்லாமே கிடைத்து விடுவதில்லை.

விடை கிடைக்காத கேள்விகளும், தீர்வு கிடைக்காத பிரச்சினைகளும் நிறைய இருக்கின்றன. 

வாழ்க்கை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளை நம்மை நோக்கி வீசுகிறது.

இந்த தருணங்கள் நம்மை மனநிறைவிலிருந்து வெளியேற்றி, புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.

கெட்ட எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

உங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் - நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்.!

Monday, November 25, 2024

இந்த மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் !

 எவை மருந்து



 1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது மருந்து.

 2. காலையில் இறைவனை நினைப்பது மருந்து.

 3. யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்து.

 4. காலை, மாலை நடைப்பயிற்சியும் மருந்தாகும்.

 5. நோன்பு அனைத்து நோய்களுக்கும் மருந்து.

 6. சூரிய ஒளியும் மருந்துதான்.

 7. மட்கா தண்ணீர் குடிப்பதும் ஒரு மருந்து.

 8. கைதட்டலும் மருந்துதான்.

 9. அதிகம் மெல்லுவதும் மருந்துதான்.

 10. உணவைப் போலவே, மெல்லும் நீர் மற்றும் குடிநீரும் ஒரு மருந்து.

 11. உணவுக்குப் பின் வஜ்ராசனத்தில் அமர்வது மருந்தாகும்.

 12. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவும் மருந்தாகும்.

 13. சில சமயங்களில் மௌனமும் மருந்தாகும்.

  14. சிரிப்பும் கேலியும் மருந்து.

 15. மனநிறைவும் மருந்துதான்.

 16. மனமும் உடலும் அமைதியே மருந்து.

 17. நேர்மையும் நேர்மறையும் மருந்து.

 18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சியும் கூட மருந்து.

 19. அனைவருக்கும் நல்லது செய்வதும் மருந்தாகும்.

 20. ஒருவருக்கு புண்ணியம் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.

 21. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதே மருந்து.

 22. உண்பதும் குடிப்பதும் குடும்பத்துடன் பழகுவதும் மருந்தாகும்.

 23. உங்களின் ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத ஒரு முழுமையான மருத்துவக் கடை.

 24. குளிர்ச்சியாக இருங்கள், பிஸியாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், உற்சாகமாக இருங்கள், இதுவும் மருந்துதான்.

 25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்தாகும்.

 26. இறுதியாக...🌱 இந்தச் செய்தியை யாருக்காவது அனுப்பி ஒரு நல்ல செயலைச் செய்யும் இன்பமும் மருந்தாகும்.

  இந்த மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்

வாழ்க்கையில் உன் சாதனை என்பது !

 


 வாழ்க்கையில்  உன் சாதனை என்பது !

 4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.

12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.

18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.

23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.

25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.

30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.

35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.

45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ  தக்க வைத்துக் கொள்வதாகும்.

50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.

55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.

60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.
 
65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.

70 வயதில்  உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.

75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.

80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.

இவ்வளவுதான் வாழ்க்கை...


Wednesday, November 13, 2024

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

 வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்  6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்திய பிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்று நோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம். வாழ் நாளைக் குறைக்கும்.குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
 

தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!


கீரை வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!


ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!


தினமும் சாப்பிடக்கொடுங்கள்!


உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???


தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!


தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக் கட்டாயப்படுத்துங்கள்!


கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!


உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???


🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை கொடுக்காதீர் சீரகத் தண்ணீர், சோம்புத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும்!
 

*நம் முன்னோர்கள் பயன் படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன் படுத்துவோம் *


 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.


இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்...

Tuesday, November 12, 2024

ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் !

 

1. குளியல் அறைகுள் செல்போன் !

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது !

3. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது !

4.சிறிய விசயத்திற்கும் அதிகமாக கோபப்படுவது !

5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது!

6.நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது !

7. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக் கொள்வது !

8. திட்டமிடாத பயணம் !

9. ஆபாச வலைத்தளம்!

10. தேவை இல்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது !

11. எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது !

12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது!

13.இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது!

14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை !

15. எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற இன்பம் தேடுதல்! அது ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரி!

16. நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனநிலை!

17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே செல்வது !

18.இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது!

மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் , இரவு'10.30மணிக்குள் படுத்து விடுங்கள் !      5 நாட்களுக்கு காலை 6 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள் எவ்வளவு நீண்டது என்று !

கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டு இருக்கும் வேலை வீணானது என்று தோன்றும் வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்க முடியும் ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால் ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம்!

Wednesday, November 6, 2024

அன்பு என்பது !

 அன்பு என்பது !


 

அன்பு என்பது தெய்வமானது !

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....

கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது...
 
உள்ளமென்பது உள்ளவர்க்கு உண்மையானது....
 
உலகமென்பது உள்ளவரை உறுதியானது.....
 
 அன்பு என்பதே தெய்வமானது...
 
அன்பு என்பதே இன்பமானது....
 
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது....
 
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது....
 
.இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது....
 
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது....

Sunday, November 3, 2024

வாழ்க்கை என்பது !

வாழ்க்கை வேடிக்கையானது, நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் இழக்கவும் ஏதுமில்லை. தொலைக்கவும் ஏதுமில்லை. உரிமை கொண்டாடவும் ஏதுமில்லை. உங்கள் உடலும் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.

கவலை இல்லையெனில் மனிதனும் இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.

ஆகவே எதற்கும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வரை உங்கள் வாழ்வை சிறப்பாக வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்.

வாழ்வில் ஒழுக்கமும் நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும் கலையுணர்வும் வந்து விடுவதை உங்களால் காண முடியும்.

மனமே கடவுளின் இருப்பிடம் அதை  தூய்மையாக வைத்திருப்பது உங்கள் கடமை.

சில நேரங்களில் 


பிறர் உங்களை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

நல்ல சக்தியும் புத்தியும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கிறார்.அதன் மூலம் நீங்கள் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

உண்மையான அன்பை மற்றவர்களுடன் பகிருங்கள். அது பல மடங்காக உங்களுக்கு வேறு விதங்களில் திரும்ப கிடைக்கும்.

இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே.


எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள்ளுங்கள்.✍🏼🌹

வேலை !

  ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவரு...