Total Pageviews

Thursday, July 2, 2026

இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !

 

 
 
பசியறிந்து சோறு போட 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _சாப்பிட்டாயா_ எனக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

தாமதமாகும் இரவுகளில் 
 _எங்கிருக்கிறாய்_ என விசாரிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

நோய் வந்தால் இரவுகளில் 
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

குரல் மாறுபாட்டில் மன 
நிலையைக் கணிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு_ என வழியனுப்ப 
`ஒருவர்` இருக்கும் வரை...

 எத்தனை மணி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விட `ஒருவர்` இருக்கும் வரை...

தோற்றுப் போய் திரும்புகையில் 
தோள் சாய்த்துக்கொள்ள 
`ஒருவர்` இருக்கும் வரை...

 _போ_ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள  `ஒருவர்` இருக்கும் வரை...

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

எதற்காகவும் எவரிடமும் 
நம்மை விட்டுக் கொடுக்காத
`ஒருவர்` இருக்கும் வரை...

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 
நானிருக்கிறேனென உணர்த்த
`ஒருவர்` இருக்கும் வரை...

தவறுகளைத் தவறென 
சுட்டிக் காட்டித் திருத்தும் 
`ஒருவர்` இருக்கும் வரை...

துயர் அழுத்தும் கணங்களில் 
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
`ஒருவர்` இருக்கும் வரை...

மனக் குறைகளைப் புலம்பித் 
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 
`ஒருவர்` இருக்கும் வரை...

 *வாழ்தல் இனிதே* ...!

 ```இந்த வாழ்க்கையும் இனிதே``` ... ```!``` ```!!``` 

💖💖💖 💕 💖💖💖

No comments:

Post a Comment

இந்த வாழ்க்கையும் இனிதே ! தேவை அறிந்த - புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் ஒருவர்` இருக்கும் வரை !

      பசியறிந்து சோறு போட  `ஒருவர்` இருக்கும் வரை...  _சாப்பிட்டாயா_ எனக் கேட்க  `ஒருவர்` இருக்கும் வரை... தாமதமாகும் இரவுகளில்   _எங்கிருக்...