பசியறிந்து சோறு போட
`ஒருவர்` இருக்கும் வரை...
_சாப்பிட்டாயா_ எனக் கேட்க
`ஒருவர்` இருக்கும் வரை...
தாமதமாகும் இரவுகளில்
_எங்கிருக்கிறாய்_ என விசாரிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...
நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள
`ஒருவர்` இருக்கும் வரை...
குரல் மாறுபாட்டில் மன
நிலையைக் கணிக்க
`ஒருவர்` இருக்கும் வரை...
_போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு_ என வழியனுப்ப
`ஒருவர்` இருக்கும் வரை...
எத்தனை மணி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விட `ஒருவர்` இருக்கும் வரை...
தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக்கொள்ள
`ஒருவர்` இருக்கும் வரை...
_போ_ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருக்க
`ஒருவர்` இருக்கும் வரை...
மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள `ஒருவர்` இருக்கும் வரை...
நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
`ஒருவர்` இருக்கும் வரை...
எதற்காகவும் எவரிடமும்
நம்மை விட்டுக் கொடுக்காத
`ஒருவர்` இருக்கும் வரை...
கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
`ஒருவர்` இருக்கும் வரை...
தவறுகளைத் தவறென
சுட்டிக் காட்டித் திருத்தும்
`ஒருவர்` இருக்கும் வரை...
துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
`ஒருவர்` இருக்கும் வரை...
மனக் குறைகளைப் புலம்பித்
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க
`ஒருவர்` இருக்கும் வரை...
*வாழ்தல் இனிதே* ...!
```இந்த வாழ்க்கையும் இனிதே``` ... ```!``` ```!!```
💖💖💖 💕 💖💖💖

No comments:
Post a Comment