Total Pageviews

Wednesday, May 21, 2025

உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள் எவை?

 உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள்:

வாழைப்பழம்:வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கையான இனிப்புக்கள் உள்ளன. எனவே இத்தகைய வாழைப்பத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் வலிமையடையும்.

வேர்க்கடலை வெண்ணெய்வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் இந்த வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்னும் நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட இதயம் பாதுகாப்புடன் இருப்பதோடு, செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, உடலில் சக்தியை நீண்ட நேரம் இருக்கச் செய்யும்.

 பீட்ரூட் ஜூஸ்பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ் பீட்ரூட் ஜூஸை தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் குடித்து வந்தால், நீண்ட நேரம் நன்கு புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். இதற்கு பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் மற்றும் சி சத்துக்களே காரணம்.

தண்ணீர்தண்ணீர்

தண்ணீர் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், உடல் விரைவில் சோர்ந்துவிடும். மேலும் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடல் பொலிவையும் பாதிக்கும். எனவே முடிந்த அளவு அதிகமான அளவில் தண்ணீரை பருக வேண்டும்.

சிவப்பு திராட்சைசிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரையானது, உடலினுள் செல்லும் போது எனர்ஜியாக மாற்றப்பட்டுவிடுவதால், இதனை சாப்பிட்டால், உடல் நீண்ட நரம் வலிமையோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

 ஓட்ஸ்ஓட்ஸ்

ஓட்ஸ் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் கஞ்சியும் ஒன்று. எனவே இதனை சாப்பிட்டால், இவை நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து வைத்திருப்பதோடு, பல மணிநேரம் உடலை எனர்ஜியுடனும் வைத்துக் கொள்ளும்

 காபி  காபி

காபி மனதைப் புத்துணர்ச்சியாக்கும் உணவுப் பொருட்களில் காபியும் ஒன்று. காபியில் உள்ள காப்ஃபைன், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். ஆனால் இதை அதிகமாக பருகினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதையே அளவாக குடித்தால், ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

பீன்ஸ்பீன்ஸ்

 பீன்ஸில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களை வலிமைப்படுத்தும். ஆகவே உடலை வலிமையோடு வைத்துக் கொள்ள நினைத்தால், பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சை காய்கறிகள் பச்சை காய்கறிகள் பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைத்திருப்பதோடு, வைட்டமின் சி உடலுக்கு வலிமையையும் தரும்.

 சிட்ரஸ் பழங்கள்சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடனும், சோர்வின்றியும் இருக்கும்.

கைக்குத்தல் அரிசிகைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கைக்குத்தல் அரிசியில், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி காம்ப்ளக்ஸ் கூட அதிகம் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் மாவுப் பொருள் இருப்பதால், செரிமானமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் உடலை புத்துணர்ச்சியுடனும், வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள்ஆப்பிள்

ஆப்பிள் ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த அணுக்களின் அளவை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு செல்களையும் எளிதில் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். க்ரீன் டீ

க்ரீன் டீ காப்ஃபைன் பானங்களைப் போன்றே க்ரீன் டீயிலும், மூளைச் செல்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் தன்மை நிறைந்துள்ளது. ஆகவே இதனை குடித்தால், உடல் சோர்வின்றி, பொலிவோடு மின்ன ஆரம்பிக்கும்.

 தினை தினை

 தினை பொதுவாக தினை விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சக்தி நிறைந்த உணவுகளுள் ஒன்று. இத்தகைய தினையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அமினோ ஆசிட், தசைகளை வலுவோடு வைத்துக் கொள்ளும்.

பாதாம்பாதாம்

பாதாம் பாதாமில் வைட்டமின் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் அடங்கியுள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட்டுகள், உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கக்கூடியவை. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வலுவோடு இருக்கும்.

சோயாபீன்சோயாபீன்

சோயாபீன் சோயாபீன்ஸிலும் தசைகளை வலுவடையச் செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இத்தகைய சோயாபீன்ஸை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டு செய்தால், நீண்ட நேரம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மக்கா (Maca) மக்கா (Maca)

மக்கா (Maca) மக்கா என்பது ஒரு மூலிகை. இதனை சாப்பிட்டடால், ஒரு புதுவிதமான எனர்ஜி கிடைப்பதோடு, இல்லற வாழ்வில் ஈடுபடவும் ஒரு நல்ல வலிமை கிடைக்கும்.

 உலர் பழங்கள்உலர் பழங்கள்

 உலர் பழங்கள் உலர் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய எனர்ஜியைக் கொடுக்கும்.

 பூசணிக்காய்பூசணிக்காய்

 பூசணிக்காய் பூசணிக்காயில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இருப்பினும் இவை நீண்ட நேரம் பசியெக்காமல் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களை நன்கு புத்துணர்ச்சியுடன் வைக்கும். சோளம் சோளம் சோளத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் கிளைகோஜன் உள்ளதால், அவை நிமிடத்தில் உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Thanks to Oneindia.com 

Friday, May 9, 2025

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.

 இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.
 


1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி உண்டு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.✍🏼🌹

Wednesday, May 7, 2025

60 முதல் 80 வயதுடையவர்களை "மகிழ்ச்சியான மக்கள்" ஆக மாற்றக்கூடிய 44 விஷயங்கள் !

மகிழ்ச்சியான மக்கள்":👇

1. தொடர்ந்து நடக்கவும்.

2. கோபமாக இருக்கும்போது ஆழ்ந்த மூச்சை எடுங்கள்.

3. உங்கள் உடல் சோர்வடையும் வரை உங்களால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள்.

4. கோடையில் ஏசி பயன்படுத்தினால், நிறைய தண்ணீர் குடிக்கவும்.

5. "டயப்பர்களை" பயன்படுத்துவது இயக்கங்களை எளிதாக்குகிறது.

6. அடிக்கடி நடப்பது உடலையும் மூளையையும் அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

7. மறதி என்பது வயது முதிர்ச்சியால் அல்ல, மாறாக மூளையை நீண்ட நேரம் பயன்படுத்தாததால் ஏற்படுகிறது.

8. அதிக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

9. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை செயற்கையாகக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.

10. தனியாக இருப்பது தனிமை அல்ல, ஆனால் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவது அல்ல.

11. சோம்பேறியாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல.

12. வயதானவர் களுக்கு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது, எனவே உரிமம் பெறாமல் இருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

13. நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யாதீர்கள்.

14. நீங்கள் வயதாகும்போதும் அனைத்து இயற்கை ஆசைகளும் அப்படியே இருக்கும்.

15. வீட்டில் இருக்காதீர்கள்.

16. நீங்கள் விரும்பியதைச் சாப்பிடுங்கள், கொஞ்சம் கொழுப்பாக இருப்பது பரவாயில்லை.

17. எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.

18. உங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தவிர்க்கவும்.

19. எப்போதும் டிவி பார்க்காதீர்கள்.

20. இறுதிவரை நோயுடன் போராடுவதை விட அதனுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

21. "கார் மலை ஏறினாலும் பாதை கிடைக்கும்" என்ற மந்திர மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்.

22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களை சாப்பிடுங்கள்.

23. 10 நிமிடங்களில் உங்கள் குளியலை முடிக்கவும்.

24. உங்களால் முடியாவிட்டால் உங்களை தூங்க கட்டாயப்படுத்தாதீர்கள்.

25. மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

26. உங்கள் மனதைப் பேசுங்கள், அதிகமாக யோசிக்காதீர்கள், நான் எப்படி பேச வேண்டும், முதலியன.

27. கூடிய விரைவில் ஒரு "குடும்ப மருத்துவரை" முடிவு செய்யுங்கள்.

28. மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருக்காதீர்கள், கொஞ்சம்
"கெட்ட கிழவன்", மற்றும் குறும்புக்காரனாக இருப்பது பரவாயில்லை.

29. சில நேரங்களில் உங்கள் மனதை மாற்றி உங்கள் பிடிவாதத்தை கைவிடுவது பரவாயில்லை.
30. வாழ்க்கையின்  கடைசி கட்டத்தில் "டிமென்ஷியா" என்பது கடவுளின் ஆசீர்வாதம்.

31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தும்போது, நீங்கள் உண்மையில் வயதாகிவிடுவீர்கள்.

32. புகழுக்கான ஆசையை விட்டுவிடுங்கள், உங்களிடம் இருப்பது போதுமானது.

33. அப்பாவித்தனம் என்பது முதியவர்களின் பாக்கியம்.

34. பிரச்சினைகள் அதிகமாக இருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்!

35. வெயிலில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

36. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.

37. இன்று நிம்மதியாக வாழுங்கள்.

38. ஆசையே நீண்ட ஆயுளுக்கு ஆதாரம்.

39. எப்போதும் நேர்மறையாக இருங்கள்.

40. சுதந்திரமாக சுவாசிக்கவும்.

41. வாழ்க்கையின் விதிகள் உங்கள் கைகளில் உள்ளன.

42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

43. மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் நேசிக்கப்படுகிறார்கள்.

44. சிரிப்பு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

இந்தத் தகவலை உங்கள் மூத்த நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!



Tuesday, May 6, 2025

காலை கடன் நிம்மதியா போக... நைட் இந்தப் பொடியை இப்படி சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன் டிப்ஸ்

 மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Constipation remediesமலம் என்பது காலைக் கடன் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை காலை நேரத்தில் எந்த விதமான சிரமமும் இன்றி கழித்தால் தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கான அடையாளம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

ஆனால், இவ்வாறு மலத்தை சரியாக கழிக்காமல் மலச்சிக்கல் ஏற்பட்டால், அது பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். காலை எழும் போது மலம் கழிக்க வேண்டிய உணர்வுடன் இருத்தல் அவசியம். ஆனால், காபி குடித்தாலோ அல்லது நடைபயிற்சி மேற்கொண்டாலோ மட்டுமே மலம் கழிக்க முடியும் என்று இருப்பது மலச்சிக்கலை உணர்த்தும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.

செரிமானக் கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவை மூலமாக மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் பசியின்மை போன்றவை ஏற்படும். எனவே, தினந்தோறும் சரியான முறையில் மலத்தை கழிப்பது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், 4 அல்லது 5 காய்ந்த திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கான மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

 இது தவிர கடுக்காய் பிஞ்சுகளை வாங்கி அவற்றை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடியாக மாற்றி, மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளின் செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இது தவிர பெரியவர்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க நிலவாகை பொடியை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இந்தப் பொடியை இரவு நேரத்தில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • காலை நேரத்தில் மலம் கழிப்பதன் பயன்கள்:
     
    • மலம் கழிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
    •  
    • மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவி செய்கிறது.
    •  
    • உடலைச் சுத்தப்படுத்துகிறது.
    •  
    • உடல் நலனை மேம்படுத்துகிறது.
    •  
  • காலை நேரத்தில் மலம் கழிப்பதற்கான சில குறிப்புகள்:
     
    • போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
    •  
    • நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
    •  
    • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    •  
    • இரவு உணவைச் சரியாக சாப்பிடவும்.
    •  
    • சரியான தூக்கத்தை எடுக்கவும்.
    •  
  • காலை நேரத்தில் மலம் கழிக்கும்போது சிரமங்கள் ஏற்பட்டால்:
     
    • மருத்துவரை அணுகவும்.
    •  
    • அவர்களிடம் ஆலோசனை பெற்று, தேவையான சிகிச்சையை எடுக்கலாம்.

​நிலாவரையில் என்ன இருக்கு?​

நிலாவரை சக்திவாயந்த ஆயுர்வேத மூலிகை ஆகும். இது பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ முறைகளில் தவிர்க்க முடியாத சிகிச்சை பண்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள், காய்கள், பூக்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. இந்த மூலிகை பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்திலிருந்து பெறப்படும் மூலிகை தேநீர் மற்றும் சாறுகள் பல்வேறு சிகிச்சைக்கு பயனளிக்கிறது.

​நிலாவரை குறித்து ஆயுர்வேதம் சொல்வது என்ன?​

நிலாவரை ஆயுர்வேதம் சுவையில் கசப்பும் குளிர்ச்சியான தன்மையும், ஜீரணிக்க இலகுவாகவும் இருக்கும் என்கிறது. இது இலேசான சுத்திகரிப்பாகவும் செயல்படுகிறது. இந்த மூலிகையானது வாத தோஷத்தை போக்க கூடியது. மேலும் உடலில் பித்த தோஷத்தை ஊக்குவிக்க செய்கிறது. இவை மலமிளக்கி பண்புகளை கொண்டுள்ளது. இதன் இலைகளை தூள் வடிவில் சேர்த்து வந்தால் பசியை தூண்டும். இது செரிமான அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் எடை குறையவும் உதவுகிறது. இதை தோலின் மேல் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

  தி ரு மண ம் விரை வாக சுமுக மகா நடை பெ று வ த ற் க் கா ன வ ழி மு றை க ள் ! அன்புள்ள நண்பர்களே ! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லத...