Total Pageviews

Tuesday, May 6, 2025

காலை கடன் நிம்மதியா போக... நைட் இந்தப் பொடியை இப்படி சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன் டிப்ஸ்

 மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு காணலாம் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Constipation remediesமலம் என்பது காலைக் கடன் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை காலை நேரத்தில் எந்த விதமான சிரமமும் இன்றி கழித்தால் தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கான அடையாளம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

ஆனால், இவ்வாறு மலத்தை சரியாக கழிக்காமல் மலச்சிக்கல் ஏற்பட்டால், அது பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். காலை எழும் போது மலம் கழிக்க வேண்டிய உணர்வுடன் இருத்தல் அவசியம். ஆனால், காபி குடித்தாலோ அல்லது நடைபயிற்சி மேற்கொண்டாலோ மட்டுமே மலம் கழிக்க முடியும் என்று இருப்பது மலச்சிக்கலை உணர்த்தும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.

செரிமானக் கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவை மூலமாக மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் பசியின்மை போன்றவை ஏற்படும். எனவே, தினந்தோறும் சரியான முறையில் மலத்தை கழிப்பது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், 4 அல்லது 5 காய்ந்த திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கான மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

 இது தவிர கடுக்காய் பிஞ்சுகளை வாங்கி அவற்றை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடியாக மாற்றி, மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளின் செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இது தவிர பெரியவர்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க நிலவாகை பொடியை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இந்தப் பொடியை இரவு நேரத்தில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • காலை நேரத்தில் மலம் கழிப்பதன் பயன்கள்:
     
    • மலம் கழிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
    •  
    • மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவி செய்கிறது.
    •  
    • உடலைச் சுத்தப்படுத்துகிறது.
    •  
    • உடல் நலனை மேம்படுத்துகிறது.
    •  
  • காலை நேரத்தில் மலம் கழிப்பதற்கான சில குறிப்புகள்:
     
    • போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
    •  
    • நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
    •  
    • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    •  
    • இரவு உணவைச் சரியாக சாப்பிடவும்.
    •  
    • சரியான தூக்கத்தை எடுக்கவும்.
    •  
  • காலை நேரத்தில் மலம் கழிக்கும்போது சிரமங்கள் ஏற்பட்டால்:
     
    • மருத்துவரை அணுகவும்.
    •  
    • அவர்களிடம் ஆலோசனை பெற்று, தேவையான சிகிச்சையை எடுக்கலாம்.

​நிலாவரையில் என்ன இருக்கு?​

நிலாவரை சக்திவாயந்த ஆயுர்வேத மூலிகை ஆகும். இது பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ முறைகளில் தவிர்க்க முடியாத சிகிச்சை பண்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள், காய்கள், பூக்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. இந்த மூலிகை பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்திலிருந்து பெறப்படும் மூலிகை தேநீர் மற்றும் சாறுகள் பல்வேறு சிகிச்சைக்கு பயனளிக்கிறது.

​நிலாவரை குறித்து ஆயுர்வேதம் சொல்வது என்ன?​

நிலாவரை ஆயுர்வேதம் சுவையில் கசப்பும் குளிர்ச்சியான தன்மையும், ஜீரணிக்க இலகுவாகவும் இருக்கும் என்கிறது. இது இலேசான சுத்திகரிப்பாகவும் செயல்படுகிறது. இந்த மூலிகையானது வாத தோஷத்தை போக்க கூடியது. மேலும் உடலில் பித்த தோஷத்தை ஊக்குவிக்க செய்கிறது. இவை மலமிளக்கி பண்புகளை கொண்டுள்ளது. இதன் இலைகளை தூள் வடிவில் சேர்த்து வந்தால் பசியை தூண்டும். இது செரிமான அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் எடை குறையவும் உதவுகிறது. இதை தோலின் மேல் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

  தி ரு மண ம் விரை வாக சுமுக மகா நடை பெ று வ த ற் க் கா ன வ ழி மு றை க ள் ! அன்புள்ள நண்பர்களே ! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லத...