பணம், பதவி என்று வரும்போது ! உறவுகள் மறப்பது வரலாறு.!
அண்ணனை தம்பி கொன்று ஆட்சிக்கு வந்தது ! நமக்கு தெரியும் தானே!
சொத்துக்காக மகன், பெற்றவரை
வெறுப்பது !
உடன் பிறந்தவர்கள் சண்டை இடுவது என்பது மனித இயல்பு தானே!
எல்லோருக்கும் எதிர்பார்ப்பு உண்டு!
எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது பிரச்சனை சண்டை, கருத்து
வேறுபாடு வரத்தான் செய்யும் !
பங்காளிகள் என்றால் பகையாளிகள் தான் என்றாகி விட்டது!
இப்போது உடன் பிறப்பு மகளிரும் அடக்கம். சொந்த சொத்துப்பிரச்சனை !
சமூக உயர்வு தாழ்வு, (சாதி விட்டு சாதிக் கல்யாணம்) !
அகங்காரம் !
ஆணவம் !
தான்தான் முதன்மைப்பெற்றவன் என்ற இறுமாப்பு !
வறட்டு கௌரவம் !
நல்லோர்கள் சகாவாசமின்மை !
வஞ்சகம்!
சூழ்ச்சி !
பொறாமை !
கபடம் !
நம்பியோரைகெடுத்தல் !
பழிவாங்கும் நோக்குடன் செயல்படுதல் !
இவைகள் மற்றும் பல காரணங்கள். !
வாழ்க்கையின் அர்த்தம் என்ன ?
பரஸ்பர அன்பு,
மரியாதை,
நல்லனவை ஏற்றல்,
அல்லனவை நீக்குதல்,
உறவை விடபணம் தான் பெரிது என்ற எண்ணம் இல்லாமை!
நல்லொழுக்கம் ,
சான்றோர் அறிவுரைப்படி வாழ்தல்,
பிறரைப் பார்த்து பொறாமைப் படாமல் முன்னேற்றம் காணல்,
போன்றவற்றை கடைபிடித்து,
விட்டு கொடுக்கும் மனப்பான்மை,
ஆகியவை பலன்தரும்.
சமூகம் திருத்தகூடிய சூழ்நிலைகள் உருவாக்கப் பட வேண்டும்!
No comments:
Post a Comment