Total Pageviews

Friday, May 31, 2024

வாழ்க்கை என்பது !

 

வாழ்க்கை என்பது !

 

 
தன்னிடம் உள்ள திறமையைச் சரியாகக்  கண்டு பிடித்து , தனக்கும் ,தன் குடும்பத்துக்கும் ,தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் உபயோகமாக வாழ்வது தான் வாழ்க்கை!

 ற்றற்ற வாழ்க்கை!

⭐இருப்பது போதும் !

⭐வருவது வரட்டும் !

⭐போவது போகட்டும் !;

⭐மிஞ்சுவது மிஞ்சட்டும் !

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

பற்றை துறக்க சந்நியாசம் போக வேண்டு மென்பதில்லை. இந்த நாலுவரியை கடைபிடித்தாலே கரையேறிவிடலாம்!

இன்பம் வந்தாலும் சிரி; துன்பம் வந்தாலும் சிரி!

இன்பங்களும் துன்பங்களும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது இன்பம் மற்றும் துன்பமா?

• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்

• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.

• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.

• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.

இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா?

• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.

• ஏழையோ பணமே தம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…

வாழ்கை என்பது பணமா?

• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர்.  

வாழ்க்கை என்பது சாதனை செய்வதா?

• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர்.  

வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தான?

• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா?

• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம்.  

வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா?

• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?

• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தான?

ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே !!

• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…

கல்லறையிலும் இங்கு புதைந்த வாழ்க்கையை தேடுபவர் யாரோ !!

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...