Total Pageviews

Sunday, June 2, 2024

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் !

 பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களைப் படிப்போம்... 🦜

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜
 

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜
 

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜
 

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு  கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜
 

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
 

6. தனது உணவுகளை அவை மாற்றுவதில்லை 🦜
 

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜
 

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜
 

9. தன் குழந்தைகளுக்கு உண்மையான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜
 

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜
 

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது தேவைக்கு மட்டும் இயற்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜
 

12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜
 

13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚
 

14.பறவைகள் கூடுதலாக கூடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.                                             
 

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦉🦜

🦢.    அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும். என்று தான் ஆசை....

வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை....

அன்புடன், தீர காதலுடன், நட்புடன்... அனைத்து உண்மையான உறவுகளுடன் சந்திக்கலாம்....

வாழ்க மகிழ்ச்சியுடன்....

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...