Total Pageviews

Friday, April 1, 2016

கடவுள் எப்படி உதவி செய்வார்?

கடவுள் எப்படி உதவி செய்வார்?

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த 

காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு 

வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க 

நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். 

அப்போது, 

சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு 

சக்கரம் பள்ளத்தில் போய் விழ, 

வண்டி சாய்ந்து விட்டது. 

"கடவுளே! 

இது என்ன சோதனை? 

எனக்கு உதவி செய்!" 

என்று அவன் மனமுருக வேண்டினான். 

கடவுள் உதவிக்கு வரவில்லை
 இரண்டாம் முறை, 

மூன்றாம் முறையென 

பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், 

அவர் வரவில்லை. 

வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், 

பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி

 சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். 

என்ன ஆச்சரியம்? 

தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் 

நினைத்திருக்க, 

எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. 

அப்போதுதான், 

அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு 

வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி 

செய்தது தெரிய வந்தது. 

அவனை வணங்கியன் 

"மிகவும் நன்றி ஐயா! 

கடவுள் செய்யாத உதவியை 

நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! 

உதவி செய்!" 

என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு 

உட்கார்ந்திருந்தால், 

கடவுள் எப்படி உதவி செய்வார்? 

நீயே முயற்சி செய்தால்தான், 

கடவுள் உனக்கு உதவி செய்வார். 

அதற்கு நீதான் அவருக்கு, 

ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" 

என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

'தெய்வம் மனுஷ்ய் ரூப்ய'

1 comment:

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...