Total Pageviews

Saturday, August 17, 2024

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் !

 


 1.  இன்றிருப்போர் நாளை இல்லை .

2.   இதில் யாரும் விலக்கும் இல்லை

3.  வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

4.   எண்ணம் போல் வாழ்க்கை. நம் எண்ணங்கள் நன்றாக இருந்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

5.வாழ்க்கையில் எதையும் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக நடக்கும்.

6.மற்றவர்களை திருப்திப்படுத்த எதையும் செய்ய கூடாது.

7.செய்யும் செயல் சிறியதோ பெரியதோ செய்வதை சிறப்பாக         செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

8. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது.

9.நீ எதை இழந்தாலும் உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

10.நீ இழந்ததை நினைத்து வருந்தினாள் இருப்பதையும் இழந்துவிடுவாய். இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள் இழந்தடையும் அடைந்து விடுவாய்.

11.அன்பை செயல்களால் வெளிப்படுத்தமுடியாத போது தான் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

12.மகிழ்ச்சியை விட மிகப்பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

13.துன்பம் வரும் வேளையில் அமைதியாக அல்லது சிரிப்புடன் இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம்! 

14.வெற்றி கிடைக்கும் வேளையில் அமைதியாக இருக்க முடியுமானால் அது மனப்பக்குவம் !

15.தனக்கென கடுமையான நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன் பிறரிடம் எளிதான கட்டுக்கோப்பையும் எதிர்பார்ப்பதும் பக்குவம்! 

16.புத்திக்கும் மனசுக்கும் நடக்கும் போராட்டம் தான் நாம். 

17.ஒன்றை பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி வரைக்கும் போராடு விளைவுகளையோ அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கவலைப்படாதே! 

18.  நீ பேச முடியாத இடங்களில் உன் திறமையை பேச விடு கண்டிப்பாக வாழ்வில் வெற்றி நிச்சயம்!

19.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது. 

20.வெற்றியை தலைக்கு கொண்டு செல்லா மலும்,தோல்வியை இதயத்துக்கு எடுத்து செல்லாமல் சரியாக கையாள்வது.

21.  தோல்வியை கண்டு பயப்படாமல் இருப்பது.

22.தன் எந்த ஒரு செயலும் பிறரை புண்படுத்தாமல் பார்த்து கொள்வது.

23.மற்றவர் சந்தோஷத்திற்காக சிலவற்றை விட்டு தருவது.

24.நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டி ருக்கிறோம்.

25.நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

 26.  இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது  ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.

28.எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள,உங்களை விட நல்ல வேலை. நல்ல கார். வங்கியில் நிறைய பணம்.நல்ல படிப்பு. அழகிய மனைவி. அழகான கணவன். நல்ல குழந்தைகள். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை. நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

29.நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.

30.சிலர் தங்கள் கவனத்தை, அடுத்தவர்கள் எப்படிஇருக்கின்றார்கள்,எங்கேசெல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,என்ன வாகனம் ஓட்டு கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்?..என்பதிலேயே கவனத்தை, செலுத்துவதால் பாதுகாப் பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கிய மான ஒரு வாழ்வை வாழுங்கள்.நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாரும் நமக்கு போட்டி இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.

'வாழும் இந்த காலம் வசந்தமாக அமையும்.

வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில்தான்!


Friday, August 16, 2024

நீண்ட காலம் நிம்மதியாக, வாழ வழிகாட்டும் வள்ளலார்!

 


1. சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

2. பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும்.

3. உணவில் உப்பு, புளி, மிளகாய் குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவை அதிகமாகவும் சேர்த்து சார்ப்பிட வேண்டும்.

4. விருந்து என்றாலும் குறைவாகவே உண்ண வேண்டும்.

5. பகலில் சாப்பிடும் உணவில் அரைப்பங்கு அளவு உணவை மட்டுமே இரவில் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. உறங்கும் போது இடது கைப் பக்கமாகவே உறங்க வேண்டும்.

7. பதற்றம் அதிகரிப்பதால் பிராணவாயு அதிகமாக செலவாகும். இதனால் பதற்றமின்றியும், ஆரவாரமின்றியும் அமைதியான வாழ்க்கை வாழ பழக வேண்டும்.

8.வாழ்க்கை என்பது வாழும் வரை மட்டுமே. அதனால் அனைத்து உயிர்களிடத்தும் அன்புடனும், கருணையுடன் வாழ்.

9. முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்.

10 மரணத்திற்கு பிறகு எதையும் கொண்டு செல்ல போவதில்லை. அதனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்காதே.

11. வாழும் வரை ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்.

12. பணத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து விடாதே.

13. மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் என சிந்திக்காதே.

14. வாழும் போதே உறவுகள், நண்பர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை ஆத்மார்த்தமாக நேசி.

15. பிள்ளைகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவோ, அவர்களை உனது அடிமைகளாக நடத்த வேண்டும் என நினைக்காதே.

16. என்னுடைய மரணத்திற்கு பிறகு என ஒரு போதும் உன் பிள்ளைகளிடம் சொல்லாதே. பிறகு உனது மரணம் எப்போது வரும் என அவர்கள் காத்திருக்க துவங்கி விடுவார்கள்.

 

17. உன்னால் முடியாததை மாற்ற முயற்சி செய்யாதே.

18. மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து பொறாமை கொள்ளாதே.

19. வாழ்க்கையை அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்.

20. மற்றவர்களின் நல்ல பழக்கங்களை மனம் திறந்து பாராட்டு.

21. வாழ்க்கை வாழ்வதற்கு தான். காலம் ஓடி விடும். ஆர்வத்துடன், வாழ்க்கையை நேசித்து வாழ்.

22. ஆதரவற்றவர்கள், ஏழைகள், வயதானவர்கள், நோயுள்ளவர்களிடம் ஒரு போதும் கடுமையாக நடந்து கொள்ளாதே.


23. உணவு, தூக்கம், ஓய்வு, பேச்சு ஆகியவற்றை குறைத்து, அதிகமாக உழை.

24. நல்ல மனிதர்களுடன் வாழ பழகு. அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடு.

25. தியானம், படிப்பு, உடற்பயிற்சி, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு அதிக நேரம் செலவிடு.

இதுவே சரியான வாழ்க்கை முறை என்றும், இந்த முறையில் வாழ்க்கையை நடத்தினால் நீண்ட காலம் நிம்மதியாக, சரியான வாழ்க்கையை வாழலாம் என வள்ளலார் வழிகாட்டுகிறார்.

Tuesday, August 13, 2024

ஒரு புதிய தொழிலைத் தொடங்கும் போது எதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்?

தொழில் செய்தால் லாபம் வரலாம் அல்லது நஷ்டம் வரலாம்!

தொழில் தொடங்கும் மனநிலை!


 
தொழில் செய்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

 பாஸ் பிடிக்கவில்லை என்று தொழில் கூடாது.

 நம் இஷ்டப்படி போகலாம் என்பதற்காக தொழில் கூடாது.

வேலை  10 to 5 வேலை பிடிக்கவில்லை என்பதற்காக தொழில் கூடாது.

 ஒருவரிடம் கைகட்டி வேலை செய்வது பிடிக்க வில்லை என்று தொழில் கூடாது

 FREE TIME வேண்டும் என்று தொழில் கூடாது

 365 நாட்களும் வேலை செய்யவேண்டும்

ஒரு வேலையில் இருந்தால் உங்கள் முதலாளிக்குத்தான் நீங்கள் பதில் சொல்லவேண்டும். தொழிலில், வேலை செய்பவர், சப்ளையர்,  வாடிக்கையாளர், அரசாங்கம், உங்கள் குடும்பம் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

 வெறும் 20 சதவிகிதம் தொழில்முனைவோர்களே வெற்றி பெறுகிறார்கள்

குடும்ப சூழல் :  குடும்பத்திற்கு உடனடியாக பணம்  வேண்டுமென்று தொழில் தொடங்கக்கூடாது. தொழிலில் நஷ்டம் உடனடியாக கிடைக்கும்! லாபம் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

 பொறுமை

தொழிலை தொடங்க வேண்டும், வளர்க்க வேண்டும், மேலே எடுத்து செல்ல வேண்டும். இதற்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.

 குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் தொழிலின் நெளிவு சுளிவுகள் புரியும். (எந்த வாடிக்கையாளரை நம்பலாம், எந்த மாதம் தொழில் மந்தமாகும், எப்போது நன்றாக இருக்கும் என்று புரியும்.)

 விடாமுயற்சி

 வெட்கமில்லாமல் பிறரிடம் ஆர்டர் கேட்க வேண்டும். (ஒரு ஸ்டேஜ் வந்த பிறகு வாடிக்கையாளர்களை நம் பின்னாடி வர செய்யவேண்டும்.)

 வாடிக்கையாளர் ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

 எந்த பொருளை விற்பது

 5% முதலாளிகள் ஒரு நாளைக்கு 1 லட்சம் குண்டூசி விற்கிறார்கள்; 5% முதலாளிகள் ஒரு கப்பல் செய்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை விற்கிறார்கள். 90% மக்கள் இவை இரண்டையும் தவிர மீதியை விற்கிறார்கள்.

எந்த பொருள் எந்த பகுதியில் விற்கும் என்று பார்த்து விற்க வேண்டும். (காபிப்பொடி கடை நடுத்தர மக்கள், குறிப்பாக BRAHMINS இருக்கும் இடத்தில விற்கும். மீதி இடத்தில அதிகமாக விற்காது )

ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒரு சில பொருட்களை யோதான் விற்கவேண்டும். அப்போதுதான், அந்த பொருளில் உள்ள சாதக பாதகங்கள் தெரியும்.

எந்த பொருளை விற்கிறோமோ அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும். 90% அவ்வாறு செய்வது கிடையாது. (எண்ணையை பாட்டிலிலிருந்து விளக்கில் ஊற்றிப் பார்த்தால்தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும்.

தன்னை மேம்படுத்திகொள்ளுதல்

எப்போதும் நல்ல ஆடைகளை அணிய வேண்டும்.

புத்தங்களை படித்துக்கொண்டே இருக்கவேண்டும். மிக முக்கியம் - அதில் சொல்லப்பட்ட கருத்துகளை செயல்படுத்தவேண்டும்.

பார்ட்னர்

வேறு ஒருவருடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டுமென்றால், அவரை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவரை எங்காவது கோவிலில் பார்த்து அங்கு அவர் நல்ல முறையில் பழகுவதை பார்த்து அவருடன் சேர முடிவெடுக்கக்கூடாது.

அந்த தொழிலின் சூழ்நிலையில் அவர் எப்படி பழகுகிறார் என்று தெரிந்த பின்னரே தொழில் தொடங்க வேண்டும்.

சிலருக்கு ஏதோ காரணத்தினால் பணத்தில் ஒரு ஈர்ப்பு இருக்காது.  அவர்கள் முடிவெடுக்க (விட) மாட்டார்கள். அவர்களுடன் சேரக்கூடாது.

தொடர்ந்து முதலீடு

சந்தையில் நம்மை நினைவு வைத்துக்கொள்வர்தற்கு தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். (குறிப்பாக டிஜிட்டல் மீடியாவில்.)

தொழில் துறை தொடர்பான கூட்டங்களுக்கு செல்லவேண்டும்.

கணக்கு வழக்கு

தொடர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  உங்களுக்கு வரவேண்டிய தொகை உங்களுடைய 2 அல்லது 3 மாத விற்பனைக்கு மேலிருந்தால், எந்த வாடிக்கையாளரிடமிருந்து அதிக பட்ச பணம் வரவேண்டி இருக்கிறதோ, அந்த வாடிக்கையாளருக்கு பொருள் கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.

ஒருவர் 1 லட்ச ரூபாய் கொடுக்கவேண்டும். ஆனால் இப்போது 75,000 கொடுக்கிறேன் ; மீதியை  பிறகு  கொடுக்கிறேன் என்று சொன்னால்,  உடனே 75,000 பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இது WORKING CAPITAL-க்கு உதவும். மற்றவர்களுடைய அறிவுரைகளையும் கேட்டு முடிவெடுக்கவும் !

Sunday, August 11, 2024

சாப்பாட்டைவீட்டுல,சமைச்சு சாப்பிட்ட வரைக்கும் ஊர்ல இவ்வளவு நோயாளிகளின் கூட்டம் இல்லை!

 

குளிக்கும் பழக்கம்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால்  மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து  நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக  வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக்  குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்  பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு  குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத்  தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற  இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.

  உணவு பாதுகாப்பு

 எல்லா  தனியார் மருத்துவமனைகளிலும்,  நோயாளிகளின் கூட்டம்,
அலை மோதுகிறது. 


இதற்கான காரணம் பற்றி எனக்கு தெரிந்த பிரபல டாக்டர் ஒருவர்
சொன்னது.

"இன்னிக்கு இருக்கிற இளைய தலைமுறை நிறைய சம்பாதிக்கறாங்க . அதுல பாதி பணத்தை  ஹோட்டல்களுக்கு போய் சாப்பிட செலவழிக்கறாங்க.மீதி பாதி பணத்தை நாங்க வாங்கிக்கறோம்.

சாப்பாட்டைவீட்டுல,சமைச்சு சாப்பிட்ட வரைக்கும் ஊர்ல
இவ்வளவு ஹாஸ்பிடல்கள் இல்லை.
 

நான்கைந்து க்ளீனிக்குகளும்,ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிடல் மட்டுமே இருந்தது.

ஆனா.....
 

இன்னிக்கு ஏக்கர் கணக்கில்  பிரம்மாண்டமான ஹாஸ்பிடல்கள்.
ஐ.சி.யூனிட்டில் அட்மிட்டானால் லட்சங்களில் ஃபீஸ். சொந்த வீடும், நகைகளும் பணமாக மாறி எங்கள் கைகளுக்கு வந்துவிடும்.

தயவு பண்ணி வீட்ல சமைச்சு சாப்பிடுங்க.மாசத்துக்கு ஒரு தடவை
ஹோட்டல்ல சாப்பிடுங்க.எவ்வளவு பெரிய ஹோட்டலாக
இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் சுத்தம், சுகாதாரம் இருக்காது.!


நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...