விபத்து
அல்லது ஏதேனும் அவசரகால சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு வரப்படும்
நபர்களை சோதித்த மருத்துவர்கள் ஒரு பத்து நிமிடம் முன்னாலே கொண்டு வந்து
இருந்தா காப்பாத்தி இருக்கலாம்! அரை மணி நேரம் முன்னாடி கொண்டு வந்தா
காப்பாத்தி இருக்கலாம்! என்று கூறுவதை பலர் திரைப்படங்களிலும் சிலர்
நேரிலும் கூட கண்டிருக்கலாம்.
எனது
பள்ளி வகுப்பு தோழர் தற்போது மருத்துவராக பணிபுரியும் மருத்துவரும் அவரது
மருத்துவப் பணிபுரியும் தந்தையும் அமர்ந்து மருத்துவ சிகிச்சைகளை பற்றி
பேசிக்கொண்டிருக்கும் சமயம் ஒரு விஷயம் கூறினார்.
விபத்து
நடந்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரையிலும் கூட
கல்லீரல் கணையம், சிறுநீரகம், இதயம் போன்றவை எல்லாம் அதனதன் இயக்கத்தை
தொடர்ந்து கொண்டே இருக்குமாம் தன்னிச்சையாக!
ஆம்புலன்ஸ்
வாகனம் அல்லது வேறு ஏதேனும் வாகன உதவியுடன் மருத்துவமனைக்குள் உள்ளே
நுழைந்ததும் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம். இனிமேல் மருத்துவர்கள்
பார்த்துக் கொள்வார்கள் என்று ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாசலில் இயக்கத்தை
நிறுத்துவது போலவே மேற்கூறிய உள்ளுறுப்புகள் அனைத்தும் தானாகவே இயங்குவதை
படிப்படியாக குறைத்துக் கொள்ளுமாம்.
அதன்
பிறகு ஆக்சிஜன் செயற்கை சுவாசம், சலைன் மற்றும் ரத்தம் ஏற்றுதல், முதலுதவி
மருந்துகள் ஏற்றுதல் போன்ற விஷயங்களை ஏற்பாடு செய்வதற்குள்ளாக ஒவ்வொரு
உறுப்பும் வெகுவேகமாக தளர்ச்சி அடைந்து இயக்கத்தை நிறுத்திக் கொள்வதால்
உயிரிழப்பு ஏற்படுகிறது என்றார்.
விபத்தில்
சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு மருத்துவமனையில் இருப்பது போலவே ஒரு குழு
மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆம்புலன்ஸில் இருக்க வேண்டும். அங்கிருந்தே
சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.
விபத்தில்
சிக்கியவர்களை பேச்சு கொடுத்துக் கொண்டோ தட்டிக் கொடுத்துக் கொண்டோ
பாசிட்டிவாக கூறிக்கொண்டோ அவரை மயக்க நிலமைக்கு செல்லாமல் விழிப்பு
நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
முடிந்த
அளவுக்கு அவரது குடும்பத்தினருடன் பேச வைத்தால் அல்லது அருகில் இருந்தால்
அவர் இன்னமும் செய்ய வேண்டிய கடமைகள், பாசம், பற்றுதல் போன்ற காரணங்களால்
அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்றார்.
மருத்துவம் செய்ய முடியாத சில உயிர் காக்கும் வேலைகளை கூட மனமும் மூளையும் மிக ஆச்சரியமாக செய்து முடிக்கும் என்றார்.
பல
விபத்தில் சிக்கிய நபர்கள் இறந்து விட்டதாக கருதிய நிலையில் கூட
திடுக்கிட்டு உயிர் மீண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு. அவற்றைக்கெல்லாம்
காரணம் இது போன்ற மனித உயிர் மற்றும் ஆழ் மனநிலை தான் என்கிறார்.
மருத்துவமும் மருந்துகளும் இரண்டாம் பட்சம் என்கிறார்.
No comments:
Post a Comment